search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "calf"

    • யானை குட்டிக்கு வனத்துறை கால்நடை மருத்துவரால் பரிசோதனை செய்து, புட்டிப்பால் வழங்கப்பட்டது.
    • பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே, இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.ளவய

    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை அருகே, ஜவளகிரி வனப்பகுதியில் பிரசவத்தின் போது பெண் யானை உயிரிழந்தது. இதையடுத்து, குட்டியானையை மீட்டு வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி வனச்சரகம், உளி பண்டா காப்புகாடு உறுகுட்டை சரக பகுதியில், நேற்று காலை பெண் யானை ஒன்று குட்டி ஈன்ற பிறகு உயிரிழந்துள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஜவளகிரி வனச்சரக அலுவலர் (பொ) விஜயன் தலைமையிலான வனத்துறையினர், சம்பவ இடம் சென்று பார்வையிட்டனர்.

    பின்னர், இறந்த தாய் யானையின் அருகே, உயிருடன் இருந்த குட்டியை மீட்டனர். அந்த யானை குட்டிக்கு வனத்துறை கால்நடை மருத்துவரால் பரிசோதனை செய்து, புட்டிப்பால் வழங்கப்பட்டது. மேலும், உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பிரசவத்தின்போது, உயிரிழந்த பெண் யானையின் உடலை, வனக்கால்நடை மருத்துவரால் இன்று பிரேத பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாவும், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே, இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மின்வயர் கடித்து பெண் யானை இறந்த நிலையில், ஜவளகிரி வனப்பகுதியில் குட்டி ஈன்ற பெண் யானை இறந்தது வனவிலங்கு ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பசு மாட்டை தினமும் காலையில் மேய்ச்சலுக்காக வெளியே அனுப்புவது வழக்கம்.
    • நிறைமாத கர்ப்பமாக இருந்த பசு மாடு தொம்பன்குடிசை பகுதி அருகே திடீர் என பிரசவ வலி ஏற்பட்டு அங்கேயே கன்றுக்குட்டியை ஈன்றது.

    தஞ்சாவூர்:

    உலகில் தாய் பாசத்திற்கு நிகர் எதுவும் இல்லை. தாய்ப்பாசம் அனைத்து உயிர்களுக்கும் ஒன்றுதான். இதனை உணர்த்தும் வகையில், தஞ்சாவூரில் கன்றுக்குட்டியை ஆட்டோவில் எடுத்து சென்ற உரிமையாளரை பின்தொடர்ந்து, 5 கி.மீட்டர் தூரத்திற்கு ஓடிய தாய் பசுவின் பாசம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:-

    தஞ்சை செக்கடியை சேர்ந்தவர் சபரிநாதன். ஆட்டோ டிரைவர். இவரது வீட்டில் லெட்சுமி என்ற பசுமாடு ஒன்று உள்ளது. இவர் தனது மாட்டை வீட்டில் ஒரு குழந்தையை போல வளர்த்து வருகிறார். இந்நிலையில், இந்த பசு மாட்டை தினமும் காலையில் மேய்ச்சலுக்காக வெளியே அனுப்புவது வழக்கம்.

    அப்போது, பசு மாடு நிறைமாத கர்ப்பமாக இருந்த நிலையில், பசு மாடு தொம்பன்குடிசை பகுதி அருகே திடீர் என பிரசவ வலி ஏற்பட்டு அங்கேயே கன்றுக்குட்டியை ஈன்றது. இதை தொடர்ந்து, பசுவை வெகுநேரம் காணவில்லை என்று சபரிநாதன் பல பகுதிகளில் தேடி பார்த்தார். அப்போது ஈன்ற கன்றுக்குட்டியுடன் பசு நின்று கொண்டிருந்தை பார்த்தார்.

