என் மலர்
நீங்கள் தேடியது "Vande Bharat"
- இந்த ரெயில், ராமேசுவரத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படுகிறது.
- மறுமார்க்கத்தில் இந்த ரெயில் சென்னையில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு புறப்படுகிறது.
ராமேசுவரத்தில் இருந்து மதுரை வழியாக விரைவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், ராமேசுவரம்-சென்னை வந்தே பாரத் ரெயில் காரைக்குடி வழியாக இயக்கப்படுவதாக தற்காலிக நேர அட்டவணை வெளியாகி உள்ளது.
இந்த கால அட்டவணைப்படி, இந்த ரெயில், ராமேசுவரத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படுகிறது. ராமநாதபுரத்தில் இருந்து மாலை 3.15 மணிக்கும், சிவகங்கையில் இருந்து மாலை 4.10 மணிக்கும், காரைக்குடியில் இருந்து மாலை 4.40 மணிக்கும், புதுக்கோட்டையில் இருந்து மாலை 5.10 மணிக்கும், திருச்சியில் இருந்து மாலை 6.10 மணிக்கும், விழுப்புரத்தில் இருந்து இரவு 8.15 மணிக்கும், தாம்பரத்தில் இருந்து இரவு 9.40 மணிக்கும் புறப்பட்டு இரவு 10.20 மணிக்கு சென்னை சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில் இந்த ரெயில் சென்னையில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு புறப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து அதிகாலை 5.52 மணிக்கும், விழுப்புரத்தில் இருந்து காலை 7.20 மணிக்கும், திருச்சியில் இருந்து காலை 9.20 மணிக்கும், புதுக்கோட்டையில் இருந்து காலை 10 மணிக்கும், காரைக்குடியில் இருந்து காலை 10.40 மணிக்கும், சிவகங்கையில் இருந்து நண்பகல் 11.15 மணிக்கும், ராமநாதபுரத்தில் இருந்து மதியம் 12.15 மணிக்கும் புறப்பட்டு மதியம் 1.15 மணிக்கு ராமேசுவரம் சென்றடைகிறது. இந்த ரெயில் புதன்கிழமை தவிர வாரத்தின் பிற நாட்களில் இயக்கப்பட உள்ளது. ரெயில் இயக்கப்பட்ட பின்னர், நிறுத்தப்படும் இடங்கள் மற்றும் நேரங்களில் மாற்றம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
- வந்தே பாரத் ரெயில் வரவேற்று பெற்றதால், ஸ்லீப்பர் ரெயில் விட திட்டம்.
- இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரெயிலின் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்திய ரெயில்வேத்துறை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் பயணிகளின் பயண நேரத்தை குறைப்பதற்காக அதிவேக ரெயிலான வந்தே பாரத்தை அறிமுகம் செய்தது. குறிப்பிட்ட நிறுத்தங்களை கொண்ட இந்த ரெயிலால், பயணிகள் நேரம் மிச்சமானது. முதலில் 8 பெட்டிகளாக இயக்கப்பட்டு, படிப்படியாக பல்வேறு வழித் தடங்களில் 24 பெட்டிகள் வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த ரெயில்களுக்கு பயணிகள் இடையே அமோக வரவேற்பு ஏற்பட்டதால், ஸ்லீப்பர் ரெயிலை விட ரெயில்வேத்துறை முடிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதற்கட்ட பரிசோதனை நடைபெற்றது.
தற்போது வெர்சன் 2 என அழைக்கப்படும் 16 பெட்டிகள் கொண்ட ரெயிலை, பயணிகளுக்கு இணையாக எடையுடனும், எடை இல்லாமலும் 180 கி.மீ. வேகத்தில் இயக்கி பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தபட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா டிவிசனில் மேற்கு மத்திய ரெயில்வேஸ் இந்த சோதனையை செய்துள்ளது. ரோஹல்குர்த்- இந்திராகார்- கோட்டா பிரிவில் 100 கி.மீ. இடைவெளியில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
- இந்த காணொளியை சமூக ஊடகங்களில் பகிர்வதன் மூலம், தேசிய நிறுவனங்கள் சங் பரிவார அரசியலுக்கு எவ்வாறு இரையாகின்றன என்பதை ரயில்வே அதிகாரிகளே அம்பலப்படுத்தியுள்ளனர்.
