என் மலர்
நீங்கள் தேடியது "மகா கும்பமேளா"
- விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.
- இந்தியாவில் இந்த ஆண்டு மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
கரூரில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.
இந்தியாவில் இந்த ஆண்டு மட்டும் (2025) கோவில் திருவிழாக்கள், அரசியல் நிகழ்ச்சிகள், ரெயில் நிலையங்கள் மற்றும் மகா கும்பமேளா போன்ற நிகழ்வுகளில் 100-க்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
ஜூலை 27, 2025: உத்தரகாண்டின் ஹரித்வாரில் உள்ள மன்சா தேவி கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.
ஜூன் 4, 2025: ஐபிஎல் கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிப் பேரணியின் போது பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர்.
மே 3, 2025: கோவாவின் ஷிர்காவ் கிராமத்தில் உள்ள ஸ்ரீ லைராய் தேவி கோவிலின் வருடாந்திர திருவிழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழந்தனர்.
பிப்ரவரி 15, 2025: புதுடெல்லி ரயில் நிலையத்தில் மகா கும்பமேளாவுக்கு ரெயில் ஏற காத்திருந்த பக்தர்கள் இடையே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்தனர்.
ஜனவரி 29, 2025: மகா கும்பமேளாவின் புனித நீராடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால், பிரயாக்ராஜில் உள்ள சங்கமம் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் (அரசு தரவுகள்) உயிரிழந்தனர்.
ஜனவரி 8, 2025: திருப்பதி வெங்கடேஸ்வரர் சுவாமி கோவிலில் வைகுண்ட துவார தரிசன டிக்கெட்டுகளை வாங்க பக்தர்கள் முண்டியடித்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பக்தர்கள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவங்கள் பொது இடங்களில் கூட்ட நெரிசலைத் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் இருக்கும் குறைபாடுகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.
- மோனோலிசா போஸ்லேவுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைப்புகள் வந்தது.
- படத்தின் பூஜை வெளியீட்டு விழா கொச்சியில் நடந்தது.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி மாதம் மகா கும்பமேளா நடைபெற்றது. இதில் உலகம் முழுவதும் இருந்து துறவிகள், சாதுக்கள், பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் வெளிநாடு பக்தர்கள் உள்பட பல கோடி பேர் கலந்து கொண்டு புனித நீராடினர்.
இந்நிலையில் கும்ப மேளாவில் ருத்ராட்ச மாலைகள் விற்பதற்காக வந்த மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த மோனோலிசா போஸ்லே என்ற இளம்பெண் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. குறைந்த பட்ச ஒப்பனை, பாராம்பரிய உடையில் அவரின் காந்த கண்ணழகும், கவர்ச்சியும் ஒரே நாளில் அவரை உலகம் முழுவதும் பிரபலமாக்கியது. இளைஞர்கள் பலரும் பிரவுன் பியூட்டி என பெயரிட்டு அவரை கொண்டாடினர்.
இதைத்தொடர்ந்து அவருக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது. பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான சனோஜ் மிஸ்ரா தனது படத்தில் மோனோலிசா போஸ்லேவை ஒப்பந்தம் செய்தார். ஆனால் அவர் பாலியல் வழக்கில் கைதானதால் மோனோலிசா போஸ்லேவின் சினிமா வாய்ப்பு தடைபட்டது.
ஆனாலும் மோனோலிசா போஸ்லேவுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைப்புகள் வந்தது. அதை ஏற்று சில மாதங்களுக்கு முன் கேரளாவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவரை பார்ப்பதற்காக கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில் மோனோலிசா போஸ்லேவுக்கு மலையாள திரையுலகில் அறிமுகமாக வாய்ப்பு கிடைத்தது. நடிகர் கைலாசுடன் இணைந்து நாகம்மா என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார்.
பினுவர்க்கீஸ் இயக்கும் இந்த படம் இம்மாத இறுதியில் திரைக்கு வரும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் பூஜை வெளியீட்டு விழா கொச்சியில் நடந்தது. அதில் மோனோலிசா போஸ்லே பங்கேற்றுள்ளார். இதுதொடர்பான வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது. மேலும் படத்தில் அவரது புதிய தோற்றத்தின் காட்சிகளும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
- மன்சா தேவி கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 6 பேர் உயிரிழந்தனர்.
- ரெயில் ஏற காத்திருந்த பக்தர்கள் இடையே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்தனர்.
