என் மலர்
நீங்கள் தேடியது "Minister Sivashankar"
- தமிழ்நாட்டில் மின்துறை சார்பாக சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற்றது.
- மின்மாற்றிகள் உள்ளிட்ட பொருட்கள் தேவையான அளவு இருப்பதை உறுதி செய்துள்ளோம்.
கனமழை தொடரும் நிலையில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், மின்சார தேவை மற்றும் உற்பபத்தி ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டோம்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மின்வாரியம் தயார் நிலையில் உள்ளது.
தமிழ்நாட்டில் மின்துறை சார்பாக சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற்றது.
மின்மாற்றிகள் உள்ளிட்ட பொருட்கள் தேவையான அளவு இருப்பதை உறுதி செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கடந்த ஆண்டில் தனியார் பஸ்கள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டது.
- தற்போது ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக தகவல் வந்துள்ளது.
கடலூர்:
கடலூரில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பொதுமக்கள் செல்வதற்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு 4 நாட்களும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் கூடுதலாக இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு மீண்டும் 3 நாட்கள் சென்னை மற்றும் பெருநகருக்கு செல்வதற்கு மற்றும் வருவதற்கும் கூடுதல் பஸ் வசதிகள் செய்யப்பட உள்ளது. கடந்த ஆண்டில் தனியார் பஸ்கள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் தனியார் பஸ்கள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட உள்ளது. இதன் மூலமாக அந்தந்த மாவட்டங்களில் இயங்குகின்ற பஸ்கள் கிராமப்புறம் செல்வதற்கும், குறைபாடுகள் இல்லாமல் இயக்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளபட்டு உள்ளது.
தற்போது ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக தகவல் வந்துள்ளது. அவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புதிய பஸ்கள் வாங்கி வருகின்றனர். அவர் அவர்கள் தனியாக ஆன்லைன் விண்ணப்பம் கொண்டு வந்துள்ளனர்.
ஏற்கனவே தனியார் ஆம்னி பஸ் சங்கத்தினர் கடந்த 2 ஆண்டுகளாக ஒத்துழைப்பு வழங்குவது போல் இந்தாண்டும் ஒத்துழைப்பு வழங்குகிறோம் என சங்க நிர்வாகிகள் உறுதி அளித்துள்ளனர்.
புதிதாக வருகிறவர்கள் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்து உள்ளோம். இது தொடர்பாக குழு அமைத்து தீவிர விசாரணை மற்றும் ஆய்வு மேற்கொள்ளப்படும். எந்த நிறுவனம் ஈடுபட்டாலும் நேரடியாக தகவல் கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அபராதம், மாதந்தோறும் வாகனங்கள் நிறுத்தி வைக்கக்கூடிய நிலை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் காலாவதியான வாகனங்கள் இயக்க முடியாது. ஒரு சில பஸ் உரிமையாளர்கள் விழா நாட்களில் மட்டும் ஒரு சில பஸ்கள் இயக்க நேரிடுகிறது. இதனையும் தொடர்ந்து கண்காணித்து கட்டுப்பாடு விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- அரசு பேருந்தில் பெயர் பலகை இல்லாமல் சென்ற ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அமைச்சர் சிவசங்கர் அறிவுரை வழங்கினார்.
- ஆம்னி பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஒலிபெருக்கி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளில் அதனை எடுக்குமாறு ஓட்டுனர்களிடம் அவர் அறிவுறுத்தினார்.
போக்குவரத்துத் துறை அமைச்சர் அவ்வப்போது திடீர் கள ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த முறை அரியலூர் அருகே ஆய்வில் ஈடுபட்ட அமைச்சர் சிவசங்கரை யார் என்று அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாமண்டூர் அடுத்து சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் பெயர் பலகை இல்லாமல் சென்ற ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அமைச்சர் சிவசங்கர் அறிவுரை வழங்கினார்.
ஆம்னி பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஒலிபெருக்கி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளில் அதனை எடுக்குமாறு ஓட்டுனர்களிடம் அவர் அறிவுறுத்தினார்.
- மின் கட்டண உயர்வு தொடர்பான எந்த ஆணையும் வெளியிடப்படவில்லை.
- 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட சலுகைகள் தொடரும்.
தமிழகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், " சமூக வலைத்தளங்களில் மின் கட்டணம் தொடர்பாக வதந்தி பரவி வருகிறது.
வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை.
மின் கட்டண உயர்வு தொடர்பான எந்த ஆணையும் வெளியிடப்படவில்லை.
100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட சலுகைகள் தொடரும்" என்றார்.
- லிப்ட் ஆபரேட்டரின் உதவியுடன் அமைச்சர், எம்.எல்.ஏ. மற்றும் உடனிருந்த அதிகாரிகள் உள்பட அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
- கலெக்டர் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்களில் உள்ள லிப்டுகளை பராமரிக்க செய்யுமாறு அமைச்சர் அறிவுறுத்தினார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பயன்படுத்தும் வகையில் லிப்ட் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் அதிக அளவில் பயனடைந்து வந்தனர்.
இந்நிலையில் கலெக்டர் அலுவலக வாளத்தில் உள்ள கூட்டரங்கில் பெரம்பலூரில் மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்குதல், கூட்டுறவுத் துறையின் மூலம் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ஆணை வழங்குதல் உள்ளிட்ட அரசு நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது.
இதில் பங்கேற்பதற்காக இன்று காலை போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ. பிரபாகரனும் உடனிருந்தார். இவர்கள் இருவரும் மேல் தளத்திற்கு செல்வதற்காக அங்கு இருந்த லிப்டில் ஏறி சென்றனர்.
அப்போது திடீரென லிப்டின் இயக்கம் தடைபட்டு நின்றது. இதனால் அவர்கள் வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கிக்கொண்டனர். இதனையடுத்து ஆபத்து மற்றும் அவசர கால கதவின் வழியே, சிக்கிக்கொண்ட அனைவரையும் வெளியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
சுமார் 30 நிமிடங்களாக நடந்த போராட்டத்திற்கு பின் லிப்ட் ஆபரேட்டரின் உதவியுடன் அமைச்சர், எம்.எல்.ஏ. மற்றும் உடனிருந்த அதிகாரிகள் உள்பட அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த நிலையில் கலெக்டர் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்களில் உள்ள லிப்டுகளை பராமரிக்க செய்யுமாறு அமைச்சர் அறிவுறுத்தினார். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகம் 30 நிமிடங்கள் பரபரப்பாக காணப்பட்டது.
- அரசுப் பேருந்துகள் எதுவும் நிறுத்தப்படவில்லை என போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்தார்.
- கட்டணமில்லா பயண திட்டம் பெண்களிடம் பெரும் ஆதரவை முதல்வருக்கு பெற்றுத் தந்துள்ளது என்றார்.
சென்னை:
பெண்களுக்கு இலவச பயணம் என அறிவித்து விட்டு பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
இந்நிலையில், எந்த அரசு பேருந்தும் நிறுத்தப்படவில்லை என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், தி.மு.க. ஆட்சி அமைந்தபின் தமிழகத்தில் எந்த அரசு பேருந்தும் நிறுத்தப்படவில்லை.
கட்டணமில்லா பயண திட்டம் பெண்களிடம் பெரும் ஆதரவை முதல்வருக்கு பெற்றுத் தந்துள்ளது.
கட்டணமில்லா பயண திட்டத்தில் இதுவரை 277.13 கோடி பயணங்களை பெண்கள் மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு ஓட்டுநர், நடத்துநர் கூட பணிக்கு எடுக்கவில்லை. அவர்களின் ஆட்சியில் நடைபெற்ற தவறை மறைக்க எடப்பாடி பழனிசாமி பொய் அறிக்கையினை வெளியிட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
- வாரத்தில் 7 நாட்களும் அதிகாலை 5.15 மணிக்கு கும்பகோணம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
- பயணிகள் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் மட்டுமே முன்பதிவு செய்து கொள்ளலாம்.