- ஒரு காலத்தில் மதச்சார்பற்ற தேசியவாதத்தின் அடையாளமாக நின்ற ரயில்வே, இப்போது வகுப்புவாத சித்தாந்தத்தை விதைக்கும் ஒரு கருவியாக மாறி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை வாரணாசியில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படும் எர்ணாகுளம்–பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 4 புதிய வந்தே பாரத் ரெயில் சேவைகளை தொடங்கி வைத்தார். இ
இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பாடலை பாடிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் பிரதமர் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் பாடல் பாடப்பட்டதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "எர்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தொடக்க விழாவில் மாணவர்கள் ஆர்எஸ்எஸ் பாடலைப் பாடியதை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். ஒரு அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியில் வெறுப்பு மற்றும் வகுப்புவாத சித்தாந்தத்தை ஊக்குவிக்கும் ஒரு அமைப்பின் பாடலைச் சேர்ப்பது அரசியலமைப்பிற்கு விரோதமானது.
இந்த காணொளியை சமூக ஊடகங்களில் பகிர்வதன் மூலம், தேசிய நிறுவனங்கள் சங் பரிவார அரசியலுக்கு எவ்வாறு இரையாகின்றன என்பதை ரயில்வே அதிகாரிகளே அம்பலப்படுத்தியுள்ளனர்.
ஒரு காலத்தில் மதச்சார்பற்ற தேசியவாதத்தின் அடையாளமாக நின்ற ரயில்வே, இப்போது வகுப்புவாத சித்தாந்தத்தை விதைக்கும் ஒரு கருவியாக மாறி வருகிறது.
அனைத்து மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து இந்த ஆபத்தான செயலை எதிர்க்க வேண்டும்" என்று அழைப்பு விடுத்துள்ளார்.
- நான்கு புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூரு வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.
இந்தியாவின் நவீன ரெயில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை தொடர்ந்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு ரெயில் சேவை விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், பனாரஸ் ரெயில் நிலையத்திலிருந்து நான்கு புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பனாரஸ்–கஜுராஹோ, லக்னோ–ஷஹாரான்பூர், பிரோஸ்பூர்–டெல்லி மற்றும் எர்ணாகுளம்–பெங்களூரு வழித்தடங்களில் இயக்கப்படும்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூரு வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.
ரெயில் சேவைகளை தொடங்கி வைத்தபின் பனாரஸ்–கஜுராஹோ வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்து மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
- 3 தினசரி ரெயில் சேவைகளும், 4 வாராந்திர ரெயில்களும் இயக்கப்படுகின்றன.
- வந்தே பாரத் ரெயில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு இந்த பகுதியில் தனி சோதனைகள் மேற்கொள்ளப்படும்.
சென்னை:
ராமநாதபுரம் - ராமேசுவரம் இடையேயான 53 கி.மீ ஒற்றை அகல ரெயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில், சென்னை- ராமேசுவரம் இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை அறிமுகப்படுத்த தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.
சென்னை எழும்பூர் அல்லது தாம்பரத்தில் இருந்து புதிய பகல்நேர வந்தே பாரத் ரெயிலை இயக்குவதற்கான திட்டம் ரெயில்வே வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் பகல் நேரத்தில் ரெயில் சேவைகள் இயக்கப்படவில்லை.
இரவு நேர சேவையாக சேது சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், போட் மெயில் எக்ஸ்பிரஸ் உள்பட 3 தினசரி ரெயில் சேவைகளும், 4 வாராந்திர ரெயில்களும் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் வந்தே பாரத் ரெயில்கள் விடப்பட்டால் தற்போது ஓடும் ரெயில்களில் நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
ராமநாதபுரம் - ராமேசுவரம் இடையே 53 கி.மீ. நீளமுள்ள முழு ரெயில் பாதையும் இப்போது மின்சார என்ஜினை இயக்கும் வகையில் மின் மயமாக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் உச்சிப்புளி ரெயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பருந்து கடற்படை விமான நிலையத்திற்கு அருகில் மேல்நிலை மின்கேபிள்கள் இல்லாமல் சுமார் 220 மீட்டர் இடைவெளி காணப்பட்டது.
எனவே வந்தே பாரத் ரெயில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு இந்த பகுதியில் தனி சோதனைகள் மேற்கொள்ளப்படும்.
வந்தே பாரத் ரெயிலை இயக்குவதற்கான இறுதி பாதை இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அதேநாளில் ராமேசுவரத்தில் இருந்து மீண்டும் சென்னைக்கு ரெயிலை இயக்குவதற்கு, வந்தே பாரத் ரெயில் சென்னையில் இருந்து 8 மணி நேரத்திற்குள் ராமேசுவரத்தை அடைய வேண்டும். எனவே வழித்தடத்தை இறுதி செய்வதற்கு முன்பு பயண நேரம் மற்றும் பாதையின் தன்மை ஆகியவை ஆய்வு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 16 பெட்டிகளை கொண்ட ரெயிலாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் மாற்றப்பட்டது.
- பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ள நிலையில் 20 பெட்டிகளை கொண்ட 1440 பயணிகள் பயணிக்க கூடிய ரெயிலை இயக்கியது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
நெல்லை:
அதிநவீன சொகுசு வசதியுடனும் விரைவாக செல்லும் நோக்கிலும் நாடு முழுவதும் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டது. நெல்லை, சென்னை இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்தார்.
காலை 6.05 மணிக்கு நெல்லையில் புறப்பட்டு இந்த ரெயில் மதியம் 1. 40 மணியளவில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை சென்றடைந்து விடும்.
வழக்கமாக மற்ற அதிவேகமாக செல்லும் ரெயில்களான நெல்லை எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் போன்ற ரெயில்கள் கூட 10 மணி நேரத்தில் தான் சென்னையை சென்றடையும். ஆனால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் 7¾ மணி நேரத்தில் சென்றடைந்து விடும். இதன் காரணமாக இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு அதிகரித்தது. அதிநவீன வசதி அதிவேகம் உள்ளிட்ட காரணங்களால் பொது மக்களிடையே அதிக வரவேற்பை பெற்ற நிலையில் 16 பெட்டிகளை கொண்ட ரெயிலாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் மாற்றப்பட்டது.
தென்னக ரெயில்வேயில் அதிக வசூலை வழங்கக்கூடிய நிலையங்களாக இருக்கும் நெல்லை, மதுரை உள்ளிட்ட நிலையங்கள் இருக்கும் நிலையில் 16 பெட்டிகளுக்கும் கூடுதல் வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகும் பயணிக்க காத்திருப்போர் பட்டியல் இருப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமாகவே இருந்ததால் இந்த ரெயிலை 20 பெட்டிகளை கொண்ட புதிய ரெயிலாக மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதனை பரிசீலித்த ரெயில்வே நிர்வாகம் சென்னை ஐ.சி.எப்.இல். தயாரான புதிய 20 பட்டியலை கொண்ட காவி மற்றும் கிரே நிறத்திலான ரெயிலை நெல்லைக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக அனுப்பி வைத்தது. நெல்லை ரெயில் நிலையத்தின் வடக்கு பகுதியில் இந்த ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதன் அடிப்படையில் காலை 6.05 மணிக்கு நெல்லையில் இருந்து இந்த ரெயில் சென்னைக்கு புறப்பட்டது.
16 பெட்டிகள் கொண்ட ரெயிலாக இருக்கும்போது 1128 பயணிகள் இதில் அதிகபட்சமாக பயணித்த நிலையில் 20 பெட்டிகள் கொண்ட புதிய ரெயில் இயக்கப்படுவதால் பயணிகளின் எண்ணிக்கை 1440 ஆக உயரும்.
ஆயுத பூஜை, விஐயதசமி, தசரா திருவிழா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ள நிலையில் 20 பெட்டிகளை கொண்ட 1440 பயணிகள் பயணிக்க கூடிய ரெயிலை இயக்கியது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
- தற்போது 16 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. 1128 இருக்கைகள் உள்ளன.
- செப்டம்பர் 24ஆம் தேதி முதல் 1400 இருக்கைகளாக அதிகரிக்கும்.
ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் நெடுந்தூரத்தை குறுகிய காலத்தில் சென்றடையும் வகையில் இந்திய ரெயில்வே, வந்தே பாரத் ரெயிலை அறிமுகப்படுத்தியது. இதற்கு பயணிகள் இடையே அதிக வரவேற்பு உள்ளதால் வந்தே பாரத் ரெயில்களின் வழித்தடங்களை அதிகரித்த வண்ணம் உள்ளது.
திருநெல்வேலி (நெல்லை)- சென்னை எக்மோர்- திருநெல்வேலி வந்தே பாரத் ரெயில் (20666/20665) 16 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பெட்டிகளை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வந்தது.
