search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maha Kumbh Mela"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனது 1 வயது குழந்தையை சுமந்தவாறு ரயில்வே போலீஸ் ரீனா பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளார்.
    • பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா செல்ல புறப்பட்ட மக்கள் நேற்று முன் தினம் (சனிக்கிழமை) இரவு டெல்லி ரெயில் நிலையத்தில் கூட்டநெரிசலில் சிக்கினர்.

    இதில் 3 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து டெல்லி ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கூட்டநெரிசலுக்கு பின்னர், மகா கும்பமேளா செல்லும் வழித்தடத்தில் கூடுதலாக 4 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ரெயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது.

    இந்நிலையில் டெல்லி ரெயில் நிலையத்தில் தனது 1 வயது குழந்தையை சுமந்தவாறு ரீனா என்ற ரெயில்வே போலீஸ் (RPF) கான்டபிள் தனது கடமையை செய்யும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

    18 பேர் உயிரிழந்த ரெயில் நிலையத்தின் 16 ஆவது நடைமேடையில் ரீனா தனது குழந்தையை சுமந்தவாறு பயணிகளை ஒழுங்குபடுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.

    பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அவரது அர்ப்பணிப்பைக் கண்டு, பல பயணிகள் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக வணக்கம் செலுத்தி செல்கின்றனர்.  

     

    • இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று, மத்திய ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும்.
    • ஷ்ரவண மாதத்தில் அசைவ உணவை உண்பதன் மூலம் சனாதன தர்ம விதிகளை புறக்கணிக்கிறார்கள்

    உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் புனித நீராட வார நாட்களை விட விடுமுறை நாட்களில் வழக்கத்திற்கு அதிகமான மக்கள் கூட்டம் காணப்படுகிறது.

    அந்த வகையில், டெல்லி ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். ரெயில்வே துறையில் நிர்வாக தோல்வியே கூட்டநெரிசலுக்கு காரணம் என ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளார்.

    இந்நிலையில் கூட்டநெரிசல் குறித்து கருத்து தெரிவித்த பீகாரின் ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) தலைவரும், முன்னாள் மத்திய ரெயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் சர்ச்சை ஒன்றை கிளப்பினார்.

    பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய லாலு, மிகவும் சோகமான சம்பவம் நடந்துள்ளது. அனைத்து மக்களுக்கும் நாங்கள் அஞ்சலி செலுத்துகிறோம். இது ரெயில்வேயின் தவறு. ரெயில்வேயின் தவறான நிர்வாகத்தாலும் அலட்சியத்தாலும் இவ்வளவு பேர் இறந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று, மத்திய ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்தார்.

    மேலும் மகா கும்பமேளாவில் நிலவும் கூட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "இந்த கும்பமேளாவின் அர்த்தம் என்ன, கும்பமேளாவே அர்த்தமற்றது" என்றார்.

    இதை கையில் எடுத்த பீகார் பாஜக செய்தித் தொடர்பாளர் மனோஜ் சர்மா, ஆர்ஜேடி தலைவர்கள் எப்போதும் இந்துக்களின் மத உணர்வுகளை அவமதித்து வந்துள்ளனர்.

    மகா கும்பமேளாவை 'அர்த்தமற்றது' என்று ஆர்ஜேடி தலைவர் கூறியது, இந்து மதம் குறித்த அக்கட்சியின் மனநிலையை அம்பலப்படுத்தியுள்ளது. அவர்கள்(ஆர்ஜேடி) ஷ்ரவண மாதத்தில் அசைவ உணவை உண்பதன் மூலம் சனாதன தர்ம விதிகளை புறக்கணிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

    முன்னதாக கடந்த மாதம் 29 [புதன்கிழமை] மவுனி அமாவாசையை முன்னிட்டு அதிக பக்தர்கள் கலந்து கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்தது. 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

     

    • பிளாட்பார்ம் 12ல் காத்திருந்த கூட்டமும், வெளியே காத்திருந்த கூட்டமும் 16வது பிளாட்பார்மை நோக்கி சென்றது.
    • ரெயில்வே ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 1,500 பொது(UNRESERVED) டிக்கெட்டுகளை விற்றது

    இழப்பீடு

    உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் செல்ல புறப்பட்ட மக்கள் நேற்று(சனிக்கிழமை) இரவு டெல்லி ரெயில் நிலையத்தில் கூட்டநெரிசலில் சிக்கினர்.

