search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில்  கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
    X

    பழையபேட்டை கண்டியப்பேரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.

    நெல்லை மாவட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

    • நெல்லை மாவட்டத்தில் முடிவுற்ற மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செய லாளருமான செல்வராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
    • நாங்குநேரி, வள்ளியூர் ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளிட்ட பகுதிகளில் முடிவுற்ற மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் கார்த்தி கேயன் முன்னிலையில் அவர் ஆய்வு செய்தார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் முடிவுற்ற மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செய லாளருமான செல்வராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி, வள்ளியூர் ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளிட்ட பகுதிகளில் முடிவுற்ற மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் கார்த்தி கேயன் முன்னிலையில் அவர் ஆய்வு செய்தார்.

    நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயன்பெறாத பயனாளி கள் தேர்வு செய்யப்படா தற்கான காரணங்களை அவர்கள் தெரிந்து கொள்வ தற்காக 7 கவுண்டர்களில் தனி தனியாக கணினிகள் அமைக்கப்பட்டிருந்த உதவி மையத்தினை ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது, கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் தகுதியான நபர்கள் விடுபட்டிருக்கும் பட்சத்தில், அவர்கள் பயன்பெறும் வகையில் கள ஆய்வு செய்து, தகுதியான நபர்க ளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்குத வற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.12.13 கோடி மதிப்பில் கடைகள், காத்திருப்போருக்கான அறை, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதி கள் கொண்டு கட்டப்பட்டு வரும் வள்ளியூர் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை நேரில் பார்வை யிட்டு, பணியினை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறைசார்ந்த அலுவ லர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து, கண்டி யப்பேரி, பழைய பேட்டைக்கு செல்லும் சாலையில் ரூ.60 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலப்பணி யினையும், பாறையடி மற்றும் அன்னை வேளாங் கண்ணி நகர் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணி களையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி, சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகம்மது ஷபீர் ஆலம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுரேஷ், நடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் முத்துகுமரன் , உதவி கோட்டப்பொறியாளர் சேகர், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) வில்லியம் ஏசுதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×