இந்த நிலையில் வருகிற 24ஆம் தேதி முதல் இந்த ரெயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கக்பட்டு 20 பெட்டிகளுடன் இணைக்கப்படும். நான்கும் Chair Car பெட்டிகளாகும். இதன்மூலம் கூடுதலாக 312 இருக்கைகளை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏற்கனவே 1128 இருக்கைகள் என்ற நிலையில், தற்போது மொத்ம் 1440 இருக்கைகளாக அதிரிக்கப்பட்டுள்ளது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
ஆயுதபூஜை மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகள் வரக்கூடிய நேரத்தில் தெற்கு ரெயில்வேயின் இந்த அறிவிப்பு பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- செவ்வாய்க்கிழமை மட்டும் இந்த ரெயில் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகிறது.
- கூடுதல் பெட்டிகள் இணைப்புக்கு பயணிகளிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.
மதுரை:
மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து பெங்களூருவில் கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்துக்கு தினமும் வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந்தேதி முதல் நிரந்தர ரெயிலாக இயக்கப்பட்டு வருகிறது.
அதாவது, சென்னை ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தயாராகும் பெட்டிகளை கொண்டு நவீன வசதிகளுடன் கூடிய சொகுசு ரெயிலாக வந்தே பாரத் ரெயில் உள்ளது. பிற ரெயில்களை விட வந்தே பாரத் ரெயிலில் 3 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதே நேரத்தில் வந்தே பாரத் ரெயில்களின் தேவை அதிகரித்ததை தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரெயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைகளிலும் வந்தே பாரத் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன.
மதுரை-பெங்களூரு கண்டோன்மென்ட் வந்தே பாரத் ரெயிலில் 7 சேர்கார் வகுப்பு பெட்டிகளும், ஒரு எக்சிகியூடிவ் வகுப்பு பெட்டியும் இணைக்கப்பட்டு இருந்தன. இந்த ரெயில் மதுரையில் இருந்து தினமும் அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட் ரெயில் நிலையம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் பெங்களூருவில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.40 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. வாரந்தோறும் பராமரிப்பு பணிக்காக செவ்வாய்க்கிழமை மட்டும் இந்த ரெயில் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகிறது.
இந்த ரெயில் திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இந்த ரெயிலில் தற்போது கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. அதாவது, நாளை (வியாழக்கிழமை) முதல் 14 சேர்கார் வகுப்பு பெட்டிகளும், 2 எக்சிகியூடிவ் வகுப்பு பெட்டிகளும் இணைக்கப்பட்டு, 16 பெட்டிகளுடன் கூடிய ரெயிலாக இயக்கப்பட உள்ளது. இதற்கான ரெயில் பெட்டிகள் நேற்று கோழிக்கோடு ரெயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு கொண்டு வரப்பட்டன.
கூடுதல் பெட்டிகள் இணைப்புக்கு பயணிகளிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.
- நியூ டெல்லி- பாட்னா இடையே இயக்கப்பட வாய்ப்பு.
- 17 மணி நேர பயணம் 11.30 மணி நேரமாக குறையும்.
நாடு முழுவதும் முக்கியமான தடங்களில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் அமர்ந்து செல்லும் வசதி மட்டுமே உள்ளது. பயணிகளிடையே இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் தற்போது பெரும்பாலான ரெயில்களில் பெட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. படுக்கை வசதி (Sleeper) இருந்தால் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் விரைவில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் இருந்து பிரயாக்ராஜ் வழியாக பாட்னாவிற்கு 11.50 மணி நேரத்தில் சென்றடையும் வகையில் இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் விடப்பட இருக்கிறது. தீபாவளி பண்டிகையையொட்டி ரெயில் இயக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி- பாட்னா வழித்தடம் மிகவும் பரபரப்பாக இயங்கக்கூடிய வழித்தடமாகும். பண்டிகை காலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பீகார் மற்றும் உ.பி.யில் இருந்து டெல்லிக்கு செல்வார்கள். அதேபோல் டெல்லியில் இருந்து பீகார், உ.பி.க்கு செல்வார்கள்.
* பாட்னாவில் இரவு 8 மணிக்கு புறப்பட்டால், டெல்லியை அடுத்த நாளை காலை 7.30 மணிக்கு சென்றடையும். வழக்கமாக 12 மணி முதல் 17 மணி நேரம் ஆகும். அது 11.30 மணி நேரமாக குறைக்கப்படும்.
* ராஜ்தானி எக்ஸ்பிரஸ் கட்டணத்தை விட 10 முதல் 15 சதவீதம் வரை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* அதிகபட்சமாக 180 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும்.
* சிசிடிவி கேமரா, எல்இடி ஸ்கீரின்ஸ் உள்ளிட்ட வசதிகள் இருக்கும்.
- மதுரை- பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரெயிலில் வருகிற 11-ந்தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகிறது.