உத்தரகாண்டின் ஹரித்வாரில் உள்ள மன்சா தேவி கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.
இந்தியாவில் இந்த ஆண்டு மட்டும் (2025) கோவில் திருவிழாக்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் மகா கும்பமேளா போன்ற நிகழ்வுகளில் 70-க்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
ஜூன் 4, 2025: ஐபிஎல் கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிப் பேரணியின் போது பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர்.
மே 3, 2025: கோவாவின் ஷிர்காவ் கிராமத்தில் உள்ள ஸ்ரீ லைராய் தேவி கோவிலின் வருடாந்திர திருவிழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழந்தனர்.
பிப்ரவரி 15, 2025: புதுடெல்லி ரயில் நிலையத்தில் மகா கும்பமேளாவுக்கு ரெயில் ஏற காத்திருந்த பக்தர்கள் இடையே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்தனர்.
ஜனவரி 29, 2025: மகா கும்பமேளாவின் புனித நீராடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால், பிரயாக்ராஜில் உள்ள சங்கமம் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் (அரசு தரவுகள்) உயிரிழந்தனர்.
ஜனவரி 8, 2025: திருப்பதி வெங்கடேஸ்வரர் சுவாமி கோவிலில் வைகுண்ட துவார தரிசன டிக்கெட்டுகளை வாங்க பக்தர்கள் முண்டியடித்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பக்தர்கள் உயிரிழந்தனர்.
இவற்றின் மூலம், பொது இடங்களில் கூட்ட நெரிசலைத் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் இருக்கும் குறைபாடுகள் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
- கூட்ட நெரிசலால் அல்ல, நோயால் இறந்ததாகக் கூறும் ஆவணங்களில் பலரை அதிகாரிகள் கட்டாயப்படுத்தி கையெழுத்திட வைத்தனர்.
- அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில் சேர்க்கப்படாதவர்களின் குடும்பங்கள் இவர்கள்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி இறுதி வரை மகா கும்பமேளா நடைபெற்றது.
அப்போது மௌனி அமாவாசை தினமான ஜனவரி 29 அன்று அங்கு கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் 37 பேர் இறந்ததாக உ.பி. அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. பிபிசி நடத்திய ஆய்வில் அன்றைய தினம் குறைந்தது 82 பேர் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக பிபிசி செய்தியாளர்கள் 11 மாநிலங்களில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சந்தித்து தகவல்களை பெற்றனர்.
அதன்படி அவர்கள், ஜனவரி 29 அன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இறந்த 82 பேரின் உறவினர்கள் தெளிவான ஆதாரங்களை வழங்கியுள்ளனர்.
இருப்பினும், உறுதியான ஆதாரங்கள் கிடைக்காததால், இன்னும் பல இறப்புகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பிப்ரவரி 19 அன்று சட்டமன்றத்தில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அளித்த புள்ளிவிவரங்களின்படி, குளிக்கும் இடத்தில் 30 பேரும், மற்ற இடங்களில் ஏழு பேரும் இறந்தனர். இறந்த 37 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்றும் ஆதித்யநாத் அறிவித்தார்.

பிபிசி நடத்திய விசாரணையில், முதலமைச்சர் அறிவித்த நிதியுதவியை 37 குடும்பங்கள் நேரடியாகப் பெற்றதாகக் கண்டறியப்பட்டது. பணம் நேரடியாக அவர்களின் கணக்குகளுக்கு மாற்றப்பட்டது அல்லது காசோலைகள் வழங்கப்பட்டன.
இருப்பினும், இது தவிர, 26 குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் ரொக்கமாகவும் அரசாங்கம் வழங்கியுள்ளது. இந்தப் பணத்தை காவல்துறை அதிகாரிகள் வழங்கினர். அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில் சேர்க்கப்படாதவர்களின் குடும்பங்கள் இவர்கள். கூட்ட நெரிசலால் அல்ல, நோயால் இறந்ததாகக் கூறும் ஆவணங்களில் பலரை அதிகாரிகள் கட்டாயப்படுத்தி கையெழுத்திட வைத்ததாகவும் அறிக்கை கூறுகிறது.
இந்த சம்பவத்தில் இறந்த மேலும் 19 பேரின் குடும்பங்களையும் பிபிசி அடையாளம் கண்டுள்ளது. அவர்களில் யாருக்கும் அரசு உதவி கிடைக்கவில்லை.
