search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாங்குநேரியில் பசுமாடுகள் -  கன்றுகுட்டி திருட்டு
    X

    நாங்குநேரியில் பசுமாடுகள் - கன்றுகுட்டி திருட்டு

    • பழனி சொந்தமாக மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார்.
    • சம்பவத்தன்று பழனி ஊருக்கு அருகே உள்ள இலந்தோப்பு பகுதியில் ஒரு தோட்டத்தில் தனது 2 மாடுகள் மற்றும் 1 கன்று குட்டியை கட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    நெல்லை:

    நாங்குநேரி அருகே உள்ள நம்பிநகர் பெருமாள்கோவில் தெருவை சேர்ந்தவர் பழனி(வயது 52). இவர் சொந்தமாக மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று பழனி ஊருக்கு அருகே உள்ள இலந்தோப்பு பகுதியில் ஒரு தோட்டத்தில் தனது 2 மாடுகள் மற்றும் 1 கன்று குட்டியை கட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். மாலையில் அங்கு சென்று பார்த்தபோது அவரது பசுமாடுகள் மற்றும் கன்று குட்டியை காணவில்லை.

    இதுதொடர்பாக அவர் நாங்குநேரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.75 ஆயிரம் மதிப்பிலான பசுமாடுகளை திருடிச்சென்ற மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×