என் மலர்
நீங்கள் தேடியது "cow"
- கடந்த ஜூலை மாதம் சட்டசபையில் இந்த முடிவு முன்மொழியப்பட்டது
- பசு உள்ளிட்ட இதர மாடுகளை இனி தெருமாடுகள் என்று அழைக்கக்கூடாது.
தெருவில் சுற்றித்திரியும் மாடுகளை தெருமாடுகள் [Stray Cows] என்று அழைப்பது வழக்கம். ஆனால் அது மாடுகளை அவமதிக்கும் வகையில் உள்ளதால் அவற்றை இனிமேல் 'ஆதரவற்ற மாடுகள்' [Destitue/Helpless Cows] என்று அலையாக வேண்டும் என்று ராஜஸ்தான் பாஜக அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் நடந்த ராஜஸ்தான் சட்டமன்ற கூட்டத்தின்போது கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜோராராம் குமாவத் இந்த மாற்றத்தை முன்மொழிந்த நிலையில் நிலையில் தற்போது அரசு அதை உத்தரவாக பிறப்பித்துள்ளது.
எனவே அதன்படி தெருவில் சுற்றித் திரியும் பசு உள்ளிட்ட இதர மாடுகளை இனி தெருமாடுகள் என்பதற்கு பதிலாக ஆதரவாற்ற மாடுகள் என்றே ராஜஸ்தான் மக்கள் அழைக்க வேண்டும்.
- தற்போது மாநகர பகுதியில் மீண்டும் பல இடங்களில் மாடுகள் சுற்றி திரிகிறது.
- ஆஸ்பத்திரியில் மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சியில் டவுன், தச்சநல்லூர், பாளை, மேலப்பாளையம் ஆகிய 4 மண்டலங்களில் மொத்தம் 55 வார்டுகள் இருக்கின்றன.
இதில் பெரும்பாலான வார்டுகள் நகரின் மையப் பகுதியிலும், பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் கூட்ட நெரிசலான இடங்களிலும் அமைந்துள்ளது.
இந்நிலையில் மாநகர பகுதியில் காலை மற்றும் மாலை வேளையில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் என மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், சாலைகள் பரபரப்பாகவே இயங்கும்.
இந்த நிலையில் ஆங்காங்கே நாய்கள் மற்றும் மாடுகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் அவை வாகனங்களில் மோதி விபத்துக்களை ஏற்படுத்தி வருவது தொடர் கதையாகி விட்டது.
சாலைகளில் திரியும் மாடுகளால் தொடர் விபத்துகளும், வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஒருவித அச்ச உணர்வையும் ஏற்படுத்தி உள்ளது. இதனால் நெல்லை மாநகராட்சி நிர்வாகித்திடம் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்ததன் பேரில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளை அவ்வப்போது சிறை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் தற்போது மாநகர பகுதியில் மீண்டும் பல இடங்களில் மாடுகள் சுற்றி திரிகிறது.
இந்நிலையில் நெல்லை மாநகராட்சி 55-வது வார்டு திருமால் நகர் பகுதியில் சாலையில் சுற்றி திரிந்த ஒரு மாடு அந்த வழியாக மொபட்டில் சென்ற கல்லூரி மாணவி ஸ்வதிகா மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அந்த மாணவி சாலையில் சில அடி தூரம் போய் விழுந்தார்.
இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து மாணவியை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் நடந்த இடத்தில் ஒரு கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் இந்த விபத்து காட்சிகள் பதிவாகி இருந்தது. அவை தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மாநகரில் கால்நடைகளால் விபத்து ஏற்படும் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடப்பது தொடர்கதையாகி வருவது வேதனைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
இதில் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக கவனம் செலுத்தி சாலையில் சுற்றி திரியும் மாடுகளை கட்டுப்படுத்துவதற்காக மாட்டின் உரிமையாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கை வழங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
A college student riding a bike in Tirunelveli was injured after being unexpectedly hit by a cow standing on the road. pic.twitter.com/tVp78RV1bX
— Thinakaran Rajamani (@thinak_) October 23, 2024
- குறுக்கே பசுமாடு வந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி கவிழ்ந்துள்ளது.
- இந்த விபத்தில் லாரியின் பின்னால் ஸ்கூட்டரில் வந்துகொண்டிருந்த பெண் ஒருவரும் காயமடைந்தார்.
