search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கயம் அருகே கன்றுக்குட்டியை கொல்ல முயன்ற சிறுத்தையை விரட்டியடித்த மாடுகள்
    X

    கோப்புபடம்.

    காங்கயம் அருகே கன்றுக்குட்டியை கொல்ல முயன்ற சிறுத்தையை விரட்டியடித்த மாடுகள்

    • பொதுமக்கள் ஊதியூர் பகுதிக்கு செல்லவே அச்சம் அடைந்தனர்.
    • சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிப்பு டிரோன் பயன்படுத்தப்பட்டது.

    காங்கயம் :

    காங்கயம் அருகே ஊதியூர் வனப்பகுதியில் கடந்த சில மாதத்திற்கு முன்பு வந்த சிறுத்தை ஒன்று அங்கு பதுங்கிக்கொண்டது. பின்னர் அந்த பகுதியில் தோட்டங்களில் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வந்தது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் ஊதியூர் பகுதிக்கு செல்லவே அச்சம் அடைந்தனர். இதையடுத்து சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது. ஆனால் கூண்டுக்குள் சிறுத்தை சிக்கவில்லை. எனவே சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிப்பு டிரோன் பயன்படுத்தப்பட்டது. ஆனாலும் சிறுத்தை எந்த இடத்தில் இருக்கிறது என யாருக்கும் தெரியவில்லை.

    காங்கயம் வனத்துறையினர் ஊதியூர் மலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகள் பல்வேறு இடங்களில் வைத்து சிறுத்தையை கண்காணித்து வந்தனர். மேலும் வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்கள், கூண்டுகள்,டிரோன் கேமராக்கள் உள்ளிட்டவைகளை வைத்தும் தீவிரமாக தேடி வந்தனர்.ஆனால் சிறுத்தை கூண்டுகளில் சிக்காமல் இதுவரை வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது.

    இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மலையடிவார பகுதியில் ஒரு தோட்டத்தில் புகுந்த சிறுத்தை அங்கிருந்த கன்று குட்டியை கவ்வி செல்ல முயற்சி செய்தது. கன்றுக்குட்டியின் அலறல் சத்தம் கேட்ட பெரிய மாடுகள் ஒன்று சேர்ந்து சிறுத்தையை துரத்தியது. இதில் பயந்து போன சிறுத்தை கன்றுக்குட்டியை விட்டு விட்டு வனத்துக்குள் ஓடியது. பின்னர் காயங்களுடன் இருந்த கன்றுக்குட்டியை அதன் உரிமையாளர் மீட்டு, கால்நடை டாக்டர் வரவழைக்கபபட்டு காயங்களுக்கு மருந்துகள் போட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஊதியூர் மலையடிவார பகுதியில் மீண்டும் சிறுத்தை கன்று குட்டியை தூக்கி செல்ல முயன்ற சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×