search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை
    X

    கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை

    • மழை நீர் சூழ்ந்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    • லேசான சாரல் மழையுடன் தொடங்கி மழை பெய்து வந்தது.

    கடலூர்:

    வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்க உள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை காரணமாக சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி, குறிஞ்சிப்பாடி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் மீண்டும் மழை பெய்யும். இந்த நிலையில் நேற்று கடலூர், நெல்லிக்குப்பம், குறிஞ்சிப்பாடி பண்ருட்டி பரங்கிப்பேட்டை எஸ் ஆர் சி குடித்தாங்கி வடக்குத்து மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது இதனை தொடர்ந்து லேசான சாரல் மழையுடன் தொடங்கி மழை பெய்து வந்தது.

    இந்த நிலையில் வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் குடை பிடித்து படியும், வாகனத்தில் சென்றவர்கள் மழையில் நனைந்த படியும் சென்றதை காண முடிந்தது. மேலும் இந்த மழை நேற்று இரவு தொடங்கி அதிகாலைவரை மழை பெய்து வந்தது. இதனை தொடர்ந்து காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் வெயில் அடித்து வருகிறது.கடலூர் மாவட்டத்தில் மில்லி மீட்டர் அளவில் மழை அளவு பின்வருமாறு- எஸ்.ஆர்.சி.குடிதாங்கி - 5.0,குறிஞ்சிப்பாடி - 5.0,கடலூர் - 3.2, பண்ருட்டி - 3.0,பெல்லாந்துறை - 3.0,கலெக்டர் அலுவலகம் - 2.2,வடகுத்து - 1.0,8. பரங்கிப்பேட்டை - 0.,4மொத்தம் - 22.80 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது

    Next Story
    ×