    இதில் 3 குழந்தைகள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கூட்டநெரிசலுக்கு ரெயில்வே துறையின் தோல்வியே காரணம் என மக்களை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

    'உயர்மட்ட' விசாரணை

    இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    பயணிகளின் திடீர் அதிகரிப்பு பீதியை ஏற்படுத்தியது என்று ரெயில்வே அமைச்சகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

    இந்நிலையில் கூட்டநெரிசல் ஏற்பட ரெயில் நிலையத்தில் நிலவிய பல்வேறு குளறுபடிகளே காரணம் என சம்பவத்தை நெரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

     

     தாமதமான ரெயில்கள்

    மகா கும்பமேளாவிற்குச் செல்ல, ரெயில்களில் ஏற கூட்டம் கூடியிருந்தது. பிரயாக்ராஜ் செல்லும்  ரெயில்கள் தாமதமாக வந்ததால் நிலைமை மோசமடைந்து கூட்ட நெரிசலுக்கு வழிவகுத்தது என்று கூறப்படுகிறது.

    பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ், சுதந்திர சேனானி எக்ஸ்பிரஸ் மற்றும் புவனேஷ்வர் ராஜ்தானி தாமதமாக வந்தன. ரெயில்களில் ஏறுவதற்காக பயணிகள், 12,13, 14வது நடைமேடையில் கூடியிருந்தனர்.

    ரெயில் நிலையத்தில் வேலை செய்யும் போர்ட்டர் (கூலி) ஒருவர் கூறுகையில், பிரயாக்ராஜ் சிறப்பு ரயில் 12வது பிளாட்பார்மில் இருந்து புறப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அந்த ரெயில் 16வது பிளாட்பார்மிற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

    எனவே பிளாட்பார்ம் 12ல் காத்திருந்த கூட்டமும், வெளியே காத்திருந்த கூட்டமும் 16வது பிளாட்பார்மை நோக்கி சென்றது. மக்கள் ஒருவரை ஒருவர் மோதத் தொடங்கி எஸ்கலேட்டர் மற்றும் படிக்கட்டுகளில் விழுந்தனர். நான் 1981 முதல் கூலியாக வேலை செய்து வருகிறேன், ஆனால் இதுபோன்ற கூட்டத்தை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை என்று கூறினார்.

     

    தடுக்கப்பட்ட படிக்கட்டுகள்:

    கூட்டத்தை நிர்வகிக்க 14 மற்றும் 15வது பிளாட்பார்ம்களில் ஒரு படிக்கட்டு அடைக்கப்பட்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ரயில் தாமதம் தொடர்ந்ததால், படிக்கட்டுகளில் அதிகமான பயணிகள் கூடத் தொடங்கினர்.

    நெரிசல் அதிகமாகி, மக்கள் ரெயிலில் ஏறுவதற்காக படிக்கட்டுகளை நோக்கி முன்னே இருப்பவர்களை தள்ளினர். அந்தத் தள்ளுமுள்ளு காரணமாக பலர் கீழே விழுந்து நெரிசல் ஏற்பட்டது. நடைமேடையில் கூட்டம் அதிகரித்ததால் மற்றவர்கள் மூச்சுத் திணறினர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    ஒரு மணி நேரத்துக்கு 1,500 பொது டிக்கெட்டுகள் விற்பனை:

    ரெயில்வே தலைமை வணிக மேலாளர் கூற்றுப்படி, ரெயில்வே ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 1,500 பொது(UNRESERVED) டிக்கெட்டுகளை விற்றது. இதனால் ரெயில் நிலையத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவு கூட்டம் காணப்பட்டது. நடைமேடை எண். 14 மற்றும் நடைமேடை எண். 16 அருகே உள்ள எஸ்கலேட்டர் அருகே கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    • காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
    • ரெயில்வே அமைப்பின் தோல்வியை எடுத்துக் காட்டுகிறது.