தஞ்சாவூா்:
பயணிகள் மற்றும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு ஏற்ப தமிழக அரசு சார்பில் கும்பகோணத்தில் இருந்து புறப்பட்டு ஒரே நாளில் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள நவக்கிரக தலங்களுக்கு ஒரே பஸ்சில் பயணம் செய்து எந்த ஒரு சிரமமும் இன்றி மீண்டும் கும்பகோணம் பஸ் நிலையத்தை வந்தடையும் வகையில் நவக்கிரக சிறப்பு சுற்றுலா பஸ் இயக்கம் கடந்த மாதம் 24-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றதையடுத்து வயதானவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க குளிர்சாதன வசதியுடன் (ஏ.சி.வசதி) கூடிய மேலும் கூடுதலாக ஒரு சிறப்பு சுற்றுலா பஸ் கும்பகோணம் போக்குவரத்து கழகம் சார்பில் வருகிற 25-ந் தேதி முதல் வாரத்தில் 7 நாட்களும் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இந்த பஸ்சில் நபர் ஒருவருக்கு ரூ.1350 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வாரத்தில் 7 நாட்களும் அதிகாலை 5.15 மணிக்கு கும்பகோணம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு நவகிரக தலங்களுக்கு சென்று இரவு 8 மணியளவில் மீண்டும் கும்பகோணம் பஸ் நிலையம் வந்தடையும்.
எனவே, இந்த பஸ்சில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் மட்டுமே முன்பதிவு செய்து பயணச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியும். நேரடியாக பஸ்சில் பயணச் சீட்டு பெற்றுக்கொள்ள முடியாது. மேற்கண்ட தகவல் கும்பகோணம் போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்க ப்பட்டுள்ளது.
- பா.ம.க. பிரமுகர் பிரபு மீது அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிரமுகர் சுதாகர் மீது வழக்கு பதிவு செய்து ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரியலூர்:
சிதம்பரம் மக்களவை தொகுதி தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. அரசியல் கட்சியினர் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சரும் அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளருமான எஸ்.எஸ்.சிவசங்கர் குறித்து முகநூலில் தவறான செய்தி வெளியிட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி தி.மு.க. வக்கீல் அன்பரசு கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதி, ஓலைப்பாடி கிராமத்தை சார்ந்த பா.ம.க. பிரமுகர் பிரபு மீது அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனை போல, தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து முகநூலில் தவறான செய்தி வெளியிட்டதாக தி.மு.க. வக்கீல் ராஜசேகர் கொடுத்த புகாரின் பேரில், அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கொலையனூர் கிராமத்தை சார்ந்த அ.தி.மு.க. பிரமுகர் திருமுருகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில் அனுமதி இல்லாமல் சுவர் விளம்பரம் செய்ததாக பெரிய கிருஷ்ணாபுரம் கிராம நிர்வாக அதிகாரி பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில், பள்ள கிருஷ்ணாபுரத்தை சார்ந்த அ.தி.மு.க. பிரமுகர் சுதாகர் மீது வழக்கு பதிவு செய்து ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வாணியம்பாடியில் இருந்து பெங்களூருக்கு தினசரி 45 பஸ்கள் 90 நடைகளில் இயக்கப்படும்.
- மலைப்பாதையாக உள்ளதால் கனரக பஸ்கள் இயக்க முடியாது.
சென்னை:
சட்டசபையில் கேள்வி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் பேசுகையில், வாணியம்பாடியில் இருந்து வெலதிகா மணிபெண்டா வழியாக பெங்களூரு, கோலார் தங்க வயல் மற்றும் சித்தூருக்கு பஸ்கள் இயக்க அரசு ஆவன செய்யுமா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:-
வாணியம்பாடியில் இருந்து பெங்களூருக்கு தினசரி 45 பஸ்கள் 90 நடைகளில் இயக்கப்படும்.
மேலும், வெலதிகாமணி பெண்டாகிராமம் தமிழக ஆந்திர மாநில எல்லையில் வருவதால் இரண்டு மாநிலத்திற்கு இடையே இயக்க ஒப்பந்தம் ஏற்பட்ட பின்பே பஸ்களை இயக்க முடியும். மலைப்பாதையாக உள்ளதால் கனரக பஸ்கள் இயக்க முடியாது. தற்போது வாணியம்பாடியில் இருந்து மினி பஸ் மட்டும் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னையில் தற்போது தாழ்தள பேருந்துகள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
- எச்.ராஜா தொடர்ந்து மக்களால் ஒதுக்கி தள்ளப்பட்டவர்.
அரியலூர்:
அரியலூரில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
போக்குவரத்து துறையின் மூலம் சென்னையில் தற்போது தாழ்தள பேருந்துகள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. மின்சார பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டர் முடிவுற்ற பிறகு மின்சாரப் பேருந்துகள் செயல்பாட்டிற்கு வர உள்ளது.