    இதையடுத்து, கன்றுக்குட்டியை மீட்டு அதை ஆட்டோவில் வைத்து வீட்டிற்கு புறப்பட்டார். இதை கண்ட தாய்ப்பசு பாசத்தினால் ஆட்டோவை பின் தொடர்ந்து ஓடிக்கொண்டே சுமார் 5 கி.மீட்டர் தூரம் வரை பின் தொடர்ந்து சென்று ஆட்டோவையும் வழி மறித்தது.

    பின்பு சபரிநாதன், கன்றுக்குட்டியை பசுவிடம் இறக்கி விட்டார். அதையடுத்து, கன்றுக்குட்டியைப் பசுமாடு பாசத்தோடு அரவணைத்து பாலூட்டியது. பின்னர் பசுமாடும், கன்றுக்குட்டியும் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டது.

    இந்த சம்பவம் அப்பகுதியில் காண்போரை மெய்சிலிர்க்கவும், வியக்கவும் செய்தது. தஞ்சையில் பசு மாட்டின் இந்த பாச போராட்டம், பார்ப்போரை மனம் நெகிழ வைத்துள்ளது. தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    தகவல் அறிந்ததும் வனத்துறை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையம் பகுதியில் கடந்த 7-ந் தேதி சிறுத்தை ஒன்று சாலையை கடந்து சென்றதாக அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து காமநாயக்கன்பாளையம் போலீசார் மற்றும் திருப்பூர் மாவட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் அந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்று தெரிவித்தனர்.

    மேலும் அந்த பகுதியில் காலடித்தடங்களை ஆய்வு செய்தபோது அது சிறுத்தையின் கால் தடம் இல்லை என்றும் தெளிவாக தெரிவித்தனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பல்லடம்-தாராபுரம் சாலையில் உள்ள துத்தாரி பாளையத்தில் வித்தியாசமான உருவம் கொண்ட மிருகம் ஒன்று சாலையை கடந்து சென்றதாக ஒருவர் தெரிவித்தார்.

    இதையடுத்து சம்பவ இடம் சென்ற வனத்துறையினர் அங்கு ஆய்வு மேற்கொண்ட போது அங்கிருந்த கால் தட பதிவுகள் நாயின் கால் தட பதிவுகளை விட சற்று பெரியதாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சிறுத்தையின் கால் தடப்பதிவுகள் போல் அல்லாமல் இருந்தது.

    சிறுத்தையின் கால் தட பதிவுகளில் நகம் பதிவாகி இருக்கும். ஆனால் இந்த கால் தட பதிவுகளில் அப்படி இல்லை என்று தெரிவித்தனர். இந்நிலையில் பொதுமக்கள் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி சிறுத்தை நடமாட்டம் குறித்த பீதியை போக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

    இந்நிலையில் பல்லடம் அருகே அலகுமலை பகுதியில் நேற்றிரவு சிறுத்தை ஒன்று புகுந்ததாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். விவசாய தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த கன்று குட்டியை கடித்து கொல்ல முயற்சித்ததாகவும், அப்போது அருகே இருந்த விவசாயிகளின் அலறல் சத்தம் கேட்டு கன்றுக்குட்டியை விட்டு விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

    இது குறித்த தகவல் அறிந்ததும் வனத்துறை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். திருப்பூர் மாவட்ட எஸ்.பி., சாமிநாதன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.அப்போது கன்றுகுட்டி மீது சிறுத்தை விரலால் கீறியதற்கான தடயங்கள் இருந்தது. அதனைக்கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இதனால் பல்லடம் பகுதி பொதுமக்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர். மேலும் சிறுத்தையை பிடிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். பல்லடம் அருகே மீண்டும் சிறுத்தை ஊருக்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • விபத்தில் சிக்கிய கன்று குட்டியை மீட்டு சிகிச்சைக்காக தன்னார்வலர்கள் கொண்டு சென்றனர்.
    • சிகிச்சைக்கு அனுப்பிய 2 தன்னார்வலர்களையும் பொதுமக்கள் பாராட்டினர்.

