search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிபிசிஐடி"

    • சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் ஆவணங்கள் ஒப்படைப்பு.
    • கைது செய்யப்பட்டவர்களின் 4 செல்போன்களும் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு.

    சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில், ஆவணங்களை தாம்பரம் போலீசார் ஒப்படைத்தனர்.

    சிபிசிஐடி டிஎஸ்பி சசிதரன் முன்னிலையில், விசாரணை அதிகாரியான சிபிசிஐடி காவல் ஆய்வாளர் லோகநாதனிடம் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் தாம்பரம் போலீசார் இதுவரை 15 பேரிடம் விசாரணை நடத்தி, 350 பக்க விசாரணை அறிக்கையை தயார் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    350 பக்க விசாரணை அறிக்கையை தாம்பரம் காவல் ஆய்வாளர் பாலமுரளி சுந்தரம், சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    கைது செய்யப்பட்டவர்களின் 4 செல்போன்களும் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    • தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு கொண்டு செல்லப்பட்டபோது 4 கோடி ரூபாய் சிக்கியது.
    • 4 கோடி ரூபாயும் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தம் என பிடிப்பட்டவர்கள் கூறியதாக தகவல் வெளியானது.

    தமிழகத்தில கடந்த 19-ந்தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்றது. அதற்கு முன்னதாக கடந்த 6-ந்தேதி சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து நெல்லைக்கு புறப்பட்ட ரெயிலில் பணம் கொண்டு செல்லப்படுவதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்அடிப்படையில் பறக்கும்படை அதிகாரிகள் ரெயிலில் சோதனை நடத்தினர்.

    அப்போது பணத்துடன் 3 பேர் சிக்கினர். அவர்கள் கொண்டு செல்ல முயன்ற 4 கோடி ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பணம் பறிமுதல் செய்யப்பட்டபோது பிடிப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர்கள் திருநெல்வேலி தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் எனத் தெரிவித்ததாக தகவல் வெளியானது.

    அதேவேளையில் நயினார் நாகேந்திரன், அது தனது பணம் இல்லை எனக் கூறினார். இது தொடர்பாக விசாரணை நடத்தி நயினார் நாகேந்திரனுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். காலஅவகாசம் கேட்டு, அவர் நேரில் ஆஜராகவில்லை. 2-வது முறையாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளார்.

    இந்த நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாம்பாரம் போலீசார் நாளை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க உள்ளனர்.

    • அனைத்து தரப்பிலும் விசாரணை முடிந்து இறுதி வாதங்களை தொடர்ந்து இன்று (26-ந்தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
    • உதவி பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றியவர் நிர்மலாதேவி (வயது 38). இந்தநிலையில் தான் பணியாற்றிய கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவிகள் சிலரை மூளைச்சலவை செய்துள்ளார்.

    மாணவிகளின் குடும்ப வறுமை மற்றும் ஏழ்மை நிலையை தெரிந்துகொண்டு அவர்களிடம் ஆசைவார்த்தைகள் கூறி பாலியல் ரீதியாக தவறான பாதைக்கு வழிநடத்தியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நிர்மலாதேவி, அவருக்கு உடந்தையாக இருந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.

    பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. அனைத்து தரப்பிலும் விசாரணை முடிந்து இறுதி வாதங்களை தொடர்ந்து இன்று (26-ந்தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதற்காக உதவி பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். ஆனால் 10.15 மணி வரை பேராசிரியை நிர்மலாதேவி வரவில்லை. இதையடுத்து அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் இன்று ஆஜராக முடியாத நிலை இருப்பதாக அவரது வக்கீல் சார்பில் மனு வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து இன்று வழங்கப்படுவதாக இருந்த வழக்கின் தீர்ப்பை வருகிற 29-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பகவதி அம்மாள் உத்தரவிட்டார்.

    • சிறைக்கு செல்வதற்கு விலக்கு அளிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் ராஜேஷ் தாஸ் மனு தாக்கல் செய்தார்.
    • சிறைக்குச் செல்ல விலக்கு கேட்கும் மனுவை ஐகோர்ட்டு நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்தார்.

