4 வழித்தடத்தில் புதிய வந்தே பாரத் ரெயில் சேவை- பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

நான்கு புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூரு வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.
4 வழித்தடத்தில் புதிய வந்தே பாரத் ரெயில் சேவை- பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
Published on

இந்தியாவின் நவீன ரெயில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை தொடர்ந்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு ரெயில் சேவை விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், பனாரஸ் ரெயில் நிலையத்திலிருந்து நான்கு புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பனாரஸ்–கஜுராஹோ, லக்னோ–ஷஹாரான்பூர், பிரோஸ்பூர்–டெல்லி மற்றும் எர்ணாகுளம்–பெங்களூரு வழித்தடங்களில் இயக்கப்படும்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூரு வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.

ரெயில் சேவைகளை தொடங்கி வைத்தபின் பனாரஸ்–கஜுராஹோ வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்து மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். 

X

Maalai Malar
www.maalaimalar.com