என் மலர்
நீங்கள் தேடியது "cow"
- தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
- விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆட்சேபனை தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
டெல்லியில் உள்ள தேசிய தலைநகர் பகுதியில் (NCR) உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபகள் கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டது.
இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆட்சேபனை தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், இந்த விவகாரத்தை மூன்று நீதிபகள் கொண்ட பெஞ்சிற்கு மாற்றினார்.
இதனையடுத்து டெல்லி தெருநாய்களை காப்பங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து புதிய உத்தரவை 3 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்துள்ளது.
பதிலாக தெருநாய்களை பிடித்து கருத்தடை, தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே பகுதிகளில் விடலாம் என ஆலோசனை வழங்கியது.
இந்நிலையில், விலங்குகள் நல ஆர்வலர்கள் பசுவை ஒரு விலங்காக கருதுவதில்லை என்று பிரதமர் மோடி வேதனை தெரிவித்தார்.
விஞ்ஞான் பவனில் நடந்த ஒரு நிகழ்வில் பேசுய மோடி, "சமீபத்தில், நான் சில விலங்கு பிரியர்களைச் சந்தித்தேன்" என்று கூற அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது. இதையடுத்து பிரதமர் மோடி சிறிது நேரம் நின்று கூட்டத்தினரிடம், "நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள்? நம் நாட்டில் பல விலங்கு பிரியர்கள் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் பசுவை ஒரு விலங்காகக் கருதுவதில்லை" என்று கூறினார்.
- தமிழ்நாடு முழுவதும் உள்ள மேய்ச்சல், தரிசு, மந்தை புறம்போக்கு நிலங்களை மீட்டெடுக்க வேண்டும்.
- கால்நடைகளை மேய்ப்பதற்கு பல இடங்களில் வனத்துறை தடை விதித்துள்ளதைக் கண்டித்து போராட்டம்.
நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பில், மாடு மேய்க்கும் போராட்டம் நடைபெறும் என்றும், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று மாடு மேய்ப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேனி அடப்பாறையில் ஆக.3ம் தேதி வரும் ஆகஸ்ட் 3ம் தேதி மலையேறி மாடு மேய்க்கும் போராட்டத்தை நடத்தப் போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
கால்நடைகளை மேய்ப்பதற்கு பல இடங்களில் வனத்துறை தடை விதித்துள்ளதைக் கண்டித்து மாடு மேய்க்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள மேய்ச்சல், தரிசு, மந்தை புறம்போக்கு நிலங்களை மீட்டெடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
ஆடு, மாடுகள் மாநாட்டைத் தொடர்ந்து மலையேறி மாடு மேய்க்கும் போராட்டத்தை சீமான் நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பொதுவாக குழந்தை பிறந்த முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.
- எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட வீடியோ 9 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்று வைரலானது.
இணையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது. அவற்றில் சில வீடியோக்கள் வினோதமாக இருப்பதால் வைரலாகி விடுகிறது. அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் வீடியோவில், குழந்தை ஒன்றை நேரடியாக பசுவின் மடியில் இருந்து ஒருவர் பால் குடிக்க வைக்கும் காட்சிகள் உள்ளது.
பொதுவாக குழந்தை பிறந்த முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். 6 மாதங்களுக்கு பிறகுதான் இணை உணவுகள் சேர்த்து வழங்கப்படும். ஆனால் வீடியோவில் ஒருவர் நேரடியாக பசுவின் மடியில் இருந்து குழந்தைக்கு பச்சை பால் ஊட்டுவது போல் உள்ள காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ 9 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்று வைரலானது. பயனர்கள் பலரும் இது குழந்தைக்கு நல்லதல்ல. அந்த குழந்தை நோய் கிருமிகளுக்கு ஆளாகக்கூடும் என கருத்துக்களை பதிவிட்டனர்.
- ஆடு மாடுகள் வளர்ப்பதை அரசு வேலையாக மாற்றுவேன் என்று சீமான் வாக்குறுதி அளித்துள்ளார்.
