search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cake"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.
    • கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன் கிறிஸ்துமஸ் கேக்காக தயாரிக்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை பூரணாங்குப்பத்தில் உள்ள தனியார் பீச் ரிசார்ட் ஓட்டலில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கேக் செய்யும் திருவிழா நடந்தது.

    40 கிலோ அளவில் முந்திரி, திராட்சை, பாதாம் மற்றும் பல்வேறு உலர் பழங்கள், ஒயின் வகைகள் மற்றும் வெளிநாட்டு உயர் ரக மதுபானங்களை கொண்டு கலவையாக கேக் தயாரிக்க ஊற வைக்கப்பட்டது.

    இதனை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார். ரிசார்ட் நிர்வாகிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.

    ஊறவைத்த கலவை 40 நாட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன் கிறிஸ்துமஸ் கேக்காக தயாரிக்கப்படும்.

    அந்த கேக் வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு வரை பரிமாறப்பட உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் ஒரு மாதத்திற்கு கொண்டாடப்படுகிறது.
    • மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான் ஏற்பாட்டில் 5, 930 பேருக்கு கேக் வழங்கப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் வெளி யிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா ஏழை-எளியோர், முதியோர், ஆதரவற்றோர், மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் ஒரு மாதத்திற்கு நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் கொண்டா டப்படுகிறது.

    அதன்படி அவரது பிறந்தநாளான நாளை மறுநாள்(திங்கட்கிழமை) முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கப்பட்ட காலை உணவு திட்டத்தின் கீழ் சாப்பிடும் நெல்லை மத்திய மாவட்டத்திற்குட்பட்ட நெல்லை, பாளை சட்டமன்ற தொகுதிகளில் மாநகராட்சியில் உள்ள 40 பள்ளிகளில் பயிலும் 2,825 மாணவர்க ளுக்கும், மானூர் ஒன்றிய பகுதியில் 59 பள்ளிகளில் 2,621 மாணவர்களுக்கும், பாளை ஒன்றியத்தில் 9 பள்ளிகளில் பயிலும் 484 மாணவர்களுக்கும் என மொத்தம் 5, 930 பேருக்கு மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான் ஏற்பாட்டில் கேக் வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    இதனையொட்டி மாண வர்களுக்கு காலை உணவுடன் கேக் வழங்கு வதற்கான பெட்டிகளை மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான் அனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மூத்த நிர்வாகி சுப.சீதாராமன், மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் மாலைராஜா, மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளர் விஜிலா சத்யானந்த், முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மீரான்மைதீன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டை யப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குழந்தைகளுக்கு இந்த கேக்சிக்கில்ஸ் ரொம்ப பிடிக்கும்.
    • இந்த ரெசிபி செய்ய 30 நிமிடமே போதுமானது.

    தேவையான பொருட்கள்:

    கேக் (உங்களுக்கு விருப்பமானது) - 2 கப்

    பட்டர் கிரீம் - 3 டேபிள் ஸ்பூன்

    வெள்ளை சாக்லெட் - 1 கப்

    சிலிக்கான் மோல்டு - 1

    ஐஸ்கிரீம் குச்சிகள் - தேவைக்கேற்ப

    செய்முறை:

    ஒரு சிறிய பாத்திரத்தில் சாக்லெட்டை கொட்டவும்.

    அதைவிட சற்று பெரிய பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி, அதில் சாக்லெட் இருக்கும் பாத்திரத்தை வைத்து தண்ணீரை சூடுப்படுத்தவும். தண்ணீரின் வெப்பத்தால் சாக்லெட் உருகியதும் அதை ஆறவைக்கவும்.

    சிலிக்கான் மோல்டை ஈரப்பதம் இல்லாமல் சுத்தமாக துடைக்கவும். பின்பு அதில் உருக்கிய வெள்ளை சாக்லெட்டை 3 டீஸ்பூன் ஊற்றி, எல்லா பக்கமும் படியுமாறு மெதுவாக சுழற்றவும்.