பிரேத பரிசோதனை அறிக்கைகள், இறப்புச் சான்றிதழ்கள் மற்றும் பேரிடர் நடந்த இடத்தின் புகைப்படங்கள் உள்ளிட்ட சான்றுகள் அவர்களிடமிருந்து பெறப்பட்டன. கூடுதலாக, நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்களை பேரழிவின் அளவை விளக்குகின்றன.
இந்த அறிக்கை வெளியானதன் மூலம், உத்தரப் பிரதேச அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு குறித்த தகவல்களை வெளியிடாததன் மூலம் அரசின் வெளிப்படைத்தன்மையும் கேள்விக்குறியாகியுள்ளது.
அதிக பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டபோதும் கும்பமேளாவில் நடந்த மிகப்பெரிய சோகம், அரசு அமைப்பின் தவறான நிர்வாகத்தை அம்பலப்படுத்தி உள்ளது.
- மகா கும்பமேளாவில் பாசிமணி மாலை விற்றுக்கொண்டு இருந்தவர் மோனாலிசா.
- மோனாலிசாவுக்கு சினிமா வாய்ப்பு வீடு தேடி வந்தது.
மும்பை:
உத்தரபிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த மகா கும்பமேளாவில் பாசிமணி மாலை விற்றுக்கொண்டு இருந்தவர் மோனாலிசா. தனது காந்த விழி கண்களால் சமூக வலைதளங்கள் வாயிலாக ஒரே நாளில் இந்திய அளவில் மோனாலிசா பிரபலம் அடைந்தார். அவருடன் செல்பி எடுப்பதற்கு ஏராளமானோர் திரண்டதால் வேறு வழியின்றி கும்பமேளாவை விட்டு சொந்த வீட்டிற்கு திரும்பினார்.
இந்நிலையில் மோனாலிசாவுக்கு சினிமா வாய்ப்பு வீடு தேடி வந்தது. இந்தி திரை உலகில் பிரபல இயக்குநரான சனோஜ் மிஸ்ரா இயக்க இருக்கும் புதிய படமான 'தி டைரி ஆப் மணிப்பூர்' என்ற படத்தில் நடிப்பதற்கு மோனாலிசாவுக்கு வாய்ப்பு வழங்கினார்.
இதை அடுத்து மோனாலிசா மும்பைக்கு வரவழைக்கப்பட்டு அவரது தோற்றத்தை மாற்றியதுடன் சினிமா நடிப்புக்கென பயிற்சிகளும் வழங்கப்பட்டது. காந்த கண்ணழகி என வர்ணிக்கப்பட்ட மோனாலிசா சினிமா மட்டுமின்றி, நகைக்கடை திறப்பு விழா மற்றும் பொது நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளராகவும் பங்கேற்றார்.
கேரளாவில் நடந்த பிரபல நகைக்கடை திறப்பு விழாவுக்கு விமானம் மூலம் வந்திறங்கிய மோனாலிசாவை காண பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர்.
இந்நிலையில் மோனாலிசாவை நடிகையாக அறிமுகப்படுத்திய சனோஜ் மிஸ்ரா உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். அதனால் அந்த பெண் 3 முறை கருக்கலைப்பு செய்து உள்ளார். இந்நிலையில் சனோஜ் மிஸ்ரா மோனாலிசாவுடன் சுற்றிக்கொண்டு இருந்ததால் அந்த பெண் சனோஜ் மிஸ்ரா மீது புகார் கொடுத்தார். அவரது புகாரின் பேரில் சனோஜ் மிஸ்ரா காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இதை அடுத்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பி உள்ளார் மோனாலிசா. அவரை குடும்பத்தினர் சமாதானப்படுத்தி வருகின்றனர்.
கைதான சனோஜ் மிஸ்ரா வழக்கை தீவிரமாக விசாரித்து வரும் போலீசார் மோனாலிசாவிடம் சனோஜ் மிஸ்ரா பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டாரா? என விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
- அப்பெண்ணை ரிஸார்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
- கடந்த பிப்ரவரி மாதம் (மோனாலிசாவுக்கு வாய்ப்பு கொடுப்பதாக அறிவித்த பின்னர்) அப்பெண்ணை கைவிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி முதல் பிப்ரவரி இறுதி வரை மகா கும்பமேளா நடைபெற்றது. இந்துக்களின் மிகப்பெரிய ஒன்றுகூடலான இதில் 60 கோடி பக்தர்கள் பங்கேற்றதாக அம்மாநில அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த கும்பமேளாவில் பாசிமணி விற்ற மோனாலிசா போஷ்லே என்ற 17 வயது பெண்ணின் புகைப்படங்கள் இணையத்தில் டிரண்ட் ஆகின. ஒரே இரவில் இந்தியா முழுவதிலும் மோனாலிசா பிரபலம் அடைந்தார்.
