search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ATM"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊரில் இருந்து பணத்தை திருடி தனது மனைவிக்கு அனுப்பி விடுவது வழக்கம்.
    • கடந்த சில நாட்களாக இவர் போடியில் தங்கி இருந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகில் உள்ள ஜக்கமநாயக்கன்பட்டி ராமநாதன் நகரை சேர்ந்தவர் தம்பிராஜ் (வயது46). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் மீது பல்வேறு ஏ.டி.எம். திருட்டு வழக்குகள் உள்ளது.

    ஏ.டி.எம். மையங்களில் நின்று கொண்டு அங்கு வரும் கிராமப்புற பெண்கள் மற்றும் மூதாட்டிகளிடம் பணம் எடுத்து தருவதாக அவர்களது கார்டை வாங்கி அந்த பணத்தை திருடிச் சென்றார். இவர் மீது தேனியில் 3 வழக்குகளும், திண்டுக்கல்லில் 3, ராஜபாளையத்தில் 2, வாலந்தூரில் 2, செக்காணூரணியில் 2, திருமங்கலத்தில் 3, சென்னையில் 1, ஆந்திராவில் 2, கேரளாவில் 1, கர்நாடகாவில் 4 வழக்குகள் உள்ளன. இவரை பல்வேறு போலீஸ் நிலையங்களில் போலீசார் தேடி வந்தனர்.

    இவர் எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊரில் இருந்து பணத்தை திருடி தனது மனைவிக்கு அனுப்பி விடுவது வழக்கம்.

    கடைசியாக அவர் கைவரிசை காட்டிய ஏ.டி.எம். மையத்தில் இருந்து அவரது புகைப்படத்தை கைப்பற்றி தேனி உள்பட பல்வேறு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். கடந்த சில நாட்களாக இவர் போடியில் தங்கி இருந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கோவை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜ் தலைமையில் 3 பேர் கொண்ட தனிப்படை போலீசார் போடி வந்து தம்பிராஜை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

    4 மாநிலங்களில் கைவரிசை காட்டிய பிரபல ஏ.டி.எம். கொள்ளையன் கைது செய்யப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. 

    • ஏ.டி.எம். மையத்தில் தனியார் ஏஜென்சி மூலமாக பணம் நிரப்பப்படும்.
    • பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து மஞ்சேஷ்வர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் காசர்கோடு உப்பளம் பகுதியில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் செயல்பட்டு வரும் இந்த ஏ.டி.எம். மையத்தில் தனியார் ஏஜென்சி மூலமாக பணம் நிரப்பப்படும்.

    அதன்படி நேற்று மதியம் 2 மணியளவில், அந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்புவதற்காக ஒரு வாகனம் வந்தது. அந்த வாகனத்தில் மொத்தம் ரூ.1 கோடி பணம் கொண்டு சென்றுள்ளனர். ஒரு மூட்டையில் தலா ரூ.50 லட்சம் வீதம் இரு மூட்டைகளில் ரூ.1 கோடி பணம் வைத்திருந்தனர்.

    அதில் ரூ.20 லட்சம் பணத்தை ஏ.டி.எம்.-ல் நிரப்புவதற்காக ஒரு மூட்டையை மட்டும் தனியார் ஏஜென்சி ஊழியர்கள் எடுத்துச்சென்றுள்ளனர். வாகனத்தில் பின்பக்க கதவு பூட்டப்பட்டிருந்ததால், வாகனத்தின் அருகில் யாரும் நிறுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் சிலர், பணம் வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் பக்கவாட்டு பகுதி கண்ணாடியை உடைத்து, வாகனத்துக்குள் இருந்த பண மூட்டையை எடுத்து விட்டு தப்பியது. இதனை ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்பிப் கொண்டிருந்த தனியார் ஏஜென்சி ஊழியர்கள் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    அவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் பணத்தை நிரப்பிவிட்டு திரும்பி வந்தபோது தான், வாகன கண்ணாடி உடைந்து கிடந்ததை பார்த்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், வாகனத்தை சோதனை செய்தபோது, ஒரு மூட்டையில் வைக்கப்பட்டிருந்த ரூ.50 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து மஞ்சேஷ்வர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது.

