என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "home robbery"
சிங்காநல்லூர்:
கோவை சிங்காநல்லூர் பங்காரு லே-அவுட்டை சேர்ந்தவர் பிரபு (வயது 38). இவர் கடந்த 1-ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு சீரடி சாய்பாபா கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக குடும்பத்துடன் சென்றார்.
இன்று காலை வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவில் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. அதிர்ச்சியடைந்த பிரபு வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அறையில் இருந்த பீரோவை திறந்த மர்ம நபர்கள் அதில் இருந்த ரூ. 10 ஆயிரம் ரொக்க பணம், செயின், மோதிரம், வளையல் உள்பட 20 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்தது.
இது குறித்து பிரபு சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஆவடி:
ஆவடி வசந்தம் நகரில் யமுனை தெருவை சேர்ந்தவர் ராமசந்திரன் (32). சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு நிறுவனத்தின் கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆக பணிபுரிகிறார்.
கடந்த வாரம் தனது சொந்த ஊரான ஊட்டிக்கு குடும்பத்துடன் சென்று இருந்தார். இன்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் வெளிப்புற கேட் உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் கதவும் உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அறையில் இருந்த பீரோவை பார்த்தார்.
அதில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்க பணத்தை காணவில்லை. அவற்றை யாரோ கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இது குறித்து ஆவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
பொன்னேரி:
பொன்னேரி அருகே சக்திநகரை சேர்ந்தவர் சந்துருகுமார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இவர் குடும்பத்துடன் சென்னையில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்று இருந்தார். இந்தநிலையில் சந்துருகுமாரின் வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பக்கத்து வீட்டுக்காரர் பார்த்தார்.
இதுபற்றி சந்துருகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது 25 பவுன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.
சந்துரு வெளியூர் சென்று இருப்பதை நோட்டமிட்டு மர்ம கும்பல் நகை-பணத்தை சுருட்டி சென்று உள்ளனர். இதில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.
இதுபற்றி பொன்னேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
நேற்று பொன்னேரியை அடுத்த சின்னக்காவனம் கிராமத்தில் நடராஜன் என்பவர் வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை போனது. பொன்னேரி பகுதியில் தொடர்ந்து நடந்து வரும் கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
மதுராந்தகம்:
மேல்மருவத்தூரை அடுத்த கேசவராயன்பேட்டை, லட்சுமி நகரில் வசித்து வருபவர் பாலமுருகன். மேல்மருவத்தூரில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி மற்றும் மகன் கடந்த மாதம் கோவில்பட்டியில் உள்ள சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். அவர்களை அழைத்து வருவதற்காக பாலமுருகன் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு சென்றார்.
இன்று காலை பாலமுருகன் குடும்பத்துடன் திரும்பி வந்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைத்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகை, ரூ.2 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போயிருந்தது.
பாலமுருகன் வீட்டில் இல்லாததை நோட்டமிட்ட மர்ம கும்பல் நகை- பணத்தை சுருட்டி சென்றுள்ளனர். இதில் ஈடுபட்டது அதே பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.
இதுகுறித்து பாலமுருகன் மேல்மருவத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
கோவை பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள தெற்கு பாளையம் தாமு நகரை சேர்ந்தவர் ஈஸ்வரன். இரவது மனைவி சிவகாமி (வயது 45). மின்சார வாரிய ஊழியர்.
நேற்று காலை இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். வேலை முடிந்ததும் மாலையில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. அதிர்ச்சியடைந்த சிவகாமி வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது அறையில் பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோவை திறந்து பார்த்த போது அதில் இருந்த கம்மல், வளையல், மோதிரம் உள்பட 11¼ பவுன் தங்க நகைகளை கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இது குறித்து சிவகாமி பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
அன்னூர் அருகே உள்ள ஒட்ரபாளையம் அம்மன் நகரை சேர்ந்தவர் தவமூர்த்தி (வயது 55). ஓய்வு பெற்ற எல்.ஐ.சி. மேலாளர்.
கடந்த 7-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பெங்களூருக்கு சுற்றுலா சென்றார். நேற்று காலை வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவில் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது.
