search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vande Bharat"

    • சென்னை பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில் இந்த பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
    • படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரெயிலை மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    வந்தே பாரத் ரெயில் தற்போது 39 வழித் தடங்களில் பல்வேறு நகரங்களை இணைக்கும் வகை இயக்கப்படுகிறது. முற்றிலும் சேர்கார் பெட்டிகளாக அதாவது அமர்ந்து செல்லும் வகையில் மட்டுமே வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.

    தமிழகத்தில் சென்னை-கோவை, எழும்பூர்-நெல்லை, சென்னை-மைசூரு உள்ளிட்ட நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    வந்தே பாரத் ரெயில் படுக்கை வசதியுடன் தயாரிக்க ரெயில்வே துறை முடிவு செய்து அதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. சென்னை பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில் இந்த பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரெயிலை மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    முதலில் டெல்லி-மும்பை, டெல்லி-ஹவுரா, மற்றும் டெல்லி-பாட்னா போன்ற சில நகரங்களுக்கு இடையே இரவு நேர பயணங்களுக்காக இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    முதலில் 10 செட் வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்படும். மார்ச் மாதம் அறிமுகம் செய்வதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    ஆய்வுக்கு பிறகு ஏப்ரல் முதல் அல்லது 2-வது வாரத்தில் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறுகையில், "படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரெயில்கள் பாதுகாப்பு மற்றும் பல்வேறு வசதியுடன் தயாரிக்கப்படுகிறது. தரம் மற்றும் அதன் ஆயுட்காலம் சர்வதேச தரத்தில் இருக்கும்.

    அடுத்த சில ஆண்டுகளில் ஏற்றுமதி செய்யப்படும். படுக்கை வசதி பெட்டிகள் அனைத்தும் 'கவாச்' அமைப்புடன் பொறுத்தப்பட்டு இருக்கும்.

    மேலும் அதிகபட்சமாக மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும். ஒவ்வொரு ரெயிலும் 16 ஏ.சி. பெட்டிகளை கொண்டதாக இருக்கும். அதில் 850 படுக்கை வசதிகள் இடம் பெறும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பயணிகள் தங்களின் போக்குவரத்துக்காக பேருந்துகளும், ரெயில்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
    • மறு மார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.25 மணிக்கும் இயக்க முடிவு.

    பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

    பயணிகள் தங்களின் போக்குவரத்துக்காக பேருந்துகளும், ரெயில்களும் பயன்படுத்தி வருகின்றனர்.

    இதனால், பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்தே பாரத் சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, வந்தே பாரத் ரெயில் சென்னை எழும்பூரில் இருந்து நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தேதிகளில் காலை 5 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறு மார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.25 மணிக்கும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • ரெயிலில் பயணம் செய்த பயணிகள் செல்போனில் புகைப்படமும் எடுத்து கொண்டனர்.
    • கோவை-பெங்களூரு இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவை இன்று முதல் தொடங்கியது.

    கோவை:

    தமிழகத்தில் கோவை-சென்னை, நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    கோவை-சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலுக்கு கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்களிடம் வரவேற்பு காணப்பட்டது.

    கோவையில் இருந்து பெங்களூருவுக்கு தொழில் விஷயமாகவும், வேலைக்காகவும், படிப்பிற்காகவும் பலரும் சென்று வருகின்றனர்.

    எனவே கோவை-சென்னை வந்தே பாரத் ரெயில் போன்று கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதனை ஏற்று கோவை-பெங்களூருவுக்கு வந்தே பாரத் ரெயில் சேவை கடந்த 30-ந் தேதி தொடங்கப்பட்டது. இதனை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து இன்று முதல் கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கியது.

    அதன்படி இன்று காலை 5 மணிக்கு கோவையில் இருந்து பெங்களூருவுக்கு வந்தே பாரத் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயிலில் பயணிக்க அதிகாலையிலேயே முன்பதிவு செய்திருந்த பயணிகள் ரெயில் நிலையத்திற்கு வந்து காத்திருந்தனர்.