சாலையில் கிடந்த தக்காளிகளுக்கு இரவு முழுவதும் உ.பி. போலீஸ் காவல் இருந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 18 டன்கள் தக்காளிகளை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்த லாரி கடந்த செவ்வாய்க்கிழமை இரவு உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் பகுதி அருகே நெடுஞ்சாலையில் குறுக்கே பசுமாடு வந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி கவிழ்ந்துள்ளது.
இதனால் வண்டியிலிருந்த தக்காளிகள் அனைத்தும் சாலையில் சிதறின. இந்த விபத்தில் லாரியின் பின்னால் ஸ்கூட்டரில் வந்துகொண்டிருந்த பெண் ஒருவரும் காயமடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.
மேலும் இரவு நேரம் என்பதால் சாலையில் கிடந்த தக்காளிகளைச் சேகரிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் விடியும் வரை காத்திருக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் தட்டுப்பாடு காரணமாக தக்காளி விலை கிலோ ரூ.100 வரை விற்கப்படும் நிலையில் தக்காளிகள் திருடுபோகும் அபாயம் இருக்கிறது. எனவே சாலையிலேயே தக்காளிகளுக்கு இரவு முழுவதும் போலீசார் காவலாக நின்றிருக்கின்றனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
A truck carrying 1800 kg of tomatoes from Bangalore to Delhi overturned in Jhansi, UP. Police remained deployed throughout the night to prevent the tomatoes from being looted. The price of tomatoes in the market is Rs 80 to Rs 120 per kg. pic.twitter.com/FkywVMNZZ8
— Siraj Noorani (@sirajnoorani) October 18, 2024
- பசுவின் முதுகில் தடவினால் ரத்த அழுத்தம் குறையும்
- மாடுகளுக்கு உரிய மரியாதை இல்லை.
உத்தரபிரதேச அமைச்சர் ஒருவர் மாட்டு தொழுவத்தில் படுத்திருப்பது புற்றுநோயை குணப்படுத்தும் என்றும் பசுவின் முதுகில் தடவினால் ரத்த அழுத்தம் குறையும் என்றும் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. அமைச்சர் சஞ்சய் கங்வார் நவ்காவா பகடியாவில் கோசலா ஒன்றை திறந்து வைத்தார். அதன்பிறகு பேசிய அவர், "மாட்டு தொழுவத்தில் படுத்து அதை சுத்தம் செய்வதன் மூலம் புற்றுநோயை குணப்படுத்த முடியும். பசுவின் முதுகில் தடவினால் ரத்த அழுத்தம் குறையும்."
"ரத்த அழுத்த நோயாளி ஒருவர் நாள் ஒன்றுக்கு இரண்டு முறை பசுவின் முதுகில் தடவினால் அவர்களின் மருந்து அளவை 10 நாட்களில் 20 மில்லி கிராமில் இருந்து 10 மில்லி கிராமாக குறைக்கலாம்."
"இங்கே ரத்த அழுத்த நோயாளி இருந்தால் பசுக்கள் உள்ளன. அந்த நபர் தினமும் காலை, மாலை நேரங்களில் மாட்டின் முதுகில் தடவிக் கொடுக்க வேண்டும். மாடுகள் மூலம் உருவாகும் பொருட்கள் ஏதோ ஒருவகையில் நமக்கு பயனுள்ளதாகவே இருக்கும். மாட்டு சாணம், புண்ணாக்குகளை எரிப்பதன் மூலம் கொசுக்களை ஒழிக்க முடியும்."
"தாய்க்கு சேவை செய்யவில்லை என்றால் அம்மா யாருக்காவது தீங்கு செய்வாரா? மாடுகள் விளை நிலங்களில் மேய்வதாக கூறுகின்றனர். மாடுகளுக்கு உரிய மரியாதை இல்லை. மாடுகளுக்கு உரிய மரியாதை இல்லாததால் இந்த பிரச்சினை உருவாகிறது. ஈத் பண்டிகை அன்று முஸ்லிம்கள் மாட்டு தொழுவத்திற்கு வரவேண்டும். ஈத் அன்று செய்யப்படும் வரமிளகாய் பசும் பாலில் செய்யப்பட வேண்டும்," என்று தெரிவித்தார்.
- பசு பாதுகாப்பு கும்பலைச் சேர்ந்த 5 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
- அரியானா மாநிலத்தில் கடந்த 2015 முதல் பசுவைக் கொள்வதும், உண்பதும் தடை செய்யப்பட்டது.