    வாகனத்தில் லட்சக்கணக்கில் பணம் இருக்கும்போது, பாதுகாப்புக்கு ஊழியர்கள் நிற்காமல் சென்றிருப்பது ஏன் என்பது தெரியவில்லை. மேலும் வாகனத்தின் கண்ணாடியை கொள்ளையர்கள் உடைக்கும்போது சத்தம் யாருக்கும் கேட்காதது எப்படி? என்பதும் மர்மமாக உள்ளது.

    இதனால் கொள்ளை நடந்தபோது சம்பவ இடத்தில் இருந்த வாகன டிரைவர், பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்ட தனியார் ஏஜென்சி ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களில் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    மேலும் வேன் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதில் இருந்த பணம் பாதுகாப்பாக மாற்று வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது. பட்டப்பகலில் வாகன கண்ணாடியை தைரியமாக உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவத்தில் ஒரு நபரோ அல்லது இரண்டு நபர்கள் மட்டுமே ஈடுபட்டு இருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர்.

    ஆகவே கொள்ளையர்களை கண்டுபிடிக்க சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்கின்றனர். ஆனால் சாலை பணி நடப்பதன் காரணமாக சம்பவ இடத்தில் இருக்கும் பல சி.சி.டி.வி. கேமராக்கள் செயல்படாமல் இருந்துள்ளது.

    இதனால் கொள்ளையில் ஈடுபட்டவர்களை அடை யாளம் காணுவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த சம்பவத்திற்கு முழுக்க முழுக்க தனியார் ஏஜென்சி ஊழியர்களின் பாதுகாப்பு குறைபாடே காரணம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் காசர்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஏ.டி.எம். இயந்திரத்தை பெயர்த்து அங்கிருந்து எடுத்து சென்றனர்.
    • ஏ.டி.எம். இயந்திரத்தில் ரூ. 30 லட்சம் ரொக்கம் இருந்தது.

    உத்தர பிரதேச மாநிலத்தின் ஆக்ரா மாவட்டத்தில் உள்ளது காகரோல் என்ற நகரம். இங்கு செயல்பட்டு வந்த பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தை மர்ம நபர்கள் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இன்று அதிகாலை 3 மணியளவில் வந்த கொள்ளையர்கள் ஏ.டி.எம். இயந்திரத்தை பெயர்த்து அங்கிருந்து எடுத்து சென்றுள்ளனர்.

    "ஆக்ரா மாவட்டத்தின் காகரோல் நகரில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வந்தது. பாரத ஸ்டேட் வங்கியின் அருகிலேயே இந்த ஏ.டி.எம். மையம் வைக்கப்பட்டு இருந்தது. அதிகாலை 2.30 முதல் 3.00 மணிக்குள் நான்கில் இருந்து ஐந்து பேர் அடங்கிய குழு வேனில் சம்பவ இடத்திற்கு வந்தது. அந்த குழு ஏ.டி.எம். இயந்திரத்தை வேறோடு பெயர்த்தெடுத்து சென்றது."

     


    "இது தொடர்பாக வங்கி மேலாளருடன் நடத்திய விசாரணையில் பெயர்த்தெடுத்து செல்லப்பட்ட ஏ.டி.எம். இயந்திரத்தில் ரூ. 30 லட்சம் ரொக்கம் இருந்தது தெரியவந்துள்ளது. ஏ.டி.எம். இயந்திரத்தை எடுத்து சென்ற கும்பலை பிடிக்க ஆக்ரா காவல் துறையின் சிறப்பு படை முடுக்கிவிடப்பட்டு இருக்கிறது," என ஆக்ரா காவல் துறை ஆணையர் பிரீத்திந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

    வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் காவல் துறை விசாரணையை துவங்கியுள்ளது. மேலும் சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் இருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கொண்டு திருடர்களை பிடிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    • பணம் எடுக்க முடியாமல் தொழிலாளர்கள் தவிப்பு
    • வங்கி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வலிறுத்தல்

    சூலூர்,

    சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் ஏடிஎம் மையங்கள் அதிகளவில் உள்ளன. அவை கடந்த சில நாட்களாக சர்வர் கோளாறு காரணமாக செயலிழந்து காணப்படுகிறது.

    இதனால் வாடிக்கை யாளர்கள் தீபாவளி பண்டிகைக்கு வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாமல் பெறும் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர்.

