search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கை கடற்படை கைது செய்த தூத்துக்குடி மீனவர்கள் சிறையில் அடைப்பு
    X

    இலங்கை கடற்படை கைது செய்த தூத்துக்குடி மீனவர்கள் சிறையில் அடைப்பு

    இலங்கை கடற்படை கைது செய்த தூத்துக்குடி மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை வருகிற 3-ந் தேதி வரை காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #ThoothukudiFishermen
    ராமேசுவரம்:

    தூத்துக்குடி திரேஷ் புரத்தைச் சேர்ந்த வில்பிரட், அந்தோணி, விஜய், ரமேஷ், ஆரோக்கியம் உள்பட 8 மீனவர்கள் மரிய பாக்கியம் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகில் தூத்துக்குடியில் இருந்து 70 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் அவர்கள் 8 பேரையும் கைது செய்தனர். சர்வதேச கடல் எல்லையை தாண்டி வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.

    கைதான 8 மீனவர்களும் இலங்கையில் உள்ள புத்தளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி இந்திர ரஜீத் புத்தள ஜெயா, குற்றம் சாட்டப்பட்ட 8 மீனவர்களையும் வருகிற 3-ந்தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    அதைத்தொடர்ந்து மீனவர்கள் 8 பேரும் நீர் கொழும்பு சிறையில் அடைக்கப்பட்டனர். #ThoothukudiFishermen
    Next Story
    ×