    ரெயிலில் பிளாட்பாரத்திற்கு வந்ததும், பயணிகள் அனைவரும் டிக்கெட் பரிசோதிக்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து பயணிகள் அனைவரும் தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்தனர்.

    இந்த ரெயிலில் பயணம் செய்வது வித்தியாசமாக இருந்ததாக தெரிவித்த பயணிகள் உற்சாகத்துடன் பயணம் மேற்கொண்டனர். ரெயிலில் உள்ள அனைத்து பெட்டிகளும் நிரம்பி வழிந்தது. ரெயில் புறப்பட்டதும், பயணிகளுக்கு ரெயில் நிர்வாகம் சார்பில் காபி மற்றும் திண்பண்டங்கள் வழங்கப்பட்டன.

    ரெயிலில் பயணம் செய்த பயணிகள் செல்போனில் புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

    கோவையில் இருந்து 5 மணிக்கு புறப்பட்ட ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி வழியாக காலை 11.30 மணிக்கு பெங்களூருவை சென்றடைந்தது.

    மறுமார்க்கமாக அங்கிருந்து 1.40 மணிக்கு புறப்படும் ரெயில் இரவு 8 மணிக்கு கோவையை வந்தடைய உள்ளது. கோவை-பெங்களூரு இடையேயான 380 கி.மீ தொலைவை 6 அரை மணி நேரத்தில் இந்த ரெயில் சென்றடைகிறது. இன்று முதல் தினமும் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளதால் கோவை பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கோவை-பெங்களூரு இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவை இன்று முதல் தொடங்கியது. காலை 5 மணிக்கே கோவையில் இருந்து வந்தே பாரத் ரெயில் புறப்பட்டு சென்று விட்டது.

    முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த ரெயிலில் சொகுசு பெட்டிகள், சிறப்பு சொகுசு பெட்டிகள் என 2 வகையான பெட்டிகள் உள்ளன.

    சொகுசு பெட்டியில் பயணிக்க ஒரு பயணிக்கு ரூ.940-ம், சிறப்பு சொகுசு பெட்டியில் பயணிக்க ஒரு நபருக்கு ரூ.1,860-ம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர ரெயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு காபி, திண்பண்டங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த ரெயில் 6 அரை மணி நேரத்தில் பெங்களூருவை சென்றடையும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • ரெயில் நெல்லையில் இருந்து எழும்பூருக்கு புறப்பட முடியாத நிலை இருந்ததால் ரத்து செய்யப்பட்டன.
    • நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் தொடர் மழையால் நடைமேடைகளில் வெள்ளம் புகுந்தது.

    சென்னை:

    தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருதால் ஒருசில இடங்களில் ரெயில்களை இயக்க முடியாத அளவிற்கு தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் தென் மாவட்ட பகுதிகளில் இருந்து ரெயில்கள் சென்னைக்கு இயக்க முடியவில்லை.

    இதே போல சென்னையில் இருந்து மதுரைக்கு மேல் ரெயில்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று பெரும்பாலான ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

    எழும்பூரில் இருந்து இன்று காலை 9.40 மணிக்கு கொல்லம் செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பகல் 3 மணிக்கு நெல்லைக்கு புறப்படக்கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் நெல்லையில் இருந்து எழும்பூருக்கு புறப்பட முடியாத நிலை இருந்ததால் ரத்து செய்யப்பட்டன.

    அதே போல மாலை 4.05 மணிக்கு புறப்படக்கூடிய திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்தாகிறது. இந்த ரெயில் திருச்செந்தூரில் இருந்து எழும்பூருக்கு வரவில்லை. அதனால் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் தொடர் மழையால் நடைமேடைகளில் வெள்ளம் புகுந்தது.

