search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Katpadi"

    காட்பாடியில் கர்பிணிகளுக்கு நடத்துவது போன்று பசு மாட்டிற்கு 51 வகையான சீர் வரிசைகளுடன் சீமந்தம் நடந்தது.

    காட்பாடி:

    கர்ப்பிணி பெண்களுக்கு 7 அல்லது 9 மாதத்தில் சீர் வரிசசைகளுடன் சீமந்தம் நடப்பது வழக்கம். ஆனால் காட்பாடியில் கர்பிணிகளுக்கு நடத்துவது போன்று பசு மாட்டிற்கு 51 வகையான சீர் வரிசைகளுடன் சீமந்தம் நடந்தது.

    காட்பாடி வண்டறந் தாங்கல் காலணியில் வசிப்பவர் மைக்கேல் (56). விவசாயி. இவருடைய மனைவி பெயர் சாந்தா. இவர்களுக்கு குமார் உள்பட 3 மகன்கள் உள்ளனர். இதில் 2 மகன்கள் பெங்களூரில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். குமார் மட்டும் சொந்த ஊரில் விவசாயம் செய்து வருகிறார்.

    ‘‘ஒன் மேன் ஆர்மி’’ என்ற பெயரில் குமார் பசு ஒன்றை வளர்த்து வருகிறார். பசுவை காளை போன்று வளர்த்து பல்வேறு காளை விடும் நிகழ்ச்சியில் பங்கேற்க செய்து 50-க்கும் மேற்பட்ட பரிசுகளை பெற செய்துள்ளார்.

     


    குமார் குடும்பத்தில் பெண் வாரிசு இல்லாததால் பசுவையே தனது மகளாக கருதி வளர்த்து வந்தார். இதனால் சீமந்தம் நடத்தும் ஆசையில் சினையான பசுவுக்கு சீமந்த நிகழ்ச்சி நடத்த குமார் ஏற்பாடு செய்தார்.

    இதையடுத்து நிகழ்ச்சிக்கு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தனர். சீமந்த நிகழ்ச்சி வீட்டின் அருகே உள்ள மைதானத்தில் நேற்று மாலை 6 மணிக்கு நடந்தது. மேள தாளத்துடன் பெண்கள் 51- வகையான சீர் வரிசையுடன் ஊர்வலமாக நிகழ்ச்சிக்கு வந்தனர்.

    சீர்வரிசை பொருட்களை வைத்து கர்பிணிகளுக்கு சந்தனம் பூசுவது போன்று பசுவுக்கு சந்தனம் பூசி ஆரத்தி எடுத்து சீமந்தம் நடத்தினர். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது. இந்த வினோதமான நிகழ்ச்சியை காண ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்.

    எங்கள் குடும்பத்தில் பெண் வாரிசு இல்லாததால் பசுவை பெண் வாரிசாக நினைத்து சீமந்த நிகழ்ச்சி நடத்தினோம் என்றார்.

    காட்பாடியில் வீட்டுவரியை குறைக்க கோரி குடியிருப்போர் நலசங்கம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வேலூர்:

    புதிய வரிவிதிப்பை அரசு ஆணைப்படி மாற்றி அமைத்திட வேண்டும், பழுதடைந்த சாலைகளை சீரமைத்து தரமான சாலைகள் அமைக்க வேண்டும், காவிரி கூட்டு குடிநீர் அனைத்து பகுதிகளுக்கும் முறையாக வழங்கபட வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடியிருப்போர் நலசங்கம் சார்பில் காட்பாடி காந்திநகரில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு குடியிருப்போர் நலசங்க தலைவர் பிச்சுமணி தலைமை தாங்கினார். அருள்தணிகை செல்வன், லோகநாதன், பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராதாகிருஷ்ணன், சிவசங்கர், அமரன், துரைபாண்டி, கண்மணி, துரைமுருகன், தனசேகர் உள்பட பலர் கலந்து கொண்டு கோ‌ஷம் எழுப்பினர். முடிவில் பொருளாளர் சண்முகம் நன்றி கூறினார்.

