search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்வாரியம்"

    • மருதம்புத்தூர் ஊராட்சியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன.
    • பருவமழையால் குளங்களுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.

    நெல்லை:

    ஆலங்குளம் யூனியன் மருதம்புத்தூர் ஊராட்சியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இந்த குளங்கள் மற்றும் கிணறுகள் மூலமாக இங்கு பாசனம் நடைபெற்று வருகிறது. சமீப காலமாக குளங்களுக்கு தண்ணீர் வரும் ஓடைகள் தூர்ந்து போன காரணத்தினால் தண்ணீர் ஓட்டம் தடைபட்டு கடந்த 2 ஆண்டுகளாகவே குளங்கள் வறண்டு காணப்படுகிறது.

    இந்நிலையில் இந்த ஆண்டு பெய்துவரும் வடகிழக்கு பருவமழையால் குளங்களுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. ஊருக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள ஊரடி குளம் என்றழைக்கப்படும் உருண்டைகுளத்திற்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த குளத்தின் வழியாக மின்கம்பங்கள் செல்கிறது.

    இதில் ஒரு மின்கம்பம் சரிந்த நிலையில், எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் நிலையில் இருந்து வருகிறது. அதனை சரிசெய்ய வேண்டும் என்று கடந்த சில மாதங்களாக பஞ்சாயத்து தலைவர் பூசத்துரை, ஒன்றிய கவுன்சிலர் சங்கீதா சுதாகர், உறுப்பினர் சேர்மன்ராஜா ஆகியோர் மின்வாரி யத்திற்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    ஆனால் இதுவரையிலும் மின்கம்பம் சரி செய்யப்படாத நிலையில், தற்போது குளத்தில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் மின்கம்பம் சரிந்து நீருக்குள் விழும் நிலை இருக்கிறது. அவ்வாறு சாய்ந்தால் குளத்தின் நீரில் மின்சாரம் பரவி விவசாயிகள், பொதுமக்கள், கால்நடைகளுக்கு பெரிய ஆபத்து நேரிடும் என்று அப்பகுதியினர் புகார் கூறுகின்றனர்.

    எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக அந்த குளத்திற்கு சென்று ஆய்வு செய்து, மின்கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனிடம் அந்த கிராம மக்கள் புகார் மனு அளிக்க முடிவு செய்துள்ளனர்.

    • ராமநாதபுரத்தில் மின்வாரியத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    • சென்னை தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    கீழக்கரை

    கீழக்கரை நுகர்வோர் நல சங்கத்தின் செயலாளர் செய்யது இப்ராகிம். இவர் ராமநாதபுரம் மாவட்ட மின் வாரிய பொது தகவல் அதிகாரிக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 6(1)-ன் கீழ் மின்வாரியம் சம்பந்தப்பட்ட கேள்விக்கு தகவல் பெற மனு அளித்தார்.

    ஆனால் அதற்கான பதில் ஏதும் வராத நிலையில் 26.01.2021 அன்று சென்னையில் உள்ள தகவல் ஆணையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். இந்த வழக்கு விசார ணைக்காக அவர் 2 முறை வீடியோ கான்ப்ரண்ஸ் மூலமும் 3 முறை ஆணையத்தின் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வந்தார்.

    இதன் தொடர்ச்சியாக விசாரணை முடிந்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்ட கேள்விக்கு தகவல் தராத ராமநாதபுரம் மாவட்ட மின் வாரியத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    மனுதாரர் செய்யது இப்ராஹிமுக்கு உடனடியாக அவரின் கேள்விக்கு பதிலளிக்கவும், உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உத்தரவின்படி, கீழக்கரை உதவி மின் பொறியாளர் ரூ.10 ஆயிரத்தை அபராத மாக செலுத்தினார்.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொன்னேரி கோட்டத் தலைவர் அருள்நாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் மதன் கலந்து கொண்டு கண்டன விளக்க உரையாற்றினார்.

    பொன்னேரி:

    பொன்னேரி கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சென்னை வடக்கு கிளை சி.ஐ.டி.யு. சார்பில் தமிழ்நாடு மின்வாரியத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்தும் இ-டெண்டர் முறையை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொன்னேரி கோட்டத் தலைவர் அருள்நாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் மதன் கலந்து கொண்டு கண்டன விளக்க உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஊழியர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • நாளை மின் தடை ஏற்படுகிறது.
    • இந்த தகவலை மின் செயற்பொறியாளர்கள் ஆறுமுகராஜ், வெங்கடேஸ் வரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    மதுரை

    மதுரை விக்கிரமங்கலம், சமயநல்லூர், உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது.