சென்னையில் கையடக்க கருவியோடு டிக்கெட் வழங்குகின்ற கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திலும் மற்ற போக்குவரத்துக் கழகங்களிலும் அடுத்தடுத்த கட்டங்களில் அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எங்களை போன்ற தொண்டர்கள் எல்லாம் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வராக வேண்டும் என்று காத்திருக்கிறோம்.
பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எச்.ராஜா தான் தமிழ்நாட்டுக்கு பெரும் தீங்கானவர். உதயநிதி செயல்பாட்டை மக்கள் அறிவார்கள். அதனால் தான் அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப்பேரவை உறுப்பினராகி அமைச்சராகி உள்ளார்.
ஆனால் எச்.ராஜா தொடர்ந்து மக்களால் ஒதுக்கி தள்ளப்பட்டவர். எடப்பாடி பழனிச்சாமி ஒரு அடிப்படை அரசியல் கூட தெரியாமல் முதல்வரானவர். நாணயம் வெளியீடு என்பது ஒரு அரசு விழா. அரசு விழா நடைபெறும் போது மத்திய அரசு, மாநில அரசு இணைந்து பங்கேற்புடன் நடைபெற்று உள்ளது.
தி.மு.க. சார்ந்த நிகழ்வுகள் நடைபெறும் போது அதில் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பது வழக்கமாக உள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி தனது முதுகை முதலில் பார்க்கட்டும். பிறகு மற்றவர்களை விமர்சிக்கட்டும். காய்ந்த மரம் கல்லடிபடும் என்ற அடிப்படையில் ஆளுங்கட்சியை எல்லோரும் விமர்சிப்பது வழக்கம்.
அதுபோல சீமான் விமர்சிக்கிறார். ஊடக வெளிச்சம் வர வேண்டும் என்பதற்காக தரக்குறைவான விமர்சனங்களை சொல்கிறார். அவர்களெல்லாம் மக்களால் ஒதுக்கி தள்ளப்படுவார்கள்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
- தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாட்டுப்பாடும் போட்டியில் கலந்து கொண்டு தனது மெல்லிசை குரலால் அனைவரையும் கவர்ந்தார்.
- செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனந்தமங்கலம் கிராமத்தில் தர்ஷினி மற்றும் பள்ளி மாணவர்களை இறக்கி விட்டார்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஒலக்கூர் அம்மணபாக்கம் கிராமத்தை சேர்ந்த ராஜசேகர்-அங்காளம்மாள் தம்பதியரின் மகள் தர்ஷினி.
இவர் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த மாதம் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாட்டுப்பாடும் போட்டியில் கலந்து கொண்டு தனது மெல்லிசை குரலால் அனைவரையும் கவர்ந்தார். நிகழ்ச்சியில் பேசிய மாணவி தர்ஷினி தான் படிக்கும் பள்ளிக்கு சென்று வர அம்மணபாக்கம்-அமந்தமங்கலம் வரை பஸ் போக்குவரத்து வசதி இல்லை என்றும், அரசு போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இது பற்றிய தகவலறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவியின் கோரிக்கையை ஏற்று உடனடியாக அம்மணபாக்கம்-அனந்தமங்கலம் பகுதியில் பஸ் போக்குவரத்து சேவையை வழங்க உத்தரவிட்டார்.
இதையடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் அம்மணபாக்கம்-அனந்தமங்கலம் இடையே இலவச பஸ் சேவையை 8-ம் வகுப்பு மாணவி தர்ஷினி முன்னிறுத்தி தொடங்கி வைத்தார்.
அந்த பஸ்சில் அமைச்சர் சிவசங்கர், மாணவி தர்ஷினியுடன் சென்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனந்தமங்கலம் கிராமத்தில் தர்ஷினி மற்றும் பள்ளி மாணவர்களை இறக்கி விட்டார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- தவறான வாதத்தை வைத்து ஒரு நாடகத்தை நடத்தியுள்ளார்.
- தி.மு.க.வுக்கு பாடம் நடத்துகின்ற தகுதி கவர்னருக்கு கிடையாது.