    பின்னர் ஐஸ்கிரீம் குச்சிகளை உருக்கிய சாக்லெட்டில் தோய்த்து மோல்டின் நடுப்பகுதியில் நுழைக்கவும். இது செட் ஆவதற்காக 10 முதல் 12 நிமிடங்கள் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.

    இப்போது கேக்கை தூளாக உதிர்த்துக்கொள்ளவும். பின்பு அதனுடன் சிறிது சிறிதாக பட்டர் கிரீமை சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்தக் கலவை சப்பாத்தி மாவு பதத்தில் இருக்க வேண்டும்.

    குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்கும் மோல்டை வெளியே எடுக்கவும்.

    தயாரித்து வைத்திருக்கும் கேக் கலவையை, மோல்டில் இருக்கும் வெள்ளை சாக்லெட் மீது நிரப்பவும்.

    பின்னர் அதன் மீது சிறிதளவு உருக்கிய வெள்ளை சாக்லெட்டை ஊற்றவும். (சாக்லெட் இறுகி இருந்தால் சில நிமிடம் மறுபடியும் சுடுநீரில் வைக்கவும்.) மீண்டும் 12 முதல் 15 நிமிடங்கள் வரை மோல்டை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுக்கவும்.

    இப்போது சுவையான கேக்சிக்கில்ஸ் தயார்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விநோதமாக நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள் கன்றுக்குட்டிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
    • பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பிரியாணி விருந்து பரிமாறினர்.

    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள பென்னாத்தூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் மகன்கள் உதயகுமார் (வயது 25), சூரியா (20) விவசாயி. இவர்கள் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார்.

    இதில் ஜூனியர் வேலூர் பைபாஸ் என்னும் அழைக்கப்படும் ஒரு வயதான கன்றுக்குட்டியை வளர்த்து வருகின்றனர். இந்தகுட்டிக்கு நேற்று பிறந்தநாள்.

    இதனை வெகுவிமரிசையாக கொண்டாட உதயகுமார், சூர்யா இருவரும் முடிவு செய்தனர்.

    இதற்காக உறவினர்கள், தெரிந்தவர்களை பிறந்தநாள் விழாவுக்கு அழைத்தனர். வீட்டில் பிரமாண்டமாக அலங்காரம் செய்தனர். மேலும் கன்று குட்டியை குளிப்பாட்டி அலங்காரம் செய்து அழைத்து வந்தனர்.

    உறவினர்கள் ஊர் பொதுமக்கள் எல்லோரும் நேற்று இவர்கள் வீட்டுக்கு வர இந்த மாட்டின் பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி விருந்து வைத்து கொண்டாடினர். விநோதமாக நடந்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள் கலந்து கொண்டு, கன்றுக்குட்டிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பிரியாணி விருந்து பரிமாறினர். கிராமங்களில் பொதுவாக பிறந்தநாளை கொண்டாடுவது இல்லை. கோவில்களுக்கு சென்று சாமி கும்பிடுவதோடு சரி. ஆனால், அதே கிராமத்தில் ஒரு கன்றுகுட்டிக்கு இப்படி பிரம்மாண்டமாக பிறந்தநாள் விழா எடுத்ததை ஊரே நெகிழ்ச்சியுடன் பார்த்தது. அவர்கள் வீட்டுக்குச் சென்று மனதார வாழ்த்தி சென்றனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கிறிஸ்துமஸ் என்றாலே கேக், பிரியாணி தான் ஸ்பெஷல்.
    • இன்று பிளம் கேக் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    முட்டை - 3