அரியானாவில் மாட்டுக் கறி சாப்பிட்டதாக எண்ணிப் பசுப் பாதுகாப்பு குண்டர்களால் இளைஞன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியானாவில் புலம்பெயர் தொழிலாளியாக வேலைக்கு வந்த மேற்குவங்கத்தை சேர்ந்த சாபிர் மாலிக் என்ற இளைஞன் கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி தனது நண்பருடன் சேர்ந்து தான் தங்கியிருந்த குடிசைப் பகுதியில் மாட்டுக் கறி சமைத்தாக சிலர் போலீசில் புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸ் வீட்டில் இருந்த இறைச்சியை எடுத்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்தது.
இதற்கிடையில், அன்றைய தினமே காலி பிளாஸ்டிக் பாட்டில்களை வாங்க வரும்படி மாலிக் மற்றும் இன்னொரு நபரை தங்களது இடத்துக்கு வரவழைத்த பசு பாதுகாப்பு கும்பல் அவர்களை சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. படுகாயமடைந்த சாபிர் மாலிக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் சாபிரை தாக்கிய பசு பாதுகாப்பு கும்பலைச் சேர்ந்த 5 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். அரியானா மாநிலத்தில் கடந்த 2015 முதல் பசுவைக் கொள்வதும், உண்பதும் தடை செய்யப்பட்ட நிலையில் பசு பாதுகாப்பு கும்பல்கள் சட்டத்தை தங்களின் கையில் எடுத்து இதுபோன்ற வெறிச் செயல்களில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.
பசு பாதுகாப்பு கும்பலின் இந்த வெறிச்செயல் குறித்து பேசிய அரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, "பசு பாதுகாப்புக்காக சட்டசபையில் கடுமையான சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆதலால் இதனை கும்பல் கொலை என்று கூறுவது சரியல்ல. கிராம மக்கள் பசுக்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். இதுபோன்ற விஷயங்களைப் பற்றி அவர்களுக்குத் தெரிவித்தால், அவர்களை யாரால் தடுக்க முடியும்? இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக்கூடாது. இந்த சம்பவங்கள் துரதிஷ்டவசமானது" என்று அவர் தெரிவித்தார்.
- மாட்டை பரிசோதனை செய்ததில் அதன் வயிற்றில் ஏராளமான பிளாஸ்டிக் குப்பைகள் இருப்பது தெரியவந்தது.
- தற்போது மாடு ஆரோக்கியத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், எமிகானூரில் பசுமாடு ஒன்று வயிறு பெருத்தபடி அவதி அடைந்து சாலையோரம் படுத்து கிடந்தது. இதனைக் கண்ட வக்கீல் திம்மப்பா என்பவர் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
கால்நடை மருத்துவர்கள் மாட்டை மீட்டு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றனர். மாட்டை பரிசோதனை செய்ததில் அதன் வயிற்றில் ஏராளமான பிளாஸ்டிக் குப்பைகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் மாட்டின் வயிற்றில் இருந்து 70 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை வெளியே எடுத்தனர். தற்போது மாடு ஆரோக்கியத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
- சுமார் 24 லட்சம் மக்கள் வெள்ள பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்
- ஒருவர் தனது உயிரைப் பணயம் வைத்து கழுத்துவரை உள்ள வெள்ள நீரில் நீந்தித் சென்று பசுமாட்டைக் காப்பற்றிய வீடியோ வெளியாகியுள்ளது.
அசாம் மாநிலத்தில் கடந்த வாரம் முதல் பெய்து வரும் கனமழையால் பிரம்மபுத்திரா உள்ளிட்ட ஆறுகளில் அபாய அளவை தாண்டி தண்ணீர் கரைபுரண்டோடி பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. மாநிலம் முழுவதும் வெவேறு பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 52 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 30 மாவட்டங்களில் அபாயகரமான முறையில் வெள்ளம் வீதிகளை அடைத்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.
சுமார் 24 லட்சம் மக்கள் வெள்ள பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் வெள்ள பாதகிப்புகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒன்றான திப்ருகார் மாவட்டத்தின் துளியாஜான் நகரில் வீதியில் ஓடும் வெள்ளத்தில் சிக்கி மூழ்கிக்கொண்டிருந்த தனது பசுமாட்டை காப்பாற்றுவதற்காக உள்ளூர்வாசி ஒருவர் தனது உயிரைப் பணயம் வைத்து கழுத்துவரை உள்ள வெள்ள நீரில் நீந்தித் சென்று பசுமாட்டைக் காப்பற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியள்ளது.
இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு சாரார் அவரின் செயலைப் பாராட்டி வரும் நிலையில் மற்றொரு சாரார் அவரின் செயல் ஆபத்தானது என்று கமன்ட் tவருகின்றனர்.
- விவசாய நிலங்கள் பசுமையாக இருந்தால்தான் கால்நடைகள் தரமான பாலை கொடுக்க முடியும்.
- நிறைய மாடுகள் இருந்தாலும் அதன் பால் தரம் குறைவாக இருக்கிறது.
புதுச்சேரி:
புதுச்சேரி கால்நடைத் துறை சார்பில் மாடு வளர்ப்போருக்கு கறவை எந்திரம் வழங்கும் விழா காரைக்கால் மதகடி கிராமத்தில் நடந்தது. விழாவில் அமைச்சர் திருமுருகன் பயனாளிகளுக்கு எந்திரத்தை வழங்கி பேசியதாவது:-
வறட்சி, கனமழை, புயல் போன்ற காலங்களில் பெருமளவில் பாதிக்கப்படுவது விவசாய பூமியான காரைக்கால்தான். விவசாய நிலங்கள் பசுமையாக இருந்தால்தான் கால்நடைகள் தரமான பாலை கொடுக்க முடியும்
காரைக்காலில் ஒரு மாதத்திற்கு 3 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் பால் வெளி சந்தையில் இருந்து வாங்குகிறோம். காரைக்காலில் நிறைய மாடுகள் இருந்தாலும் அதன் பால் தரம் குறைவாக இருக்கிறது. காரணம் இயற்கையாக கிடைக்க கூடிய புற்கள் கிடைப்பதில்லை.
மாடு வளர்க்காதவர்களுக்கு திட்டங்களை கொடுக்காதீர்கள். தகுதியானவர்களை கண்டறிந்து திட்டங்களை செயல்படுத்துங்கள்.
நம்மை நாமே பார்த்துக் கொள்ள முடியாத இன்றைய காலகட்டத்தில் மாடுகளை வளர்த்து தரமான பால் கொடுக்கும் விவசாயிகளை கடவுளுக்கு நிகராக பார்க்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் பேசிய விவசாயி ஒருவர் தாய்ப் பாலுக்கு இணையானது மாட்டுப்பால். ஆனால் இதை பலரும் உணரவில்லை. மாடு வளர்க்கும் விவசாயிகளுக்கு மரியாதை இல்லை. மாட்டை பிடித்து கொண்டு கால்நடை மருத்துவமனைக்கு சென்றால் ஓரமா போயா...? என்று அலட்சியப்படுத்துகிறார்கள்.
ஆனால் நாய் பிடித்து நடைபயிற்சி செய்பவர்களுக்கு மரியாதை கொடுக்கிறார்கள். நாய்க்கு கொடுக்கும் மரியாதை பால் தரும் மாட்டிற்கு இல்லை என கூறினார்.
விவசாயி பேச்சை விழாவில் கூடியிருந்தோர் கைத்தட்டி வரவேற்றனர்.
- நிலை தடுமாறி சாலையின் நடுவே விழுந்த வேலாயுதராஜ் மீது அரசுப் பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஏறி இறங்கியது.
- ஒரே நாளில் நெல்லை மாநகர் பகுதிகளில் சுற்றித்திரிந்த 47 மாடுகள் பிடிக்கப்பட்டு சுமார் 13 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தென் மாவட்டமான நெல்லையில் உள்ள வண்ணனாரப்பேட்டை பகுதியில் உள்ள பிரதான சாலையில் இரு மாடுகள் சண்டையிட்டுக்கொண்டிருந்தன. அப்போது அந்த வழிகயாக இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த நீதிமன்ற ஊழியர் வேலாயுதராஜை இரண்டு மாடுகளும் சேர்ந்து முட்டித் தாக்கியுள்ளன.