    புதுடெல்லி:

    டெல்லி ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலியாகியுள்ளனர். கும்பமேளாவுக்கு செல்ல மக்கள் திரண்டு இருந்ததால் இந்த நெரிசல் ஏற்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசை பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கடுமையாக குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    டெல்லி ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் இறந்தனர் மற்றும் பலர் காயம் அடைந்தனர் என்ற செய்தி மிகவும் வருத்தமாகவும், துயரமாகவும் இருக்கிறது.


    உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது அழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

    இந்த சம்பவம் மீண்டும் ஒரு முறை ரெயில்வே அமைப்பின் தோல்வியை எடுத்துக் காட்டுகிறது. மத்திய அரசின் உணர்வின்மையை வெளிப்படுத்துகிறது.

    பிரக்யராஜால் நடை பெற்று வரும் கும்பமேளாவுக்கு அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் செல்வதை கருத்தில் கொண்டு ரெயில் நிலையத்தில் சிறந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்க வேண்டும். ரெயில்வேயின் அலட்சியமே இதற்கு காரணம்.

    தவறான நிர்வாகம், மற்றும் அலட்சியத்தில் யாரும் உயிரிழக்கக் கூடாது என்பதை அரசும், நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு ராகுல்காந்தி அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

    • தீ விபத்தில் ஏழு கூடாரங்கள், அதில் தங்கியிருத்த யாத்ரீகர்கள் இருந்த உடைமைகள் எரிந்து எரித்து நாசமாகின.
    • யாத்ரீகர்கள் உடைமைகள் எரிந்து எரித்து நாசமாகின.

    உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா வருகிற 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது.

    நாள்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்கான முகாம்கள், உதவி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மீண்டும் அப்பகுதியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

    செக்டார் 19 இல் அமைந்துள்ள லவ் குஷ் சேவா மண்டல் முகாமில் இன்று மாலை 6:15 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

    அதிகாரிகளின் கூற்றுப்படி, தீ விபத்தில் ஏழு கூடாரங்கள், அதில் தங்கியிருத்த யாத்ரீகர்களின் போர்வைகள் உள்ளிட்ட உடைமைகள் எரிந்து எரித்து நாசமாகின.

    தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும், தீ தற்போது கட்டுக்குள் இருப்பதாகவும் பிரயாக்ராஜ் கூடுதல் பொது மேலாளர் பானு பாஸ்கர் தெரிவித்தார்.

    முன்னதாக,

    ஜனவரி 19: செக்டார் 19 இல் உள்ள கீதா பத்திரிகையாளர் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் 180 கூடாரங்கள் எரிந்து நாசமானது.

    ஜனவரி 30: செக்டார் 22-ல் ஏற்பட்ட தீ விபத்தில் 15 கூடாரங்கள் எரிந்து நாசமாயின.

    பிப்ரவரி 7: செக்டார் 18 இல் உள்ள சங்கராச்சாரியார் மார்க்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பந்தல்கள் எரிந்து சாம்பலாயின.

    பிப்ரவரி 15: செக்டார் 18-19 இல் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது.

    • பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் நேற்று மாலை வரை 50 கோடி பக்கதர்கள் புனித நீராடியுள்ளனர்.
    • பல கி.மீ. தூரம் வரை வாகனங்கள் செல்ல முடியாமல் பக்தர்கள் தவித்து வருகின்றனர்.

