search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேனில் அடிப்பட்டு இழுத்து செல்லப்பட்ட கன்று குட்டி
    X

    வேனில் இழுத்துச் செல்லப்பட்டு பலத்த காயமடைந்த கன்றுக்குட்டி.

    வேனில் அடிப்பட்டு இழுத்து செல்லப்பட்ட கன்று குட்டி

    • விபத்தில் சிக்கிய கன்று குட்டியை மீட்டு சிகிச்சைக்காக தன்னார்வலர்கள் கொண்டு சென்றனர்.
    • சிகிச்சைக்கு அனுப்பிய 2 தன்னார்வலர்களையும் பொதுமக்கள் பாராட்டினர்.

    தஞ்சை ரெட்டிபாளையம் சாலை அப்துல் வகாப் நகரில் நேற்று இரவு கன்றுக்குட்டி ஒன்று படுத்து கிடந்தது.

    அப்போது அந்த வழியாக வந்த வேன் எதிர்பாராத விதமாக கன்று குட்டி மீது மோதியது.

    இதில் கன்று குட்டி அந்த வேனில் சிக்கி சில அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டது.

    வளைவில் அந்த வேன் திரும்பிய போது கன்று குட்டி அதிலிருந்து விலகி சாலையில் பலத்த காயத்துடன் கிடந்தது.

    கன்று குட்டி உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை ஆலக்குடியை சேர்ந்த வெற்றிவேல், தஞ்சை மேலவெளியை சேர்ந்த செந்தில் ஆகிய இருவரும் பார்த்து உடனடியாக காரில் அந்த கன்று குட்டியை ஏற்றினர்.

    பின்னர் ஒரத்தநாடு கால்நடை மருத்துவமனையில் கன்று குட்டியை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து கன்று குட்டி உரிமையாளருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கன்று குட்டியை பத்திரமாக மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிய 2 தன்னார்வலர்களையும் பொதுமக்கள் பாராட்டினர்.

    Next Story
    ×