- ஆடு மாடு மேய்ப்பது அவமானம் அல்ல வெகுமானம் என்று சீமான் தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆடு மாடுகள் வளர்ப்பு பற்றியும், இயற்கை விவசாயம் குறித்தும் தொடர்ந்து பேசி வருகிறார். என்னிடம் ஆட்சி அதிகாரத்தை கொடுத்தால் ஆடு மாடுகள் வளர்ப்பதை அரசு வேலையாக மாற்றுவேன் என்று அவர் தேர்தல் வாக்குறுதியையும் அளித்துள்ளார்.
அதே நேரத்தில் இன்றைய காலகட்டத்தில் ஆடு மாடுகள் வளர்ப்பு என்பது கிராமப்புறங்களில் அரிதாகிவிட்டதையும் அவர் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளார்.
இதுபோன்ற சூழலில் வனப்பகுதிகளை ஒட்டி உள்ள மேய்ச்சல் நிலங்களில் ஆடு மாடுகளை வளர்ப்பவர்கள் தங்களது கால்நடைகளை மேய்ச்சலுக்காக பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
காடுகளை பாதுகாப்பதாக கூறி வனத்துறையினர் ஆடு மாடுகளை மேய்ச்சல் நிலங்களில் மேய விடுவதற்கு அனுமதிப்பது இல்லை. இதன் காரணமாக ஆடு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதைத்தொடர்ந்து ஆடு மாடுகளை பாதுகாக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி மதுரையில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆடு மாடுகள் மாநாடு நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஆடு மாடுகளுடன் திரளாக கலந்து கொண்டார்கள்.
மாநாட்டில் ஆடு மாடுகளுக்கு முன் எழுச்சி உரையாற்றிய சீமான், "ஆடு மாடு மேய்ப்பது அவமானம் அல்ல வெகுமானம். திருமால், பெருமாள், கண்ணன் ஆடு மாடு மேய்தனர். இயேசு, நபிகள் நாயகம் ஆடு மாடு மேய்தனர். கால்நடைகள் நம் உணர்வுடன் கலந்தவை. மாட்டுக்கு பொங்கல் வைத்தவன் தமிழன்"
இனி யாரையாவது திட்ட வேண்டும் என்றால் எருமை மாடு என்று திட்டாதீர்கள். ஆடு, மாடுகளைப் பற்றி கவலைப்படாத நீங்கள் ஏன் ஆவின் விற்பனை செய்கிறீர்கள்? மாடு வளர்க்க அவமானம் என்று நினைக்கும் நீங்கள் ஏன் பால் குடிக்கிறீர்கள்?" என்று தெரிவித்தார்.
- பசு மாடு முட்டினால் கூட தடம் புரண்டு பெரும் விபத்துக்கு ஆளாகும் அபாயம்.
- வந்தே பாரத் ரெயிலின் முன் கோச் சாதா ரயில்களை விட எடை குறைவாம்.
வந்தே பாரத் ரெயில்கள் மீது மாடுகள் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ரெயில்வே பாதுகாப்பு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அந்த அறிக்கையில், வந்தே பாரத் ரெயிலின் முன் பகுதி இலகுவாக இருப்பதால் மாடுகள் மோதினால் விபத்துக்கு வழிவகுக்கும் எனவும், மாடுகள் செல்லும் இடங்களை கண்டறிந்து சுரங்கப் பாதைகள் அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டள்ளது.
இந்நிலையில், இந்த அறிக்கை தொடர்பாக மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "பசு மாடு முட்டினால் கூட தடம் புரண்டு பெரும் விபத்துக்கு ஆளாகும் அபாயம். வந்தே பாரத் ரயிலின் முன் கோச் சாதா ரயில்களை விட எடை குறைவாம். ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அறிக்கை.
வந்தே பாரத்துக்கு காவிநிறம் அடிப்பதில் காட்டிய ஆர்வத்தை பயணிகளின் பாதுகாப்பில் காட்டுங்கள் அமைச்சரே" என்று தெரிவித்துள்ளார்.
- கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா அவனி கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பா
- கன்றுக்குட்டியை பரிசோதனை மருத்துவர் குட்டி நல்ல வளர்ச்சியுடன் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா அவனி கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பா. விவசாயியான இவருக்கு சொந்தமான பசுமாடு நேற்று கன்றுக்குட்டி ஒன்றை ஈன்றது.
