என் மலர்
இந்தியா

2 தலை, 4 கண்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி..
- கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா அவனி கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பா
- கன்றுக்குட்டியை பரிசோதனை மருத்துவர் குட்டி நல்ல வளர்ச்சியுடன் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா அவனி கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பா. விவசாயியான இவருக்கு சொந்தமான பசுமாடு நேற்று கன்றுக்குட்டி ஒன்றை ஈன்றது.
அந்த கன்றுக்குட்டி இரண்டு தலைகள், நான்கு கண்களுடன் பிறந்துள்ளது. இதனால் ஆச்சர்யம் அடைந்த எல்லப்பா கால்நடை மருத்துவரை அழைத்தார்.
கன்றுக்குட்டியை பரிசோதனை மருத்துவர் குட்டி நல்ல வளர்ச்சியுடன் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தார். இந்த கன்றுக்குட்டியைப் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக எல்லப்பா வீட்டுக்கு படையெயடுத்து வருகிறது.
Next Story






