என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "North East Monsoon"

    • இன்று அதிகாலை 5.30 மணிக்கு இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
    • அக்டோபர் 25ம் தேதி அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையும்.

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு 2-வது காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவானது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் நிலை கொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

    இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு- வடமேற்கு நோக்கி நகர்ந்து அக்டோபர் 25ம் தேதி அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது அக்டோபர் 26ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 27ம் தேதி அன்று புயலாக மாற வாய்ப்புள்ளதாவும் கூறப்பட்டுள்ளது.

    • வங்கக் கடல் பகுதியில் இன்று அதிகாலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
    • மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு 2-வது காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவானது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் நிலை கொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

    இது மேற்கு- வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

    வருகிற 26-ந்தேதி அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. மறுநாள் 27-ந்தேதி காலையில் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.

    இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதேபால், சிவகங்கை, தென்காசி, திருவள்ளூர், தூத்துக்குடி, நெல்லை மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டில் மின்துறை சார்பாக சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற்றது.
    • மின்மாற்றிகள் உள்ளிட்ட பொருட்கள் தேவையான அளவு இருப்பதை உறுதி செய்துள்ளோம்.

    கனமழை தொடரும் நிலையில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:-

    வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், மின்சார தேவை மற்றும் உற்பபத்தி ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டோம்.

    வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மின்வாரியம் தயார் நிலையில் உள்ளது.

    தமிழ்நாட்டில் மின்துறை சார்பாக சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற்றது.

    மின்மாற்றிகள் உள்ளிட்ட பொருட்கள் தேவையான அளவு இருப்பதை உறுதி செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நெல்லை மாநகராட்சி பகுதி அரசு தொடக்கப்பள்ளிகளில் முதல் கட்டமாக 22 பள்ளிகளில் தமிழக அரசின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
    • மேலப்பாளையம் மண்டல அலுவலக உணவு கூடத்தில் காலை உணவு தயாரிக்கப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் எடுத்து செல்லப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அபூர்வா ஐ.ஏ.எஸ். மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி குறித்து நேற்று ஆய்வு செய்தார்.

    2-வது நாளாக ஆய்வு

    இந்நிலையில் 2-வது நாளாக இன்று ஆய்வு மேற்கொண்டார். நெல்லை மாநகராட்சி பகுதி அரசு தொடக்கப்பள்ளிகளில் முதல் கட்டமாக 22 பள்ளிகளில் தமிழக அரசின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    இதற்காக மேலப்பாளையம் மண்டல அலுவலக உணவு கூடத்தில் காலை உணவு தயாரிக்கப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் எடுத்து செல்லப்படுகிறது. இதனை இன்று கண்காணிப்பு அதிகாரி அபூர்வா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, ஆர்.டி.ஓ. சந்திரசேகர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது உணவின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்து கண்காணிப்பு அதிகாரி அபூர்வா ஆய்வு செய்தார். தொடர்ந்து பாளை பெருமாள்புரம் தபால்நிலையம் அருகே உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவினை ஆய்வு செய்த கண்காணிப்பு அதிகாரி அதனை சாப்பிட்டு பார்த்து தரம்குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நெல்லை மாநகராட்சி பகுதியில் 22 பள்ளிகளில் காலை உணவு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இங்கு ஆய்வு செய்ததில் மாணவர்களுக்கு தரமான உணவுகள் வழங்கப்படுவது தெரியவந்தது. மேலும் மாணவர்களுக்கு காலையில் சரியான நேரத்திலும் தரமான உணவுகள் வழங்கப்படுகிறது.

    நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மழையால் ஏற்படும் சேதங்களை விட தாமிரபரணி ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கி னால்தான் அதிக சேதாரங்கள் ஏற்படும். இதனால் தாமிரபரணி கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

    மேலும் வெள்ளம் பாதிக்காத அளவு தற்போது தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. நெல்லையில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளது. பேட்டை அருகே உள்ள திருப்பணிகரிசல்குளம் கால்வாய் தூர்வாரப்பட்டுள்ளதால் வெள்ளநீர் தேங்காமல் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னேற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தடுக்க கால்வாய்களில் பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை வீசுவதை பொதுமக்கள் தடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் உள்ள அரங்கம் மற்றும் அணுசக்தி மைதானத்தில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்டு படையினர் ஒத்திகை பயிற்சி அளித்தனர்.
    • கால்நடைகளை அப்புறப்படுத்துவது, மருத்துவ குழுவின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு ஒத்திகை பயிற்சிகள் நடத்தப்பட்டது.

    மாமல்லபுரம்:

    நாளை வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, செங்கல்பட்டு மாவட்ட அனைத்துத்துறை அதிகாரிகளுக்கு நேற்றும், இன்றும் கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் உள்ள அரங்கம் மற்றும் அணுசக்தி மைதானத்தில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்டு படையினர் ஒத்திகை பயிற்சி அளித்தனர்.

