என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "cbcid"
- 8 செல்போன்கள் மற்றும் 4 சிம்கார்டுகள் கோவையில் உள்ள தொழில் நுட்ப ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- உதகையில் உள்ள மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் அறிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உதகை:
கொடநாடு கொலை கொள்ளை வழக்கை சிபிசிஐடி போலிசார் கடந்த ஓராண்டுக்கு மேலாக விசாரித்து வரும் நிலையில் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்த பிஜின் குட்டி, தீபு, ஜம்சீர் அலி ஆகியோரின் செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகளை ஆய்வு செய்ய வேண்டும் என நீதிபதியிடம் சிபிசிஐடி தரப்பு மனுதாக்கல் செய்தனர்.
இதனையடுத்து கடந்த ஜூலை மாதம் பிஜின்குட்டி, தீபு, ஜம்சீர் அலி ஆகியோரின் 8 செல்போன்கள் மற்றும் 4 சிம்கார்டுகள் கோவையில் உள்ள தொழில் நுட்ப ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த ஆய்வத்தில் கடந்த 4 மாதங்களாக ஆய்வு செய்ய நிலையில் Recover செய்யப்பட்ட தகவல்கள் மற்றும் தகவல் பரிமாற்ற விபரங்களை அறிக்கையாகவும், ஆய்வு செய்யப்பட்ட செல்போன்கள், சிம்கார்டுகள் மற்றும் பென் டிரைவ்கள் மூடி முத்திரையிட்ட கவரில் இன்று காலை உதகையில் உள்ள மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- மரபணு சோதனை செய்த 30 பேரில் 10 பேருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியது.
- பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 10 பேர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில், நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் நேரில் ஆஜராகினர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியில் அடையாளம் தெரியாதவர்களால் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. குடிநீரில் மனிதக்கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து, மத்திய மண்டல ஐ.ஜி கார்த்திகேயன் உத்தரவின்பேரில் புதுக்கோட்டை கூடுதல் எஸ்.பி. ரமேஷ் தலைமையில், 2 டி.எஸ்.பிக்கள், 4 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
பின்னர் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் அறிவியல் ரீதியான தடயங்களை சேகரிக்க 119 பேருக்கு ரத்த மாதிரிகளை எடுக்க திட்டமிட்ட நிலையில் 5 சிறுவர்கள் உள்பட 31 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனைக்கான ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து ஏற்கனவே மரபணு சோதனை செய்த 30 பேரில் 10 பேருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியது.
அதன்படி இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 10 பேர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில், நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் நேரில் ஆஜராகினர்.
அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி ஜெயந்தி, விசாரணையை மாலை 4 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
- ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்.அதிகாரி ஞானசம்பந்தத்தின் மகன் ஆவார்.
- பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர்.
கோவை:
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது.
இந்த சம்பவம் தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
முக்கிய குற்றவாளியான சேலத்தை சேர்ந்த கனகராஜ் சேலத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்து விட்டார்.
கொடநாடு வழக்கினை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கனகராஜ் விபத்தில் இறந்தது குறித்து போலீசாருக்கு ஒருவர் தகவல் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர்.
இதில் இந்த விபத்தை நேரில் பார்த்தது சிவக்குமார் என்பது தெரியவந்தது. இவர் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்.அதிகாரி ஞானசம்பந்தத்தின் மகன் ஆவார்.
இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ந் தேதி சென்னையில் இருந்து திருப்பூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அவர் விபத்தை கவனித்து 108 ஆம்புலன்சுக்கு தெரிவித்தார்.
இந்த நிலையில் இவரிடம் விசாரணை நடத்த திட்டமிட்ட சி.பி.சி.ஐ.டி போலீசார் அவருக்கு இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர்.
அதன்படி இன்று அவர் கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்தனர்.
அவரிடம் நீங்கள் விபத்தை எப்போது பார்த்தீர்கள். அந்த நேரம் நினைவிருக்கிறதா? அப்போது வேறு யாராவது அங்கு இருந்தனரா? விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது தெரியுமா? என்பன உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர்.
- மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் அடையாளம் தெரியாதவர்களால் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
- குடிநீரில் மனிதக்கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் அடையாளம் தெரியாதவர்களால் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. குடிநீரில் மனிதக்கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, மத்திய மண்டல ஐ.ஜி கார்த்திகேயன் உத்தரவின்பேரில் புதுக்கோட்டை கூடுதல் எஸ்.பி. ரமேஷ் தலைமையில், 2 டி.எஸ்.பிக்கள், 4 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
பின்னர் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அறிவியல் ரீதியான தடயங்களை சேகரிக்க 119 பேருக்கு ரத்த மாதிரிகளை எடுக்க கோர்ட்டு திட்டமிட்ட நிலையில் 5 சிறுவர்கள் உள்பட 31 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனைக்கான ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பி உள்ளது.
- மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்களின் மீது காவல்துறை பிரிவு 306-ன் கீழ் மட்டுமே வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.
- பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்கான வழக்கு எண் சேர்க்கப்படவில்லை என அறிகிறேன்.
சென்னை :
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவ கல்லூரியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு பயின்று வந்த மாணவி சுஜிர்தா (வயது 27) பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை தருவதாக எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்களின் மீது காவல்துறை பிரிவு 306-ன் கீழ் மட்டுமே வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்கான வழக்கு எண் சேர்க்கப்படவில்லை என அறிகிறேன். காவல்துறை அதிகாரிகள் உடனடியாக மாணவியின் தற்கொலைக்கு காரணமாக இருந்தவர்களை கைது செய்து விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரவும், இனிமேல் இதுபோன்று எந்தவொரு மாணவிக்கும் துயரம் ஏற்படாத வகையில், நேர்மையான முறையில் விசாரணை நடப்பதற்கு, இவ்வழக்கினை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட்டு, உரிய நீதி பெற்றுத்தர வேண்டுமென தமிழக அரசிடம் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், கல்லூரிக்கு படிக்கச் சென்ற மகளை இழந்து தீராத வேதனையில் வாடும், முதுநிலை மருத்துவ கல்லூரி மாணவியின் பெற்றோருக்கும், நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- 4 பக்கம் கொண்ட அந்த அறிக்கையில் வழக்கு தொடர்பாக 167 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
- நீதிபதி அப்துல்காதர் வழக்கை அக்டோபர் 13-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. இதனை தடுக்கச் சென்ற காவலாளி ஓம்பகதூர் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் இறந்து விட்டார்.
தற்போது இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையிலான அதிகாரிகள் இதுவரை பலரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று இந்த வழக்கு நீதிபதி அப்துல்காதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்ட வாளையார் மனோஜ், ஜம்சீர் அலி உள்ளிட்டோர் கோர்ட்டில் ஆஜராகினர்.
சி.பி.சி.ஐ.டி. தரப்பில் வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் வாதாடினர். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஏ.டி.எஸ்.பி. முருகவேல், வழக்கின் இடைக்கால விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார்.
4 பக்கம் கொண்ட அந்த அறிக்கையில் வழக்கு தொடர்பாக 167 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்தவேண்டியுள்ளது. எனவே தங்களுக்கு விசாரணையை இறுதி செய்ய அவகாசம் தேவை என கூறப்பட்டு இருந்தது. இதை ஏற்று நீதிபதி அப்துல்காதர் வழக்கை அக்டோபர் 13-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இந்த வழக்கில் விபத்தில் இறந்த கனகராஜின் சகோதரர் தனபாலும் கைது செய்யப்பட்டிருந்தார். ஜாமினில் வெளியே வந்த அவர் வழக்கு தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தபடி உள்ளார். இதனால் அவரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர்.
இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. வருகிற 14-ந் தேதி கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.
- ஞானம்மாள் திருவாரூர் மாவட்ட குற்றபிரிவு போலீசில் புகார் அளித்தார்.
- சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் ஞானம்மாள் தரப்பில் சென்னை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 59). அ.தி.மு.க.வை சேர்ந்த இவர், மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக உள்ளார்.
இவர் கடந்த சில ஆண்டு மன்னார்குடி சேர்ந்த ஞானம்மாள் என்ற பெண்ணுக்கு சொந்தமான ரூ.30 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து பத்திரப்பதிவு செய்துள்ளார். இது குறித்து ஞானம்மாள் திருவாரூர் மாவட்ட குற்றபிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் ஞானம்மாள் தரப்பில் சென்னை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.சந்திரசேகரன் வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றியும், சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி 3 மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்று காலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மனோகரன் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அன்பரசன் தலைமையில் 25 க்கும் மேற்பட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் உள்ளதா என்பது குறித்தும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடைபெற்று வருவது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் சில இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
- புகாரின் அடிப்படையில் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆய்வு நடத்தி விசாரணை நடத்தினர்.
நெல்லை:
அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டாக இருந்த பல்வீர் சிங், அந்த சரகத்துக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணை க்காக அழைத்து வருபவ ர்களின் பற்களை பிடுங்கி யதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படை யில் அவர் சஸ்பெண்டு செய்யப்பட்ட தோடு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக அப்போதைய நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சில இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். ஒரு சில இன்ஸ்பெக்டர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சூர்யா என்ற வாலிபர் கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேரடியாக சென்று ஆய்வு நடத்தி விசாரணை நடத்தினர்.
மேலும் சூர்யாவுக்கு சம்மன் அனுப்பி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை நடத்திய நிலையில் தற்போது சூர்யா மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது.
அதன்படி என்.ஜி.ஓ. காலனியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நாளை(புதன்கிழமை) காலை 11 மணிக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக சூர்யாவுக்கு சம்மன் வழங்கி உள்ளனர். அவர் நேரில் ஆஜராக வரும் பட்சத்தில் அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
இவரது புகாரின்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- கொடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது.
- பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கொடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது.
இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த சம்பவத்தை சேலம் ஆத்தூரை சேர்ந்த கனகராஜ் தலைமையிலான கும்பல் அரங்கேற்றியது. இதில் கனகராஜ் சாலை விபத்தில் இறந்து விட்டார். இதையடுத்து போலீசார் இதில் தொடர்புடையதாக சயான், வாளையார் மனோஜ் உள்பட கேரளாவை சேர்ந்த 10 பேரை கைது செய்தனர்.
கொடநாடு கொலை, கொள்ள தொடர்பான வழக்கு ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில், சயான், வாளையார் மனோஜ், சந்தோஷ் சாமி, திபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ்சாமி, பிஜின் குட்டி, ஆகிய 10 பேர் குற்றம்சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
தவிர, வாகன விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் உள்பட 316 பேரிடம் மறு விசாரணையும் நடத்தப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்ட பின், சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி., முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, 49 பேர் அடங்கிய குழு விசாரணை நடத்தி வருகிறது. இவர்கள் பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கூடுதல் எஸ்.பி முருகவேல் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி போலீசார் நேற்று ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி அப்துல் காதரிடம் மனு தாக்கல் செய்தனர்.
அதில், இந்த வழக்கில் தொடர்புடைய விபத்தில் இறந்த கனகராஜ் மற்றும் சகோதரர் தனபால் உட்பட குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடம் இருந்து, 8 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏற்கனவே கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. அந்த போன்களை விசாரணைக்காக தங்களிடம் வழங்க வேண்டும் என கேட்டுள்ளனர்.
அந்த செல்போன்கள் சி.பி.சி.ஐ.டி வசம் வந்ததும், போன்களில் பதிவாகியுள்ள தகவல்களை ஆய்வு செய்யும் வகையில், கோவையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி, அதில் கிடைக்கும் தகவல்களை வைத்து மேலும் விசாரணையை தீவிரப்படுத்த உள்ளனர்.