    சென்னை:

    தமிழ்நாடு சிறப்பு டி.ஜி.பி.யாக பதவி வகித்தவர் ராஜேஷ் தாஸ். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதலமைச்சர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவருடன் சென்ற சிறப்பு டி.ஜி.பி., ஒரு பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு தன் காரில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு இருந்தது.

    இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு விசாரித்தது. பின்னர் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை விழுப்புரம் மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டு உறுதி செய்தது.

    2 கோர்ட்டுகளும் தண்டனை வழங்கியதால், ராஜேஷ் தாஸ் சிறைக்குள் சென்று விட்டு, அதன் பின்னர் தான் மேல்முறையீடு செய்ய வேண்டும்.

    ஆனால் சிறைக்கு செல்வதற்கு விலக்கு அளிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் ராஜேஷ் தாஸ் மனு தாக்கல் செய்தார். அதில் காவல் துறையில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்த தான் சிறைக்கு சென்றால் அது தனக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். மேலும் கீழ் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடும் செய்துள்ளார். இதில், சிறைக்குச் செல்ல விலக்கு கேட்கும் மனுவை ஐகோர்ட்டு நீதிபதி எம்.தண்டபாணி கடந்த வாரம் விசாரித்தார். பின்னர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி இன்று பிறப்பித்தார்.

    அப்போது ராஜேஷ் தாசின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். அவர் கீழ் கோர்ட்டில் சரண் அடைந்து சிறைக்கு சென்ற பின்னர் அவரது மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    • கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ந்தேதி முதல் கட்ட விசாரணை நடைபெற்ற நிலையில் அதில் ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர் சிங் உள்பட 14 போலீசாரும் ஆஜராகினர்.
    • இதுவரை 7 கட்டங்களாக வாய்தா போடப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் விசாரணைக்கு வந்த சிலரின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக அப்போதைய உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர்.

    இதில் ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங் 'சஸ்பெண்டு' செய்யப்பட்டார். மேலும் அவர் மீதும் மற்றும் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் உட்பட 14 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பான விசாரணை நெல்லை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ந்தேதி முதல் கட்ட விசாரணை நடைபெற்ற நிலையில் அதில் ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர் சிங் உள்பட 14 போலீசாரும் ஆஜராகினர்.

    அதனைத் தொடர்ந்து இதுவரை 7 கட்டங்களாக வாய்தா போடப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று 8-வது முறையாக குற்றம் சாட்டப்பட்ட பல்வீர்சிங் மற்றும் போலீசார் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று காலை நெல்லை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு-1 நீதிபதி திரிவேணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங், இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் முதல் நிலை காவலர் ஒருவர் ஆகிய 4 பேர் தவிர மீதம் உள்ள 10 போலீசாரும் ஆஜராகினர். அதனை தொடர்ந்து நீதிபதி திரிவேணி இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 29-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    • கொடநாடு வழக்கு ஊட்டி சார்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
    • வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் 10 பேரும் ஆஜராகாததால் வழக்கை வருகிற 29-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பான வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கை விசாரித்து வந்த மாவட்ட அமர்வு நீதிபதி அப்துல் காதர் விடுமுறையில் சென்றதால், இன்று இந்த வழக்கு ஊட்டி சார்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    விசாரணையின்போது, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அதே நேரத்தில் அரசு தரப்பு வக்கீல்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ், வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐடி போலீசார் ஆஜராகினர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீதரன், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் 10 பேரும் ஆஜராகாததால் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை வருகிற 29-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    இதுகுறித்து அரசு தரப்பு வக்கீல் ஷாஜகான் கூறும்போது, வழக்கு விசாரணைகள் நிலுவையில் உள்ளதாலும், அரசு தரப்பில் சேகரித்த தடயங்கள் குறித்தும், சம்பவம் நடந்த இடங்கள் குறித்து 2 தரப்பு மனுக்கள் நிலுவையில் உள்ளதால் விசாரணையை வருகிற 29-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டதாக தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சந்தோஷ் சாமி இன்று காலை கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
    • சி.பி.சி.ஐ.டி ஏ.டி.எஸ்.பி. முருகவேல் தலைமையிலான போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட், பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது.