இதைத்தொடர்ந்து மோனலிசாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு தேடி வந்தது. பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா மோனாலிசாவை தனது அடுத்த படத்தில் நடிக்க வைப்பதாக அறிவித்தார். டைரீஸ் ஆஃப் மணிப்பூர் என்ற அந்த படத்திற்காக மோனாலிசாவிக்கு ரூ.21 லட்சம் சம்பளமும் வழங்கப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி உயர் நீதிமன்றத்தால் அவரது ஜாமீன் நிராகரிக்கப்பட்டதை அடுத்து இந்த கைது நடந்தது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள சிறிய ஊர் ஒன்றில் வசிக்கும் 28 வயது பெண்ணுக்கு காதாநாயகி ஆக்குகிறேன் என ஆசைகாட்டி இயக்குநர் சனோஜ் மிஸ்ரா (45 வயது) பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு.
திருமணமான சனோஜ் மிஸ்ரா தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் மும்பையில் வசிப்பவர்.
பாதிக்கப்பட்ட பெண்ணை 2020 ஆம் ஆண்டு டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் சனோஜ் மிஸ்ரா சந்தித்தார். படத்தில் வாய்ப்புகள் தருவதாக அவருக்கு ஆசை காட்டியுள்ளார். 2021 ஜூன் மாதம் அப்பெண்ணை ஜான்சி ரெயில் நிலையத்துக்கு இயக்குநர் அழைத்துள்ளார்.
சமூக அழுத்தத்தை காரணம் காட்டி அப்பெண் வர மறுக்கவே தான் தற்கொலை செய்துகொள்வேன் என பெண்ணிடம் இயக்குநர் கூறியிருக்கிறார். இதனால் அப்பெண் ரெயில் நிலையம் சென்றார். அங்கிருந்து அப்பெண்ணை ரிஸார்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அதை படம் பிடித்து வைத்து அப்பெண்ணை மிரட்டி, அதன் பின்னும் தான் சொல்லும் இடங்களுக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்துவந்துள்ளார். மேலும் அவரை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி மும்பைக்கு அழைத்துச் சென்று லிவ் இன் உறவில் வாழ நிர்ப்பந்தித்துள்ளார். இந்த காலகட்டத்தில் மூன்று முறை அப்பெண்ணை கட்டாய கருக்கலைப்புக்கும் உட்படுத்தி உள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் (மோனாலிசாவுக்கு வாய்ப்பு கொடுப்பதாக அறிவித்த பின்னர்) அப்பெண்ணை கைவிட்டுள்ளார். மேலும் போலீசில் புகார் கொடுத்தால் அந்தரங்க படங்களை வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இதைத்தொடர்ந்து அப்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சனோஜ் மிஸ்ரா அளித்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கான அடித்தளம் மகா கும்பமேளா ஆகும்.
- மகா கும்பமேளாவின் வடிவத்தில் இந்தியாவின் மகத்துவத்தை உலகம் கண்டுள்ளது.
பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நடந்து வருகிறது.
பாராளுமன்ற மக்களவையில் பிரதமர் மோடி இன்று உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்த மகாகும்பமேளா குறித்து பேசினார்.
அப்போது அவர், "மகா கும்பமேளாவை வெற்றியடைய செய்த பக்தர்கள் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மகா கும்பமேளாவின் வெற்றிக்கு பலர் பங்களித்தனர். அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். இந்த விழாவை சிறப்பாக முன்னெடுத்து நடத்திய உத்தரபிரதேச மாநில அரசை பாராட்டுகிறேன்.
திரிவேணி சங்கமத்தில் நடைபெற்ற மகா கும்பமேளாவை ஒட்டுமொத்த உலகமும் உற்று நோக்கியது. இந்த நிகழ்வு அடுத்த தலைமுறைக்கான ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. அது தேசத்திற்கு புதிய திசையையும் வழங்கி உள்ளது.