    அதன்படி விக்கிரமங் கலம், கோவில்பட்டி, வையத்தான், பாண்டியன் நகர், நரியம்பட்டி செக்கான் கோவில்பட்டி, கீழப்பெரு மாள்பட்டி, அய்யம்பட்டி. சக்கரப்பநாயக்கனூர், மேலபெருமாள்பட்டி, கோழிப்பட்டி, கிருஷ்ணா புரம். மணல்பட்டி, அரச மரத்துப்பட்டி, கல்புளிச் சான்பட்டி, நடுவூர், மலையூர், குளத்துப்பட்டி, கீழப்பட்டி, நடுமுதலைக்குளம், எழுவம் பட்டி, கொசவபட்டி, பூசாரிப்பட்டி, வடுகப்பட்டி, உடன்காட்டுப்பட்டி, கொடிக்குளம், பிரவியம் பட்டி, ஜோதிமாணிக்கம், மம்மூட்டிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். மறவர்பட்டி, சத்திரவெள்ளாளப்பட்டி, வலையப்பட்டி, ராமகவுண்டன்பட்டி, தெத்தூர், டி.மேட்டுப்பட்டி, கரடிக்கல் ஆகிய பகுதிகள்.

    அய்யனார்குளம், குறவ குடி, வின்னக்குடி, வாலாந் தூர், நாட்டாமங்கலம், விக்கிரமங்கலம், செல்லம்பட்டி, ஆரியபட்டி, சக்கிலி யங்குளம், சொக்கத்தேவன் பட்டி, குப்பணம்பட்டி மற் றும் அதனைச் சார்ந்த பகுதி களில் மின் தடை ஏற்படும்.

    இந்த தகவலை மின் செயற்பொறியாளர்கள் ஆறுமுகராஜ், வெங்கடேஸ் வரன் ஆகியோர் தெரிவித் துள்ளனர்.

    • வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு பழுதான மின்சாதனங்களை உடனுக்குடன் மாற்ற வேண்டும்.
    • களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு நெறிமுறைகளுடன் பணிபுரிய தொடர் பாதுகாப்பு வகுப்புகளை அந்தந்த பிரிவு அலுவலகத்தில் நடத்த வேண்டும்.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நகர்ப்புற கோட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் கே.டி.சி. நகரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

    புகார்களுக்கு உடனடி நடவடிக்கை

    நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் சந்திரசேகரன் கலந்துகொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க செயற்பொறியாளர் காளிதாசன் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    நிகழ்ச்சியில் நெல்லை நகர்ப்புற கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர். குறைதீர்க்கும் முடிந்தவுடன் மின் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் மேற்பார்வை மின் பொறியாளர் சந்திரசேகரன் பேசியதாவது:-

    வடகிழக்கு பருவமழை

    மின்துறை அமைச்சர் உத்தரவின் படி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய பணிகளான பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மின் விநியோகம் வழங்கும் மின் பாதையில் உள்ள மின்கம்பங்கள், மின்சாதனங்கள், முறையாக தொடர் ஆய்வு மேற்கொண்டு பழுதான மின் கம்பங்கள், தாழ்வான மின்பாதைகள், பழுதான மின்சாதனங்களை உடனுக்குடன் மாற்ற வேண்டும்.

    விவசாய மின் இணைப்பில் சுயநிதி அடிப்படையில் விவசாயிகள் மின் இணைப்பு வேண்டி விண்ணப்பம் அளித்தால் உடனடியாக ஆய்வு செய்து மின் இணைப்பு வழங்க வேண்டும். மின்வாரியத்திற்கு எந்த நிலையிலும் வருவாய் இழப்பீடு ஏற்படாமல் இருப்பதற்கு தொடர்ச்சியாக மின் இணைப்புகளை ஆய்வு செய்து மின்வாரிய விதிமுறை களுக்கு முரணாக இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருவாய் இழப்பீட்டை தடுக்க வேண்டும்.