    மைதா - 100 கிராம்

    பட்டர் - 100 கிராம்

    சர்க்கரை - 100 கிராம்

    கார்ன் பிளார் - 2 ஸ்பூன்

    ஓமம் தூள் - அரை ஸ்பூன்

    திராட்சை - 30 கிராம்

    சுக்குத் தூள் - அரை ஸ்பூன்

    பால் - கால் கப்

    முந்திரி, பிஸ்தா, வால்நட்- விருப்பத்திற்கேற்ப

    செர்ரி பழம் - 50 கிராம்

    செய்முறை:

    சர்க்கரையை மிக்சி ஜாரில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

    மைதா மாவினை சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    பட்டரை உருக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

    செர்ரி பழங்களை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

    முந்திரி, பிஸ்தா மற்றும் வால்நட் போன்றவற்றை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    கார்ன் பிளாரை ஒரு கிண்ணத்தில் எடுத்து அதில் பால் ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும் .

    பின் அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கூழ் போன்று காய்த்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது பாலினை அடி பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருத்தல் வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவு மற்றும் பொடித்த சர்க்கரையை சேர்த்து அதில் உருகிய பட்டர் சேர்த்து சாஃப்டாக பிசைய வேண்டும்.

    ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, நன்றாக கலக்க வேண்டும். பின் முட்டையை மைதா மற்றும் சர்க்கரை கலவையில் ஊற்றி மீண்டும் பிசைய வேண்டும்.

    பின் இந்த கலவையை பாலில் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

    பின் கேக் டின்னில் பட்டர் பேப்பர் தடவி கலவையை பாதி வரும் வரை ஊற்ற வேண்டும்.

    வெட்டி வைத்துள்ள செர்ரி பழங்களை தூவி மீதி மீதி கலவையை ஊற்ற வேண்டும். அதன் மேல் பொடித்த நட்ஸ்களை தூவி விட வேண்டும்.

    ப்ரீ ஹீட் செய்து கொண்ட ஓவனில் கேக் டின்னை வைத்து சுமார் நாற்பது நிமிடம் வைத்து எடுக்க வேண்டும். அவ்ளோதான் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் "பிளம் கேக்" ரெடி.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராமநாதபுரம் ஐஸ்வர்யா பேக்கரியில் உலகக் கால்பந்து கோப்பை வடிவில் ஆளுயர கேக் உருவாக்கியுள்ளனர்.
    • ஏராளமானோர் கேக் முன் நின்று செல்பி எடுத்து செல்கின்றனர்.

    ராமநாதபுரம்

    உலக கோப்பை கால்பந்து திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் ஐஸ்வர்யா பேக்கரிஸ் சார்பில் இளைஞர்க ளிடையே விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் உலகக் கால்பந்து கோப்பை வடிவ கேக்கை ஆளுயரத்தில் உருவாக்கியுள்ளனர்.

    60 கிலோ சர்க்கரை‌, 260 முட்டைகள் கொண்டு 5½ அடி உயரத்தில் இந்த கோப்பை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று ஐஸ்வர்யா பேக்கரிஸ் உரிமையாளர் வெங்கடசுப்பு தெரிவித்தார்.

    வடிவமைக்கப்பட்ட கேக் பாரதி நகர் ஐஸ்வர்யா பேக்கரியில் வாடிக்கை யாளர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் கேக் முன் நின்று செல்பி எடுத்து செல்கின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 'கிரேப்' என்பது பல மெல்லிய பான் கேக்குகளை ஒன்றாக அடுக்கி செய்யப்படும் கேக் வகையாகும்.
    • இனிப்பு சுவைக் கொண்ட 'வாழைப்பழ கிரேப் கேக்' எவ்வாறு செய்யலாம் என்பதை இங்கு காணலாம்.