உயர்ந்து வரும் இந்தியாவின் உணர்வுகளை மகா கும்பமேளா பிரதிபலித்தது. மகா கும்பமேளாவுடன் தொடர்புடைய இந்தியாவின் புதிய தலைமுறை, பாரம்பரியங்களையும் நம்பிக்கையையும் பெருமையுடன் ஏற்றுக்கொள்கிறது.
அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கான அடித்தளம் மகா கும்பமேளா ஆகும். கோடிக்கணக்கான பக்தர்கள் பங்களிப்போடு நடந்த இந்த விழா, மிகப்பெரிய இலக்குகளை அடைவதற்கான தேசிய அடையாளம் ஆகும். நமது திறன்கள் குறித்து மக்கள் மனதில் உள்ள சந்தேகங்களுக்கு மகா கும்பமேளா பதில் அளித்துள்ளது.
ஒற்றுமையின் அமிர்தம்தான் மகா கும்பமேளாவின் முக்கிய விளைவாக இருந்தது. இந்தியாவின் ஒற்றுமை வலிமை, நம்மை சீர்குலைக்கும் அனைத்து முயற்சிகளையும் தகர்த்தெறியும் அளவுக்கு உள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியாவின் சிறப்பு. அதை கும்பமேளாவில் பார்த்தோம். அதை தொடர்ந்து வளப்படுத்த வேண்டும்.
கடந்த ஆண்டு ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டபோது அடுத்த 1000 ஆண்டுகளுக்கு நாடு எவ்வாறு தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறது என்பதை பார்த்தோம். இந்த எண்ணம் மகா கும்பமேளாவின் போது மேலும் வலுப்பெற்றது. நாட்டின் கூட்டு வலிமையை அதிகரித்துள்ளது.
மகா கும்பமேளாவின் வடிவத்தில் இந்தியாவின் மகத்துவத்தை உலகம் கண்டுள்ளது. மகா கும்பமேளாவால் தேசத்தின் ஆன்மா விழிப்படைந்து உள்ளது. இது புதிய சாதனைகளுக்கு ஊக்கமளிக்கும். இது நமது பலத்தை சந்தேகிப்பவர்களுக்கு ஒரு பொருத்தமான பதிலையும் அளித்தது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், அதில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினார்கள்.
பிரதமர் மோடி உரைக்கு பிறகு எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப முயன்றனர். விதிப்படி பிரதமரின் பேச்சுக்கு பிறகு எந்த கேள்வியும் எழுப்ப முடியாது என்று சபாநாயகர் ஓம்பிர்லா சுட்டிக்காட்டி அனுமதி மறுத்தார். இதனால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா, கடந்த ஜனவரி 13-ந்தேதி முதல் பிப்ரவரி 26ம் தேதி வரை 45 நாட்கள் பிரயாக்ராஜில் நடந்தது. இதில் திரிவேணி சங்கமத்தில் 65 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடி தரிசனம் செய்தனர்.
- கும்பமேளாவில் எவ்வளவு பேர் இறந்தார்கள் என்று கேட்டால் 30 பேர் என்று சொல்கிறார்.
- கும்பமேளாவில் படகோட்டிக்கு எவ்வளவு வியாபாரம் ஆனது என்று கேட்டால் 30 கோடி என்கிறார்.
ஆளும் பாஜக அரசு இந்திய நாட்டை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பலவீனப்படுத்துவதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார்.
லக்னோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அகிலேஷ் யாதவ், "சமூகத்தில் வெறுப்பு பரவுவதால் நாடு பலவீனமடைந்துள்ளது. பாஜக சமூகத்தை பலவீனப்படுத்தி பிளவை உருவாக்குகிறது. பாஜக நாட்டை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பலவீனப்படுத்தியுள்ளது.
நமது முதல்வர் 30 என்ற எண்ணை நேசிப்பதால் இதைச் சொல்கிறேன். (கும்பமேளாவில்) எவ்வளவு பேர் இறந்தார்கள் என்று கேட்டால் 30 பேர் என்று சொல்கிறார். (கும்பமேளாவில் படகோட்டிக்கு) எவ்வளவு வியாபாரம் ஆனது என்று கேட்டால் 30 கோடி என்கிறார். இந்த வகையான கணக்கை எங்கள் முதல்வரைத் தவிர வேறு யாராலும் கொடுக்க முடியாது" என்று தெரிவித்தார்.
