என் மலர்
நீங்கள் தேடியது "மகா கும்பமேளா"
- சிலிண்டர் லீக் ஆனதில் தீவிபத்து ஏற்பட்டது.
- சுமார் 20 கூடாரங்கள் எரிந்து நாசமாகின.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா வருகிற 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது.
நாள்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்கான முகாம்கள், உதவி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் கும்பமேளா நடைபெறும் பகுதியில் நான்காவது முறையாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
செக்டார் 19 பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கல்ப்வாசி கூடாரம் அருகே இன்று கேஸ் சிலிண்டர் லீக் ஆனதில் தீவிபத்து ஏற்பட்டது. உடனே அங்கு 3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்த வீரர்கள் 10 நிமிடங்களில் தீயை அணைத்தனர். இதில் அதிஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
முன்னதாக பிப்ரவரி 7 ஆம் தேதி, செக்டார் 18 இல் உள்ள இஸ்கான் முகாமில் தீ விபத்து ஏற்பட்டு, அருகிலுள்ள 12 முகாம்களுக்கு பரவியது. தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், சுமார் 20 கூடாரங்கள் எரிந்து நாசமாகின.
ஜனவரி 19 ஆம் தேதி, செக்டார் 19 இல் சிலிண்டர் வெடித்ததால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றாலும், தீ விபத்தில் சுமார் 12 முகாம்கள் எரிந்து நாசமாகின.
முன்னதாக ஜனவரி 25 ஆம் தேதி, செக்டார் 2 இல் இரண்டு கார்கள் தீப்பிடித்து எரிந்தன. கார் ஒன்றில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு, பின்னர் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு வாகனத்திற்கும் பரவியது.
முன்னதாக கடந்த மாதம் 29 [புதன்கிழமை] மவுனி அமாவாசையை முன்னிட்டு அதிக பக்தர்கள் கலந்து கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்தது. 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
- போக்குவரத்து நெரிசல்களால் ஏற்படும் சிக்கலை குறைக்கும்.
- ஏன் கட்டணமில்லா சலுகையை வழங்கக்கூடாது?
மகா கும்பமேளாவின் போது பயண இடையூறுகள் மற்றும் போக்குவரத்து நெரிசல்களை குறைக்க உத்தர பிரதேச மாநிலத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிகளவிலான பக்தர்களின் வருகை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பிரயாக்ராஜ்-க்கு செல்லும் சாலைகளில் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
இது குறித்த எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அகிலேஷ் யாதவ், "மகா கும்பமேளாவின் போது, உ.பி. மாநிலத்தில் வாகனங்களுக்கு கட்டணமில்லாச் சலுகை வழங்க வேண்டும். இது பயண தடைகளையும் போக்குவரத்து நெரிசல்களால் ஏற்படும் சிக்கலை குறைக்கும்."
"திரைப்படங்களுக்கு பொழுதுபோக்கு வரி இலவசமாக்க முடியும் என்ற போது, மகா கும்பமேளா போன்ற பிரமாண்டமான விழாவில் வாகனங்களுக்கு ஏன் கட்டணமில்லா சலுகையை வழங்கக்கூடாது?" என்று குறிப்பிட்டுள்ளார்.
உத்த பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13-ம்ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கும்பமேளாவில் கலந்து கொள்ள மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவது குறிப்பிடத்தக்கது.
- வருகிற 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது.
- தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா வருகிற 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது.
நாள்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்கான முகாம்கள், உதவி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் கும்பமேளா நடைபெறும் பகுதியில் பழைய ஜிடி சாலையில் உள்ள துளசி சௌராஹா அருகே உள்ள ஒரு முகாமில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.

#WATCH | Prayagraj | The fire that broke out in Sector 18, Shankaracharya Marg of Maha Kumbh Mela Kshetra, has been doused and brought under control. Fire tenders are at the spot pic.twitter.com/58XW9iUzIG
— ANI (@ANI) February 7, 2025
உடனே அங்கு விரைத்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால் பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது. இதில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. சில வாரங்களுக்கு முன்பும் இப்பகுதியில் தீவிபத்து ஏற்பட்டிருந்தது.