    இது தொடர்பான வழக்கு ஊட்டி மாவட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கினை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதுவரை 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் வைத்து சயான், மனோஜிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய சந்தோஷ் சாமி என்பவரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் முடிவு செய்தனர். அதன்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

    இதையடுத்து சந்தோஷ் சாமி இன்று காலை கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி ஏ.டி.எஸ்.பி. முருகவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

    அவரிடம் கொடநாடு எஸ்டேட்டில் சம்பவத்தன்று என்ன நடந்தது. அங்கு என்னென்ன பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. யாரெல்லாம் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது? யார் சொல்லி அங்கு சென்றனர்? என பல கேள்விகளை கேட்டு விசாரித்தனர். 

    • அறிவியல் பூர்வமான சாட்சியங்களைச் சமர்ப்பிக்க வேண்டி உள்ளதால், குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டனர்
    • 3 பேருக்குக்குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் மனுத்தாக்கல் செய்தனர்

    புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் அறிவியல் பூர்வமான சாட்சியங்களைச் சமர்ப்பிக்க வேண்டி உள்ளதால், குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டனர்.

    சம்பவம் நடந்தபோது வாட்ஸ் அப் இல் பகிரப்பட்ட ஆடியோக்களின் அடிப்படையில், இந்த குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாகவும், இதன் முடிவுகள் வரும் பட்சத்தில் இந்த வழக்கு அடுத்த கட்டத்திற்குச் செல்ல வாய்ப்புள்ளதாகவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் கருதப்படுகிறது.

    இதனையடுத்து 3 பேருக்குக்குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் மனுத்தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் 3 பேரில் 2 பேர் மட்டுமே கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். இதையடுத்து இந்த வழக்கை வருகிற 25-ந்தேதிக்கு ஒத்திவைத்து பூர்ண ஜெய ஆனந்த் உத்தரவிட்டார்.

    அதன்படி இன்று நடைபெற்ற வழக்கின் விசாரணையில், 3 பேர்களுக்கு குரல் மாதிரி பரிசோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. 

    • அறிவியல் பூர்வமான சாட்சியங்களைச் சமர்ப்பிக்க வேண்டி உள்ளதால், குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டனர்.
    • 3 பேருக்குக்குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் மனுத்தாக்கல் செய்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் அறிவியல் பூர்வமான சாட்சியங்களைச் சமர்ப்பிக்க வேண்டி உள்ளதால், குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டனர்.

    சம்பவம் நடந்தபோது வாட்ஸ் ஆப் தளங்களில் பகிரப்பட்ட ஆடியோக்களின் அடிப்படையில், இந்த குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாகவும், இதன் முடிவுகள் வரும் பட்சத்தில் இந்த வழக்கு அடுத்த கட்டத்திற்குச் செல்ல வாய்ப்புள்ளதாகவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் கருதப்படுகிறது.

    இதனையடுத்து 3 பேருக்குக்குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் மனுத்தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் 3 பேரில் 2 பேர் மட்டுமே கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். இதையடுத்து இந்த வழக்கை வருகிற 25-ந்தேதிக்கு ஒத்திவைத்து பூர்ண ஜெய ஆனந்த் உத்தரவிட்டார்.

    • மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • இந்த வழக்கில் ஏற்கனவே ஒரு போலீஸ்காரர் உள்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ஏற்கனவே 38 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டதில் அதன் மாதிரி குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட அசுத்தத்தின் மாதிரியுடன் ஒத்துப்போகவில்லை.

    இந்த நிலையில் வேங்கைவயல், இறையூர் பகுதிகளை சேர்ந்த 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் புதுக்கோட்டை எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு தள்ளுபடியானது.