இதனால் நிலை தடுமாறி சாலையின் நடுவே விழுந்த வேலாயுதராஜ் மீது அரசுப் பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஏறி இறங்கியது. இதனால் படுகாயமடைந்த வேலாயுதராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேலாயுதராஜை மாடு முட்டியதும் அவர் மீது பேருந்து கண நேரத்தில் ஏறி இறங்கியதும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகிருந்த நிலையில் அந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மாடுகளால் மனிதர்கள் தாக்கப்படும் சம்பவம் அதிகரித்து வருவதால் நெல்லை மாநகராட்சி நிர்வாகம் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, சாலைகளில் மாடுகளை திரியவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், மாடு வளர்ப்போர் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மாடுகளை கொட்டகையில் வைத்து பராமரித்துக்கொள்ள வேண்டும். சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்தால் மாநகராட்சி ஊழியர்களால் மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் இன்று ஒரே நாளில் நெல்லை மாநகர் பகுதிகளில் சுற்றித்திரிந்த 47 மாடுகள் பிடிக்கப்பட்டு சுமார் 13 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
- எருமை மாடு இழுத்து சென்றதில் மதுமதியின் கால், கை, உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.
- கணவர் மற்றும் குடும்பத்தினர் கவலை அடைந்து உள்ளனர்.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர், கிராமத் தெருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றித் திரிந்த எருமை மாடு ஒன்று திடீரென பொது மக்களை விரட்டி, விரட்டி முட்டிதள்ளியது.
இதில் அதே பகுதி அம்சா தோட்டம், 2-வது தெருவை சேர்ந்த வினோத் என்பவரின் மனைவி மதுமதி (33) என்பவரையும் எருமை மாடு முட்டி தூக்கியது. அப்போது மாட்டின் கொம்பில் சேலை சிக்கிக் கொண்டதால் மது மதியை தரதரவென சாலையில் இழுத்தபடி சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு மாடு இழுத்து சென்றது. இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சி பார்ப்பவர்களை பதை பதைக்க வைத்தது.
எருமை மாடு இழுத்து சென்றதில் மதுமதியின் கால், கை, உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் திருவொற்றியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே மதுமதியின் காலில் ஏற்பட்ட காயம் குணமாகாமல் பெரிதானது. மேலும் தொடர்ந்து காயம் அதிகரித்ததால் தற்போது மதுமதியின் காலில் புண் இருந்த இடம் அழுக தொடங்கி இருக்கிறது. அதில் அறுவை சிசிச்சை செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் கவலை அடைந்து உள்ளனர். மதுமதிக்கு உரிய மேல் சிகிச்சை அளிக்க அரசும், மாநகராட்சியும் உதவி செய்யவேண்டும் என்று மதுமதியின் கணவர் வினோத் கண்ணீர்மல்க தெரிவித்து உள்ளார்.
வேன்டிரைவராக வேலைபார்த்து வரும் வினோத் மனைவியை கவனித்து வருவதால் அவரும் வேலைக்கு செல்லமுடியாமல் சிகிச்சைக்கு பணமின்றி தவித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
மாடு முட்டியதில் காயம் அடைந்த மனைவிக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது காலில் உள்ள காயம் தற்போது அழுகும் நிலையில் உள்ளது. இதனால் என்ன செய்வது என்று தெரியவில்லை.
இதுவரை ரூ.1 லட்சத்துக்கும்மேல் செலவு செய்து விட்டேன். என்னிடம் மேலும் வசதி இல்லாததால் மேல் சிகிச்சை அளிக்க முடியாமல் தவித்து வருகிறேன். அரசு உதவி செய்தால் நன்றாக இருக்கும். மனைவியின் மேல் சிகிச்சைக்கு உதவவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து மதுமதி சிகிச்சை பெற்று வரும் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் கூறும்போது, மாட்டின் கொம்பு மதுமதியின் காலில் குத்தி கிழித்து உள்ளது. இதனால் அவரது காலில் 12 செ.மீட்டர் அளவுக்கு சதை கிழிந்தது. அந்த இடத்தில் சதை அழுகி சேதம் அடைந்து உள்ளது. அறுவை சிகிச்சை செய்து அதில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவேண்டும். காலில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. தோள்பட்டையில் லேசான காயம் ஏற்பட்டு இருந்தது என்றார்.
- கோதானத்தை தத்தம் வாழ்நாளில் தத்தம் கைப்படவே செய்தல் வேண்டும்.
- நம்மால் பராமரிக்க இயலவில்லை என்று அடுத்தவருக்குக் கொடுப்பது தானமாகாது.