    மேலும் அங்கு உள்ள பெரும்பாலான ஏ.டி.எம் மையங்களில் பணம் இல்லை, செயலிழந்து நிலை யில் உள்ளது

    ஒருசில பகுதிகளில் ஏ.டி.எம். தற்காலிகமாக மூடப்பட்டு இருப்பதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. சிலஇடங்களில் ஏ.டி.எம் மையங்கள் மூடப்பட்டு உள்ளது. தற்போது பெரும்பாலான தொழிற்சாலைகள் ஊழிய ருக்கான சம்பளத்தை வங்கி கணக்கு வழியாகவே கையாள்கிறது.

    மேலும் வங்கிகள் வாடிக்கையாளருக்கான சேவையை அளிக்க தவறிவிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் தீபாவளி செலவுக்கு பணம் எடுக்க முடியாமல் தொழிலாளர்களும் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே வங்கி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு ஏ.டி.எம். மையம் தொடர்ந்து தடையின்றி செயல்பட ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கொள்ளை சம்பவம் முழுக்க சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருக்கிறது.
    • ஏ.டி.எம். இயந்திரத்தில் கயிறு கொண்டு கட்டி இழுக்க முயற்சித்தனர்.

    மகாராஷ்டிரா மாநிலத்தின் பீட் மாவட்டத்தில் நடைபெற்ற ஏ.டி.எம். கொள்ளை சம்பவம் பேசுபொருளாகி இருக்கிறது. ஹாலிவுட் திரைப்பட சீரிஸ் fast and furious-இல் வரும் காட்சியை போன்று, ஏ.டி.எம். இயந்திரத்தில் கயிறு கட்டி, அதனை கார் கொண்டு இழுத்துச் செல்ல முகமூடி அணிந்த கும்பல் முயற்சித்து இருக்கிறது.

    இந்த கொள்ளை சம்பவம் முழுக்க முழுக்க அங்கு வைக்கப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருக்கிறது. இந்த வீடியோவை வைத்துக் கொண்டு போலீசார் கயவர்களை தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் செப்டம்பர் 6-ம் தேதி அகிகாலை 3.00 மணி அளவில் நடைபெற்றது.

    அப்போது முகமூடி அணிந்த நிலையில், இருவர் ஏ.டி.எம். மையத்தை அடைந்தனர். வழக்கமாக ஏ.டி.எம். இயந்திரத்தை உடைப்பது போன்ற செயல்களில் ஈடுபடாமல், இவர்கள் ஏ.டி.எம். இயந்திரத்தில் கயிறு கொண்டு கட்டி இழுக்க முயற்சித்தனர். இவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

    ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த பாதுகாப்பு உபகரணங்கள் காவல் துறைக்கு எச்சரிக்கை விடுக்க, காவலர்கள் ஏ.டி.எம். மையத்திற்கு விரைந்தனர். எனினும், காவலர்கள் வருவதற்குள் கொள்ளையர்கள், அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

    • ஷெனாய்நகரில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மைய பதிவேட்டில் கையெழுத்திட சென்றார்.
    • தமிழ்மணியின் நேர்மையான செயலை போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர்.

    சென்னை:

    சென்னை அமைந்தகரை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் தமிழ்மணி. நேற்று இரவு இவர் ரோந்து பணியில் ஈடுபட்டார். ஷெனாய்நகரில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மைய பதிவேட்டில் கையெழுத்திட சென்றார்.

    அப்போது ஏ.டி.எம். எந்திரத்தின் மேல் ரூ.25 ஆயிரம் பணம் இருந்ததை பார்த்தார். யாரோ பணத்தை ஏ.டி.எம். ல் எடுத்துவிட்டு அதனை அதன் மேலே வைத்து சென்றுள்ளார். கேட்பாரற்று அந்த பணம் அங்கு இருந்துள்ளது.

    அதனை போலீஸ்காரர் தமிழ்மணி எடுத்து மனித நேயத்துடன் அமைந்தகரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். தமிழ்மணியின் நேர்மையான செயலை போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர்.

    ஏ.டி.எம். மையத்தில் கிடந்த பணம் யாருடையது, யார் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டது என்பது பற்றி போலீசார் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசினர்.

