என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Low pressure area"

    • மத்திய வங்கக் கடல் நோக்கி நகா்ந்து படிப்படியாக வலுவிழக்கும்.
    • தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இருக்கும்.

    சென்னை:

    வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) மத்திய வங்கக் கடல் நோக்கி நகா்ந்து படிப்படியாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவா் பி.அமுதா தெரிவித்தாா். இதுகுறித்து அவா் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) இன்று வடக்கு, வடகிழக்கு திசையில் திரும்பி, மத்திய வங்கக் கடல் நோக்கி நகா்ந்து படிப்படியாக வலுவிழக்கும்.

    தென் தமிழகத்தை யொட்டிய கடலோர பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் வருகிற 15-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

    கோவை மாவட்ட மலைப் பகுதிகளிலும், நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களிலும் இன்று ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இன்று வெப்பம் 97 டிகிரி பாரன்ஹீட்டை யொட்டி இருக்கும்.

    தமிழகத்தில் நேற்று (புதன்கிழமை) காலை வரை அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 80 மி.மீ. மழை பதிவானது.

    தமிழகத்தில் நேற்று (புதன்கிழமை) அதிக பட்சமாக வேலூரில் 101.3, சேலத்தில் 100.76 பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு.
    • துறைமுகத்தில் 265 விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தெற்கு வங்கக் கடலில் மையப் பகுதியில் குறைந்த அளவு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், தூத்துக்குடி குமரிக் கடல் பகுதி தென் தமிழக கடல் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அவ்வப்போது சுமார் 55 கிலோமீட்டர் வேகத்திலும் 35 கிலோ மீட்டர் முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு இன்றும், நாளையும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை சார்பில் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதனைத்தொடர்ந்து தூத்துக்குடியில் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீன்பிடி துறைமுகத்தில் 265 விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலெடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

    வங்கக்கடலில் நிலவும் மேலெடுக்கு சுழற்சி காரணமாக, தென்தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலெடுக்கு சுழற்சி காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு என கூறப்பட்டுள்ளது

    • சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
    • அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் அதிகபட்ச வெப்ப நிலை காணப்படும்.

    சென்னை:

    வங்கக்கடலில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென்தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை காணப்பட்டது.

    நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில், கன்னியாகுமரி மாவட்டம் கோழிப்போர்விளை பகுதியில் 19 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.

    ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் மற்றும் திருப்பூர் மாவட்டம் திருப்பூர் பகுதியில் தலா 15 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    இந்த நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    மேலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

    சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் நாளை (திங்கட்கிழமை) முதல் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் அதிகபட்ச வெப்ப நிலை ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகம் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

    • தமிழக வங்க கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவ உள்ளது‌.
    • மீன்பிடி உபகரணங்களை மேடான பகுதிக்கு எடுத்து சென்று பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட மீன்வள த்துறை உதவி இயக்குனர் சுப்பிரமணியன் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது - 

    வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது . மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இதனால் தமிழக வங்க கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவ உள்ளது‌. கடல் காற்றானது 45 முதல் 65 கி.மீ வேகத்தில் வீசும் என வானிலை எச்சரிக்கை பெறப்பட்டுள்ளது. ஆகவே கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து வகையான மீன்பிடி படகுகளும் நாளை (18-ந் ) தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல கூடாது அறிவுறுத்தப்படுகிறது.

    மேலும் ஏற்கனவே கடலில் உள்ள தங்கு கடல் படகுகள் அருகாமையில் உள்ள துறைமுகங்களுக்கு பாதுகாப்பாக கரைதிரும்ப அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் 19, 20 ஆகிய நாட்களில் கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் தங்களது படகு, மீன்பிடி வலை மற்றும் இயந்திரம் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை மேடான பகுதிக்கு எடுத்து சென்று பாதுகாப்பாக வைக்க வேண்டும்.மீனவர்கள் இந்த அறிவிப்பை தவறாது பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    • மழை நீர் சூழ்ந்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    • லேசான சாரல் மழையுடன் தொடங்கி மழை பெய்து வந்தது.

    கடலூர்:

    வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்க உள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை காரணமாக சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி, குறிஞ்சிப்பாடி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் மீண்டும் மழை பெய்யும். இந்த நிலையில் நேற்று கடலூர், நெல்லிக்குப்பம், குறிஞ்சிப்பாடி பண்ருட்டி பரங்கிப்பேட்டை எஸ் ஆர் சி குடித்தாங்கி வடக்குத்து மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது இதனை தொடர்ந்து லேசான சாரல் மழையுடன் தொடங்கி மழை பெய்து வந்தது.