    மகா கும்பமேளா கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கியது. உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் தொடங்கியது முதல் தினந்தோறும் லட்சணக்கான மக்கள் புனித நீராடி வருகிறார்கள்.

    நேற்று மாலை வரை 50 கோடிக்கும் அதிகமான மக்கள் புனித நீராடியுள்ளனர். மொத்தம் 45 நாட்கள் விழாவான மகா கும்பமேளா வருகிற 26-ந்தேதி நிறைவடைகிறது.

    பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வாகனங்கள் பல மைல்களுக்கு வெளியே தடுத்து நிறுத்தப்படுகிறது. அவர்களால் புனித நீராட முடியுமா? என்று தெரியவில்லை.

    இந்த நிலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவதற்கு வசதியாக மகா கும்பமேளா விழாவை மேலும் நீட்டிக்க வேண்டும் என உத்தர பிரதேச அரசுக்கு அகிலேஷ் யாதவ் வேண்டுகொள் விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறுகையில் "இதற்கு முன்னதாக மகா கும்பமேளா, கும்பமேளா 75 நாட்கள் வரை கடைபிடிக்கப்பட்டது. தற்போது நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது.

    தற்போது லட்சக்கணக்கான மக்கள் புனித நீராட விரும்புகின்றனர். ஆனால் அவர்களால் முடியாது. இந்த சூழ்நிலையில் அரசு மகா கும்பமேளா விழா நாட்களை நீட்டிக்க வேண்டும்" என்றார்.

    பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் கூட்டம் அலைமோதும் நிலையில், பிரயாக்ராஜ் செல்லும் ரெயில்களில் மக்கள் ஏற முடியாத அளவிற்கு கூட்டம் அலைமோதுகிறது. பிரயாக்ராஜ் ரெயில் நிலையம் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சாலையில் பல கி.மீ. தொலைவிற்கு வாகனங்கள் தத்தளித்து நிற்கிறது.

    கடந்த மாதம் பிரயாக்ராஜியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 30 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை உ.பி. அரசு மறைக்கிறது என அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

    • ​​குந்தி குரு திடீரென ரிக்ஷாவில் வந்து இறங்கி புன்னகையுடன், 'நீங்க என்ன பண்றீங்க' என்று கேட்டார்.
    • பூரி-சப்ஜி மற்றும் அவரது பதின்மூன்றாவது நாள் துக்க கூட்டத்திற்காகத் இனிப்புகள் தயாரிக்கப்பட்டன

    உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா வருகிற 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது.

    கடந்த மாதம் 29 [புதன்கிழமை] மவுனி அமாவாசையை முன்னிட்டு அதிக பக்தர்கள் கலந்து கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்தது. 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை அம்மாநில பாஜக அரசு மறைப்பதாக சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இந்நிலையில் அன்று நடந்த கூட்டநெரிசலில் இறந்துவிட்டதாக கருதப்பட்ட ஒருவர் உயிருடன் தனது வீட்டுக்கு சென்று அதிர்ச்சி கொடுத்துள்ளார். பிரயாக்ராஜை சேர்ந்த உள்ளூர்வாசியான 60 வயது முதியவர் குந்தி குருவுக்கு குடும்பம் இல்லை. அவர் தனியாக வசிக்கிறார்.

    மௌனி அமாவாசையின்போது குளிப்பதற்காக, ஜனவரி 28 ஆம் தேதி மாலையில் குந்தி குரு திரிவேணி சங்கமத்திற்குச் சென்றிருந்தார். ஜனவரி 29 அன்று நடந்த கூட்டநெரிசல் சம்பவத்திலிருந்து அவரை காணவில்லை.