அந்த கன்றுக்குட்டி இரண்டு தலைகள், நான்கு கண்களுடன் பிறந்துள்ளது. இதனால் ஆச்சர்யம் அடைந்த எல்லப்பா கால்நடை மருத்துவரை அழைத்தார்.
கன்றுக்குட்டியை பரிசோதனை மருத்துவர் குட்டி நல்ல வளர்ச்சியுடன் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தார். இந்த கன்றுக்குட்டியைப் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக எல்லப்பா வீட்டுக்கு படையெயடுத்து வருகிறது.
- வெறி நாய் கடித்த பசு மாட்டிற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.
- நாய் கடித்து பசு மாடு இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்:
சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள குப்தா நகர் பகுதியில் வசித்து வருபவர் மீனா (55), இவர் 15-க்கும் மேற்பட்ட பசு மாடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்றிரவு அதில் ஒரு பசு மாட்டை நாய்கள் கடித்து குதறிய நிலையில் அதில் ஒரு பசு மாடு கழுத்து மற்றும் பின் பகுதியில் ரத்த காயங்களுடன் வீட்டருகே இன்று காலை இறந்த நிலையில் கிடந்தது. இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த மீனா கதறி அழுதனர்.
தொடர்ந்து கால் நடைத்துறை அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். ஏற்கனவே சேலம் மாநகரில் நாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. இதனால் பொது மக்கள், கால்நடைகள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது பசு மாடு இறந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இது குறித்து பசுமாட்டின் உரிமையாளர் மீனா கூறுகையில், மாடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறேன். எனக்கு சொந்தமான மாடுகளை ஏற்கனவே நாய்கள் கடித்த நிலையில் அதனை விரட்டி விட்டுள்ளேன். நேற்றிரவு நாய்கள் கடித்தது எனக்கு தெரியாமல் போய் விட்டது. மாடு இறந்ததை இன்று காலையில் தான் பார்த்தேன் . இதனால் பரிதவித்து வருகிறேன்.
இந்த பகுதியில் நாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. எனவே நாய்களை உடனடியாக கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், வெறி நாய் கடித்த பசு மாட்டிற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார். நாய் கடித்து பசு மாடு இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
- தளவாடப் பொருட்களில் இருந்த 20 அடி நீளமுள்ள 37 இரும்பு குழாய்கள் காணாமல் போனது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள பருவாய் கிராமம் பட்டணத்தான் தோட்டத்தைச் சேர்ந்த கவின் குமார் என்பவர் பசு மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் வைத்திருந்த 2 பசு மாடுகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து கவின் குமார் காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில்,பருவாய்ஊராட்சி இடையர்பாளையம் கிராமத்தில் திருப்பதி கார்டன் பகுதியில், சதீஷ் என்பவர் தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி வருகிறார். இதற்கான தளவாடப் பொருட்களை வீட்டின் முன்பு போட்டுள்ளார். இந்த நிலையில் தளவாடப் பொருட்களில் இருந்த 20 அடி நீளமுள்ள 37 இரும்பு குழாய்கள் காணாமல் போனது.இதுகுறித்து சதீஷ் காமநாயக்கன்பாளையம் போலீசாரிடம் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபரை தேடி வந்தனர். இந்த நிலையில், பல்லடம் அருகே உள்ள கரடிவாவி சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்ட போது, அந்த வழியே வந்த வாலிபர் ஒருவர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார். அவரை பிடித்த போலீசார், காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தபோது, பசுமாடுகள் மற்றும் இரும்பு கம்பிகளை அவர் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் மேலும் விசாரணை செய்த போது அவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பாதாளமுருகன் மகன் பார்த்திபன்(வயது 25) என்பதும் தற்போது கோவை மாவட்டம் சிங்காநல்லூரில், இரும்பு ஆலையில் பணிபுரிந்து கொண்டு இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடமிருந்து 2 பசுமாடுகள் மற்றும் 37 இரும்பு கம்பிகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- சாலையில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
- ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பு.
