என் மலர்

    நீங்கள் தேடியது "cow"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.
    • போக்குவரத்துக்கு இடையூறாக திரிந்த 4 பசு மாடுகளை சுகாதார பணியாளர்கள் பிடித்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

    இதனால் சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகளை பிடித்து உரிமையாளர்க ளுக்கு அபராதம் விதிக்கும் படி கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி உத்தர விட்டார்.

    அதன்படி மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின் பேரில், டவுன் உதவி வெங்கட்ராமன் மேற்பார்வையில் நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில், சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகளை பிடிக்கும் பணி இன்று காலை நடைபெற்றது.

    அப்போது டவுன் ரத வீதிகள், தெற்கு மவுண்ட் ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சென்று சாலை களில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்தனர்.

    அப்போது மவுண்ட் ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக திரிந்த 4 பசு மாடுகளை சுகாதார பணியாளர்கள் பிடித்தனர்.

    பின்னர் அந்த மாடுகளை நெல்லை டவுன் போலீஸ் நிலையம் எதிரே உள்ள வார்டு அலுவலகத்தில் கட்டி வைத்தனர்.

    அதன் உரிமையாளர்க ளுக்கு, உரிய அபராதம் செலுத்தி அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தப் பட்டு உள்ளது. அபராதம் இன்று மாலை வரை உரிமையாளர்களால் செலுத்தப் படவில்லை எனில் அந்த மாடுகளை கோசாலையில் ஒப்படைப்பதற்கு சுகாதார அலுவலர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சம்பவத்தன்று இவர் மாடு முட்டி பலத்த காயமடைந்தார்.
    • சிகிச்சை பலனின்றி மதலைமேரி இறந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ள கடுவெளி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த அமலதாஸ் மனைவி மதலைமேரி (வயது 83). சம்பவத்தன்று இவர் மாடு முட்டி பலத்த காயமடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதலைமேரி இறந்தார். இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு ஒரு வழியாக அந்த மாட்டை மடக்கி பிடித்து கட்டிப் போட்டார்கள்.
    • நாய் கடித்ததால் மாட்டிற்கு வெறிபிடித்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ரோடுகளில் அலையும் மாடுகளால் போக்குவரத்துக்கு இடையூறு மட்டுமில்லாமல் பொது மக்களுக்கும் ஆபத்து நேரிடுகிறது. சூளைமேட்டில் ரோட்டில் சென்ற ஒரு சிறுமியை குத்தி தூக்கி வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து ரோட்டில் அலைந்து திரியும் மாடுகளை பிடிக்க மாநகராட்சி உத்தரவிட்டது. மாடுகளை பிடித்து தொழுவத்தில் கட்டி வைத்து உரிமையாளர்களிடம் ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. இருப்பினும் முழு அளவில் கட்டுப்படுத்த முடியவில்லை.

    ஐஸ் அவுஸ் பகுதியில் பெசன்ட் ரோட்டில் நேற்று மாலையில் ஒரு மாடு மதம் பிடித்த யானை போல் உறுமியபடி அங்கும் இங்கும் ஓடியது.

    கண்ணில் பட்டவர்களை முட்டி தள்ளியது. ஒருவர் பின் ஒருவராக மோதி தள்ளியதில் 5 பேர் ரோட் டில் விழுந்து உருண்டனர். அதை பார்த்ததும் பொது மக்கள் மாட்டிடம் இருந்து தப்பிப்பதற்காக தெறித்து ஓடினார்கள்.

    இது பற்றிய தகவல் கிடைத்ததும் போலீசாரும், மாநகராட்சி ஊழியர்களும் விரைந்தனர்.

    மாடு நின்றதை பார்த்ததும் அவர்களும் மிரண்டனர். கிட்டே நெருங்க முடியாமல் தவித்தனர். இதையடுத்து மாட்டு உரிமையாளரை வரவழைத்தனர். அவர் அழைத்தபடியே மாட்டை நெருங்கினார். ஆனால் மாடு அவரிடமும் பணியாமல் மோத வந்தது. இதனால் அவரும் ஓட்டம் பிடித்தார்.

    நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு ஒரு வழியாக அந்த மாட்டை மடக்கி பிடித்து கட்டிப் போட்டார்கள்.