#WATCH | Prayagraj | The Fire that broke out in Sector 18, Shankaracharya Marg of Maha Kumbh Mela Kshetra has been brought under controlThere has been no loss of lives. The reason behind the fire is under investigation..." says SP city Sarvesh Kumar Mishra pic.twitter.com/SBshdMCkrT
— ANI (@ANI) February 7, 2025
முன்னதாக கடந்த மாதம் 29 [புதன்கிழமை] மவுனி அமாவாசையை முன்னிட்டு அதிக பக்தர்கள் கலந்து கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்தது. 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
- பிரதமர் மோடி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.
- மகா கும்பமேளாவில் பிரகாஷ் ராஜ் நீராடியதாக போலியான படங்கள் பரப்பப்பட்டது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கி, கோலாகலமாக நடந்து வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் சாதுக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
பொது மக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் புனித நீராடி வருகின்றனர். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புனித நீராடினார்.
இந்த வரிசையில் இன்று தனி விமானம் மூலம் பிரயாக்ராஜ் சென்ற பிரதமர் மோடி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.
இந்நிலையில், பிரதமர் மோடி மகா கும்பமேளாவில் நீராடியதை விமர்சிக்கும் விதமாக நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "சுப்ரீம் தலைவர் புனித நீராடினார். இது அவர் செய்த பாவங்களுக்கான பிராய்சித்தமா?" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக மகா கும்பமேளாவில் பிரகாஷ் ராஜ் நீராடியதாக போலியான படங்கள் பரப்பப்பட்டது. அந்த பதிவுகளில் பிரகாஷ் ராஜ் தனது பாவங்களை போக்க புனித நீராடினார் என்று பதிவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Supreme leader's Holy Dip.. is it for Paap or Prayashchith #justasking
— Prakash Raj (@prakashraaj) February 5, 2025
- பாஜக அரசு எந்த தவறும் செய்யவில்லை என்றால் ஏன் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையை மறைகிறது
- கண்களால் பார்த்த சாட்சியங்கள் கொடுத்த புள்ளிவிவரங்கள் படி 2,000 பேர் இறந்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா வருகிற 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் கடந்த மாதம் 29 [புதன்கிழமை] மவுனி அமாவாசையை முன்னிட்டு அதிக பக்தர்கள் கலந்து கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டது.
ஆனால் ஆனால் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக அரசு மறைப்பதாக அகிலேஷ் சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
நேற்று பாரளுமன்ற பட்ஜெட் கூட்டத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய அவர் பாஜக அரசு எந்த தவறும் செய்யவில்லை என்றால் ஏன் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையை மறைக்கிறது, அழிக்க நினைக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் நேற்று மாநிலங்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது பேசிய [உத்தவ் தாக்கரே பிரிவு] சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், "4-5 நாட்களுக்கு முன்பு கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது, அது கூட்ட நெரிசல் அல்ல, வதந்தி என்று கூறப்பட்டது. பின் 30 பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. அந்த எண்ணிக்கை உண்மையா? அதை மறைக்காதீர்கள். ஒருவர் இறந்தாலும் நாம்தான் பொறுப்பு.. கண்களால் பார்த்த சாட்சியங்கள் கொடுத்த புள்ளிவிவரங்கள் படி 2,000 பேர் இறந்துள்ளனர்.

இந்த துயரத்திற்கு "மோசமான நிர்வாகமே" காரணம்.மகா கும்பமேளாவை "அரசியல் சந்தைப்படுத்தலுக்கான நிகழ்வாக மாற்றியுள்ளனர். மற்ற நாடுகளில் இதுபோன்ற சம்பவம் நடந்திருந்தால் பிரதமர் மற்றும் முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்திருக்கும் என்று தெரிவித்தார்.
இதற்கு பாஜக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவைத் தலைவர் புள்ளிவிவரத்துக்கான ஆதரத்தை கோரினார். முன்னதாக காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே கூட்ட நெரிசலில் ஆயிரக்கணக்கானோர் இறந்ததாகக் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

- அங்கிருந்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் படகில் சென்றார்.