    • துரை நேரு வீதியில் உள்ள ஒரு வங்கியில் ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதற்காக வந்தார்.
    • மொபைல் எண்ணிற்கு இருபதாயிரம் பணம் எடுத்ததற்காக குறுஞ்செய்தி வந்தது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த பெலாகுப்பம் பகுதியை சேர்ந்த துரை (வயது 70). இவர் திண்டிவனம் நேரு வீதியில் உள்ள ஒரு வங்கியில் ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதற்காக வந்தார். அவருக்கு ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கத் தெரியாததால் அருகே இருந்த டிப்டாப் நபர் ஒருவரை தனது ஏ.டி.எம்.மில் இருந்து பணம் எடுத்து தர தெரிவித்துள்ளார். இதன் பெயரில் அந்த மர்ம நபர் ஏ.டி.எம்.மில் பணம் இல்லை என கூறி உள்ளார். இந்த நிலையில் துரை அருகே இருக்கும் வேறு ஒரு வங்கியில் பணம் எடுப்பதற்காக சென்றார். இந்த நிலையில் அவரது மொபைல் எண்ணிற்கு இருபதாயிரம் பணம் எடுத்ததற்காக குறுஞ்செய்தி வந்தது.

    அந்த செய்தியை அரசு வங்கியில் காண்பித்த போது அதில் 20 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்து விட்டதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். துரை வைத்திருந்த ஏ.டி.எம். வேறு வங்கி ஏ.டி.எம். என அதிகாரிகள் தெரிவித்தனர். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த துரை திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
    • கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அடுத்த கசிநாயக்கன்பட்டியில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

    நேற்று நள்ளிரவு ஏ.டி.எம். மையத்திற்கு வந்த மர்ம நபர்கள் எந்திரத்தை உடைத்து திருட முயன்றனர்.

    இன்று காலை ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க சென்ற சிலர், எந்திரம் முன்பக்கம் உடைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் கந்திலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    திருட வந்த மர்ம நபர்கள் ஏதோ ஒரு பொருளை வைத்து கேமராக்களை மறைத்துள்ளனர்.

    எந்திரத்தின் முன்பக்க பேனல் உடைத்த பிறகு, பணம் இருக்கும் பெட்டியை உடைக்க முடியவில்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக பணம் திருடு போகவில்லை.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வேலூர் டவுன் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு மற்றும் அரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
    • கந்தசாமியை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், ஊசூர்-அணைக்கட்டு மெயின் ரோடு பஸ் நிறுத்தத்தில் தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது.

    இன்று காலை ஊசூர் காலனியை சேர்ந்த கந்தசாமி (வயது 53) கூலி தொழிலாளி. என்பவர் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார்.

    ஏ.டி.எம். எந்திரத்தில் ஏ.டி.எம். கார்டை சொருகி பணம் எடுக்க பலமுறை முயற்சி செய்து உள்ளார். ஆனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணம் வரவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த கந்தசாமி வீட்டிற்கு சென்று கோடாரியை எடுத்து வந்தார்.

    ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தார். ஏ.டி.எம். எந்திரம் உடைக்கும் சத்தம் கேட்டு அக்கப் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து கந்தசாமியை தடுத்தனர்.

    இருப்பினும் ஆத்திரம் அடங்காத கந்தசாமி ஏ.டி.எம். எந்திரம் முழுவதையும் உடைத்தார். எந்திரம் முழுவதும் துண்டு, துண்டாக நொறுங்கியது.

    அங்கிருந்தவர்கள் கந்தசாமியை பிடித்து வைத்துக்கொண்டு இது குறித்து உடனடியாக அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    வேலூர் டவுன் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு மற்றும் அரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

    உடைக்கப்பட்ட ஏ.டி.எம். எந்திரத்தை பார்வையிட்டனர். பின்னர் அருகில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் கந்தசாமியை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து எந்த பணமும் திருடு போகவில்லை ஏடிஎம் எந்திரத்தில் பணம் வராததால் கந்தசாமி ஏடிஎம் எந்திரத்தை உடைத்துள்ளார்.

    கந்தசாமி சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு உண்மை நிலவரம் தெரியவரும் என்றனர். 

    • நெல்லை மாநகர பகுதியில் கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டது.
    • மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்க கமிஷனர் உத்தரவிட்டிருந்தார்.

