search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Monitoring officer"

    • வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்களை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
    • வாக்குச் சாவடி நிலை முகவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப் பட்டதையடுத்து நவ.4,5 மற்றும் 18, 19 ஆகிய தேதிகளில் சிறப்பு வாக்கா ளர் பட்டியல் திருத்த முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று வாக்கா ளர் பட்டியல் சிறப்பு முகாம் நடந்தது. மானா மதுரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி, திருக்கோஷ்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய வாக்குசாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடந்தன.

    இந்த முகாம்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுந்தரவள்ளி, கலெக்டர் ஆஷா அஜீத் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இந்த முகாம்களில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களை பொதுமக்கள் மேற்கொள்ள லாம். இந்த சிறப்பு முகாம் களில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவர்கள் மூலமாக நேரடியாகவும், https://voters.eci.gov.in இணைய தளம் வழியாகவும் விண்ணப் பிக்கலாம்.

    இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் மாற்றம் மற்றும் திருத்தங்களுக்கான பணிகளை மேற்கொள்ள லாம் என கண்காணிப்பு அலுவலர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போதுஇ தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, தனி வட்டாட்சியர் (தேர்தல்) மேசியாதாஸ், வட்டாட் சியர்கள் சிவராமன் (சிவ கங்கை), ஆனந்த் (திருப் பத்தூர்), துணை வட்டாட்சி யர் (தேர்தல்) மற்றும் வாக்குச் சாவடி நிலை முகவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வளர்ச்சி திட்டப்பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
    • குழந்தைகள் மருத்துவமனையின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறைகளை சார்ந்த முதல் நிலை அலுவலர்களுடன் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லால்வேனா, கலெக்டர் ஆஷா அஜித் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    கூட்டத்தில் ஒவ்வொரு துறைகளின் சார்பில் இதுவரை மேற்கொண்ட திட்டப்பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், தேவை யான நிதி நிலைகள் ஆகியன தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்கள் எடுத்து ரைத்து, அவைகள் தொடர் பான விவரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.

    முன்னதாக திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய வற்றின் செயல்பாடுகள், ரூ.472.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய அலுவலக கட்டுமான பணிகள், நெடுமரம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான பனை ஓலை பயிற்சி மையம், தி.வைரவன்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் செயல்பாடுகள், அரசனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடு கள் ஆகியன குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் ஆய்வு செய்தனர்.

    மேலும் மக்களை தேடி மருத்துவ திட்ட பயனாளிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர்.

    பின்னர் சிவகங்கை அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்து வமனையின் செயல்பாடு களையும் ஆய்வு செய்தனர்.

    • நெல்லை மாவட்டத்தில் முடிவுற்ற மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செய லாளருமான செல்வராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
    • நாங்குநேரி, வள்ளியூர் ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளிட்ட பகுதிகளில் முடிவுற்ற மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் கார்த்தி கேயன் முன்னிலையில் அவர் ஆய்வு செய்தார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் முடிவுற்ற மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செய லாளருமான செல்வராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி, வள்ளியூர் ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளிட்ட பகுதிகளில் முடிவுற்ற மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் கார்த்தி கேயன் முன்னிலையில் அவர் ஆய்வு செய்தார்.

    நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயன்பெறாத பயனாளி கள் தேர்வு செய்யப்படா தற்கான காரணங்களை அவர்கள் தெரிந்து கொள்வ தற்காக 7 கவுண்டர்களில் தனி தனியாக கணினிகள் அமைக்கப்பட்டிருந்த உதவி மையத்தினை ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது, கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் தகுதியான நபர்கள் விடுபட்டிருக்கும் பட்சத்தில், அவர்கள் பயன்பெறும் வகையில் கள ஆய்வு செய்து, தகுதியான நபர்க ளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்குத வற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.12.13 கோடி மதிப்பில் கடைகள், காத்திருப்போருக்கான அறை, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதி கள் கொண்டு கட்டப்பட்டு வரும் வள்ளியூர் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை நேரில் பார்வை யிட்டு, பணியினை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறைசார்ந்த அலுவ லர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து, கண்டி யப்பேரி, பழைய பேட்டைக்கு செல்லும் சாலையில் ரூ.60 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலப்பணி யினையும், பாறையடி மற்றும் அன்னை வேளாங் கண்ணி நகர் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணி களையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி, சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகம்மது ஷபீர் ஆலம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுரேஷ், நடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் முத்துகுமரன் , உதவி கோட்டப்பொறியாளர் சேகர், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) வில்லியம் ஏசுதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டுறவுத்துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர்க்கடன் குறித்தும் ஆய்வு செய்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில் ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர், ஆணையர் (ஆவணகாப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி த்துறை) பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர், ஆணையர் (ஆவணகாப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறை) பிரகாஷ் வேளாண்மை- உழவர் நலத்துறை சார்பில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி த்துறை சார்பில் அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டம் சமத்துவபுர குடியிருப்புகள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ஜல்ஜீவன் மிஷன், அம்ருத் 2.0, தூய்மை பாரத இயக்கம் 2.0 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நிலுவையில் உள்ள பட்டாக்கள், வட கிழக்கு பருவ மழை முன்னே ற்பாடு பணிகள், பள்ளி க்கல்வி த்துறை சார்பில் இல்லம் தேடிகல்வி, எண்ணும் எழுத்தும் இலக்கியம்.

    பள்ளிக் கட்டிடங்களின் உட்கட்டமைப்பு வசதிகள், மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மக்களைத் தேடி மருத்துவம், சிறப்பு திட்ட செயலாக்கம், நான் முதல்வன், உங்கள் தொகுதியில் முதல்-அமை ச்சர், முதல்- அமைச்சரின் காலை உணவு திட்டம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச்சத்து உறுதி செய் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்ட ப்பணிகள் குறித்து தொடர்புடைய துறை அலுவலர்களு டன் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் கூட்டுறவுத்துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர்க்கடன் குறித்தும் ஆய்வு செய்தார்.

    மேலும் தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் ஈரோடு மாவட்டத்தில் உள்ளஅனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையிலும் மற்றும் முதல்-அமைச்சரின் செயல்பாட்டிற்க்கு உறுதுணையாக இருக்கும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து தங்களது பணியினை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். மற்றும் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிரா மஊராட்சிகள் ஆகிய பகுதிகளில் பொது மக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைத்திடவேண்டும் என அலுவலர்களுக்கு ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) நார ணவ்ரே மனிஷ் சங்கர்ராவ் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) செல்வராஜன், இணை இயக்குநர் (வேளாண்மை -உழவர் நலத்துறை) வெங்கடேசன் (பொ), ஈரோடு அரசு மருத்துவ க்கல்லூரி மருத்துவ மனை முதல்வர் டாக்டர் வள்ளி, துணை இயக்குநர் (சுகாதாரபணிகள்) டாக்டர் சோமசுந்தரம், மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணை ப்பதிவாளர் ராஜ்குமார், மாநகர நல அலுவலர் பிரகாஷ் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு சிறப்பு செயலருமான எம்.கருணாகரன் ஆய்வு மேற்கொண்டாா்.
    • விரும்பம்பள்ளத்தில் ரூ.2.67 லட்சம் மதிப்பீட்டில் தாா் சலை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தாா்.

    காங்கயம் : 

    காங்கயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.9.88 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு சிறப்பு செயலருமான எம்.கருணாகரன் ஆய்வு மேற்கொண்டாா்.

    இதில் படியூா் ஊராட்சி சத்யா நகரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் சாா்பில் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையம், காங்கயம் நகராட்சியில் நகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் ரூ.9.62 கோடி மதிப்பீட்டில் வாரச் சந்தையில் புதிய கடைகள் கட்டுமானப் பணிகள், விரும்பம்பள்ளத்தில் ரூ.2.67 லட்சம் மதிப்பீட்டில் தாா் சலை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தாா்.

