என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "North East Monsoon"
- மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நிறுத்தி வைக்குமாறு கடிதம் அனுப்பப்படுகிறது.
- ஒப்புதல் பெற்ற பின்னரே அனுமதி அளிக்கப்படும் என்றும் உத்தரவு.
சென்னையில் சாலையை தோண்டும் பணிகளை நிறுத்தி வைக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவ மழையை முன்னிட்டு பல்வேறு சேவை துறைகளாகிய சென்னை பெருநகர குடி நீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றும் வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம், நகர்ப்புர எரிவாயு பகிர்ந்தளிக்கும் நிறுவனங்கள், கண்ணாடி இழை வடங்கள் பதிக்கும் நிறுவனங்கள் மூலமாக மண்டலம் 1 முதல் 15 வரையிலான பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை வெட்டுகள் அனைத்தும் 20.09.2023 அன்றுடன் நிறுத்தி வைக்கப்படுகிறது என்று பெருநகர சென்னை மாநகராட்சியின் கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையாளர் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து அனைத்து சேவை துறைகளுக்கும், நகர்ப்புர எரிவாயு பகிர்ந்தளிக்கும் நிறுவனங்களுக்கும் மற்றும் கண்ணாடி இழை வடங்கள் பதிக்கும் நிறுவனங்களுக்கும் சாலை வெட்டு பணியை 21.09.2023 முதல் மறு உத்தரவு
பிறப்பிக்கும் வரை நிறுத்தி வைக்குமாறு கடிதம் அனுப்பப்படுகிறது.
மேலும் இக்காலங்களில் அவசர தேவைகளுக்கு மட்டும் சாலை வெட்டு மேற்கொள்ள இணை ஆணையர் (பணிகள்), வட்டார துணை ஆணையர்கள் (வடக்கு, மத்தியம், தெற்கு) அவர்களின் மூலமாக கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையாளர்
அவர்களின் ஒப்புதல் பெற்ற பின்னரே அனுமதி அளிக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
- கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் உள்ள அரங்கம் மற்றும் அணுசக்தி மைதானத்தில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்டு படையினர் ஒத்திகை பயிற்சி அளித்தனர்.
- கால்நடைகளை அப்புறப்படுத்துவது, மருத்துவ குழுவின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு ஒத்திகை பயிற்சிகள் நடத்தப்பட்டது.
மாமல்லபுரம்:
நாளை வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, செங்கல்பட்டு மாவட்ட அனைத்துத்துறை அதிகாரிகளுக்கு நேற்றும், இன்றும் கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் உள்ள அரங்கம் மற்றும் அணுசக்தி மைதானத்தில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்டு படையினர் ஒத்திகை பயிற்சி அளித்தனர்.
இப்பயிற்சியில் கனமழையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மக்களை உடனடியாக மீட்பது, கடலில் பூகம்பம் ஏற்பட்டு சுனாமி வந்தால் மீனவர்களை எப்படி காப்பாற்றுவது, கால்நடைகளை அப்புறப்படுத்துவது, மருத்துவ குழுவின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு ஒத்திகை பயிற்சிகள் நடத்தப்பட்டது.
இதற்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் நவீன கருவிகள், மீட்பு சாதனங்கள், பாதுகாப்பு உடைகள், தொலைதொடர்பு ராடர்கள் போன்றவைகளை கொண்டு வந்திருந்தனர்.
- நெல்லை மாநகராட்சி பகுதி அரசு தொடக்கப்பள்ளிகளில் முதல் கட்டமாக 22 பள்ளிகளில் தமிழக அரசின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
- மேலப்பாளையம் மண்டல அலுவலக உணவு கூடத்தில் காலை உணவு தயாரிக்கப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் எடுத்து செல்லப்படுகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அபூர்வா ஐ.ஏ.எஸ். மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி குறித்து நேற்று ஆய்வு செய்தார்.
2-வது நாளாக ஆய்வு
இந்நிலையில் 2-வது நாளாக இன்று ஆய்வு மேற்கொண்டார். நெல்லை மாநகராட்சி பகுதி அரசு தொடக்கப்பள்ளிகளில் முதல் கட்டமாக 22 பள்ளிகளில் தமிழக அரசின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக மேலப்பாளையம் மண்டல அலுவலக உணவு கூடத்தில் காலை உணவு தயாரிக்கப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் எடுத்து செல்லப்படுகிறது. இதனை இன்று கண்காணிப்பு அதிகாரி அபூர்வா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, ஆர்.டி.ஓ. சந்திரசேகர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது உணவின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்து கண்காணிப்பு அதிகாரி அபூர்வா ஆய்வு செய்தார். தொடர்ந்து பாளை பெருமாள்புரம் தபால்நிலையம் அருகே உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவினை ஆய்வு செய்த கண்காணிப்பு அதிகாரி அதனை சாப்பிட்டு பார்த்து தரம்குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை மாநகராட்சி பகுதியில் 22 பள்ளிகளில் காலை உணவு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இங்கு ஆய்வு செய்ததில் மாணவர்களுக்கு தரமான உணவுகள் வழங்கப்படுவது தெரியவந்தது. மேலும் மாணவர்களுக்கு காலையில் சரியான நேரத்திலும் தரமான உணவுகள் வழங்கப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மழையால் ஏற்படும் சேதங்களை விட தாமிரபரணி ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கி னால்தான் அதிக சேதாரங்கள் ஏற்படும். இதனால் தாமிரபரணி கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.