    20605 சென்னை எழும்பூர் - திருச்செந்தூர், 22628 திருவனந்தபுரம் - திருச்சிராப்பள்ளி எக்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    20636 கொல்லம் - சென்னை எழும்பூர் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில்  கொல்லத்தில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக திண்டுக்கல்லில் இருந்து புறப்படும். கொல்லம்-திண்டுக்கல் இடையே ரத்து செய்யப் பட்டுள்ளது.

    நேற்று புறப்பட்ட எழும்பூர்-கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் திண்டுக்கல், பொள்ளாச்சி வழியாக சென்று பாலக்காட்டில் நிறுத்தப்பட்டது.

    16127 சென்னை குருவாயூர் எக்ஸ்பிரஸ், 22627 திருச்சி திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், 16321 நாகர்கோவில்-கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ், 16846 நெல்லை ஈரோடு ஆகிய 4 ரெயில்கள் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    • புதிய ரெயில் 22 பெட்டிகளுடன் தயாராகி உள்ளது.
    • 12 தூங்கும் வசதியுடன் 2-ம் வகுப்பு பெட்டிகள், உட்கார்ந்து பயணம் செய்யும் வகையில் 12 பொதுப்பெட்டி இருக் கும்

    சென்னை:

    வந்தே பாரத் ரெயில் நாடுமுழுவதும் முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வருகின்றன. முழுவதும் ஏ.சி.யில் சொகுசு மற்றும் விரைவு பயணம் என்பதால் பயணிகள் மத்தியில் வந்தே பாரத்ரெயிலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

    தெற்கு ரயில்வேயில் சென்னை-கோவை, சென்னை-மைசூரு, சென்னை-விஜயவாடா, சென்னை-திருநெல்வேலி. திருவனந்தபுரம்-காசர்கோடு உள்ளிட்ட வழித் தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    இந்த நிலையில் வந்தே பாரத்ரெயில் போன்று ஏ.சி. இல்லாமல் குறைந்த கட்டணத்தில் விரைவு ரெயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து சென்னை ஐ.சி.எப்.பில் வந்தே பாரத் ரெயிலில் சில மாற்றங்களை செய்து ஆரஞ்சு நிறத்தில் 22 பெட்டிகளுடன் ரெயில் உருவாக்கப்படுகின்றன. முன்னும் பின்னும் 2 முனைகளிலும் என்ஜின்களுடன் இவை தயாரிக்கப்படுகிறது.

    ஒரே நேரத்தில் இந்த 2 என்ஜின்கள் இயங்குவதால் மணிக்கு 130 கி.மீட்டர் வேகத்தில் செல்லும். ஐ.சி.எப்.பில் தயாரான இந்த முதல் ரெயில் ஏற்கனவே மேற்கு ரெயில்வேக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இது மும்பை-அகமதாபாத் இடையே சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டு வருவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இந்த நிலையில் ஐ.சி.எப்.பில் 2-வது ரெயில் தயாராகி நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த ரெயில் வடகிழக்கு அல்லது வடக்கு மத்திய ரெயில்வே மண்டலத்திற்கு வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த புதிய ரெயிலுக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. எனினும் வந்தே பாரத் ரெயில் போன்று உள்ள இந்த ரெயிலுக்கு அம்ருத் பாரத் என்று வைக்கப்படும் என்று தெரிகிறது.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, இந்த புதிய ரெயில் 22 பெட்டிகளுடன் தயாராகி உள்ளது. மணிக்கு 130 கி.மீட்டர் வரை வேகமாக செல்லும். இதில் 12 தூங்கும் வசதியுடன் 2-ம் வகுப்பு பெட்டிகள், உட்கார்ந்து பயணம் செய்யும் வகையில் 12 பொதுப்பெட்டி இருக் கும். இந்த ரெயிலுக்கு இன்னும் முறைப்படி பெயர் வைக்கப்படவில்லை. எனினும் 'அம்ருத் பாரத்' என்று பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றார்.