- கூட்டநெரிசலில் 30 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தின்பின் மோடி தற்போது வருகை தந்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கி, கோலாகலமாக நடந்து வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் சாதுக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
பொது மக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் புனித நீராடி வருகின்றனர். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புனித நீராடினார்.
இந்த வரிசையில் பிரதமர் மோடி இன்று பிரயாக்ராஜ் சென்றுள்ளார். மோடியின் 'தனி விமானம்' பாம்ராலி விமான நிலையத்தை அடைந்தது.
அங்கே ஆளுநர் ஆனந்திபென் படேல், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் இரு துணை முதல்வர்களும் அவரை வரவேற்றனர். விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் டிபிஎஸ் ஹெலிபேடை மோடி வந்தடைந்தார்.
இங்கிருந்து வாகனம் மூலம் விஐபி காட் பகுதியை அடைந்தார். அங்கிருந்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் படகு மூலம் ஏரியல் கோட் பகுதியை சென்றடைந்த பிரதமர் மோடி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.
#WATCH | Prime Minister Narendra Modi takes a holy dip at Triveni Sangam in Prayagraj, Uttar Pradesh (Source: ANI/DD) #KumbhOfTogetherness #MahaKumbh2025 pic.twitter.com/kALv40XiAH
— ANI (@ANI) February 5, 2025
தலைநகர் டெல்லியில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடி கும்பமேளாவில் புனித நீராடி உள்ளார்.
பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. அடுத்ததாகப் பக்தர்களுடன் மோடி உரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜனவரி 29 ஆம் தேதி மகா கும்பமேளாவில் நடந்த கூட்டநெரிசலில் 30 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தின்பின் மோடி தற்போது இங்கு வருவது குறிப்பிடத்தக்கது.
- மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
- என் கடவுள் எனக்குள் இருக்கிறார் என்று பரூக் அப்துல்லா தெரிவித்தார்.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் இடத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஆன்மீக திருவிழா மகா கும்பமேளா.
ஜனவரி 12-ம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுவரை கோடிக்கணக்கான பக்தர்கள் இங்கு புனித நீராடியுள்ளனர்.
இந்நிலையில், மகா கும்பமேளாவில் நீராட பிரயாக்ராஜுக்கு வருவீர்களா என்று தேசிய மாநாட்டுத் தலைவர் பரூக் அப்துல்லாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு பதில் அளித்த அவர், "நான் தினமும் என் வீட்டில் குளிப்பேன்" என்று நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், எனது வீடு மசூதியிலோ, கோவிலிலோ, குருத்வாராவிலோ இல்லை. என் கடவுள் எனக்குள் இருக்கிறார். டெல்லி தேர்தலில் என்ன நடக்கும் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல ஒரு ஜோதிடராக மாற வேண்டும். யார் வருவார்கள், யார் போவார்கள் என்று எனக்கு எப்படித் தெரியும்?" என்று தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக கும்பமேளா குறித்து பேசிய பரூக் அப்துல்லா, "கும்பமேளா நல்ல விசயம்தான். இது கடந்த 100 ஆண்டுகளாக பக்தர்கள் புனித நீராட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. புனித நதியான கங்கையில் புனித நீராடும் பக்கர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.
- கும்பமேளாவிற்கான ஏற்பாடுகள் குறித்து தெளிவுப்படுத்த அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.
- துயர சம்பவத்துக்கு பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று தொடங்கியது.
அப்போது மகா கும்பமேளா நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தன.
பாராளுமன்ற மக்களவையில் இன்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:-
கும்பமேளாவில் உயிர் இழந்தவர்களுக்காக 2 நிமிடம் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கும்பமேளாவில் இறந்தவர்களின் புள்ளி விவரத்தை தெரிவிக்க வேண்டும்.
கும்பமேளாவில் ஏற்பட்ட இறப்புகள், காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை, மருந்துகள், டாக்டர்கள், உணவு, தண்ணீர், போக்குவரத்து வசதிகள் குறித்த புள்ளி விவரங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
கும்பமேளாவிற்கான ஏற்பாடுகள் குறித்து தெளிவுப்படுத்த அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். கும்பமேளா பேரிடர் மேலாண்மை மற்றும் தொலைந்து போன மையத்தின் பொறுப்பு ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
இந்த துயர சம்பவத்துக்கு பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையை மறைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இரட்டை என்ஜின் அரசாங்கத்திடம் நாங்கள் கேட்கிறோம். எந்த குற்றமும் இல்லை என்றால் புள்ளி விவரங்கள் மறைக்கப்பட்டது ஏன்? அழிக்கப்பட்டது ஏன்?