    இந்த நிலையில் வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் குடை பிடித்து படியும், வாகனத்தில் சென்றவர்கள் மழையில் நனைந்த படியும் சென்றதை காண முடிந்தது. மேலும் இந்த மழை நேற்று இரவு தொடங்கி அதிகாலைவரை மழை பெய்து வந்தது. இதனை தொடர்ந்து காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் வெயில் அடித்து வருகிறது.கடலூர் மாவட்டத்தில் மில்லி மீட்டர் அளவில் மழை அளவு பின்வருமாறு- எஸ்.ஆர்.சி.குடிதாங்கி - 5.0,குறிஞ்சிப்பாடி - 5.0,கடலூர் - 3.2, பண்ருட்டி - 3.0,பெல்லாந்துறை - 3.0,கலெக்டர் அலுவலகம் - 2.2,வடகுத்து - 1.0,8. பரங்கிப்பேட்டை - 0.,4மொத்தம் - 22.80 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது

    • காற்றழுத்த தாழ்வுப்பகுதி தெற்கு ஒடிசா நோக்கி நகரும்.
    • காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வரும் 26ம் தேதி வலுவடையும்.

    டெல்லி, இமாசலபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை கொட்டியதால் பல நகரங்களை வெள்ளம் சூழ்ந்தது.

    யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதேபோல், மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி தெற்கு ஒடிசா நோக்கி நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது மெதுவாக வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வரும் 26ம் தேதி வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளுக்கு அருகே புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது உருவானது.
    • காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 8-ந்தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வடக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக வரும் 24 மணி நேரத்தில் (இன்று) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாகவும், இது பருவமழையை உருவாக்கும் காரணியாக இருக்கும் என்பதால் தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை தொடரும் என்றும், கடலோர பகுதிகளில் மாலை நேரங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் நேற்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, இன்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியான உருவாகியுள்ளது. தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளுக்கு அருகே புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது உருவானது.

    காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 8-ந்தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    மேலும், தென்மேற்கு பருவமழை இந்த மாதத்துடன் நிறைவடையும் சூழலில் இந்தியாவில் மழைக்கான வாய்ப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • நவம்பர் 16ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு.
    • 14, 15ம் தேதிகளில் மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் காற்று வீசும்.

    வங்கக் கடலில் நவம்பர் 14ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நவம்பர் 16ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும், 14, 15ம் தேதிகளில் கடலோர ஆந்திரா, தென் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இடி, மின்னலுடன் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    14, 15ம் தேதிகளில் மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • தென்கிழக்கு அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.
    • மாலத்தீவு பகுதியில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

    தென்கிழக்கு அரபிக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய மாலத்தீவு பகுதியில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனால், புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.

    • தென் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்தாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • வடகிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு சராசரி அளவைவிட கூடுதலாக பெய்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் சென்னை மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களிலும் கடந்த வாரத்தில் தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்து வெள்ளக்காடாக்கியது.

    வெள்ளப் பாதிப்பில் இருந்து மக்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் தென் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்தாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நாளை (31-ந் தேதி) மற்றும் 1-ந் தேதியில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை இலாகா தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில் ஜனவரி 1 மற்றும் 2-ந் தேதியில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது.

    வடகிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. மேலும் இந்திய பெருங்கடல் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக் கடல் பகுதி வரை இந்த மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இது அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் ஜனவரி 3-ந் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

    ஜனவரி 1 மற்றும் 2-ந் தேதியில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று தெரிவித்துள்ளது. தென் மாவட்டங்களில் பலத்த மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டு இருப்பதால் மாவட்ட நிர்வாகம் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக ஊத்துவில்-22 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. நாலுமுக்கு-21 செ.மீ. காக்கச்சி-20, மாஞ்சோலை-10 செ.மீ. மழை பெய்துள்ளது.

    • 18, 21, 22 ஆகிய 3 தேதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை.
    • தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு.

    தென்மேற்கு வங்கக்கடலில் வரும் 22ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தொடர்ந்து அது வடகிழக்கு திசையில் நகர்ந்த 24ம் தேதி வாக்கில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    18, 21, 22 ஆகிய 3 தேதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

    தமிழ்நாட்டிற்கான மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் செந்தாமரை கண்ணன் விளக்கம் அளித்துள்ளார். 

    அதில், தருமபுரி, சேலம், நாமக்கல் ஆகிய தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    நெல்லை, தென்காசி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    நாளை முதல் 21ம் தேதி வரை தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    கேரள, கர்நாடக கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை, புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறினார்.

    ×