    • முதல்முறையாக ஏறியதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
    • சமூக ஊடக தளமான எக்ஸ் இல், சீதாராமன், "கொச்சியிலிருந்து திருவனந்தபுரத்திற்கு சவாரி செய்கிறேன்" என கூறினார்.

    மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை கொச்சியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்.

    2022 செப்டம்பரில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட அரை அதிவேக ரெயிலில் தான் முதல்முறையாக ஏறியதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

    சமூக ஊடக தளமான எக்ஸ் இல், சீதாராமன், "கொச்சியிலிருந்து திருவனந்தபுரத்திற்கு #வந்தேபாரத்தில் சவாரி செய்கிறேன். வந்தே பாரத் செப்டம்பர் 2022 இல் @PMOIndia @narendramodi ஆல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு வருடத்திற்குப் பிறகு அதில் பயணிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது'' என பதிவிட்டுள்ளார்.

    • வந்தே பாரத் சிறப்பு ரெயில் வருகிற 16, 23, 30 ஆகிய தேதிகளில் எழும்பூரில் இருந்து புறப்பட்டு செல்லும்.
    • திருநெல்வேலியில் இருந்து அதே நாளில் புறப்பட்டு எழும்பூர் வந்து சேரும்.

    சென்னை:

    சென்னை எழும்பூர்-திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலுக்கு பொதுமக்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. செப்டம்பர் மாதம் 24-ந்தேதி தொடங்கப்பட்டது முதல் இதுவரையில் பயணிகள் முழு அளவில் பயணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலை குறைப்பதற்காக வந்தே பாரத் சிறப்பு ரெயில் சென்னையில் இருந்து 5 நாட்கள் இயக்கப்பட்டன.

    சிறப்பு ரெயில்களில் அனைத்து வகுப்புகளும் நிரம்பின. பயணிகள் ஆர்வத்துடன் பயணித்து வரும் நிலையில் தற்போது சபரிமலை சிறப்பு ரெயிலாகவும் வந்தே பாரத் இயக்கப்பட உள்ளது.

    சபரிமலை பக்தர்கள் ஐயப்பன் கோவிலுக்கு செல்ல வசதியாக வந்தே பாரத் சிறப்பு ரெயிலை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    சபரிமலைக்கு பக்தர்கள் இருமுடி கட்டி செல்வது வழக்கம். திருநெல்வேலியில் இருந்து செங்கோட்டை வழியாக செல்லும் வகையில் இந்த சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    இந்த சிறப்பு ரெயில் வியாழக்கிழமை தோறும் எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலிக்கு பகல் 2.15 மணிக்கு சென்றடையும். பகல் 3 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு எழும்பூர் வந்து சேரும்.

    வந்தே பாரத் சிறப்பு ரெயில் வருகிற 16, 23, 30 ஆகிய தேதிகளில் எழும்பூரில் இருந்து புறப்பட்டு செல்லும். திருநெல்வேலியில் இருந்து அதே நாளில் புறப்பட்டு எழும்பூர் வந்து சேரும்.

    இந்த ரெயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் நிலையங்களில் நின்று செல்லும். இதற்கான முன்பதிவு தொடங்கி உள்ளதாக தெற்கு ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி குகநேசன் தெரிவித்து உள்ளார்.

    • தற்போது இயங்கும் ரெயில்களில் அமரும் வசதி மட்டுமே உள்ளது
    • தமிழக நகரங்களுக்கு இடையே 2 ரெயில்கள் இயங்குகின்றன

    இந்தியாவில் உள்ள பல மாநிலங்களின் பல்வேறு நகரங்களை இணைக்கவும், மாநிலங்களிக்கு உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் வகையிலும் இந்தியன் ரெயில்வேயால் துவங்கப்பட்டது 'வந்தே பாரத்' ரெயில் சேவை.