    உள்ளூர் சமூக சேவகர் அபய் அவஸ்தி கூறுகையில், கூட்ட நெரிசலுக்குப் பிறகு, நாங்கள் அவரை எல்லா இடங்களிலும் தேடினோம், ஆனால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இறுதியாக, அவர் இறந்துவிட்டதாகக் கருதி, பிப்ரவரி 11 ஆம் தேதி அவரது ஆன்மா சாந்தியடைய ஒரு சிறிய பிரார்த்தனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்தோம். அதன் பிறகு பிராமணர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தபோது, குந்தி குரு திடீரென ரிக்ஷாவில் வந்து இறங்கி புன்னகையுடன், 'நீங்க என்ன பண்றீங்க' என்று கேட்டார்.

    குந்தி குரு உயிருடன் இருப்பதைக் கண்டு, அவரது அண்டை வீட்டார் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

    மற்றொரு பக்கத்து வீட்டுக்காரர் கூறுகையில், பூரி-சப்ஜி மற்றும் அவரது பதின்மூன்றாவது நாள் துக்க கூட்டத்திற்காகத் தயாரிக்கப்பட்ட இனிப்புகள் அவர் திரும்பியதைக் கொண்டாட உள்ளூர்வாசிகளிடையே விநியோகிக்கப்பட்டன.

    இவ்வளவு நாட்களாக அவர் காணாமல் போனது குறித்த கேள்விக்கு, குந்தி குரு, சாதுக்கள் குழுவுடன் சேர்ந்து புகைத்தேன். இதன் காரணமாக அவர் நீண்ட நேரம் தூங்கினேன். இதன் பிறகு நாக சாதுக்களின் முகாமுக்குச் சென்றதாகக் கூறினார். மேலும் அவர்களின் கடைகளில் உணவு பரிமாறும் சேவை செய்தேன் என்று அப்பாவியாகத் தெரிவித்தார். 

    • சார்ஜ் போர்டை பயன்படுத்தி ஒரே நேரத்தில் 25 போன்களுக்கு சார்ஜ் செலுத்த முடியும்.
    • வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்த வாலிபரை பாராட்டி பதிவிட்டனர்.

    உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் இதுவரை 50 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடி உள்ளனர். தொடர்ந்து அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும் நிலையில், ஒரு வாலிபர் செல்போன்களுக்கு 'சார்ஜ்' போடுவதன் மூலம் 1 மணி நேரத்துக்கு ரூ.1,000 வரை வருமானம் ஈட்டுவது இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.

    அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் செல்போன்களுக்கு 'சார்ஜ்' போட்டு தருகிறார். ஒரு பலகை முழுவதும் செல்போன்கள் நிறைந்துள்ள நிலையில், மேலும் பலர் தங்களது செல்போன்களை 'சார்ஜ்' செய்ய காத்திருக்கின்றனர். அந்த சார்ஜ் போர்டை பயன்படுத்தி ஒரே நேரத்தில் 25 போன்களுக்கு சார்ஜ் செலுத்த முடியும்.

    இதற்கு அவர் தலா ரூ.50 வசூலிக்கிறார். இதன் மூலம் அந்த வாலிபர் 1 மணி நேரத்துக்கு ரூ.1,000 வரை சம்பாதிப்பதாக கூறியுள்ளார். வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்த வாலிபரை பாராட்டி பதிவிட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • மோனலிசா மலையாளத்தில் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இன்றைய சமூக வலைத்தளங்களில் தினந்தோறும் பல வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. அவற்றில் சில விமர்சனத்தையும், சில வரவேற்பையும் பெறும். அப்படி வரவேற்பை பெற்ற இளம்பெண்ணின் வீடியோ அவரது வாழ்க்கையை மாற்றியுள்ளது என்று சொன்னால் மிகையாகாது.

    உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் கும்பமேளா நிகழ்ச்சியில் ருத்ராட்ச மாலைகளை விற்க வந்த மோனலிசா என்ற பெண் காந்த கண்ணால் ஒரே நாளில் சமூக வலைத்தளங்களில் வைரலானார். இதையடுத்து மோனலிசாவை சினிமாவில் நடிக்க வைப்பதாக இயக்குநர் ஒருவர் பொதுவெளியில் அறிவித்தார்.