கும்பமேளாவின் போது லட்சக்கணக்கான பக்தர்களை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று இளைஞர்கள் பணம் சம்பாதித்தது தொடர்பாக பேசிய அகிலேஷ் யாதவ், "அலகாபாத்தில் அரசு வேலைகளுக்குத் தயாராகும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளதாக முதல்வர் கூறுகிறார். தனியார் வாகனங்களை வணிக வாகனங்களாகப் பயன்படுத்தலாம் என்று அரசாங்கம் எப்போது முடிவு செய்தது என்று யாராவது எனக்கு விளக்கவும்?
144 ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞர்களுக்கு இப்போது வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதா?" என்று மகா கும்பமேளா 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது என்ற உ.பி. அரசின் கூற்றை கேலி செய்தார்.
மேலும் பேசிய அவர், "இப்போது அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் மீது வெறுப்பைப் பரப்புகிறார்கள் என்பதை நான் அனைத்து மக்களுக்கும் சொல்ல விரும்புகிறேன். இனிமேல் எதிர்காலத்தில், பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகள், சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பை பரப்புவார்கள். 2027 இல் சமாஜ்வாதி கட்சி உத்தரபிரதேசத்தில் ஆட்சிக்கு வரும்"
- பிரதமர் மோடி மொரீஷியஸ் தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
- இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக மொரீஷியஸ் நாட்டுக்கு நேற்று சென்றார். மொரீஷியஸ் தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அந்நாட்டு அரசு விடுத்த அழைப்பை ஏற்று அங்கு பயணம் மேற்கொண்டார்.
தலைநகர் போர்ட்லூயிஸ் சென்றடைந்த மோடியை மொரீஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் நேரில் வரவேற்றார். மேலும் பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்றார்.
இன்று பிரதமர் மோடி மொரீஷியஸ் தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மேலும் இரு தலைவர்கள் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இந்நிலையில், மொரீஷியஸ் நாட்டில் உள்ள கிராண்ட் பேசின் என்று அழைக்கப்படும் கங்கா தலாவ் ஏரியில் மக கும்பமேளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கங்கை நீரை பிரதமர் மோடி கலந்தார்.
கங்கா தலாவ் ஏரியை இந்துக்கள் புனிதமான இடம் என்று நம்புகிறார்கள். இந்த ஏரியில் பிரதமர் மோடி ஆரத்தி எடுத்து பிரார்த்தனை செய்தார்.
- கும்பமேளாவினால் தமிழ்நாட்டில் பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- காட்பாடியில் இருந்து திருப்பதி செல்லும் பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மகா கும்பமேளாவிற்காக வடக்கு மற்றும் மத்திய ரெயில்வேவுக்கு தெற்கு ரெயில்வே சார்பாக ரெயில் பெட்டிகள் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
திருப்பதியில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும் (வண்டி எண்-67209) திருப்பதி - காட்பாடி பயணிகள் ரெயில் மார்ச் 13 முதல் 15 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காட்பாடியில் இருந்து காலை 06.10 மணிக்கு புறப்படும் (வண்டி எண் - 67206) காட்பாடி - திருப்பதி பயணிகள் ரெயில் மற்றும் திருப்பதியில் இருந்து காலை 10.35 மணிக்கு புறப்படும் (வண்டி எண் - 67207) காட்பாடி - திருப்பதி பயணிகள் ரெயில் மற்றும் காட்பாடியில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்படும் (வண்டி எண் - 67208) காட்பாடி - திருப்பதி பயணிகள் ரெயில் சேவை மார்ச் 13 முதல் 16 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் இருந்து காலை 07.35 மணிக்கு புறப்படும் (வண்டி எண் - 67205) திருப்பதி - காட்பாடி பயணிகள் ரெயில் மற்றும் காட்பாடியில் இருந்து இரவு 21.10 மணிக்கு புறப்படும் (வண்டி எண் - 67210) காட்பாடி - திருப்பதி பயணிகள் ரெயில் மற்றும் காட்பாடியில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்படும் (வண்டி எண் - 66017) காட்பாடி - ஜோலார்பேட்டை பயணிகள் ரெயில் மற்றும் ஜோலார்பேட்டையில் இருந்து காலை 12.55 மணிக்கு புறப்படும் (வண்டி எண் - 66018) ஜோலார்பேட்டை - காட்பாடி பயணிகள் ரெயில் மார்ச் 13 முதல் 17 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- மகா கும்பமேளா சிறப்பு ரெயில்கள் தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கன்னியாகுமரியில் இருந்தும் புறப்பட உள்ளன.