சென்னை:
அமைச்சர் சிவசங்கர் இன்று சட்டசபை வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டு மக்களையும், தமிழ்நாட்டு சட்டமன்றத்தையும் கவர்னர் அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டார். பாரம்பரியமாக தமிழ்நாடு சட்டசபையில் என்ன நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறதோ அதே நிகழ்வு தான் தொடர்ந்து நடைபெறுகிறது. அதை மாற்ற வேண்டும் என்ற முயற்சியில் கவர்னர் இருக்கிறார்.
அது நடக்காது என்ற காரணத்தினாலும், ஆளுனர் உரையை வாசித்தால் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை வரிசையாக அடுக்க வேண்டிய சூழல் வரும் என்கிற காரணத்தினாலும், இந்த அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கக் கூடாது என்கிற எண்ணத்தினாலும் தான் அவர் இன்று அப்படி நடந்து கொண்டார்.
59 பக்கத்துக்கு கவர்னர் உரை தமிழக அரசின் சாதனைகளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் சாதனைகளை முழுவதுமாக விவரிக்கின்ற வகையில் இருக்கிறது. அதை படிப்பதற்கு தயங்கிக் கொண்டுதான் இன்றைக்கு இந்த நாடகத்தை நடத்தி இருக்கிறார்.
கடந்த முறை தமிழ்நாட்டின் தலைவர்களின் பெயரை சொல்லாமல் மறைத்தவர் இன்றைக்கு ஒட்டு மொத்தமாக கவர்னர் உரையை புறக்கணித்து சென்றுள்ளார். அதற்கு அவர் சொல்ல இருக்கின்ற காரணம் தேசிய கீதம் பாடப்படவில்லை, நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன் என்று சொல்கிறார்.
ஏதோ தேச பக்திக்கு ஒட்டு மொத்த குத்தகை அவர்தான் என்பது போல் அவர் கூறுகிறார். தேச பக்தியில் தமிழக மக்களை மிஞ்ச முடியாது.
இந்த தேசத்திற்காக தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் பலரும் சுதந்திர போராட்டத் தில் ஈடுபட்டு தங்கள் உயிரை அர்ப்பணித்து இருக்கிறார்கள். இவருக்கு முன்பாக இருந்த கவர்னர்கள் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு தியாகி என்று அழைக்கப்படுகிற நிலையில் கவர்னராக இருந்திருக்கிறார்கள்.
சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காங்கிரஸ் முதலமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் யாரும் இந்த கூற்றை முன்வைக்கவில்லை. ஏதோ இவருக்கு மட்டும்தான் தேச பக்தி வந்தது போல தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என்று சொல்கிறார்.
இதுவரை எத்தனை கவர்னர்கள் இருந்திருக்கிறார்கள், எத்தனை முதலமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள், அவர்களுக்கெல்லாம் இந்த எண்ணம் கிடையாதா? தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடி விட்டுத்தான் அவை முடிகின்றபோது தேசிய கீதத்தை பாடுவது இயல்பாக இருந்தது.
இன்றைக்கும் அப்படித்தான். இன்றைக்கு தமிழ்த்தாய் வாழ்த்து தொடங்கி கவர்னர் உரையை தமிழில் அவைத் தலைவர் வாசித்த பிறகு இறுதியாக தேசிய கீதம் பாடப்பட்டு அதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் உள்பட அனைவரும் எழுந்து நின்று முறையாக அதற்குரிய மரியாதையை செலுத்தினார்கள்.
எனவே தேசிய கீதத்துக்கு தமிழ்நாடு மக்கள் எந்த வகையிலும் அவமரியாதை செய்பவர்கள் கிடையாது. தமிழ்நாடு சட்டசபை அவமரியாதை செய்வது கிடையாது.
எனவே இந்த தவறான வாதத்தை வைத்து ஒரு நாடகத்தை நடத்தியுள்ளார். இதற்காக கவர்னர் மன்னிப்பு கேட்க வேண்டும். எங்கள் முதலமைச்சருக்கோ, தி.மு.க.வுக்கோ பாடம் நடத்துகின்ற தகுதி கவர்னருக்கு கிடையாது.
தேசிய கீதத்தை அவமதித்ததே கவர்னர் தான். தேசிய கீதம் பாடுகின்ற வரை இருக்காமல் உடனடியாக அவர் வெளிநடப்பு செய்துள்ளார். கடந்த முறையும் இதைத்தான் செய்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.