அதிர்ச்சியடைந்த தவமூர்த்தி வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அறையில் இருந்த பீரோவை திறந்த மர்மநபர்கள் அதில் இருந்த செயின், வளையல், கம்மல், மோதிரம் உள்பட 19½ பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து தவமூர்த்தி அன்னூர் போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து செய்து நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
பெரம்பூர்:
பெரவள்ளூர் 5-வது சர்க்கிள் ரோட்டை சேர்ந்தவர் கணேசன். தனியார் நிறுவன ஊழியர்.
இவருடைய மனைவி திவ்யா (24). வீட்டில் தனியாக டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்த ஒருவர் வீட்டுக்குள் புகுந்தார்.
இதை பார்த்த திவ்யா கத்த தொடங்கினார். உடனே முகமூடி அணிந்து வந்தவர், கத்தினால் கொலை செய்துவிடுவேன் என்று கூறி திவ்யாவின் வாயை பொத்தி ஒரு நாற்காலியில் கட்டிபோட்டார்.
கண் இமைக்கும் நேரத்தில் திவ்யாவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்துவிட்டு முகமூடி ஆசாமி வெளியே ஓடினான். திவ்யாவின் குரல் கேட்டு மாடியில் இருந்த தாய் கீழே ஓடிவந்தார்.
இதற்குள் திருடன் நகையுடன் தப்பி ஓடிவிட்டான். பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடனை தேடி வருகிறார்கள்.
மதுரை:
மதுரை கூடல்புதூரில் உள்ள செல்லையா நகரைச் சேர்ந்தவர் செல்வன் தினேஷ் டேவிட்சன் (வயது51). இவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியே சென்று விட்டார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தை பயன்படுத்தி பின்பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் பீரோவுக்குள் இருந்த 30 பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பினர்.
மாலையில் வீடு திரும்பிய செல்வன்தினேஷ் டேவிட்சன், கதவு உடைக்கப்பட்டு நகைகள் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து கூடல்புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
சென்னை:
சைதாப்பேட்டை, ஆஸ்பத்திரி சாலையில் வசித்து வருபவர் சந்துரு. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சிதம்பரத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்றார்.
இன்று காலை அவர்கள் திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 11 பவுன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கம், 3 லேப்-டாப் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
பழைய வண்ணாரப்பேட்டை என்.என்.கார்டன் பகுதியை சேர்ந்தவர் முகமது அலி. இவரது மனைவி சகான்அலி. இவரது வீட்டு பீரோவில் 15 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் ரொக்கப் பணம் இருந்தது. கடந்த 10-ந்தேதி நகை- பணம் இருப்பதை சகான்பீவி பார்த்துள்ளார்.
நேற்று பீரோவை திறந்து பார்த்தபேது நகை- பணத்தை காணவில்லை. நகைகள் மாயமானது குறித்து சகான்பீவி பழைய வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் கேஜிபி நகரை சேர்ந்தவர் வர்மா (65). ஓய்வு பெற்ற பொதுப் பணித்துறை என்ஜினீயர். இவரது மனைவி சவுதா. இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் சென்னை ராஜா அண்ணா மலைபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று மனைவியை பார்க்க வர்மா வீட்டைப் பூட்டிவிட்டு மருத்துவ மனைக்கு சென்றுள்ளார். இன்று காலை வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி பீரோவில் மருத்துவச் செலவுக்காக வைத்திருந்த ரூ.3 லட்சம் பணம், வைரக்கற்கள் பதிக்கப்பட்ட கம்மல், வளையல் உள்ளிட்ட 60 பவுன் நகை கொள்ளை போய் இருந்தது.
இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.
சென்னை:
சென்னை சூளைமேடு பாரி தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பொன்னி வீட்டு வேலை செய்து வருகிறார். மகள் பிரியா தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
நேற்று காலையில் ராமகிருஷ்ணன் அவரது மனைவி, மகள் ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர். மாலையில் ராமகிருஷ்ணன் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த 13 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து சூளைமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.