    தேவையான பொருட்கள்:

    வாழைப்பழம் - 4

    முட்டை - 2

    எண்ணெய் - 4 தேக்கரண்டி

    உப்பு - ¼ தேக்கரண்டி

    மைதா மாவு - 250 கிராம்

    பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி

    கோகோ பவுடர் - 5 கிராம்

    கெட்டியாக காய்ச்சிய பால் - 250 மில்லி

    பிரெஷ் கிரீம் - 250 மில்லி

    சர்க்கரை - 25 கிராம்

    சாக்லேட் துண்டுகள் - தேவையான அளவு

    செய்முறை

    * நன்றாகப் பழுத்த 2 வாழைப்பழத்தை மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். மீதம் இருக்கும் வாழைப்பழத்தை சிறு சிறு வில்லைகளாக வெட்டிக்கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் முட்டை, எண்ணெய், அரைத்த வாழைப்பழம் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். மற்றொரு பாத்திரத்தில் கோகோ பவுடர், மைதா மாவு, பேக்கிங் பவுடர் மூன்றையும் கொட்டி சலித்துக்கொள்ளவும்.

    * முட்டைக் கலவையில் சேர்த்துக் கட்டியில்லாமல் கலக்கவும். பின்பு அந்தக் கலவையில் காய்ச்சிய பாலை சிறிது சிறிதாக ஊற்றி தோசை மாவு பதத்துக்கு வரும் வரை நன்றாகக் கலக்கவும்.

    * அதனை மூடி, குளிர்சாதனப் பெட்டியில் 2 மணி நேரம் வைக்கவும்.

    * பிறகு நான்-ஸ்டிக் தவாவில், சிறு சிறு அடைகளாக மிதமான தீயில் சுட்டெடுக்கவும்.

    * ஒரு பாத்திரத்தில் பிரெஷ் கிரீம், சர்க்கரை சேர்த்து, எக் பீட்டர் கொண்டு கிரீம் பதத்திற்கு வரும் வரை 'பீட்' செய்யவும்.

    * வாழைப்பழ அடையின் மேல், தயார் செய்த பிரெஷ் கிரீமைத் தடவி அதன் மேல் வெட்டப்பட்ட வாழைப்பழத்தை வைக்கவும்.

    * பின்னர் மீண்டும் அதன் மேல் பிரெஷ் கிரீமைத் தடவவும்.

    * இதே போன்று, ஒன்றன் மீது ஒன்றாக வாழைப்பழ அடைகளை அடுக்கவும்.

    * பின்பு அந்த அடுக்கின் மீது உருக்கிய சாக்லேட் ஊற்றி அலங்கரிக்கவும்.

    * இப்பொழுது சுவையான 'பனானா கிரேப் கேக்' தயார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    குழந்தைகளுக்கு கேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் பேரீச்சம் பழம் சேர்த்து கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா - இரண்டரை கப்,
    வெண்ணெய் - ஒன்றேகால் கப்,
    பால் - ஒன்றரை கப்,
    கண்டன்ஸ்டு பால் - 1 டின் (400 மிலி),
    பேரீச்சம்பழம் (பொடியாக நறுக்கியது) - அரை கப்,
    ஆப்ப சோடா - 1 டீஸ்பூன் (தலைதட்டி),
    பேக்கிங்சோடா - 2 டீஸ்பூன் (தலை தட்டி),
    வெனிலா எசன்ஸ் - 1 டேபிள்ஸ்பூன்,
    பொடித்த சர்க்கரை - 5 டேபிள்ஸ்பூன்.



    செய்முறை :

    2 டீஸ்பூன் மைதாவை தனியே எடுத்து வைத்துவிடுங்கள்.

    பின்னர் மீதி இருக்கும் மைதாவுடன் சோடா, பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்து கொள்ளவும்.

    பேரீச்சம்பழத்தில் 2 டீஸ்பூன் மைதா சேர்த்து பிசறி வையுங்கள்.

    சர்க்கரையுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு குழையுங்கள்.

    பின்னர் கண்டன்ஸ்டு பால் சேருங்கள்.

    அத்துடன் பாலையும் மைதா, எசன்ஸையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

    கடைசியில் பேரீச்சம் பழம் சேர்த்து கலந்து, வெண்ணெய் தடவி, மைதா தூவிய ஒரு ட்ரேயில் ஊற்றி 180 டிகிரி சென்டிகிரேடில் பேக் செய்யுங்கள்.