மேலும் வெள்ளம் பாதிக்காத அளவு தற்போது தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. நெல்லையில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளது. பேட்டை அருகே உள்ள திருப்பணிகரிசல்குளம் கால்வாய் தூர்வாரப்பட்டுள்ளதால் வெள்ளநீர் தேங்காமல் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னேற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தடுக்க கால்வாய்களில் பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை வீசுவதை பொதுமக்கள் தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.
- வண்ணார்பேட்டையில் மழை நீர் வடிகால்களில் ஏற்பட்டுள்ள அடைப்பு கண்டறியப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டது.
நெல்லை:
தமிழகம் முழுவதும் இந்த மாதம் கடைசி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாநகர பகுதியிலும் மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின்பேரில் 4 மண்டலங்களிலும் வாறுகால் அடைப்புகள் சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
தச்சை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் உதவி கமிஷனர் வெங்கட்ராமன் அறிவுறுத்தலின்படி சுகாதார அலுவலர் (பொறுப்பு) இளங்கோ தலைமையில் மழைக்கால முன்னேற்பாடு பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த பணியில் ஜேசிபி எந்திரம் மற்றும் 10-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு பெரிய சாக்கடை ஓடைகளில் மரம், செடி கொடிகள் ஆகியவைகள் ஆக்கிரமித்து இருப்பதை கண்டறிந்து அப்புறப்படுத்தினர்.
மேலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மழை நீர் வடிகால்களில் ஏற்பட்டுள்ள அடைப்பு கண்டறியப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் கடந்த 1-ந்தேதி வடக்கிழக்கு பருவமழை தொடங்கியது.
அன்று முதல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கணிசமான அளவுக்கு மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் வங்க கடலின் தென்மேற்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இது வலுப்பெற்று வருவதால் கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கிறது.
குறிப்பாக தென் மாவட்டங்களில் பருவமழை அதிகமாக பெய்து வருகிறது. கடந்த 2 தினங்களாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்தது. இன்றும் தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. எனவே இந்த சீசனில் தமிழ்நாட்டில் ஓரளவு மழை பெய்யும்.
வங்க கடலில் இலங்கை அருகே உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் 7-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை மிக பலத்த மழை பெய்யும். எனவே இந்த கால கட்டங்களில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கடலோர மாவட்டங்களில் மழை விட்டு விட்டு பெய்யும். சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #IMD #TNRain #Northeastmonsoon
நெல்லை:
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மிதமான மழை பெய்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை குறைந்து வெயில் அடிக்க தொடங்கியது.
எனினும் அதிகாலை வேளையில் கடும் பனிப்பொழிவும் உண்டானது. இந்த நிலையில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதால் தமிழகம் முழுவதும் மழை பெய்ய தொடங்கியது. நெல்லை, தூத்துக்குடி மாவட் டங்களில் கனமழை பெய்து வருகிறது.
நேற்று இரவில் தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மிக பலத்த மழை பெய்தது. குறிப்பாக மணி முத்தாறு, பாபநாசம், குற்றாலம் மலைப்பகுதியில் கன மழை கொட்டி தீர்த்தது.
மணிமுத்தாறு அணைப் பகுதியில் வரலாறு காணாத மழை பெய்தது. இந்த பகுதியில் அதிகபட்சமாக 286 மில்லிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதனால் அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 877 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதனால் மணிமுத்தாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து இன்று 89.40 அடியாக உள்ளது. பாபநாசம் மலைப்பகுதியிலும் வழக்கத்தை விட அதிக மழை பெய்தது. இங்கு 160 மில்லி மீட்டர் மழை கொட்டியது. கனமழை காரணமாக அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 748 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக் கிறது. இதனால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்து இன்று 105.60 அடியாக உள்ளது.
குற்றாலம் மலைப்பகுதியிலும் கன மழை பெய்தது. குற்றால சீசனுக்கு பின்னர் சமீபத்தில் பெய்த மழையினால் அருவிகளில் மிதமான அளவு தண்ணீர் விழுந்தது. பின்பு மழை நின்றதால் அருவில் தண்ணீர் குறைந்தது. இந்த நிலையில் நேற்று இரவில் இருந்து இப்பகுதியில் கன மழை பெய்ய தொடங்கியது.
இதனால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாதுகாப்பு வளைவையும் தாண்டி தண்ணீர் கொட் டியதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட வில்லை. நெல்லையில் பெய்த மழையினால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.
