என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோனாலிசா"

    • மோனோலிசா போஸ்லேவுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைப்புகள் வந்தது.
    • படத்தின் பூஜை வெளியீட்டு விழா கொச்சியில் நடந்தது.

    உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி மாதம் மகா கும்பமேளா நடைபெற்றது. இதில் உலகம் முழுவதும் இருந்து துறவிகள், சாதுக்கள், பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் வெளிநாடு பக்தர்கள் உள்பட பல கோடி பேர் கலந்து கொண்டு புனித நீராடினர்.

    இந்நிலையில் கும்ப மேளாவில் ருத்ராட்ச மாலைகள் விற்பதற்காக வந்த மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த மோனோலிசா போஸ்லே என்ற இளம்பெண் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. குறைந்த பட்ச ஒப்பனை, பாராம்பரிய உடையில் அவரின் காந்த கண்ணழகும், கவர்ச்சியும் ஒரே நாளில் அவரை உலகம் முழுவதும் பிரபலமாக்கியது. இளைஞர்கள் பலரும் பிரவுன் பியூட்டி என பெயரிட்டு அவரை கொண்டாடினர்.

    இதைத்தொடர்ந்து அவருக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது. பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான சனோஜ் மிஸ்ரா தனது படத்தில் மோனோலிசா போஸ்லேவை ஒப்பந்தம் செய்தார். ஆனால் அவர் பாலியல் வழக்கில் கைதானதால் மோனோலிசா போஸ்லேவின் சினிமா வாய்ப்பு தடைபட்டது.

    ஆனாலும் மோனோலிசா போஸ்லேவுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைப்புகள் வந்தது. அதை ஏற்று சில மாதங்களுக்கு முன் கேரளாவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவரை பார்ப்பதற்காக கூட்டம் அலைமோதியது.

    இந்நிலையில் மோனோலிசா போஸ்லேவுக்கு மலையாள திரையுலகில் அறிமுகமாக வாய்ப்பு கிடைத்தது. நடிகர் கைலாசுடன் இணைந்து நாகம்மா என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார்.

    பினுவர்க்கீஸ் இயக்கும் இந்த படம் இம்மாத இறுதியில் திரைக்கு வரும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் பூஜை வெளியீட்டு விழா கொச்சியில் நடந்தது. அதில் மோனோலிசா போஸ்லே பங்கேற்றுள்ளார். இதுதொடர்பான வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார்.

    அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது. மேலும் படத்தில் அவரது புதிய தோற்றத்தின் காட்சிகளும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

    • மகா கும்பமேளாவில் பாசிமணி மாலை விற்றுக்கொண்டு இருந்தவர் மோனாலிசா.
    • மோனாலிசாவுக்கு சினிமா வாய்ப்பு வீடு தேடி வந்தது.

    மும்பை:

    உத்தரபிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த மகா கும்பமேளாவில் பாசிமணி மாலை விற்றுக்கொண்டு இருந்தவர் மோனாலிசா. தனது காந்த விழி கண்களால் சமூக வலைதளங்கள் வாயிலாக ஒரே நாளில் இந்திய அளவில் மோனாலிசா பிரபலம் அடைந்தார். அவருடன் செல்பி எடுப்பதற்கு ஏராளமானோர் திரண்டதால் வேறு வழியின்றி கும்பமேளாவை விட்டு சொந்த வீட்டிற்கு திரும்பினார்.

    இந்நிலையில் மோனாலிசாவுக்கு சினிமா வாய்ப்பு வீடு தேடி வந்தது. இந்தி திரை உலகில் பிரபல இயக்குநரான சனோஜ் மிஸ்ரா இயக்க இருக்கும் புதிய படமான 'தி டைரி ஆப் மணிப்பூர்' என்ற படத்தில் நடிப்பதற்கு மோனாலிசாவுக்கு வாய்ப்பு வழங்கினார்.

    இதை அடுத்து மோனாலிசா மும்பைக்கு வரவழைக்கப்பட்டு அவரது தோற்றத்தை மாற்றியதுடன் சினிமா நடிப்புக்கென பயிற்சிகளும் வழங்கப்பட்டது. காந்த கண்ணழகி என வர்ணிக்கப்பட்ட மோனாலிசா சினிமா மட்டுமின்றி, நகைக்கடை திறப்பு விழா மற்றும் பொது நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளராகவும் பங்கேற்றார்.

    கேரளாவில் நடந்த பிரபல நகைக்கடை திறப்பு விழாவுக்கு விமானம் மூலம் வந்திறங்கிய மோனாலிசாவை காண பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர்.

    இந்நிலையில் மோனாலிசாவை நடிகையாக அறிமுகப்படுத்திய சனோஜ் மிஸ்ரா உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். அதனால் அந்த பெண் 3 முறை கருக்கலைப்பு செய்து உள்ளார். இந்நிலையில் சனோஜ் மிஸ்ரா மோனாலிசாவுடன் சுற்றிக்கொண்டு இருந்ததால் அந்த பெண் சனோஜ் மிஸ்ரா மீது புகார் கொடுத்தார். அவரது புகாரின் பேரில் சனோஜ் மிஸ்ரா காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

    இதை அடுத்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பி உள்ளார் மோனாலிசா. அவரை குடும்பத்தினர் சமாதானப்படுத்தி வருகின்றனர்.

    கைதான சனோஜ் மிஸ்ரா வழக்கை தீவிரமாக விசாரித்து வரும் போலீசார் மோனாலிசாவிடம் சனோஜ் மிஸ்ரா பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டாரா? என விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

    ×