    தற்போது பகல் நேர ரெயில் சேவையாக இருப்பதால், அமரும் வசதி மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்கள் மணிக்கு சுமார் 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

    எந்த அயல்நாட்டு தொழில்நுட்பத்தையும் நாடாமல், இந்த ரெயில்களின் கட்டமைப்பு 'மேக் இன் இந்தியா' திட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஐ.சி.எஃப். நிறுவனத்தாலேயே முழுவதும் வடிவமைக்கப்பட்டது இதன் மற்றொரு சிறப்பம்சம்.

    தற்போது வரை இந்தியா முழுவதும் 34 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கோவை-சென்னை வழித்தடத்திலும், திருநெல்வேலி-சென்னை வழித்தடத்திலும் என 2 ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    இந்நிலையில், படுக்கை வசதியுடன் வரப்போகும் வந்தே பாரத் ரெயில்களின் 'மாதிரி' வடிவங்களின் படங்களை இந்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார்.

    16 பெட்டிகளை கொண்ட இந்த ரெயிலில் பணியாளர்களுக்கு 34 படுக்கைகளும் பயணிகளுக்கு 823 படுக்கைகளும் என மொத்தம் 857 படுக்கைகள் இடம்பெறும். அதிர்வுகளை தாங்க கூடிய மேம்படுத்தப்பட்ட ஷாக் அப்சார்பர்கள், போதிய அளவு வெளிச்சத்திற்கான மின் விளக்குகள், இரண்டு படுக்கைகளுக்கு இடையே போதிய இடைவெளி, மேலே உள்ள படுக்கைகளுக்கு சுலபமாக ஏறும் வகையில் படிக்கட்டு வசதி என பயணிகளை ஈர்க்கும் வகையில் பல வசதிகள் இதில் உள்ளது.

    உயர் கட்டண பிரிவு ரெயில் சேவையான ராஜ்தானி விரைவுவண்டியில் உள்ள வசதிகளை விட இது சிறப்பாக இருக்கும் வகையில், இதன் வடிவமைப்பு திட்டமிடப்பட்டுள்ளது.

    அடுத்த வருடம் பிப்ரவரி மாதவாக்கில் சோதனை ஓட்டத்திற்கு இது விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • காவிரி டெல்டா ரெயில்வே உபயோகிப்பாளர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது.
    • இரட்டை அகல ரெயில்பாதை பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    காவிரி டெல்டா ரெயில்வே உபயோகிப்பாளர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது. சங்கத் தலைவர் அய்யானாபுரம் நடராஜன் அனைவரையும் வரவேற்றார்.

    கோரிக்கைகள் குறித்து சங்கத்தின் செயலாளர் வக்கீல் வெ.ஜீவக்குமார் விளக்க உரையாற்றினார்.

    இந்த கூட்டத்தில், தஞ்சாவூர்-விழுப்புரம் இடையே அனுமதிக்கப்பட்டுள்ள, இரட்டை அகல ரெயில்பாதை பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்.

    பட்டுக்கோட்டை- தஞ்சாவூர்-அரியலூர் புதிய ரெயில் பாதை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

    நவக்கிரக தலங்கள், சுற்றுலா தலங்கள் அதிகம் உள்ள தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக சென்னையிலிருந்து தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் புதிய வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்க வேண்டும்.

    சென்னையை போல், தஞ்சாவூர் ரெயில் நிலையங்களில் முதியோர்களை அழைத்துச் செல்லும் பேட்டரி காருக்கான கட்டணத்தை ரூ.30 லிருந்து ரூ.10 ஆக குறைக்க வேண்டும்.

    விரைவு ரெயில் என்ற பெயரில் கட்டணங்களை உயர்த்தியுள்ள ரயில்வே நிர்வாகம், கொரோனாவுக்கு முன்பு இயக்கப்பட்டது போல் பயணிகள் ரெயில் என்ற பெயரில் இயக்கி உயர்த்தப்பட்ட கட்டணங்களை குறைக்க வேண்டும்.