    அப்போதுதான் மாட்டின் உடலில் நாய் கடித்த தடம் இருந்ததை பார்த்தனர். எனவே நாய் கடித்ததால் மாட்டிற்கு வெறிபிடித்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கால்நடை மருத்துவர்கள் மூலம் பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கற்களுக்கு இடையே பசு மாடு சிக்கிக்கொண்டது.
    • 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.

    மதுரை

    மதுரை மீனாட்சி பஜார் ஸ்காட் ரோடு பகுதியில் ெரயில்வே தண்டவாளம் அருகே பராமரிப்பு பணிக ளுக்காக 650 கிலோ எடை கொண்ட 25-க்கும் மேற்பட்ட கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் இன்று காலை அங்கு மேய்ச்சலுக்காக சென்ற ஒரு பசுமாடு அங்கு இருந்த கற்களுக்குள் சிக்கி கொண்டது. உடல் பகுதி முழுவதும் சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் தவித்தது. அங்கிருந்தவர்கள் இதை பார்த்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலறிந்து சம்பவ வந்த தீயணைப்புத் துறை யினர் கற்களுக்குள் சிக்கியபடி தவித்து கொண்டிருந்த பசு மாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    உயிருடன் பசு மாட்டை மீட்க வேண்டும் என்பதால் அவர்கள் பொறுமையாக செயல்பட வேண்டியிருந்தது. இதனால் மீட்பு பணியில் காலதாமதம் ஏற்பட்டது.

    பின்னர் தீயணைப்பு துறையினருடன், பொது மக்களும் இணைந்து அடுக்கி வைக்கப்பட்டிருந்த கற்களை அகற்றினர். 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.

    பசுமாட்டை உயிருடன் மீட்ட எஸ்.எஸ்.ஓ. பால முருகன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சுப்புராஜ், கார்த்திக், ராமர், பால் பாண்டி, வில்வகுமார் ஆகி யோரை அங்கிருந்தவர்கள் பாராட்டினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முத்துசாமி விவசாய தொழில் செய்து வருகிறார்.
    • அங்கு நின்ற மாடு எதிர்பாராத விதமாக முதியவர் முத்துசாமியை முட்டியது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பெரியம்மாள். இவரது கணவர் முத்துசாமி (வயது 70). விவசாய தொழில் செய்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில் வேலை செய்வதற்காக சென்றார். அப்பொழுது அங்கு நின்ற மாடு எதிர்பாராத விதமாக முதியவர் முத்துசாமியை முட்டியது. இதில் பலத்த காயமடைந்த முத்துசாமியை அருகில் இருந்தவர்கள் மேல் நாரியப்பனூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு பொது ஆஸ்ப த்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலன்னிற்றி முத்துசாமி பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து அவரது மனைவி பெரியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கிணற்றுக்குள் விழுந்த பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி மீட்டனர்
    • மீட்கப்பட்ட பசு மாட்டிற்கு அரசு கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்தார்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் அருகே அதியமான் கோட்டை பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (45).அப்பகுதியில் உள்ள ஒரு விவசாயத் தோட்டத்தில் அவருக்கு சொந்தமான பசு மாட்டை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது பசு மாடு விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில் விழுந்துவிட்டது. இது குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து கிணற்றுக்குள் தத்தளித்த பசுமாட்டை கயிற்றால் கட்டி மீட்டனர்.

    60 அடி ஆழ கிணற்றில் பசுமாடு விழுந்ததால், நொய்யல் கால்நடை மருத்துவமனை மருத்துவர் டாக்டர் உஷாவும் வரவழைக்கப்பட்டார். அவர் மீட்கப்பட்ட பசு மாட்டிற்கு மருத்துவ பரிசோதனை நடத்தி சிகிச்சை அளித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
    • மீறினால் பொது சுகாதார சட்டம் 1939-ன் படி கால்நடைகளின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும்.