    தற்போது இந்த வழக்கில் அப்பகுதியை சேர்ந்த 3 பேரின் குரல் மாதிரியை பரிசோதனை செய்ய அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி போலீசார் மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு வருகிற 19-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.

    மேலும் இந்த வழக்கில் ஏற்கனவே ஒரு போலீஸ்காரர் உள்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு அப்போதைய சிறப்பு டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ்தாஸ், பாலியல் தொல்லை கொடுத்தார்.
    • ராஜேஷ்தாஸ் வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க, அனைத்து விமான நிலையங்களுக்கு சிபிசிஐடி போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

    சென்னை:

    பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் தலைமறைவு என தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க, அனைத்து விமான நிலையங்களுக்கு சிபிசிஐடி போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

    ராஜேஷ் தாஸ் தலைமறைவாகிவிட்டதாகவும், அவரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ராஜேஸ் தாஸ் வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும் என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர்.

    முன்னதாக,

    தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு அப்போதைய சிறப்பு டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ்தாஸ், பாலியல் தொல்லை கொடுத்தார்.

    இதுகுறித்து பெண் ஐ.பி.எஸ். அதிகாரி கொடுத்த புகாரின்பேரில் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

    மேலும் முன்னாள் டி.ஜி.பி. உத்தரவின்பேரில் பெண் அதிகாரியின் காரை வழிமறித்து சாவியை பிடுங்கிய செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு கண்ணனுக்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து இருவரும், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தனர்.

    இதன் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் கோர்ட்டில் தொடங்கியது. பலகட்ட விசாரணைக்கு பிறகு இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த மாவட்ட நீதிபதி, இம்மேல்முறையீட்டு வழக்கில் பிப்ரவரி 12-ந் தேதி தீர்ப்பு கூறப்படும் என்று அறிவித்தார்.

    இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ராஜேஷ்தாஸ் தரப்பு வக்கீல்கள் பழனிவேல், ரவீந்திரன் ஆகியோர் ஆஜராகி, சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருவதால் இவ்வழக்கை கள்ளக்குறிச்சி கோர்ட்டுக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளதாகவும், அதன் உத்தரவு வரும் வரை விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு தேதியை தள்ளிவைக்கும்படி மனுதாக்கல் செய்தனர்.

    இம்மனுவை ஏற்க மறுத்த மாவட்ட நீதிபதி பூர்ணிமா, அதை தள்ளுபடி செய்தார். மேலும் ராஜேஷ்தாஸ், கண்ணன் ஆகியோரின் மேல்முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்த மாவட்ட நீதிபதி பூர்ணிமா, கீழ்கோர்ட்டான விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் ராஜேஷ்தாசுக்கு விதித்த 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரத்து 500 அபராதமும், செங்கல்பட்டு முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு கண்ணனுக்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்ட தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டார்.

    இந்நிலையில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொடநாடு பங்களாவில் நீதிபதி நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
    • சிபிசிஐடி போலீசார், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மின்வாரியத்துறை அதிகாரிகள் அடங்கிய நிபுணர் குழு ஆய்வு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது.

    இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலீசார் 10 பேரை கைது செய்தனர். தற்போது அவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியில் உள்ளனர்.

    இந்த வழக்கில் தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது.

    கொடநாடு பங்களாவில் நீதிபதி நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஊட்டி கோர்ட்டில் கொடநாடு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் காதர், கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக பங்களாவை ஆய்வு செய்ய அனுமதி அளித்தார்.

    சிபிசிஐடி போலீசார், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மின்வாரியத்துறை அதிகாரிகள் அடங்கிய நிபுணர் குழு ஆய்வு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    தடயங்களை அழிக்கக்கூடாது, மாற்றக்கூடாது என்ற நிபந்தனையுடன், ஆய்வு செய்வதை முழுவதுமாக வீடியோ எடுத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    ×