*கோதானத்தை தத்தம் வாழ்நாளில் தத்தம் கைப்படவே செய்தல் வேண்டும்.
*நம்மால் பராமரிக்க இயலவில்லை என்று அடுத்தவருக்குக் கொடுப்பது தானமாகாது.
*தலை ஈற்றுப் பசுவை தானம் செய்வது மிகவும் சிறந்தது.
*கறவையுள்ள பசுவைத் தானம் கொடுப்பதே முறை.
*தாயையும்,பால் அருந்தும் கன்றையும் பிரித்து தானம் அளிக்க கூடாது.
*பசுவோடு காளையையும் சேர்த்து தானம் செய்வது மேன்மையாகும்.
*பால் கறப்பதற்கான பாத்திரமும் சேர்த்து கொடுத்தல் வேண்டும்.
*பசுவைத் தானம் செய்யும் போது, குறைந்தது ஒரு வருட உண விற்கும் பராமரிப்புக்கும் பொருளாகவோ, பணமாகவோ வகை செய்வது இன்னும் மேன்மை தரும்.
- நவக்கிரக பீடை, நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் கோபூஜையைச் செய்வது சிறந்த பலனைத்தரும்.
- பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரவும், கணவன்& மனைவிக்குள் ஒற்றுமை ஓங்கவும் இந்தக் கோபூஜை செய்வது அவசியம்.
குழந்தை பாக்கியம் பெற
கோமாதா பூஜையினால் தரித்திரம், துக்கம் விலகுகின்றன.
கோபூஜை செய்து வந்தால் வியாபாரம் விருத்தியடையும். நிலையான லாபம் கிட்டும்.
குழந்தை பாக்கியம் பெற விரும்புபவர்கள் கோபூஜை, கோதானம் செய்தால் சிறந்த அறிவுள்ள நல்ல குழந்தைகள் பிறப்பர் என்பதற்கு நமது புராணங்களும் வரலாறுகளும் எடுத்துக் காட்டாகும்.
திருமணம் நடைபெற
நவக்கிரக பீடை, நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் கோபூஜையைச் செய்வது சிறந்த பலனைத்தரும்.
விவாகம் நடை பெறாதிருந்தாலும், காலதாமதமாகிக் கொண்டே சென்றாலும், நல்ல வரன் அமையவில்லை என்றாலும் இந்தக் கோமாதா பூஜை அவற்றிற்கு ஒரு நல்ல தீர்வினைத் தரும்.
ஆணுக்கு நல்ல பெண் மனைவியாகவும், பெண்ணுக்குச் சிறந்த நற்குணமுள்ள ஆண் கணவனாகவும் கிடைக்கச் செய்யும் பூஜை இந்தக் கோமாதா பூஜை.
பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரவும், கணவன்& மனைவிக்குள் ஒற்றுமை ஓங்கவும் இந்தக் கோபூஜை செய்வது அவசியம்.
வியாதி நீங்க:
ரோகம்,வியாதி ஆகியவை கோமாதா பூஜையினால் நீங்கி ஆரோக்கிய வாழ்க்கை உருவாகிறது.
செல்வச் செழிப்பு எற்படுகிறது. தரித்திரம் நீங்குகிறது.
சிறந்த பசுவை, உயர்ந்த பசுவை ஸ்ரீசுக்தம் சொல்லி பூஜை செய்து, தானம் செய்ய வேண்டும்.
இந்தக் கோபூஜையினால்,கோதானத்தினால் கோர்ட் விவகாரங்கள், வழக்குகளில் வெற்றி ஏற்படும்.விரோதம் நீங்கும்.
பிதுர் சாபம் தீர:
பிதுர் சாபம், ரிஷிகள் சாபம், மூதாதையர் சாபம் ஆகியவை நீங்குகிறது. பித்து, பைத்தியம் போன்றவை கோதானத்தினால் குணமாகி நல்ல கதி கிடைக்கிறது.
சனிபகவான் தோஷம் விலக
சனிக்கிரக பீடை, அஷ்டமச்சனி, கண்டச்சனி, ஏழரைச்சனி போன்ற சனிக்கிரகத் தொல்லைகளிலிருந்து விடுபட, கோபூஜையும், கோதானமும் செய்ய வேண்டும்.
இத்தகு அதி விசேஷமான,மகத்துவம் நிறைந்த பூஜை கோபூஜையே ஆகும்.