என் மலர்
இந்தியா

படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயிலின் டிக்கெட் விலை விவரம் வெளியீடு
- அதன்படி 1520 ரூபாய், 1240 ரூபாய், 960 ரூபாய் என டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- ஆர்.ஏ.சி. அல்லது பகுதி அளவு உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் ஆகிய வசதி கிடையாது.
பிரதமர் மோடி வருகிற 17-ந்தேதி படுக்கை வசதி கொண்ட முதல் வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வகை்கிறார். இந்த ரெயில் கவுகாத்தி- கொல்கத்தா இடையே இயக்கப்பட இருக்கிறது.
ஏசி 1, ஏசி 2, ஏசி 3 வகுப்புகளை கொண்ட இந்த ரெயிலில் பயணம் செய்வதற்கான உத்தேச கட்டணத்தை ரெயில்வே அமைச்சர் கடந்த 1-ந்தேதி வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் இந்திய ரெயில்வே, டிக்கெட் விலை குறித்து அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி 1520 ரூபாய், 1240 ரூபாய், 960 ரூபாய் என டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆர்.ஏ.சி. அல்லது பகுதி அளவு உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் ஆகிய வசதி கிடையாது.
1 கி.மீ. தூரத்தில் இருந்து 400 கி.மீ. தொலைக்கு ஒரே விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 400 கி.மீ. தூரத்திற்கு குறைவான இடத்திற்கு பயணம் செய்ய வேண்டுமென்றாலும், முழுத் தொகையை செலுத்த வேண்டும்.
400 கி.மீ. தொலைவிற்குப் பிறகு ஒரு கி.மீ. தூரத்திற்கு 3 ரூபாய் அடிப்படையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
தற்போதைய அறிவுறுத்தல்களின்படி பெண்கள் ஒதுக்கீடு, மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீடு, மூத்த குடிமக்கள் ஒதுக்கீடு மற்றும் பணி அனுமதிச் சீட்டு ஒதுக்கீடு மட்டுமே இருக்கும். வேறு எந்த இட ஒதுக்கீடும் பொருந்தாது.