    தஞ்சாவூர் ரெயில் நிலையத்தில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளை தரமாக நடைபெற ெரயில்வே நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

    நடைபெறும் வேலைகள் குறித்து அறிவிப்பு பலகையை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் சங்க நிர்வாகிகள் கண்ணன், பேராசிரியர் திருமேனி, வக்கீல்கள் உமர்முக்தர், பைசல் அகமது, உழவர் செல்ல.கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • இரண்டு ரெயில்களுக்கும் நிறுத்தம் வழங்க வேண்டும் என்று தானே எம்.பி ராஜன் விச்சாரே கோரிக்கை விடுத்திருந்தார்.
    • சோதனை அடிப்படையில் தானே மற்றும் கல்யாணில் நிறுத்தங்கள் வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள சிஎஸ்எம்டியில் இருந்து ஷீரடி மற்றும் சோலாப்பூர் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் தானே மற்றும் கல்யாண் ரெயில் நிலையங்களில் நிறுத்தப்படும் என்று மத்திய ரெயில்வே அறிவித்துள்ளது.

    சிஎஸ்எம்டி- ஷீரடி சாய்நகர் வந்தே பாரத் ரெயில் தானே ஸ்டேஷனுக்கு காலை 6:49 மணிக்கு வந்து இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு புறப்படும். கல்யாண் ஸ்டேஷனுக்கு காலை 7:11 மணிக்கு நின்று, 7:13 மணிக்கு புறப்படும்.

    ஷீரடி சாய்நகர்- சிஎஸ்எம்டி ரெயில் தானே இரவு 10:06க்கு வந்து 10:08க்கு புறப்படும். கல்யாண் நிலையத்தில் இந்த ரெயிலின் வருகை மற்றும் புறப்படும் நேரம் முறையே 9:45 மற்றும் 9:47 ஆகும்.

    சிஎஸ்எம்டி- சோலாப்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தானே ரெயில் நிலையத்திற்கு மாலை 4:33க்கு வந்து 4:35 க்கு புறப்படும். கல்யாண் மாலை 4:53க்கு சென்றடையும், 4:55க்கு புறப்படும் என்று மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், சோலாப்பூர்- சிஎஸ்எம்டி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தானே நிலையத்திற்கு காலை 11:50 மணிக்கு வந்து 11:52 மணிக்கு புறப்படும்.

    தானே மாவட்டத்தைச் சேர்ந்த பயணிகள் இந்த அரை-அதிவேக ரெயில்களில் ஏற தாதர் அல்லது சிஎஸ்எம்டிக்கு செல்ல வேண்டியிருப்பதால், இரண்டு ரெயில்களுக்கும் நிறுத்தம் வழங்க வேண்டும் என்று தானே எம்.பி ராஜன் விச்சாரே கோரிக்கை விடுத்திருந்தார்.

    இந்நிலையில், சோதனை அடிப்படையில் தானே மற்றும் கல்யாணில் நிறுத்தங்கள் வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    • வந்தே பாரத் ரெயில் பெட்டியின் பேட்டரி பெட்டியில் தீப்பிடித்ததை அடுத்து செய்தியாளர்களுடன் சந்திப்பு.
    • வந்தே பாரத் ரெயில்களில் பயணிகளின் பாதுகாப்பு குறித்து எந்தக் கவலையும் இல்லை.

    வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தீ பாதுகாப்பு குறித்த அச்சத்தை ரயில்வே வாரியத் தலைவர் அனில் குமார் லஹோட்டி ஞாயிற்றுக்கிழமை நீக்கினார். இந்த அரை-அதிவேக ரெயில்கள் இந்த முன்பக்கத்தில் சிறந்த ஏற்பாடுகளைக் கொண்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

    இந்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள ரெயில் திட்டங்களை ஆய்வு செய்வதற்காக கூட்டப்பட்ட கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ரயில்வே வாரியத் தலைவர் அனில் குமார் லஹோட்டி இந்தூருக்கு வந்தார்.