- பிரயாக்ராஜ் அருகில் உள்ள ஷிருங்வேர் பூர் மடத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார்.
புதுடெல்லி:
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் ஒவ்வொரு வருடமும் கும்பமேளாவும் 12 வருடங்களுக்கு ஒருமுறை மகா கும்பமேளாவும் நடைபெறுகிறது.
இந்த நிலையில் வருகிற ஜனவரி மாதம் மகா கும்பமேளா தொடங்க உள்ளது.
இதையொட்டி முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு ரூ.4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து, விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
மகா கும்பமேளாவுக்கு நாடு முழுவதிலும் இருந்து சுமார் 45 கோடி பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களது வசதிக்காக வழக்கமான 10,100 ரெயில்களுடன் 2,917 சிறப்பு ரெயில்களை ரெயில்வே துறை இயக்க உள்ளது.
மொத்தம் 13,017 ரெயில்கள் பிரயாக்ராஜுக்கு வந்து செல்ல இருக்கின்றன. உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகிக்கு ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் எழுதிய கடிதத்தில் இத்தகவலை கூறி உள்ளார்.
மகா கும்பமேளா சிறப்பு ரெயில்கள் தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கன்னியாகுமரியில் இருந்தும் புறப்பட உள்ளன. இந்த சிறப்பு ரெயில்கள் அனைத்தும் மகா கும்பமேளாவின் மவுனி அமாவாசை உள்ளிட்ட முக்கிய தினங்களில் இயங்க உள்ளன.
இதற்கிடையில் மகா கும்பமேளா ஏற்பாடுகளை ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 13-ந்தேதி பிரயாக்ராஜ் வருகிறார். அப்போது சில முக்கிய திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார்.
முன்னதாக பிரயாக்ராஜ் அருகில் உள்ள ஷிருங்வேர் பூர் மடத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார். இந்த மடமானது, ராமாயணத்தில் ராமரை படகில் அழைத்துச் சென்ற நிஷாத்ராஜ் எனும் குகன் பெயரில் செயல்படுகிறது. இங்கு குகனுடன் இணைந்த ராமரின் பிரம்மாண்ட சிலையை பிரதமர் திறந்து வைக்கிறார். ஷிருங்வேர்பூரில் இருந்து பிரதமர் மோடி, கங்கை நதி வழியாக க்ரூஸர் வகை சிறிய கப்பலில் பிரயாக்ராஜுக்கு பயணிக்கிறார். பிரயாக்ராஜின் கங்கை ஆரத்தி நிகழ்ச்சியிலும் பிரதமர் கலந்துகொள்கிறார்.
- தமிழ்நாட்டில் இருந்து தலா 20 பெட்டிகள் கொண்ட 15 ரெயில்கள் வட மாநிலங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் முக்கிய ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் நீக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் ஒவ்வொரு வருடமும் கும்பமேளாவும் 12 வருடங்களுக்கு ஒருமுறை மகா கும்பமேளாவும் நடைபெறுகிறது. இந்த நிலையில் வருகிற ஜனவரி மாதம் மகா கும்பமேளா தொடங்க உள்ளது.
உ.பி. கும்பமேளாவுக்காக தமிழ்நாட்டில் இருந்து தலா 20 பெட்டிகள் கொண்ட 15 ரெயில்கள் வட மாநிலங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் முக்கிய ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் நீக்கப்பட்டுள்ளது. தாம்பரம் - ராமேஸ்வரம் ரெயில் சேவை நிறுத்தப்பட்டதுடன், தாம்பரம் - திருச்சி, தாம்பரம் - கோவை ரயில்களில் பொதுப்பெட்டிகள் நீக்கத்தால் பயணிகள் அவதியடைந்தனர்.
இதனையடுத்து 600 கூடுதல் சிறப்புப் பேருந்துகளை தமிழக அரசுப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ள நிலையில், மதுரை மற்றும் கோயம்புத்தூர் செல்வதற்கான கட்டணத்தை தனியார் பேருந்துகள் இரு மடங்காக உயர்த்தியதாக கூறப்படுகிறது.






