என் மலர்
இந்தியா

கைதான டைரக்டரால் கும்பமேளா அழகி மோனாலிசாவுக்கு பாலியல் தொல்லையா?- போலீசார் விசாரணை
- மகா கும்பமேளாவில் பாசிமணி மாலை விற்றுக்கொண்டு இருந்தவர் மோனாலிசா.
- மோனாலிசாவுக்கு சினிமா வாய்ப்பு வீடு தேடி வந்தது.
மும்பை:
உத்தரபிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த மகா கும்பமேளாவில் பாசிமணி மாலை விற்றுக்கொண்டு இருந்தவர் மோனாலிசா. தனது காந்த விழி கண்களால் சமூக வலைதளங்கள் வாயிலாக ஒரே நாளில் இந்திய அளவில் மோனாலிசா பிரபலம் அடைந்தார். அவருடன் செல்பி எடுப்பதற்கு ஏராளமானோர் திரண்டதால் வேறு வழியின்றி கும்பமேளாவை விட்டு சொந்த வீட்டிற்கு திரும்பினார்.
இந்நிலையில் மோனாலிசாவுக்கு சினிமா வாய்ப்பு வீடு தேடி வந்தது. இந்தி திரை உலகில் பிரபல இயக்குநரான சனோஜ் மிஸ்ரா இயக்க இருக்கும் புதிய படமான 'தி டைரி ஆப் மணிப்பூர்' என்ற படத்தில் நடிப்பதற்கு மோனாலிசாவுக்கு வாய்ப்பு வழங்கினார்.
இதை அடுத்து மோனாலிசா மும்பைக்கு வரவழைக்கப்பட்டு அவரது தோற்றத்தை மாற்றியதுடன் சினிமா நடிப்புக்கென பயிற்சிகளும் வழங்கப்பட்டது. காந்த கண்ணழகி என வர்ணிக்கப்பட்ட மோனாலிசா சினிமா மட்டுமின்றி, நகைக்கடை திறப்பு விழா மற்றும் பொது நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளராகவும் பங்கேற்றார்.
கேரளாவில் நடந்த பிரபல நகைக்கடை திறப்பு விழாவுக்கு விமானம் மூலம் வந்திறங்கிய மோனாலிசாவை காண பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர்.
இந்நிலையில் மோனாலிசாவை நடிகையாக அறிமுகப்படுத்திய சனோஜ் மிஸ்ரா உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். அதனால் அந்த பெண் 3 முறை கருக்கலைப்பு செய்து உள்ளார். இந்நிலையில் சனோஜ் மிஸ்ரா மோனாலிசாவுடன் சுற்றிக்கொண்டு இருந்ததால் அந்த பெண் சனோஜ் மிஸ்ரா மீது புகார் கொடுத்தார். அவரது புகாரின் பேரில் சனோஜ் மிஸ்ரா காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இதை அடுத்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பி உள்ளார் மோனாலிசா. அவரை குடும்பத்தினர் சமாதானப்படுத்தி வருகின்றனர்.
கைதான சனோஜ் மிஸ்ரா வழக்கை தீவிரமாக விசாரித்து வரும் போலீசார் மோனாலிசாவிடம் சனோஜ் மிஸ்ரா பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டாரா? என விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.