    இப்போது சூப்பரான பேரீச்சம்பழ கேக் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    குழந்தைகளுக்கு கேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வாழைப்பழ கப் கேக்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பேப்பர் கப் - தேவைக்கேற்ப (5 To 6),
    உப்பு - 1/4 டீஸ்பூன்,
    கோதுமை மாவு - 150 கிராம்,
    நாட்டு சர்க்கரை - 100 கிராம்(Brown Sugar),
    வாழைப்பழம் - 2 (பெரியது பழுத்தது),
    வெண்ணெய் - 75 கிராம்(உருக்கி ஆற வைத்துக் கொள்ளவும்)
    வாழைப்பழம் எசென்ஸ் (அல்லது) 1 டீஸ்பூன், வெனிலா எசென்ஸ் - தேவைக்கேற்ப (1 or 1 1/2),
    முட்டை: 1 (பெரியது) .



    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் வாழைப்பழத்தை போட்டு நன்கு மசித்துக் கொள்ளவும்.

    பின் அதில் நாட்டு சர்க்கரை சேர்த்து எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு கலக்கவும்.

    பிறகு அதில் முட்டை, வெண்ணெய் சேர்த்து கலக்கவும்.

    பின் முட்டை பீட்டர் (egg beater) கொண்டு கோதுமை மாவு, உப்பு, பேக்கிங் சோடா, வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்கு கலந்து பிறகு அந்த கலவையை சிலிக்கான் கப் அல்லது மஃபின் டிரேயில் பேப்பர் கப் வைத்து 200 C யில் 10 நிமிடங்கள் ஃப்ரீஹீட் செய்யப்பட்ட அவனில் 15-20 நிமிடங்கள் 150 C யில் பேக் செய்யவும்.

    பிறகு அதை எடுத்து சூடாகவோ ஆறியோ பரிமாறலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சென்னை மேற்கு ஜாபர்கான்பேட்டையில் பிறந்தநாள் விழாவின் போது பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    சென்னை மேற்கு ஜாபர்கான் பேட்டை அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் சதீஷ் (24). மருந்து கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 25-ந்தேதி இவரது பிறந்த நாளையொட்டி இரவு நண்பர்கள் கேக் வாங்கி வீட்டுக்கு வந்தனர்.

    வீட்டுக்கு வெளியே நடுரோட்டில் கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது சதீஷிடம் பட்டா கத்தியை கொடுத்து கேக் வெட்ட கூறினர். அவரும் கத்தியால் கேக்கை வெட்டி நண்பர்களுக்கு கொடுத்தார். முகத்தில் கேக்கை பூசி கொண்டாடி மகிழ்ந்தனர்.

    இதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். இந்த வீடியோ காட்சியை பார்த்த எம்.ஜி.ஆர். நகர் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இது தொடர்பாக வாலிபர் சதீசை போலீசார் கைது செய்தனர். அவர் மீது பட்டாக்கத்தியால் நடுரோட்டில் கேக் வெட்டி பொது மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்கியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இது தொடர்பாக போலீசார் கூறுகையில், “வீடியோவில் சதீசின் நடவடிக்கை பயமுறுத்தும் வகையிலும், மிரட்டும் தொனியிலும் இருந்தது.

    அவர் பட்டாக்கத்தியால் கேக் வெட்டியதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது மற்ற இளைஞர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் தேவையில்லாத பிரச்சனை உருவாகலாம் என்றனர்.

    கடந்த பிப்ரவரி மாதம் மாங்காடு அருகே ரவுடி பினு தனது பிறந்தநாளை கூட்டாளிகளுடன் கேக்கை அரிவாளால் வெட்டி கொண்டாடினார். இதையறிந்த போலீசார் அங்கு சென்று ரவுடிகளை மடக்கி பிடித்தனர்.

    இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print