    நெல்லை:

    நெல்லையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட தொடங்கி உள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மாநகர பகுதியில் 2 பேருக்கும், ராதாபுரம், அம்பை பகுதிகளில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கை

    இந்நிலையில் மாநகர பகுதியில் கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி உத்தரவின் பேரில் முடுக்கி விடப்பட்டது. இதையடுத்து மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா தலைமை யில் சுகாதாரத்துறை அதிகாரிகள் புகை மருந்து அடித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் கமிஷனர் தலைமையில் நடந்த கூட்டத்தின் போது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்க உத்தரவிட்டிருந்தார்.

    அந்த வகையில் இன்று மாநகரப் பகுதியில் உள்ள வங்கி ஏ.டி.எம். எந்திரங்களில் கிருமிநாசினி அடிக்கப்பட்டது. மேலும் மாநகர பகுதியில் 4 மண்டலங்களிலும் உள்ள ஏ.டி.எம்.களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

    மேலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் பஸ் நிலையங்கள், தியேட்டர்கள் உள்ளிட்ட இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே மாநகர பகுதியில் சந்திப்பு சரணாலயத்தில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சந்திப்பு உதவி போலீஸ் கமிஷனர் ராஜேஸ்வரனுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர் தனிமையில் உள்ளார்.

    • கீழக்கரை ஏ.டி.எம். மையங்களில் பணம் இல்லாததால் பொது மக்கள் அவதி அடைந்தனர்.
    • பொதுமக்கள் சேமிப்பு, நடப்பு கணக்குகள் வைத்துள்ளனர்.

    கீழக்கரை

    மக்கள் நல பாதுகாப்புக்கழக செயலாளர் முகைதீன் இப்ராகீம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    கீழக்கரையில் பல்வேறு வங்கி கிளைகள் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிகளில் கீழக்கரை மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் சேமிப்பு, நடப்பு கணக்குகள் வைத்துள்ளனர்.பெரும்பாலான வங்கிகள் தானியங்கி பணம் எடுக்கும் ஏ.டி.எம்.எந்திரங்களை நிறுவியுள்ளது.

    தற்போது இஸ்லாமி யர்களின் ரமலான் மாதம் நடைபெற்று வருகிறது. இந்த காலகட்டத்தில் ரமலான் தேவைக்காகவும், ஸதகா, ஜகாத் தேவைக்கா கவும் ஏழை மக்களுக்கு பொருளாதார ரீதியாக உதவ ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் எடுப்பார்கள்.

    கீழக்கரையில் செயல் படும் பல்வேறு வங்கிகளின் தானியங்கி எந்திரங்களில் பணம் எடுக்க முடியவில்லை.குறிப்பாக தேசிய மயமாக் கப்பட்ட பல்வேறு ஏ.டி.எம்.எந்திரங்களில் பணம் இருப்பதில்லை. இதில் ஆறுதலான ஒரு தகவல் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தானியங்கி பணம் எடுக்கும் எந்திரங்கள் முறையாக செயல்படுகிறது.

    ரமலானை கருத்தில் கொண்டு கீழக்கரையில் செயல்படும் வங்கிகளின் அதிகாரிகள் ஏ.டி.எம். எந்திரங்களில் பணத்தை வைத்து முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    நெல்லை மத்திய கூட்டுறவு வங்கியில் புதிய ஏ.டி.எம் எந்திரத்தை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    நெல்லை:

    நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் புதிதாக ஏ.டி.எம். மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

    இதில் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஏ.டி.எம். மையத்தை திறந்து வைத்தார்.

    விழாவில் மேயர் சரவணன், தொ.மு.ச. அமைப்பு செயலாளர் தர்மர், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சுபாஷினி, மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் செல்லப் பாண்டியன்,

    நெல்லை மத்திய கூட்டுறவு வங்கி துணை பதிவாளர் லட்சுமண குமார், சரக மேற்பார்வையாளர் காதர் மைதீன், 11-வது வார்டு கவுன்சிலர் கந்தன், பேட்டை ரூரல் பஞ்சாயத்து தலைவர் சின்னத்துரை, வார்டு உறுப்பினர்கள் முருகன், ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    ×