மதுரை
திருப்பரங்குன்றம் யூனியன் நிலையூர் 1-வது பிட், கைத்தறிநகர் ஊராட்சி மன்றம் உள்ளது. இந்த பகுதியில் இரவு நேரங்களில் 50-க்கும் மேற்பட்ட பசுமாடுகள் சாலையில் சுற்றி திரிகின்றன. இது பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறை ஏற்படுத்தி வருகின்றன.
மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்திற்கு கைத்தறிநகர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- அதே பகுதியில் உள்ள ஆசைத்தம்பி என்பவரது 20 அடி ஆழமுடைய தரை கிணற்றில் விழுந்துவிட்டது.
- ேஜ.சி.பி. எந்திரம் உதவியுடன் பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடலூர்:
திட்டக்குடி அடுத்த கோழியூர் கிராமத்தில் நாராயணசாமி என்பவருக்கு சொந்தமான பசு மாடு அதே பகுதியில் உள்ள ஆசைத்தம்பி என்பவரது 20 அடி ஆழமுடைய தரை கிணற்றில் விழுந்துவிட்டது. இது குறித்து திட்டக்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற நிலைய அலுவலர் சண்முகம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பசுமாட்டை 20 அடி ஆழமுடைய தரை கிணற்றில் இருந்து கயிறு மூலமாக ேஜ.சி.பி. எந்திரம் உதவியுடன் பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
- ஐ.டி.ஐ. முடித்துள்ள இவர் இன்னும் 10 நாளில் வெளிநாடு செல்ல இருந்தார்.
- பல மணி நேரம் தேடியும் தினேஷை கண்டுபிடிக்க முடியவில்லை.
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அருகே உள்ள திருவைகாவூர் தெற்குத் தெருவை சேர்ந்தவர் தினேஷ் (வயது 22). ஐ.டி.ஐ. முடித்துள்ள இவர் இன்னும் 10 நாளில் வெளிநாடு செல்ல இருந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை தன் வீட்டு மாட்டை ஓட்டிக்கொண்டு கொள்ளிட ஆற்றுக்கு மேய்ப்பதற்கு சென்றுள்ளார். அப்பொழுது மாடு தண்ணீரை தாண்டி செல்வதை அறிந்த தினேஷ் தண்ணீரை கடக்க முயன்ற போது மதகு பகுதியில் சிக்கிக் கொண்டு விட்டார்.
தகவல் அறிந்த பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோவன் தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து கொள்ளிட ஆற்றில் மாலை வரை தேடினர். பல மணி நேரம் தேடியும் தினேஷை கண்டுபிடிக்க முடியவில்லை.
மீண்டும் இன்று தேடுதல் பணியை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
- நாமக்கல் மாவட்டம் சேர்ந்தமங்கலம் அடுத்த புதன்சந்தை மாட்டு சந்தையில் நேற்று காலை 5 மணிக்கு கூடிய சந்தை மாலை 3 மணி வரை நடந்தது.
- இங்கு 800-க்கும் மேற்பட்ட மாடுகள் ரூ.2 கோடிக்கு வர்த்தகமானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் சேர்ந்தமங்கலம் அடுத்த புதன்சந்தை மாட்டு சந்தையில் நேற்று காலை 5 மணிக்கு கூடிய சந்தை மாலை 3 மணி வரை நடந்தது. இங்கு கருப்பு வெள்ளை மாடுகள், ஜெர்சி, சிந்து மாடுகள், நாட்டு மாடுகள், எருமைகள் ஆகியவற்றை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
கருப்பு வெள்ளை மாடு ஒன்று ரூ.45 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரையும், ஜெர்சி ரூ.35 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையும், சிந்து ரூ.38 ஆயிரம் முதல் ரூ.52,000 வரையும், நாட்டு மாடு ரூ.29 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரையும், எருமை மாடுகள் ரூ.19 ஆயிரம் முதல் ரூ.33 ஆயிரம் வரையும் விற்பனையானது.
கோவை, சேலம், நாமக்கல், நீலகிரி, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் வந்திருந்து கால்நடைகளை வாங்கிச் சென்றனர். இங்கு 800-க்கும் மேற்பட்ட மாடுகள் ரூ.2 கோடிக்கு வர்த்தகமானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.