    பூந்தமல்லி:

    அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலனி, இளங்கோ தெரு வழியாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு பள்ளி முடிந்து தாயுடன் நடந்து சென்ற 4-ம் வகுப்பு மாணவியை மாடு ஒன்று முட்டி தூக்கியது. இதில் அந்த சிறுமி பலத்த காயம் அடைந்தார். இதைத்தொடர்ந்து சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல் திருவேற்காடு நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்துவது குறித்து நகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    திருவேற்காடு நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் கால்நடைகள் அதிகமாக சுற்றித்திரிகிறது. தெருக்களில், சாலைகளில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில், கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் சாலைகளில் திரிய விடக்கூடாது. மீறினால் பொது சுகாதார சட்டம் 1939-ன் படி கால்நடைகளின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும். அபராதத்தினை செலுத்தி மீட்காத உரிமையாளரின் கால்நடைகள் பிடித்த 3 நாளில், பகிரங்க பொது ஏலம் விடப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பசு மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகின்றனர்.
    • கடந்த சில நாட்களாக மேகமூட்டத்துடன் மழை பெய்து வருகிறது.

    கோத்தகிரி,

    கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலானோர் பசு மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்கள் அதனை சரியாக பராமரிப்பது இல்லை. எனவே இந்த மாடுகள் ரோட்டின் நடுவே படுத்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. கோத்தகிரியில் கடந்த சில நாட்களாக மேகமூட்டத்துடன் மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான வாகனஓட்டிகள் முன்விளக்குகளை ஒளிரவிட்டு செல்கின்றனர். அவர்களில் சிலருக்கு ரோட்டில் கால்நடைகள் படுத்து கிடப்பது தெரிவது இல்லை. இதனால் அங்கு விபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்து உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு கால்நடைகளை ரோட்டில் அவிழ்த்து விடும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சேற்றில் சிக்கிய பசுமாடு மீட்கப்பட்டது.
    • பசுமாட்டை வெளியே கொண்டு வர முத்துசாமி பல்வேறு முயற்சிகள் செய்தும் வெளியே கொண்டு வர முடியவில்லை

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள நுத்தப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 40), விவசாயி. இவர் தனது வயலில் பசுமாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது வயலின் அருகே உள்ள புதைக் குழியில் பசுமாடு இறங்கி சேற்றில் சிக்கிக் கொண்டது. பசுமாட்டை வெளியே கொண்டு வர முத்துசாமி பல்வேறு முயற்சிகள் செய்தும் வெளியே கொண்டு வர முடியவில்லை. இதனை தொடர்ந்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சேற்றில் சிக்கிய பசுமாட்டை கயிறு கட்டி வெளியே மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.



    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் நஷ்ட ஈடுகளை மாட்டின் உரிமையாளர்களே வழங்க வேண்டும் என எச்சரிக்கையுடன் அறிவுரையும் வழங்கினர்.
    • திருச்சிற்றம்பலம் கூட்ரோடு மற்றும் மொரட்டாண்டியில் உள்ள மாட்டு பட்டியில் அடைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை- திண்டிவனம் பைபாஸ் சாலையில் மாடுகளால் ஏற்படும் விபத்தால் தொடர் உயிர் பலிகள் ஏற்படுவதாகவும் இதுகுறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று மாலை மலரில் செய்தி வெளியானது.

    இதனையடுத்து ஆரோவில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் போலீசார் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு, மொரட்டாண்டி, நாவற்குளம், பட்டானூர், மாட்டுக்காரன் சாவடி பகுதிகளில் நேற்று மாலை வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் மாடு வளர்ப்போருக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

    திண்டிவனம்- புதுச்சேரி பைபாஸ் சாலையில் மாடு வளர்ப்போர் மாடுகளை நடமாட விட்டால் காவல்துறை சார்பில் மாட்டை பிடித்து பட்டியில் அடைப்பதாகவும், அந்த மாட்டால் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் நஷ்ட ஈடுகளை மாட்டின் உரிமையாளர்களே வழங்க வேண்டும் என எச்சரிக்கையுடன் அறிவுரையும் வழங்கினர்.

    இந்நிலையில் நேற்று இரவு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமையில் ஊராட்சி மன்ற அலுவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புதுவை திண்டிவனம்-பைபாஸ் சாலை மற்றும் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு சந்திப்பில் நடமாடிய 50-க்கும் மேற்பட்ட மாடுகளை பிடித்து திருச்சிற்றம்பலம் கூட்ரோடு மற்றும் மொரட்டாண்டியில் உள்ள மாட்டு பட்டியில் அடைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print