search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Triveni Sangam"

    • கோவில்களில் பக்தர்களின் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது.
    • கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துவிட்டது.

    முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறைகடற்கரை பகுதி சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடப்பதை படத்தில் காணலாம்.***கன்னியாகுமரி, ஜூன்.12-

    இந்தியாவின் தென் கொடி முனையில் அமைந்து உள்ளது கன்னி யாகுமரி. இங்கு ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறையை குடும்பத் தோடு குதூகலத்துடன் கொண்டாட சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வந்த வண்ணமாக இருப்பார்கள். இதனால் இந்த 2 மாத காலமும் இங்கு கோடை விடுமுறை சீசன் காலமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு கோடை விடுமுறை சீசன் நேற்றுடன் முடிவ டைந்தது. இதைத் தொடர்ந்து 2 மாதங்களுக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது.

    இதனால் கன்னியாகு மரிக்கு சுற்றுலா பயணி களின் வருகை அடியோடு குறைந்து விட்டது. இன்று காலையில் 1500 முதல் 2000 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்த்து உள்ளனர்.

    சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்ததால் விவேகா னந்தர் மண்டபத்துக்கு செல்லும் "கியூ" செட்டில் ஆட்கள் இல்லாமல் வெறிச் சோடி காணப்படுகிறது. கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில், விவேகானந்த புரம் கடற்கரையில் அமைந்துள்ள திருப்பதி வெங்கடாஜலபதிகோவில் ஆகிய கோவில்களில் பக்தர்களின் கூட்டம் குறை வாகவே காணப்படுகிறது. இதனால் கன்னியாகுமரி யில் இருந்து வட்டக்கோட் டைக்கு உல்லாச படகு சவாரி செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை யும் வெகுவாக குறைந்து விட்டது. கன்னியாகுமரியில் உள்ள முக்கடலும் சங்க மிக்கும் திரிவேணி சங்கமம், சங்கிலித்துறை கடற்க ரைப்பகுதி, காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், மீன் காட்சிசாலை, கடற்கரையில் உள்ள பொழுதுபோக்கு பூங்காக்கள், அரசு பழத் தோட்டத்தில் உள்ள சுற்றுச் சூழல் பூங்கா, அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மியூசியம் வட்டக்கோட்டை பீச், சொத்தவிளை பீச், சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி போன்ற அனைத்து சுற்றுலா தலங்களும் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கின்றன. இதனால் கடைகளில் வியாபாரம் இன்றி வியாபாரிகள் தவிக்கிறார்கள்.

    • திரிவேணி சங்கமத்தில், புனித நீராட 14 படித்துறைகள் அமைக்கப்பட்டு இருந்தன.
    • கடும் குளிரையும், பனிமூட்டத்தையும் பொருட்படுத்தாமல், பக்தர்கள் புனித நீராட தொடங்கினர்.

    பிரயாக்ராஜ்:

    உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் உள்ளது. அங்கு புனித நீராடும் ஒரு மாத கால 'மகா மேளா' நேற்று தொடங்கியது. மார்கழி மாத பவுர்ணமியை முன்னிட்டு, முதல் நாளிலேயே புனித நீராட லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

    திரிவேணி சங்கமத்தில், புனித நீராட 14 படித்துறைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கடும் குளிரையும், பனிமூட்டத்தையும் பொருட்படுத்தாமல், பக்தர்கள் புனித நீராட தொடங்கினர்.

    புனித நீராடியதுடன், கங்கையில் பால் ஊற்றி சடங்குகள் செய்து வழிபட்டனர். காலை 10 மணிக்குள் 5 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மகா மேளாவையொட்டி, 500 படுக்கைகள் கொண்ட தங்குமிடம் அமைக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப்படை மற்றும் காவல்துறையின் நீச்சல் வீரர்கள் படகுகளில் ரோந்து சுற்றி வந்தனர்.

    ×