என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஏ.டி.எம். கார்டை மாற்றிக்கொடுத்து முதியவரின் வங்கி கணக்கில் ரூ.89 ஆயிரம் திருட்டு- உதவி செய்வதுபோல் நடித்து துணிகரம்
- சிறிது நேரத்தில் மொய்தீனின் வங்கி கணக்கில் இருந்து ஏ.டி.எம்.கார்டு மூலம் ரூ.89 ஆயிரத்து 865 எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது.
- டிப்-டாப் வாலிபர் பணம் எடுக்க உதவி செய்வது போல் நடித்து ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து பணத்தை சுருட்டி இருப்பது தெரிந்தது.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த குன்னமஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் மொய்தீன்(58). பொன்னேரியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார்.
இவர் பொன்னேரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார். அப்போது அருகில் நின்று கொண்டி ருந்த டிப்-டாப் வாலிபரிடம் தனது ஏ.டி.எம்.கார்டை கொடுத்து பணம் எடுத்து தரும்படி கூறினார்.
அந்த வாலிபரும் உதவி செய்வதாக கூறி ஏ.டி.எம்.கார்டை வாங்கினார். மேலும் மொய்தீனிடம் ரகசிய எண்ணையும் கேட்டு தெரிந்து கொண்டார்.
பின்னர் ஏ.டி.எம்.எந்திரத்தில் பணத்தை எடுக்க முயன்றபோது பணம் வரவில்லை என்று கூறி ஏ.டி.எம்.கார்டை மொய்தீனிடம் கொடுத்து விட்டு டிப்-டாப் வாலிபர் அங்கிருந்து சென்றுவிட்டார். மொய்தீனும் அந்த வாலிபர் கொடுத்த ஏ.டி.எம். கார்டுடன் வீட்டுக்கு வந்தார்.
சிறிது நேரத்தில் மொய்தீனின் வங்கி கணக்கில் இருந்து ஏ.டி.எம்.கார்டு மூலம் ரூ.89 ஆயிரத்து 865 எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மொய்தீன் வங்கிக்கு சென்று விசாரித்த போதுதான் டிப்-டாப் வாலிபர் பணம் எடுக்க உதவி செய்வது போல் நடித்து ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து பணத்தை சுருட்டி இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண் காணிப்பு காமிரா காட்சியை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்