- வருகிற 9-ந்தேதி முதல் கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்பட்டு 20 பெட்டிகளுடன் இயக்கப்படும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு மதுரை- பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரெயிலில் வருகிற 11-ந்தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகிறது.
அதன்படி, மதுரையில் இருந்து பெங்களூருவிற்கும், பெங்களூருவில் இருந்து மதுரைக்கும் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலில் (வண்டி எண்-20671, 20672) வருகிற 11-ந்தேதி முதல் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு 16 பெட்டிகளுடன் இயக்கப்படும்.
அதே போல, மங்களூரு சென்டிரலில் இருந்து திருவனந்தபுரத்திற்கும், திருவனந்தபுரத்தில் இருந்து மங்களூரு சென்டிரலுக்கும் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலில் (20631, 20632) வருகிற 9-ந்தேதி முதல் கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்பட்டு 20 பெட்டிகளுடன் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பெட்டிகள் குறைவாக இருப்பதால் டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை என பயணிகளிடம் இருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
- 7 வழித்தடங்களில் கூடுதல் பெட்டிகளுடன் வந்தே பாரத் ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.
சென்னை:
நாடு முழுவதும் வந்தே பாரத் ரெயில்கள் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிவேக பயணம், விமான சேவைக்கு இணையான கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வந்தே பாரத் ரெயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. பெட்டிகள் குறைவாக இருப்பதால் டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை என பயணிகளிடம் இருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இந்த நிலையில், அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு 7 வழித்தடங்களில் கூடுதல் பெட்டிகளுடன் வந்தே பாரத் ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, ரெயில்வே வாரியத்தின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை செயல் இயக்குனர் தீலிப்குமார் கூறும்போது, "தற்போது, மங்களூரு சென்ட்ரல்-திருவனந்தபுரம் சென்ட்ரல், செகந்திராபாத்-திருப்பதி,
சென்னை எழும்பூர்-நெல்லை ஆகிய 3 வழித்தடங்களில் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்கள் 20 பெட்டிகளாகவும், மீதமுள்ள மதுரை-பெங்களூரு கான்ட், தியோகர்-வாரணாசி, ஹவுரா-ரூர்கேலா மற்றும் இந்தூர்-நாக்பூர் ஆகிய 4 வழித்தடங்களில் 8 பெட்டிகளுடன் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்கள் 16 பெட்டிகளாகவும் அதிகரிக்கப்படும்" என்றார்.
- ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரெயில் சேவையையும் அவர் தொடங்கி வைத்தார்.
- ஆர்.வி.ரோடு முதல் பொம்மசந்திரா வரை 19.15 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக மஞ்சள் நிற மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டது.
கர்நாடகாவில் புதிதாக 3 வந்தே பாரத் ரெயில்களை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இன்று காலை 10.30 மணியளவில் தனி விமானத்தில் பெங்களூரு வந்திறங்கிய பிரதமர் பெங்களூரு சிட்டி ரெயில் நிலயத்தில் ரெயில்களை தொடங்கி வைத்தார்.
இந்த வந்தே பாரத் ரெயில்கள் பெங்களூரூ - பெலகாவி, அம்ரிஸ்தர் - ஸ்ரீ மாதா வைஷ்ணோ கத்ரா, நாக்பூர் (அஜ்னி) - புனே வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.
இதேபோல் ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரெயில் சேவையையும் அவர் தொடங்கி வைத்து மாணவர்களுடன் அதில் பயணம் செய்தார். கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் உடன் இருந்தார்.
பெங்களூருவில் 76 கிலோ மீட்டர் தூரத்துக்கு, சல்லகட்டா முதல் ஒயிட்பீல்டு வரை ஊதா நிறப்பாதை, சில்க் நிறுவனத்தில் இருந்து மாதவரா வரை பசுமை நிறப்பாதை ஆகியவற்றில் மெட்ரோ இயங்கி வருகிறது.
இந்நிலையில் ஆர்.வி.ரோடு முதல் பொம்மசந்திரா வரை 19.15 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக மஞ்சள் நிற மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டது.
இந்த பாதையில் பிரதமர் மோடி பச்சை கொடி அசைக்க இன்று முதல் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது.
இதை தொடர்ந்து ஜே.பி.நகர் 4-வது பிளாக் முதல் கடபுகெரே வரையிலான 3ஆம் கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் மோடி, மதியம் 3 மணியளவில் மீண்டும் டெல்லிக்கு தனது தனி விமானத்தில் திரும்புவார்.