இவ்வாறு அகிலேஷ் யாதவ் கூறினார்.
- பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
- புனித நீராடிய பின் பிரதமர் மோடி பிற்பகல் 12.30 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கோலாகலமாக நடந்து வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் சாதுக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புனித நீராடினார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி நாளை (5-ந்தேதி) பிரயாக்ராஜ் செல்கிறார். டெல்லியில் இருந்து விமான படைக்கு சொந்தமான விமானத்தில் அவர் காலை 10.45 மணிக்கு பிரயாக்ராஜ் செல்கிறார்.
பின்னர் படகு மூலம் ஏரியல் கோட் பகுதிக்கு செல்லும் பிரதமர் மோடி காலை 11 மணி முதல் 11.30 மணிக்குள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுகிறார். தலைநகர் டெல்லியில் நாளை சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பிரதமர் மோடி கும்ப மேளாவில் புனித நீராட இருக்கிறார்.
பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. புனித நீராடிய பின் பிரதமர் மோடி பிற்பகல் 12.30 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
- கும்பமேளாவிற்கு வரும் சாதாரண மக்கள் எந்தவொரு சிறப்பு வசதிகளையும் பெறவில்லை.
- கோடிக்கணக்கான மக்கள் புனித நீராடினர் என பொய் சொல்கிறார்கள்.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா வருகிற 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் கடந்த மாதம் 29 [புதன்கிழமை] மவுனி அமாவாசையை முன்னிட்டு அதிக பக்தர்கள் கலந்து கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டது.
ஆனால் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக அரசு மறைப்பதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை வாசிக்கும்போது எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
இன்றைய பாராளுமன்ற கூட்டத்தொடரிலும் கும்பமேளா கூட்ட நெரிசலில் பக்தர்கள் உயிரிழந்த விவகாரம் எதிரொலித்தது.
இந்த நிலையில் கும்பமேளா கூட்ட நெரிசல் குறித்து சமாஜ்வாடி எம்.பி. ஜெயா பச்சன் கூறியதாவது:-
இப்போது தண்ணீர் மிகவும் மாசுப்பட்ட இடம் எது?. அது கும்பமேளா நடைபெறும் இடம். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டுள்ளது. இதனால் ஆற்று தண்ணீர் மாசுப்பட்டுள்ளது.
#WATCH | Delhi: Samajwadi Party MP Jaya Bachchan says, "... Where is the water most contaminated right now? It's in Kumbh. Bodies (of those who died in the stampede) have been thrown in the river because of which the water has been contaminated... The real issues are not being… pic.twitter.com/9EWM2OUCJj
— ANI (@ANI) February 3, 2025
உண்மையான பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. கும்பமேளாவிற்கு வரும் சாதாரண மக்கள் எந்தவொரு சிறப்பு வசதிகளையும் பெறவில்லை. அவர்களுக்காக எதுவும் தயார் செய்யப்படவில்லை. கோடிக்கணக்கான மக்கள் புனித நீராடினர் என அவர்கள் பொய் சொல்கிறார்கள். இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மக்கள் எப்படி அந்த இடத்தில் கூட முடியும்?.
இவ்வாறு ஜெயா பச்சன் கூறினார்.
மவுனி அமாவாசையையொட்டி 5 கோடிக்கும் அதிகமான மக்கள் புனித நீராடியதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
- உயிரிழப்புகளுக்குக் காரணமான உத்தரப் பிரதேச அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரினர்
- விஷால் திவாரி என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் உ.பி அரசுக்கு எதிராக பொதுநல மனு தாக்கல் செய்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா அடுத்த மாதம் 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் கடந்த ஜனவரி 29 [புதன்கிழமை] மவுனி அமாவாசையை முன்னிட்டு அதிக பக்தர்கள் கலந்துகொண்டபோது கூட்டநெரிசல் ஏற்பட்டது.