    கடந்த 17ம் தேதி, மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் இருந்து புது தில்லி நோக்கிச் சென்ற வந்தே பாரத் ரெயில் பெட்டியின் பேட்டரி பெட்டியில் தீப்பிடித்ததை அடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

    இதுகுறித்து ரயில்வே வாரியத் தலைவர் அனில் குமார் லஹோட்டி கூறியதாவது:-

    வந்தே பாரத் ரெயில்களில் பயணிகளின் பாதுகாப்பு குறித்து எந்தக் கவலையும் இல்லை. இந்த ரெயில்களில் தீ தடுப்புக்கு மிகச் சிறந்த ஏற்பாடுகளும் உள்ளன.

    போபால்- டெல்லி வந்தே பாரத் ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து பேட்டரி பெட்டியில் மட்டும் எரிந்தது. நல்ல பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால், தீ பரவுவதற்கு முன்பே அணைக்கப்பட்டது.

    வந்தே பாரத் ரெயில்களின் டிக்கெட் கட்டணம் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக உள்ளது. ஆனால், அவற்றில் இருக்கைகள் 95 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருவனந்தபுரம்- காசர்கோடு வந்தே பாரத் ரெயில் மலப்புரம் மாவட்டத்தில் நிற்பதில்லை
    • பாலக்கோடு மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையத்தில் நின்று செல்கிறது

    இந்திய ரெயில்வே விரைவான பயணத்தை கருத்தில் கொண்டு வந்தே பாரத் ரெயில் திட்டத்தை தொடங்கியது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில் ஒரு குறிப்பிட்ட ரெயில் நிலையத்தில் மட்டுமே நின்று செல்லும். மேலும், வேகமாக செல்வதாக பயணிகள் நேரம் மிச்சமாகும். குறிப்பிட்ட ரெயில் நிலையத்தில் மட்டுமே நின்று செல்வதால் பெரும்பாலான பயணிகள் தங்களது சொந்த மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டத்திற்கு சென்று பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

    இப்படி ஒரு நிலை கேரளாவில் உள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோட்டிற்கு வந்தே பாரத் ரெயில் சேவை உள்ளது. இந்த ரெயில் பாலக்கோடு மாவட்டத்தின் ஷோர்னுர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும். ஆனால், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள திருர் ரெயில் நிலையத்தில் நிற்காது. இதனால் 56 கி.மீட்டர் பயணம் செய்து ஷோர்னுர் வர வேண்டியுள்ளது.

    இதனால் மலப்புரம் மாவட்டச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், வந்தே பாரத் ரெயிலை திருர் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல உத்தரவிட வேண்டும் என்று கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது என கேரள மாநில உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

    இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி சந்திரசூட், மனோஜ் மிஸ்ரா, நரசிம்மா ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, தலைமை நீதிபதி சந்திரசூட் ''வந்தே பாரத் ரெயில் எங்கு நிற்க வேண்டும் என்பதை நாங்கள் தீர்மானிக்க வேண்டும் என விரும்புகிறீர்களா?. அடுத்ததாக டெல்லி- மும்பை ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கும் நாங்கள் நிறுத்தம் குறித்து அட்டவணை வெளியிட வேண்டுமா?. இது கொள்கை அளவில் முடிவு எடுக்கும் விசயம். அதிகாரிகளிடம் செல்லுங்கள்'' என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பரிசீலனை செய்யும்படி அரசை கேட்டுக்காள்ள மனுதாரர் வலியுறுத்தினார். இந்த மனுவை நீதிமன்றம் விசாரிப்பதாக பார்த்தால், நான் அதில் தலையிடமாட்டோன் எனத் தெரிவித்தார்.

    மேலும், ''எந்தெந்த இடத்திற்கு நிறுத்தம் வழங்க வேண்டும் என்பது ரெயில்வே தீர்மானிக்க வேண்டியது. குறிப்பிட ரெயில் குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைக்க எந்தவொரு தனி மனிதருக்கும் உரிமை கிடையாது'' என கோர்ட் தெரிவித்தது.

    ×