    காட்பாடி அருகே ரெயிலில் பெண்ணிடம் செயின் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜோலார்பேட்டை:

    சென்னை பழைய வண்ணாரப்பேட்டை வெங்கடாசலம் தெருவை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி ராகினி (வயது 65). கணவன்-மனைவி இருவரும் கோவையில் நடைபெறும் யோகா பயிற்சியில் கலந்துகொள்வதற்காக நேற்று சென்னையில் இருந்து மங்களூரு செல்லும் வெஸ்ட்கோட்ஸ் ரெயிலில் சென்றுள்ளனர்.

    காட்பாடி ரெயில்நிலையத்தில் நின்று பயணிகள் இறங்கியதும் ரெயில் மெதுவாக சென்று கொண்டிருந்தது. இந்த நேரத்தில் ராகினி பயணம் செய்த அதே பெட்டியில் பயணம் செய்த 25 வயது மதிக்கத்தக்க மர்ம ஆசாமி, ராகினி கழுத்தில் கிடந்த 16 பவுன் செயினை பறித்துக்கொண்டு ரெயிலில் இருந்து குதித்து தப்பிச்சென்றுவிட்டார். ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்குவந்ததும் இதுபற்றி ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசில் ராகினி புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிவகாமிராணி வழக்குப்பதிவு செய்து செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடிய மர்ம ஆசாமியை தேடிவருகிறார்.

    காட்பாடியில் கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 12 பவுன் தங்க செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றுவிட்டனர்.

    வேலூர்:

    காட்பாடி சில்க்மில் பஸ் நிறுத்தம் அருகே உள்ள தாயுமானவர் தெருவை சேர்ந்தவர் சத்தியநாராயணன். இவரது மனைவி சாந்தி (வயது 45). காட்பாடி பஸ் நிறுத்தம் அருகே மளிகை கடை வைத்துள்ளனர்.

    நேற்று இரவு 11.30 மணிக்கு கடையை பூட்டிவிட்டு கணவன், மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.தாயுமானவர் தெருவில் சென்றபோது ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் சாந்தி கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் தங்க செயினை பறித்தனர். இதனால் திடுக்கிட்ட தம்பதி கூச்சலிட்டனர்.

    அதற்குள் மர்ம நபர்கள் தப்பி சென்றுவிட்டனர். இது தொடர்பாக காட்பாடி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.காட்பாடியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீடு புகுந்து பெண்களை கட்டிப்போட்டு 35 பவுன் நகையை வடமாநில கும்பல் கொள்ளையடித்து சென்றனர். தொடர் சம்பவங்களால் காட்பாடியில் திருட்டு பீதி ஏற்பட்டுள்ளது.

    காட்பாடி அருகே நில அளவையாளர் வீட்டில் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    காட்பாடி அடுத்த சேவூரை சேர்ந்தவர் தியாபிளஸ் (வயது 68). ஓய்வு பெற்ற நில அளவையாளர். இவரது மனைவி வசந்தி, சம்பவத்தன்று தம்பதியினர் வீட்டை பூட்டிவிட்டு காட்பாடியில் உள்ள வங்கிக்கு வந்தனர்.

    இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 8 பவுன் நகையை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.

    வீட்டிற்கு திரும்பிய தம்பதியினர் வீட்டின் பூட்டு உடைக்கபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது நகைகள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து தியாபிளஸ் திருவலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காட்பாடியில் இளம் பெண்ணிடம் செயின் பறித்து விட்டு தப்பி சென்ற வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர்.

    வேலூர்:

    காட்பாடி மதிநகரை சேர்ந்தவர் சம்பத் இவரது மனைவி செல்வி (வயது 48). இவர் இன்று காலை ஓடைபிள்ளையார் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே பைக்கில் ஹெல்மட் அணிந்து வந்த மர்ம நபர் திடீரென செல்வி அணிந்து இருந்த 3பவுனை செயினை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டார்.

    அதிர்ச்சியடைந்த செல்வி திருடன், திருடன் என கூச்சலிட்டார். அதற்குள் அந்த நபர் தப்பிச் சென்று விட்டார்.

    இது குறித்து செல்வி விருதம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×