    பணிகளை மேற்கொள்ளும் களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு நெறிமுறைகளுடன் பணிபுரிய தொடர் பாதுகாப்பு வகுப்புகளை அந்தந்த பிரிவு அலுவலகத்தில் நடத்த வேண்டும். நகர்ப்புற கோட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மேலும் மின் நுகர்வோர்கள் கேட்கின்ற வினாக்களுக்கு உரிய பதிலை கனிவுடன் தெரிவிக்க அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார். பொதுமக்கள் மின்சாரம் சம்பந்தமாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண் 94987 94987- ஐ தொடர்பு கொண்டு மின்சாரம் சம்பந்தமான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

    • மாநிலம் முழுவதும் பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும்.
    • நுகர்வோரின் வசதிக்காகவும், உரிய வருவாயை ஈட்டவும் பழுதடைந்த மீட்டர்கள் உடனடியாக மாற்றப்பட வேண்டும்.

    சென்னை:

    மின்வாரிய பொறியாளர்களுக்கு, தலைமை நிதிக்கட்டுப்பாட்டாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

    மாநிலம் முழுவதும் பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும்.

    நுகர்வோரின் வசதிக்காகவும், உரிய வருவாயை ஈட்டவும் பழுதடைந்த மீட்டர்கள் உடனடியாக மாற்றப்பட வேண்டும்.

    சென்னை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திருச்சி, நாகை ஆகிய 5 மாவட்டங்களில் 10,000-க்கும் அதிகமான மீட்டர்கள் பழுதடைந்து உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள பழுதடைந்த மீட்டர்களை மாற்றிய பின், அதுகுறித்த விவரங்களை மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாதம் ஐந்து கோடி ரூபாய் வீதம் செலுத்த அறிவுறுத்தல்
    • உள்ளாட்சி அமைப்புகள் மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்த வலியுறுத்தல்

    சென்னை மாநகராட்சி நிர்வாகம் ரூ.100 கோடி மின் கட்டணம் செலுத்தாமல் நிலுவை வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும, மாதம் ரூ.5 கோடி வீதம் 20 மாதங்கள் வரை கட்டண நிலுவைத் தொகையை செலுத்த மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், உள்ளாட்சி அமைப்புகள் மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் பாக்கி வைத்திருக்கும் தொகையை உரிய வழிமுறைகளை பின்பற்றி வசூலிக்கவும் முடிவு செய்துள்ளது.

    நீண்ட நாட்களாக பயனற்ற மின் இணைப்புகள், தேவையற்ற மின் இணைப்புகளை கண்டறிந்து துண்டிக்கவும் முடிவு செய்துள்ளது.

    • உதிரி பாகங்கள் வாங்க ஒப்புதல் பெறுவதில் ஏற்படும் தாமதத்தால் உரிய நேரத்தில் பணிகளை செய்ய முடியாமல் மின்வாரியம் தவித்து வருகிறது.
    • பல்லடம் மின் பகிர்மான வட்டத்தில் சுமார் 5 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன.

    பல்லடம்:

    பல்லடம், உதிரி பாகங்கள் வாங்க ஒப்புதல் பெறுவதில் ஏற்படும் தாமதத்தால் உரிய நேரத்தில் பணிகளை செய்ய முடியாமல் மின்வாரியம் தவித்து வருகிறது. இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-பல்லடம் மின் பகிர்மான வட்டத்தில் சுமார் 5 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன.இந்த நிலையில் புதிதாக விண்ணப்பிக்கப்படும் மின் இணைப்புகள் மற்றும் ஏற்கனவே உள்ள இணைப்புகள், சேதமடைந்த கம்பங்கள், கம்பிகள் பொருத்துவது என மின்சார உதிரி பாகங்களின் தேவை அதிகம் உள்ளது. கடந்த வருடத்தில், மாவட்ட முதன்மை பொறியாளர் அலுவலகங்கள் மூலம் மின் உதிரிபாகங்கள், உபகரணங்களை நாங்கள் பெற்று வந்தோம்.தற்போது ஆட்சி மாற்றத்துக்குப் பின் மின் கம்பி முதல் மின் கம்பம் வரை அனைத்துக்கும் சென்னை தலைமை அலுவலகத்துக்கு விண்ணப்பித்து பெற வேண்டிய நிலை உள்ளதால், உரிய நேரத்தில் மின் உதிரிபாகங்கள், உபகரணங்களை பெற முடியாமலும்,மேற்கொண்டுள்ள பணிகளும் தாமதமாகின்றன.இது பொதுமக்கள் மத்தியில் மின்வாரியம் மீது அதிருப்தியை ஏற்படுத்துகிறது.எனவே கடந்த காலத்தில் இருந்தது போலவே,மாவட்ட முதன்மை பொறியாளர் அலுவலகங்களிலேயே மின் உதிரிபாகங்கள், உபகரணங்கள், கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×