விடிய விடிய மழை தூறிக்கொண்டே இருந்ததால் குளிர்ந்த கால நிலை நிலவியது. களக்காடு பகுதியில் கன மழை பெய்தது. இதனால் ஓடைகள், கால்வாய் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
மணிமுத்தாறு-286, பாபநாசம்-160, நம்பியாறு-125, சேரன்மகாதேவி-60, சேர்வலாறு-60, நாங்கு நேரி-57, கொடுமுடியாறு-50, ராதாபுரம்-40, செங் கோட்டை-40, சங்கரன் கோவில்-32, அம்பை-31, குண்டாறு-31, ராமநதி-30, கடனாநதி-27, தென்காசி-22, பாளையங்கோட்டை-11.2, ஆய்க்குடி-10.4, நெல்லை-9.6, சிவகிரி-9, கருப்பாநதி-8, அடவிநயினார்-7,
தூத்துக்குடி மாவட்டத்திலும் நேற்று இரவு பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. குறிப்பாக சாத்தான்குளம், குலசேகரப்பட்டினம், திருச்செந்தூர் பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக சாத்தான்குளத்தில் ஒரே நாளில் 219 மில்லி மீட்டர் மழை பதிவானது. குலசேகரப் பட்டினத்தில் 195 மில்லி மீட்டர் மழையும், திருச்செந்தூரில் 112 மில்லி மீட்டர் மழையும் பதிவானது.
தூத்துக்குடியில் மிதமான மழை பெய்தது. ஸ்ரீவை குண்டம், மணியாச்சி பகுதியில் கனமழை பெய்தது. கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. தொடர்ந்து இன்று காலையும் மழை பெய்து கொண்டே இருந்ததால் தூத்துக்குடியில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை வரை பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
சாத்தான்குளம்-219, குலசேகரப்பட்டினம்-195, திருச்செந்தூர்-112, காயல்பட்டினம்-78.4, ஸ்ரீவைகுண்டம்-70, மணியாச்சி-70, ஓட்டப்பிடாரம்-45, கடம்பூர்-19, காடல்குடி-12, கழுகுமலை-10, தூத்துக்குடி-8.6, வைப்பாறு-7, கயத்தாறு-7, வேடநத்தம்-7, எட்டயபுரம்-3, கோவில்பட்டி-3
பாபநாசம்-105.60 அடி
சேர்வலாறு-112.01
மணிமுத்தாறு-89.40
கடனா-67.80
ராமநதி-62.
கருப்பாநதி-69.23
குண்டாறு-36.10
வடக்கு பச்சையாறு-21.50
நம்பியாறு-22.53
அடவிநயினார்-108.75 . #northeastmonsoon #heavyrain
தமிழகத்தையொட்டி தென்கிழக்கு மற்றும் அதனையொட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒருசில இடங்களில் கனமழை பெய்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெரிய குளத்தில் 16 செ.மீ. மழை பெய்துள்ளது. கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் 10 செ.மீ., மழை, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 6 செ.மீ., சங்கரன்கோவிலில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர், மேட்டுப்பாளையம், சிதம்பரம், தக்கலை ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ., கழுகுமலை, விருதுநகர், நாகர்கோவில், திருச்செங்கோடு, ராஜபாளையம், போடி, மணியாச்சியில் தலா 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
தென்மேற்கு பருவ மழை வடநாட்டின் பல பகுதிகளில் வாபஸ் ஆகிவிட்ட நிலையில் எஞ்சியுள்ள ஒருசில இடங்களில் இன்று விலகிக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
24 மணி நேரத்தில் அதன் பிறகு வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதற்கிடையே தாய்லாந்து வளைகுடாவில் நிலவும் மேலடுக்கு சுழற்சியானது. வடக்கு அந்தமான் கடல் வரை பரவி இணைந்துள்ளது.
இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்தம் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. #Northeastmonsoon
வடகிழக்கு பருவமழை முன்ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க பயன்படுத்தப்படும் “வயர்லெஸ்” கருவிகளை போலீசார் தயார் நிலையில் வைத்திருப்பது அவசியம் ஆகும். தண்ணீர் தேங்க வாய்ப்புள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு ஏற்ற பள்ளி கட்டிடங்கள், அங்கன்வாடி மையங்கள், சமுதாய கூடங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
ஆறுகளில் நீர் வரத்தை கண்காணிக்க அந்தந்த பகுதிகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டும். இந்த கட்டுப்பாட்டு அறையில் அனைத்து தகவல் தொடர்பு கருவிகளையும் வைத்திருக்க வேண்டும்.
ஒவ்வொரு நாளும் நீர்வரத்து, வெளியேற்றப்படும் நீர் அளவு குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஆறுகள், வாய்க்கால் கரைகளின் உடைப்பு ஏற்பட்டால் அதனை அடைப்பதற்கு போதுமான மணல் மூட்டைகளை தயாராக வைத்திருக்க வேண்டும்.
திருவாரூர் மாவட்டத்தில் 214 தாழ்வான இடங்கள் கண்டறியப்பட்டு அலுவலர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மண்டல அளவில், வட்டார அளவில் அலுவலர்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் வடக்கிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன், மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்