    தஞ்சை ரெட்டிபாளையம் சாலை அப்துல் வகாப் நகரில் நேற்று இரவு கன்றுக்குட்டி ஒன்று படுத்து கிடந்தது.

    அப்போது அந்த வழியாக வந்த வேன் எதிர்பாராத விதமாக கன்று குட்டி மீது மோதியது.

    இதில் கன்று குட்டி அந்த வேனில் சிக்கி சில அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டது.

    வளைவில் அந்த வேன் திரும்பிய போது கன்று குட்டி அதிலிருந்து விலகி சாலையில் பலத்த காயத்துடன் கிடந்தது.

    கன்று குட்டி உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை ஆலக்குடியை சேர்ந்த வெற்றிவேல், தஞ்சை மேலவெளியை சேர்ந்த செந்தில் ஆகிய இருவரும் பார்த்து உடனடியாக காரில் அந்த கன்று குட்டியை ஏற்றினர்.

    பின்னர் ஒரத்தநாடு கால்நடை மருத்துவமனையில் கன்று குட்டியை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து கன்று குட்டி உரிமையாளருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கன்று குட்டியை பத்திரமாக மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிய 2 தன்னார்வலர்களையும் பொதுமக்கள் பாராட்டினர். 

    • சங்கராபுரம் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியானார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே பரமநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அழகன். இவரது மனைவி பட்டு(வயது68). இவர் சம்பவத்தன்று தனது கன்று குட்டியை மேய்ச்சலுக்காக வயலுக்கு ஓட்டிச்சென்றார். அப்போது, வயல்வெளி பகுதியில் அறுந்து கிடந்த உயர்மின் அழுத்த கம்பியை தெரியாமல் மிதித்தார். இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டார். இதையடுத்து, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்த சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சத்தம் கேட்டு ராமசாமி வெளியே வந்து பார்த்தபோது ஒரு கன்றுக்குட்டியை காணவில்லை.
    • உடனடியாக வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சி சமனா காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவர் ஆடுகள் மற்றும் மாடுகள் வைத்து விவசாயம் செய்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று ராமசாமியின் விவசாய தோட்டத்தில் புகுந்து பிறந்து 15 நாட்களே ஆன கன்றுக்குட்டியை கடித்து கொன்று கவ்வி சென்றது. சத்தம் கேட்டு ராமசாமி வெளியே வந்து பார்த்தபோது ஒரு கன்றுக்குட்டியை காணவில்லை.

    இதனையடுத்து சிறுத்தையின் கால் தடங்கள் பதிவாகி இருப்பதாகவும், தனது தோட்டத்து வீட்டில் பசு மாட்டுடன் கட்டி வைத்திருந்த நிலையில் கன்றுக்குட்டியை சிறுத்தை கவ்வி இழுத்து சென்ற போது கன்றுக்குட்டியின் அலறல் சத்தம் கேட்டதாகவும் டி.என்.பாளையம் வனத்துறையினரிடம் ராமசாமி தகவல் கொடுத்துள்ளார்.

    தகவலின் பேரில் இன்று காலை வனத்துறையினர் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து வனப்பகுதியையொட்டிய விவசாய நிலங்களில் தேடி பார்த்தபோது அருகில் உள்ள சோளக்காட்டில் கன்றுக்குட்டி இறந்து நிலையில் கிடந்ததை கண்டுள்ளனர்.

    இந்த பகுதியில் ஏராளமானோர் கால்நடைகளை வளர்த்து வருவதால் பீதி அடைந்து உள்ளனர். உடனடியாக வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    • நிசார் முகமது வளர்த்து வந்த பசுமாடு ஒன்று பிரசவித்திருந்தது.
    • கிடாரி, காளை என 2 கன்றுகளை ஈன்றது.

    கபிஸ்தலம்:

    பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அம்மா பள்ளி தைக்கால் பகுதியில் வசிப்பவர் நிசார் முகமது. வக்கீலாக பணியாற்றி வருகிறார்.

