search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thoothukudi fishermen"

    • தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம், திரேஸ்புரத்தில் உள்ள விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
    • வேம்பார் உட்பட மாவட்டத்தில் உள்ள சுமார் 25 ஆயிரம் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    தூத்துக்குடி:

    தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுப்பெறக்கூடும் என்பதால் மறு அறிவிப்பு வரும்வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என்று தூத்துக்குடி மீன்வளத்துறை சார்பில் கடந்த 30-ந்தேதி மீன்பிடி துறைமுகத்தில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.

    மேலும் இதுகுறித்து தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன் சார்பில் மீனவர்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் கடந்த 4 நாட்களாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

    அந்த வகையில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம், திரேஸ்புரத்தில் உள்ள விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதுபோல் வேம்பார் உட்பட மாவட்டத்தில் உள்ள சுமார் 25 ஆயிரம் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    இதனால் 450 விசைப்படகுகள், 5 ஆயிரம் நாட்டுப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று 5-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    • தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் மோகன்ராஜ் விசைப்படகு மீனவர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டார்.
    • மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்பிடித்துறைமுகத்தில் மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று 3-ந்தேதி முதல் வருகிற 6-ந்தேதி வரை தென்தமிழகம், மன்னார் வளைகுடா, குமரி கடல் ஆகிய பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசும் எனவும், சில நேரங்களில் மணிக்கு 65 கிலோ மீட்டர் அளவில் சூறைக்காற்று வீசலாம் எனவும், இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

    இதையடுத்து தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் மோகன்ராஜ் விசைப்படகு மீனவர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டார். இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்பிடித்துறைமுகத்தில் மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து தூத்துக்குடி மீனவர்கள் இன்று கடலில் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் விசைப்படகுகள் அனைத்தும் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையையொட்டி நெல்லை மாவட்டத்தில் உள்ள 9 கடற்கரை மீனவ கிராமங்களில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் சுமார் 10 ஆயிரம் நாட்டு படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

    • தடை காலத்தையொட்டி தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
    • மீன்பிடி தடை காரணமாக அனைத்து விசைப்படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மட்டும் 240 விசைப்படகுகள் உள்ளன.

    தூத்துக்குடி:

    இந்தியாவில் கடல் வளம், மீன்வளத்தை பாதுகாக்கும் பொருட்டு ஆண்டு தோறும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமல் படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலங்களில் மீன்கள் இனப்பெருக்கம் நடைபெறும்.

    இந்த காலங்களில் விசைப்படகு மற்றும் இழுவை படகுகள் மூலம் ஆழ்கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. நாட்டு படகு குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே சென்று மீன் பிடிப்பதால் அவர்களுக்கு இந்த தடைகாலம் பொருந்தாது. வழக்கம் போல் அவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவார்கள்.

    தடை காலத்தையொட்டி தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    தூத்துக்குடி மாவட்டத்தில் தருவைகுளம், வேம்பார், தாளமுத்து நகர், வெள்ளப்பட்டி, திரேஸ்புரம், இனிகோ நகர், தெர்மல் நகர், புன்னைக்காயல், மணப்பாடு, பெரியதாழை உள்பட மாவட்டம் முழுவதும் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் சுமார் 10 ஆயிரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகிறார்கள்.

    மீன்பிடி தடை காரணமாக அனைத்து விசைப்படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மட்டும் 240 விசைப்படகுகள் உள்ளன.

    தடை காலத்தையொட்டி தூத்துக்குடியில் உள்ள விசைப்படகுகளில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரி செய்யும் பணியிலும், தேசம் அடைந்த மீன்வலைகளை மீண்டும் பின்னும் பணியிலும் மீனவர்கள் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் 61 நாட்கள் தடைகாலம் நாளையுடன் முடிவடைகிறது. நாளை நள்ளிரவு முதல் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க புறப்பட்டு செல்ல இருக்கின்றனர். அதற்கான முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆழ்கடலுக்கு செல்ல தேவையான டீசல், ஜஸ் உள்ளிட்ட பொருட்களை படகுகளில் ஏற்ற தயாராகி வருகின்றனர்.

    எல்லை தாண்டி வந்ததாக கூறி தூத்துக்குடியைச் சேர்ந்த 8 மீனவர்களுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #ThoothukudiFishermen #SriLankanCourt
    ராமேசுவரம்:

    இலங்கை கடல் எல்லைப்பகுதியில் தமிழக மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்தால் அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற சட்டத்தை இலங்கை அரசு சில மாதங்களுக்கு முன்பு இயற்றியது. இதற்கு தமிழக மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இலங்கை அரசு இயற்றிய சட்டத்தில் எல்லை தாண்டி வரும் மீனவர்களுக்கு 5 ஆண்டு சிறைதண்டனையும், ரூ.50 லட்சத்திற்கும் மேல் அபராதம் விதிக்கப்படும். பறிமுதல் செய்யப்படும் விசைப்படகுகள் திரும்ப அளிக்கப்படாது போன்ற கடுமையான சரத்துகள் இடம் பெற்றிருந்தன.

    இந்த நிலையில் முதன்முறையாக எல்லை தாண்டி வந்ததாக கூறி தூத்துக்குடியைச் சேர்ந்த 8 மீனவர்களுக்கு அபராதம்- சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் கடந்த 18-8-2018-ந் தேதி கடலுக்குச் சென்றனர். அப்போது மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள சர்வதேச கடல் எல்லையை தாண்டி சட்ட விரோதமாக மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை அவர்களை கைது செய்தது.

    8 பேரும் கல்பெட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

    இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அத்துமீறி எல்லை தாண்டி வந்ததாக மீனவர்கள் மீது இலங்கை அரசு குற்றம் சாட்டியது.

    விசாரணையின் முடிவில் 8 மீனவர்களுக்கும் தலா ரூ.60 லட்சம் மற்றும் வருகிற ஜனவரி மாதம் 14-ந் தேதி வரை சிறைத்தண்டனை விதித்து கல்பெட்டி நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    இலங்கை கடற்படை கைது செய்த தூத்துக்குடி மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை வருகிற 3-ந் தேதி வரை காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #ThoothukudiFishermen
    ராமேசுவரம்:

    தூத்துக்குடி திரேஷ் புரத்தைச் சேர்ந்த வில்பிரட், அந்தோணி, விஜய், ரமேஷ், ஆரோக்கியம் உள்பட 8 மீனவர்கள் மரிய பாக்கியம் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகில் தூத்துக்குடியில் இருந்து 70 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் அவர்கள் 8 பேரையும் கைது செய்தனர். சர்வதேச கடல் எல்லையை தாண்டி வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.

    கைதான 8 மீனவர்களும் இலங்கையில் உள்ள புத்தளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி இந்திர ரஜீத் புத்தள ஜெயா, குற்றம் சாட்டப்பட்ட 8 மீனவர்களையும் வருகிற 3-ந்தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    அதைத்தொடர்ந்து மீனவர்கள் 8 பேரும் நீர் கொழும்பு சிறையில் அடைக்கப்பட்டனர். #ThoothukudiFishermen
    ×