    இப்பயிற்சியில் கனமழையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மக்களை உடனடியாக மீட்பது, கடலில் பூகம்பம் ஏற்பட்டு சுனாமி வந்தால் மீனவர்களை எப்படி காப்பாற்றுவது, கால்நடைகளை அப்புறப்படுத்துவது, மருத்துவ குழுவின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு ஒத்திகை பயிற்சிகள் நடத்தப்பட்டது.

    இதற்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் நவீன கருவிகள், மீட்பு சாதனங்கள், பாதுகாப்பு உடைகள், தொலைதொடர்பு ராடர்கள் போன்றவைகளை கொண்டு வந்திருந்தனர்.

    • மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நிறுத்தி வைக்குமாறு கடிதம் அனுப்பப்படுகிறது.
    • ஒப்புதல் பெற்ற பின்னரே அனுமதி அளிக்கப்படும் என்றும் உத்தரவு.

    சென்னையில் சாலையை தோண்டும் பணிகளை நிறுத்தி வைக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

    இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவ மழையை முன்னிட்டு பல்வேறு சேவை துறைகளாகிய சென்னை பெருநகர குடி நீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றும் வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம், நகர்ப்புர எரிவாயு பகிர்ந்தளிக்கும் நிறுவனங்கள், கண்ணாடி இழை வடங்கள் பதிக்கும் நிறுவனங்கள் மூலமாக மண்டலம் 1 முதல் 15 வரையிலான பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை வெட்டுகள் அனைத்தும் 20.09.2023 அன்றுடன் நிறுத்தி வைக்கப்படுகிறது என்று பெருநகர சென்னை மாநகராட்சியின் கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையாளர் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இது குறித்து அனைத்து சேவை துறைகளுக்கும், நகர்ப்புர எரிவாயு பகிர்ந்தளிக்கும் நிறுவனங்களுக்கும் மற்றும் கண்ணாடி இழை வடங்கள் பதிக்கும் நிறுவனங்களுக்கும் சாலை வெட்டு பணியை 21.09.2023 முதல் மறு உத்தரவு

    பிறப்பிக்கும் வரை நிறுத்தி வைக்குமாறு கடிதம் அனுப்பப்படுகிறது.

    மேலும் இக்காலங்களில் அவசர தேவைகளுக்கு மட்டும் சாலை வெட்டு மேற்கொள்ள இணை ஆணையர் (பணிகள்), வட்டார துணை ஆணையர்கள் (வடக்கு, மத்தியம், தெற்கு) அவர்களின் மூலமாக கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையாளர்

    அவர்களின் ஒப்புதல் பெற்ற பின்னரே அனுமதி அளிக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    • ஒரு சில நாட்களில் வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ளது.
    • 16-ந்தேதி வரை பலத்த மழைகு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை விலகி ஒரு சில நாட்களில் வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ளது.

    இதற்கான சாதகமான சூழல் நிலவி வருகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல சுழற்சி, இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதுதவிர லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய அரபிக்கடல் பகுதியில் நில வும் காற்றழுத்த தாழ்வு பகுதி போன்றவை அடுத்த சில நாட்களில் பருவ மழை தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணிக்கின்றது.

    இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்.

    அடுத்த 6 நாட்களுக்கு சேலம், கிருஷ்ணகிரி, தர்ம புரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இன்று 10 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்றும் 16-ந்தேதி வரை பலத்த மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தமிழக கடலோரப் பகுதிகள், வங்கக்கடல் பகுதி, அரபிக்கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    இதற்கிடையில் அதி காலை 1.30 மணியில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதியில் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்தது.

    எழும்பூர், பெரம்பூர், வியாசர்பாடி, மாதவரம், கோயம்பேடு, கோடம்பாக்கம், வடபழனி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது.

    ஆனாலும் மழைநீர் சாலைகளில் இருந்து உடனடியாக வடிந்தது. சுரங்கப் பாதையிலும் பெரிய அளவில் மழைநீர் தேங்காததால் போக்குவரத்து பாதிப்பு இல்லை.

    ஒரு சில இடங்களில் தேங்கிய மழை நீரும் வடிந்தது. தொடர்ந்து காலையிலும் ஒரு சில இடங்களில் லேசாக மழை தூறியது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

    • தலைமை செயலாளர் முருகாணந்தம் ஆட்சியர், காவல் துறை அதிகாரிகளுக்கு கடிதம்.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த தலைமை செயலாளர் உத்தரவு.

    வடகிழக்கு பருவமழை நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதை அடுத்து, முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்த ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தலைமை செயலாளர் முருகானந்தம் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அதில், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். நாளை வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

    முன்னதாக பருவமழை தொடங்குவதை ஒட்டி, பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்துகிறார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் நாளை முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது.
    • சென்னை வெள்ள தடுப்பு பணிகளை கண்காணிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், சென்னையில் வெள்ள தடுப்பு பணிகளை கண்காணிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக சென்னையில் 15 மண்டலங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