இதில் 30 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டது. கூட்டநெரிசலுக்கு மாநிலத்தில் ஆளும் பாஜக அரசின் அலட்சியமே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில் கூட்டநெரிசல் குறித்து விசாரித்து உயிரிழப்புகளுக்குக் காரணமான அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், வருங்காலங்களில் இதுபோன்ற ஆன்மீக ஒன்றுகூடல்களில் கூட்டநெரிசல் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு நெறிமுறைகளை வகுக்க கோரியும் விஷால் திவாரி என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் உ.பி அரசுக்கு எதிராக பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. உத்தரப் பிரதேச அரசு சார்பில் ஆஜரான வக்கீல் முகுல், கூட்டநெரிசல் குறித்து மாநில அரசால் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும் அலகாபாத் நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நடந்து வருவதாக தெரிவித்தார். இதன் பின் பேசிய நீதிபதிகள், இந்த சம்பவம் துரதிஷ்டவசமானது. இருப்பினும் மனுதாரர் வழக்கை உயர்நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல வலியுறுத்தி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். உத்தரப் பிரதேச அரசுக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுத்தது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

- ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதித்தற்காக பாராளுமன்றம் இன்று கூடியது.
- எதிர்க்கட்சிகளின் செயலுக்கு பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு கண்டனம் தெரிவித்தார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ந் தேதி தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்மு அன்று கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
அதை தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மறுநாள் (பிப்ரவரி 1-ந் தேதி) 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
அதை தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதித்தற்காக பாராளுமன்றம் இன்று கூடியது.
பாராளுமன்ற மக்களவை இன்று காலை 11 மணிக்கு கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் கடந்த 29-ந் தேதி கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியானார்கள். 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மகா கும்பமேளாவில் நிகழ்ந்த உயிரிழப்பு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர்.
அப்போது சபாநாயகர் ஓம்பிர்லா முக்கிய விவாதங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு தருவதாக உறுதி அளித்தார்.
ஆனாலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபாநாயகர் உறுதியை ஏற்காமல் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் ஓம் பிர்லாவின் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினார்கள்.
எதிர்க்கட்சிகளின் செயலுக்கு பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு கண்டனம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே அவை நடவடிக்கையை பாதிக்கும் வகையில் செயல்படுகிறார்கள். கேள்வி நேரத்தை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளேன். சபையை சீர்குலைப்பது பொருத்தமானது அல்ல. உங்கள் கடமையை நீங்கள் நிறைவேற்றவில்லை.எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமைதி காக்க வேண்டும் என்றார்.
இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பியதற்கு சபாநாயகர் ஓம்பிர்லா கண்டனம் தெரிவித்தார். அவர் கூறும்போது, 'அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதற்கு தான் மக்கள் உங்களை தேர்ந்து எடுத்து இருக்கிறார்களா? என்றார்.
மேல்சபையிலும் எதிர்க்கட்சிகள் இதுகுறித்த பிரச்சனையை கிளப்பினார்கள். கும்பமேளா உயிரிழப்பு குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலயுறுத்தினார்கள். இதை அவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கர் ஏற்கவில்லை.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, 'நமது நடத்தை முன் மாதிரியாகவும், நமது விவாதங்கள் புத்திசாலித்தனமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் அளித்த மகா கும்பமேளா உயிரிழப்பு, அரசியல் சாசனம் அவமதிக்கப்படுவது உள்ளிட்ட 9 ஒத்திவைப்பு நோட்டீசை ஏற்க முடியாது' என்றார்.
இதை தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையில் முழக்கங்களை எழுப்பினார்கள்.
கும்பமேளா உயிரிழப்பு குறித்து விவாதிக்க அனுமதிக்காததை கண்டித்து மேல்சபையில் இருந்து அனைத்து எதிர்க்கட்சிகளும் வெளிநடப்பு செய்தன.
இதற்கிடையே ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பாராளுமன்ற மக்களவையில் பிரதமர் மோடி நாளை மாலை 5 மணிக்கு பேசுகிறார்.