    இதைத் தொடா்ந்து, திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டாா்.பின்னா் மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் நடைபெற்ற கல்விக் கடன் முகாமில் 73 பேருக்கு ரூ.3 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகளுக்கான ஆணைகளை வழங்கினாா்.

    இந்த ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத், சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் லட்சுமணன், சமூக நல அலுவலா் அம்பிகா உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

    • திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு புதிய திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • தனிநபர் இல்ல குடிநீர் இணைப்புகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    குண்டடம் :

    ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு சிறப்பு செயலரும், திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான கருணாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் முன்னிலையில் திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கருணாகரன் தெரிவித்ததாவது :- தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு நேரிடையாக சென்றடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன் தொடர்ச்சியாக திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு புதிய திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியம், ஜோதியாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சேடபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை ஆய்வு மேற்கொண்டு சமையல் கூடங்கள் ,முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட செயலியினை பதிவேற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஜோதியம்பட்டி ஊராட்சியில் ரூ.6லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வரும் தனிநபர் இல்ல குடிநீர் இணைப்புகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    தாராபுரம் நகராட்சியில் ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதியில் புதிய பூங்கா கட்டுமானப்பணிகளையும், தாராபுரம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் நியாயவிலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப்பொருட்கள் குறித்தும், தாராபுரம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு, தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையின் கோப்புகளையும் ஆய்வு செய்யப்பட்டது. தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு செய்யப்பட்டது என்றார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், தாராபுரம் கோட்டாட்சியர் குமரேசன், மாவட்ட ஆட்சியரின்நேர்முக உதவியாளர் (சத்துணவு) சிவசண்முகம் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாநகராட்சி பகுதி அரசு தொடக்கப்பள்ளிகளில் முதல் கட்டமாக 22 பள்ளிகளில் தமிழக அரசின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
    • மேலப்பாளையம் மண்டல அலுவலக உணவு கூடத்தில் காலை உணவு தயாரிக்கப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் எடுத்து செல்லப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அபூர்வா ஐ.ஏ.எஸ். மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி குறித்து நேற்று ஆய்வு செய்தார்.

    2-வது நாளாக ஆய்வு

    இந்நிலையில் 2-வது நாளாக இன்று ஆய்வு மேற்கொண்டார். நெல்லை மாநகராட்சி பகுதி அரசு தொடக்கப்பள்ளிகளில் முதல் கட்டமாக 22 பள்ளிகளில் தமிழக அரசின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    இதற்காக மேலப்பாளையம் மண்டல அலுவலக உணவு கூடத்தில் காலை உணவு தயாரிக்கப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் எடுத்து செல்லப்படுகிறது. இதனை இன்று கண்காணிப்பு அதிகாரி அபூர்வா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, ஆர்.டி.ஓ. சந்திரசேகர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது உணவின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்து கண்காணிப்பு அதிகாரி அபூர்வா ஆய்வு செய்தார். தொடர்ந்து பாளை பெருமாள்புரம் தபால்நிலையம் அருகே உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவினை ஆய்வு செய்த கண்காணிப்பு அதிகாரி அதனை சாப்பிட்டு பார்த்து தரம்குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நெல்லை மாநகராட்சி பகுதியில் 22 பள்ளிகளில் காலை உணவு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இங்கு ஆய்வு செய்ததில் மாணவர்களுக்கு தரமான உணவுகள் வழங்கப்படுவது தெரியவந்தது. மேலும் மாணவர்களுக்கு காலையில் சரியான நேரத்திலும் தரமான உணவுகள் வழங்கப்படுகிறது.

    நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மழையால் ஏற்படும் சேதங்களை விட தாமிரபரணி ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கி னால்தான் அதிக சேதாரங்கள் ஏற்படும். இதனால் தாமிரபரணி கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

    மேலும் வெள்ளம் பாதிக்காத அளவு தற்போது தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. நெல்லையில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளது. பேட்டை அருகே உள்ள திருப்பணிகரிசல்குளம் கால்வாய் தூர்வாரப்பட்டுள்ளதால் வெள்ளநீர் தேங்காமல் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னேற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தடுக்க கால்வாய்களில் பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை வீசுவதை பொதுமக்கள் தடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உடுமலை நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    • ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

     உடுமலை:

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு சிறப்பு செயலர்-மாவட்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர்.எம்.கருணாகரன் தலைமையில், மாவட்ட கலெக்டர் வினீத் முன்னிலையில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    அந்த வகையில் உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் சின்னவீரம்பட்டி ஊராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.81.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பள்ளி கட்டடத்தினையும், உடுமலைப்பேட்டை நகராட்சியில் ரூ.14லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய நூலகம் கட்டடத்தினையும், பொதுநிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் தூர்வாரும் பணியினையும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.191 லட்சம் மதிப்பீட்டில் வார்டு எண்:13 யூ.கே.சி. நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் பொது அறிவு மையத்தினையும், தூய்மை பாரத் இயக்கத்தின் கீழ் ரூ.36.28 லட்சம் மதிப்பீட்டில் பொது கழிப்பறை கட்டடம் கட்டும் பணியினையும்,

    உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பாலப்பம்பட்டி ஊராட்சி கண்ணமநாயக்கனூரில் ரூ.108.27 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சமத்துவபுரம் புனரமைக்கும் பணியினையும், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் சமத்துவபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தினையும், பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் நடைபெற்ற மக்களைத் தேடி மருத்துவ முகாமினையும் ஆய்வு செய்தார்.

    மேலும் மருள்பட்டி ஊராட்சியில் பட்டுவளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.1.7 லட்சம் பட்டுப்புழு வளர்ப்பு கொட்டகை மற்றும் மல்பரி சாகுபடியையும், மொடக்குப்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.57 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் கழிப்பறை கட்டடம் கட்டும் பணியினையும் மற்றும் ரூ.5.5 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணியினையும் என மொத்தம் ரூ.444.82 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டு, புதிய வளர்ச்சி திட்ட பணிகளை விரைவாகவும், தரமாகவும் பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது, உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், உடுமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கந்தசாமி (கிராம ஊராட்சிகள்), உடுமலை நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) விஜயராஜ், (வளர்ச்சி) வாணி மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    • மக்கள் குறை கேட்பு முகாம் மூலம் பெறப்படும் தகுதி வாய்ந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

    திருப்பூர்:

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு சிறப்பு செயலர்-திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர்.எம்.கருணாகரன் தலைமையில் கலெக்டர் வினீத் முன்னிலையில் திருப்பூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்நடைபெற்றது.

    அப்போது திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கருணாகரன் தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு நேரிடையாக சென்றடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை நடைபெறும் மக்கள் குறை கேட்பு முகாம் மூலம் பெறப்படும் தகுதி வாய்ந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். திருப்பூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சீர்மிகு நகரத் திட்ட பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன் வளத்துறை, பால் வளத்துறை, கூட்டுறவுதுறை, பொது சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை, நெடுஞ்சாலைத்துறை, மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மாவட்ட தொழில் மையம், தொழிலாளர் நல வாரியம், மாநகராட்சி, நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் பேரூராட்சிகள் ஆகிய துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் தங்கள் துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்றார்.

    கூட்டத்தில், திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி , மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் , மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) விஜயராஜ், (வளர்ச்சி) வாணி மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தினை ஆய்வு செய்தார்.
    • காலை உணவுத் திட்ட செயலியினை பதிவேற்றம் செய்வது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    திருப்பூர் :

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு சிறப்பு செயலர் - கண்காணிப்பு அலுவலர் எம்.கருணாகரன் திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியம், வட சின்னாரி பாளையம் ஊராட்சி காரப்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பொன்னங்காளி வலசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி , வீணம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தினை ஆய்வு செய்தார்.

    அப்போது அங்கு சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவினை சாப்பிட்டு , காலை உணவுத் திட்ட செயலியினை பதிவேற்றம் செய்வது குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது கலெக்டர் வினீத் உடனிருந்தார். 

    • பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் சீர்மிகுநகர் திட்டத்தின் கீழ் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது.
    • சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் நெல்லை மாநகர பகுதியில் நடந்து வரும் வ.உ.சி. மைதானம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள இளைஞர் நலத்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா இன்று நெல்லையில் பல்வேறு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்்.

    பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் சீர்மிகுநகர் திட்டத்தின் கீழ் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. அந்தப் பணிகளை பார்வையிட்டார்.

    அதனைத் தொடர்ந்து அருகில் உள்ள உள் விளையாட்டு அரங்கம், உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து அண்ணா விளையாட்டு அரங்கம் சென்ற அவர் அங்குள்ள ஆக்கி மைதானம், தடகள போட்டி மைதானம், மற்றும் இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கம் ஆகியவற்றையும் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வடகிழக்கு பருவமழை வர உள்ள நிலையில் கடந்தாண்டு ஏற்பட்ட மழையின் போது பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நெல்லை மாவட்டத்தில் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

    எனவே இந்த ஆண்டு மழையின் போது ஏற்படும் வெள்ளம் மற்றும் மழைநீர் உடனடியாக வடிந்து விடும்.

    சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் நெல்லை மாநகர பகுதியில் நடந்து வரும் வ.உ.சி. மைதானம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டது.

    வ.உ.சி. மைதானத்தை பொருத்தவரை ஒரு தனி விளையாட்டுக்கு மட்டும் ஒதுக்காமல் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் அளவில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆகையால் அனைத்து வகையான விளையாட்டுகளையும் இந்த மைதானத்தில் நடத்துவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

    சந்திப்பு பேருந்து நிலையத்தை பொறுத்தவரை கனிமவளம் தொடர்பாக வழக்கு இருப்பதால் அது முடிந்த பின்பு விரைவாக பணிகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ ஆகியோர் உடனிருந்தனர்.

    பின்னர் சேரன்மகாதேவி தாலுகா அலுவலத்தில் ஆய்வு செய்த அவர் அங்குள்ள இ-சேவை மையத்தை பார்வையிட்டார். 

    அரசின் திட்டங்களை பெற பெண்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜோதி நிர்மலா தெரிவித்தார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தின் சார்பில் கிராம சுயாட்சி இயக்க விழா, கலெக்டர் லதா தலைமையிலும், மத்திய அரசின் கிராம சுயாட்சி இயக்க பொறுப்பு அலுவலர்கள் பத்மா கணேசன், மனோஜ் பதக் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. விழாவையொட்டி 13 ஊராட்சிகளில் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்ட 156 குழுக்களுக்கு ரூ.32½ லட்சம் மதிப்பீட்டில் சுழல்நிதி கடனும், 7 பயனாளிகளுக்கு தலா ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்தில் சூரியச்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகளையும், 5 பயனாளிகளுக்கு தலா ரூ.12 ஆயிரம் மதிப்பீட்டில் மானிய திட்டத்தில் தனிநபர் கழிப்பறை கட்டுவதற்கான ஆணையினையும் வழங்கியதுடன், 13 ஊராட்சிகளில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 537 பேருக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு ஆணையினையும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜோதிநிர்மலா வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    மத்திய அரசின் திட்டங்கள் கிராமப்பகுதிகளுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும் என்ற நோக்குடன் கிராம சுயாட்சி இயக்கம் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் 13 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு அங்கு சிறப்பு முகாம் அமைத்து மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட 7 வகையான திட்டங்கள் அனைத்துத்தரப்பு மக்களுக்கும் கிடைத்திடும் வகையில் செயல்படுத்தப்பட்டது.

    இந்த சிறப்பு முகாமில் மத்திய அரசின் திட்டங்கள் 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கிராமப்பகுதியிலுள்ள பெண்கள் அதிக அளவு ஆர்வம் காட்டி அரசின் திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும் என்பதே இதுபோன்ற திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து மகளிர் சுயஉதவி குழுவினரைச் சேர்ந்த உறுப்பினர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், சிவகங்கை கோட்டாட்சியர் ராமபிரதீபன், உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) விஜயநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    ×