    திருவொற்றியூர் பகுதிக்கு சமீரன், மணலி பகுதிக்கு குமரவேல் பாண்டியன், அம்பத்தூர் பகுதிக்கு எஸ். ராமன், அண்ணாநகர் பகுதிக்கு ஸ்ரேயா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதே போல் மீதமுள்ள பகுதிகளுக்கு மேகநாத ரெட்டி, கண்ணன், ஜானி வர்கீசு, கணேசன், பிரதாப், விசாகன், சிவஞானம், பிரபாகர், செந்தில் ராஜ், மகேஸ்வரி ரவிகுமார் மற்றும் உமா மகேஸ்வரி ஆகியோர் மற்ற பகுதிகளில் வெள்ள தடுப்பு பணிகளை கண்காணிக்க உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் அதி கனமழைக்கான எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த தலைமை செயலாளர் உத்தரவு.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில், அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பதை உறுதிப்படுத்த மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

    இது குறித்து வெளியான தகவல்களில், சென்னை மாநகராட்சியில் பணியாற்றி வரும் ஊழியர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும். சென்னைக்கு நாளை மறுநாள் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டு இருப்பதைத் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    சென்னை மாநகராட்சியில் பணியாற்றி வரும் 21 ஆயிரம் ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை நாளை தொடங்குகிறது. இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. பல இடங்களில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கனமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தை தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கனமழையின் தாக்கத்தினை எதிர்கொள்ள பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பின்வரும் அறிவுரைகள் வழங்கினார்.

    15.10.2024 அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங் கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.

    15.10.2024 முதல் 18.10.2024 வரை தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்த வேண்டும்.

    தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் பாதிப்பிற்குள்ளாகக்கூடிய பகுதிகளுக்கு முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

    வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளில் மீட்பு படகுகள் இன்றே நிலைநிறுத்தப்பட வேண்டும்.

    மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் தங்களுடைய பொறுப்பு மாவட்டங்களுக்கு சென்று, ஆயத்த பணிகளையும், மீட்பு, நிவாரணப் பணிகளையும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.

    பொதுமக்களின் வசதிக்காக மெட்ரோ ரெயில் மற்றும் பறக்கும் ரெயில்களின் சேவைகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.

    உணவுத் துறை மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயராமல் அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    தங்குதடையின்றி ஆவின் நிறுவனம் மூலம் பால் மற்றும் பால் பொருட்கள் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும்.

    முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் போதுமான உணவுப் பொருட்களை இருப்பு வைக்க அறிவுறுத்த வேண்டும்.

    நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைப்பதோடு, பாதிப்பிற்குள்ளாகக்கூடிய பகுதிகளில் இருந்து முன்கூட்டியே பொதுமக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும்.

    ரொட்டி, குடிநீர் பாட்டில்கள் நிவாரண மையங்களில் இன்றே இருப்பு வைக்க வேண்டும். மேலும், மருத்துவ வசதிகள் செய்து தரப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    மழை வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்படும் போது, பொது மக்களுக்கு உடனடியாக மாற்று வழித்தடம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    அனைத்து மாவட்டங்களிலும் சாலைப் பணிகள் நடைபெறும் இடங்களில் இரவு நேரத்தில் போதுமான ஒளிரும் பட்டைகள் மற்றும் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும்.

    மின் உற்பத்தி தடைபடாமல் இருக்கவும், மின் விநியோகம் சீராக இருக்கவும், கட்டுப்பாட்டு மையத்தில் கூடுதலான பணியாளர்கள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

    முட்டுக்காடு, பக்கிங்ஹாம் கால்வாய்-கலைஞர் கருணாநிதி பாலம் அருகில், ஒக்கியம் மடுவு ஆகிய இடங்களில் நீர்வடிவதற்கான தடைகளை நீக்குவதற்கு போதுமான இயந்திரங்களை இருப்பில் வைக்க வேண்டும்.

    மழை அளவு, அணைகளின் நீர்வரத்து ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்து அணைகளில் நீர் மேலாண்மை செய்ய வேண்டும்.

    பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் வசிக்கும் முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறப்பு முன்னுரிமை அளித்து பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    மீட்புப் பணிகளுக்கு தேவையான நீர் இறைப்பான்கள், மர அறுப்பான்கள் ஜே.சி.பி. இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    தடையற்ற குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய போதுமான ஜெனரேட்டர்களை வைத்திருக்க வேண்டும்.

    பொது சுகாதாரத்தைப் பேணிக் காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    • பருவமழை முன்னேற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
    • 19 இடங்களில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெறும்.

    தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர், "பருவமழை தொடர்பாக ஒருவாரத்திற்கு முன்பு முதலமைச்சர் தலைமையில் ஒரு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. தற்போது மீண்டும் மூத்த அதிகாரிகளின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

    பருவமழை முன்னேற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. இந்த முறை பருவமழையை வெற்றிகரமாக எதிர்கொள்வோம் என்ற நம்பிக்கை உள்ளது.

    19 இடங்களில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெறும். வெற்றி பெற்ற வீரர்களுக்கு அக்டோபர் 24 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசு கோப்பைகளை வழங்குவார்.

    முதலமைச்சர் கோப்பையில் பங்குபெறும் விளையாட்டு வீரர்களுக்கான தங்குமிட வசதிகள் போக்குவரத்து வசதிகள் உணவு ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார். 

    ×