    இவர் விவசாயத்திலும், கால்நடை வளர்ப்பிலும் அதீத ஆர்வம் கொண்டவர். இந்நிலையில், இவர் வளர்த்து வந்த பசுமாடு ஒன்று பிரசவித்திருந்தது.

    திடீரென, அந்த பசு நேற்று முன்தினம் ஒன்றின்பின் ஒன்றாக கிடாரி, காளை என 2 கன்றுகளை ஈன்றது.

    இதனை கண்ட நிசார் முகமது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். மேலும், இதுகுறித்து தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் பசுவையும், 2 கன்றுகளையும் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

    • ஆலங்குடி கே.ராசியமங்கலத்தில் கிணற்றில் விழுந்த கன்றுகுட்டி தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டது
    • சுமார் 60 அடி ஆழமுள்ள வறண்ட கிணற்றில் கன்றுக்குட்டி தவறி விழுந்து விட்டது.

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கே.ராசியமங்கலத்தை சேர்ந்த பெரியநாயகி என்பவருக்கு சொந்தமான மாடுகள் மேய்ச்சலுக்கு சென்றிருந்தன. மேய்ச்சலின் போது அப்பகுதியில் உள்ள, ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமாக சுமார் 60 அடி ஆழமுள்ள வறண்ட கிணற்றில், பெரியநாயகிக்கு சொந்தமான கன்றுக்குட்டி தவறி விழுந்து விட்டது. பொதுமக்கள் மீட்க முயற்சி செய்து பலனளிக்கவில்லை. இதனை தொடர்ந்து ஆலங்குடி தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் கயிற்றின் மூலம் கிணற்றில் இறங்கி, கன்று குட்டியை உயிருடன் மீட்டனர்.

    • பொதுமக்கள் ஊதியூர் பகுதிக்கு செல்லவே அச்சம் அடைந்தனர்.
    • சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிப்பு டிரோன் பயன்படுத்தப்பட்டது.

    காங்கயம் :

    காங்கயம் அருகே ஊதியூர் வனப்பகுதியில் கடந்த சில மாதத்திற்கு முன்பு வந்த சிறுத்தை ஒன்று அங்கு பதுங்கிக்கொண்டது. பின்னர் அந்த பகுதியில் தோட்டங்களில் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வந்தது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் ஊதியூர் பகுதிக்கு செல்லவே அச்சம் அடைந்தனர். இதையடுத்து சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது. ஆனால் கூண்டுக்குள் சிறுத்தை சிக்கவில்லை. எனவே சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிப்பு டிரோன் பயன்படுத்தப்பட்டது. ஆனாலும் சிறுத்தை எந்த இடத்தில் இருக்கிறது என யாருக்கும் தெரியவில்லை.

    காங்கயம் வனத்துறையினர் ஊதியூர் மலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகள் பல்வேறு இடங்களில் வைத்து சிறுத்தையை கண்காணித்து வந்தனர். மேலும் வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்கள், கூண்டுகள்,டிரோன் கேமராக்கள் உள்ளிட்டவைகளை வைத்தும் தீவிரமாக தேடி வந்தனர்.ஆனால் சிறுத்தை கூண்டுகளில் சிக்காமல் இதுவரை வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது.

    இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மலையடிவார பகுதியில் ஒரு தோட்டத்தில் புகுந்த சிறுத்தை அங்கிருந்த கன்று குட்டியை கவ்வி செல்ல முயற்சி செய்தது. கன்றுக்குட்டியின் அலறல் சத்தம் கேட்ட பெரிய மாடுகள் ஒன்று சேர்ந்து சிறுத்தையை துரத்தியது. இதில் பயந்து போன சிறுத்தை கன்றுக்குட்டியை விட்டு விட்டு வனத்துக்குள் ஓடியது. பின்னர் காயங்களுடன் இருந்த கன்றுக்குட்டியை அதன் உரிமையாளர் மீட்டு, கால்நடை டாக்டர் வரவழைக்கபபட்டு காயங்களுக்கு மருந்துகள் போட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஊதியூர் மலையடிவார பகுதியில் மீண்டும் சிறுத்தை கன்று குட்டியை தூக்கி செல்ல முயன்ற சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மணிமேகலை என்பவருக்கு சொந்தமான கன்று குட்டி முருகேசன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் தவறி விழுந்தது
    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கன்று குட்டியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த மணிமேகலை என்பவருக்கு சொந்தமான கன்று குட்டி முருகேசன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் தவறி விழுந்தது. பின்னர் இது பற்றி சின்னசேலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கன்று குட்டியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    அப்பொழுது அஜித் என்ற தீயணைப்பு வீரர் கிணற்றில் கயிறு கட்டி இறக்கினர்.அப்பொழுது 2 பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிறகு 2 பாம்பை உயிருடன் பிடித்து சாக்கு பையில் போட்டு பாதுகாப்பாக கட்டினர்.பிறகு கிணற்றுக்குள் இறங்கி கன்று குட்டியை உயிருடன் மீட்டனர். இந்த மீட்பு போராட்டத்தில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி கன்றுகுட்டியை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர். சாக்கு பையில் இருந்த பாம்பை வனப்பகுதியில் விட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பழனி சொந்தமாக மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார்.
    • சம்பவத்தன்று பழனி ஊருக்கு அருகே உள்ள இலந்தோப்பு பகுதியில் ஒரு தோட்டத்தில் தனது 2 மாடுகள் மற்றும் 1 கன்று குட்டியை கட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    நெல்லை:

    நாங்குநேரி அருகே உள்ள நம்பிநகர் பெருமாள்கோவில் தெருவை சேர்ந்தவர் பழனி(வயது 52). இவர் சொந்தமாக மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று பழனி ஊருக்கு அருகே உள்ள இலந்தோப்பு பகுதியில் ஒரு தோட்டத்தில் தனது 2 மாடுகள் மற்றும் 1 கன்று குட்டியை கட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். மாலையில் அங்கு சென்று பார்த்தபோது அவரது பசுமாடுகள் மற்றும் கன்று குட்டியை காணவில்லை.

    இதுதொடர்பாக அவர் நாங்குநேரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.75 ஆயிரம் மதிப்பிலான பசுமாடுகளை திருடிச்சென்ற மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கன்றுக்குட்டி கிணற்றுக்குள் அங்கும் இங்கும் கத்திக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தது.
    • கன்றுக்குட்டியை பத்திரமாக உயிருடன் மீட்டு கயிற்றின் மூலம் கட்டி மேலே கொண்டு வந்தனர்.

    காங்கயம் :

    காங்கயத்தை அடுத்த வட்டமலை அருகே சேடன்புதூர் பகுதியில் உள்ள செட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 68) விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டத்தில் தண்ணீர் இல்லாத 80 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று உள்ளது. அதில் தோட்டத்தில் சுற்றித்திரிந்த பிறந்து 3 மாதங்களே ஆன கன்றுக்குட்டி ஒன்று தவறி விழுந்தது.

    பின்னர் மேலே வரமுடியாமல் கன்றுக்குட்டி கிணற்றுக்குள் அங்கும் இங்கும் கத்திக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தது. இந்த சத்தத்தை கேட்ட பெரியசாமி அங்கு சென்று கிணற்றை எட்டிப்பார்த்த போது கிணற்றுக்குள் கன்றுக்குட்டி விழுந்து கிடந்தது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து காங்கயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் காங்கயம் தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் ரமேஷ் தலைமையிலான தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திக்கு வந்து பார்வையிட்டு கன்றுக்குட்டியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி கன்றுக்குட்டியை பத்திரமாக உயிருடன் மீட்டு கயிற்றின் மூலம் கட்டி மேலே கொண்டு வந்தனர். பின்னர் கன்றுக்குட்டி அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    ×