    இந்த நிலையில், கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மோனலிசா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நகைக்கடையை திறந்து வைத்துள்ளார்.

    தொழிலதிபர் பாபி செம்மனூர் என்பவருக்கு சொந்தமான நகைக்கடையை மோனலிசா திறந்து வைப்பதாக வெளியான தகவலை அடுத்து நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நகைக்கடை திறப்பு விழாவில் மோனலிசாவுக்கு விலை உயர்ந்த நெக்லஸை அணிவித்து அழகு பார்த்த நிகழ்வு தற்போது பேசு பொருளாகி உள்ளது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் மோனலிசா மலையாளத்தில் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • பிரயாக்ராஜ் நெடுஞ்சாலையில் நேற்று இரவு கார் சென்று கொண்டிருந்தது.
    • மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் 19 பேர் படுகாயம் அடைந்தனர்.

    உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நடந்து வருகிறது.

    இதில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 10 பேர் ஒரு காரில் கும்பமேளாவுக்கு புறப்பட்டு சென்றனர்.

    உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் பிரயாக்ராஜ் நெடுஞ்சாலையில் நேற்று இரவு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த பஸ் கார் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் கார் முழுவதும் நொறுங்கியது.

    அதிலிருந்து பக்தர்கள் 10 பேர் பலியானார்கள். மேலும் பஸ்சில் இருந்த மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் 19 பேர் படுகாயம் அடைந்தனர்.

    நள்ளிரவில் நடந்த இந்த விபத்து காரணமாக பிரயாக்ராஜ்-மிர்சாபூர் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியானவர்கள் உடல்களை ஸ்வரூப் ராணி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

    பலியானவர்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

    • பிரயாக்ராஜில் மகா கும்பமேளா விழா கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
    • இதுவரை 50 கோடிக்கும் மேற்பட்டோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளனர்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா விழா கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதுவரை 50 கோடிக்கும் மேற்பட்டோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளனர்.

    இந்தநிலையில், மகா கும்பமேளா குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக 53 சமூக ஊடக கணக்குகளை முடக்கி போலீசார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். கும்பமேளாவில் கூட்ட நெரிசல், தீ விபத்து என பழைய வீடியோக்களை வெளியிட்டு தவறான தகவலை பரப்பி பதற்றம் ஏற்படுத்திய பல சமூக ஊடக கணக்குகள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    • ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள சிஹோரா பகுதிக்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் மினி பஸ் வந்துகொண்டிருந்தது.
    • படுகாயமடைந்த மேலும் 5 பேரை உள்ளூர் மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கியது. வருகிற 26-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. மகா சிவராத்திரி விழா முன்னிட்டு 26-ந்தேதி புனித நீராடலுடன் மகா கும்பமேளா விழா நிறைவடைகிறது.

    இந்நிலையில் மகா கும்பமேளாவுக்கு சென்று திரும்பிய ஐதராபாத்தை சேர்த்த பக்தர்கள் வந்த வாகனம் ஒன்று விபத்தில் சிக்கி உள்ளது.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் நாச்சரம் பகுதியை சேர்ந்த பக்தர்கள் மகா கும்பமேளாவில் வழிபாடு செய்தபின்னர் மினி பஸ்ஸில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.

    மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள சிஹோரா பகுதிக்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 8:30 மணியளவில் அவர்களது மினி பஸ் வேகமாக வந்துகொண்டிருந்தது.

    அப்போது தவறான பாதையில் எதிரே வந்த சிமென்ட் ஏற்றிச் சென்ற லாரி மீது மினி பஸ் மோதியுள்ளது. இதில் மினி பஸ்ஸில் வந்த பத்தர்கள் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    படுகாயமடைந்த மேலும் 5 பேரை உள்ளூர் மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களின் உடல்நிலை மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    ×
    <