search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "interested"

    • ஊட்டியில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலையில் பைகாரா படகு இல்லம் மற்றும் நீர் வீழ்ச்சி ஆகியவை உள்ளன.
    • ஒரு புனித நதி என்று உள்ளூர் மக்களால் போற்றப்படுகிறது.

    ஊட்டி,

    ஊட்டியை அடுத்துள்ள பைகாரா அணையில் படகு சவாரி மேற்கொள்ளப்படுகிறது.

    இயற்கை எழில் கொஞ்சும் மலைகளின் நடுவே உள்ள இந்த அணையில் சீறிப் பாய்ந்து செல்லும் படகுகளில் ஏறிச் செல்ல சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்ற னர்.

    ஊட்டியில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலையில் பைகாரா படகு இல்லம் மற்றும் நீர் வீழ்ச்சி ஆகியவை உள்ளன. பைக்காரா பகுதிகளில் இதமான காலநிலை நிலவி வருகிறது.

    நிரம்பித் தளும்பி ரம்மியமாகக் காட்சியளிக்கும் பைக்காரா அணையில் படகு சவாரி செய்ய சுற்றுலாப்பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    முக்கூர்த்தி மலை உயரத்தில் இருந்து உருவாகும் பைகாரா நதி நீலகிரியின் மூடுபனி உயரங்களைத் துண்டித்து, பசுமையான மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளுக்குச் செல்கிறது.

    ஒரு புனித நதி என்று உள்ளூர் மக்களால் போற்றப்படுகிறது. செங்குத்தான சரிவுகளில் பயணிக்கும்போது, பைகாரா அழகான நீர்வீழ்ச்சியாக மாறுகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் நடத்தப்படும் படகு இல்லம் மூலம் பல்வேறு வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

    இந்த ஏரி ஊட்டியில் சிறந்த படகு சவாரி வசதிகளைக் கொண்டுள்ளது. அமைதியான சூழல், வசீகரிக்கும் காட்சிகள் மற்றும் படகு சவாரி வசதிகளுடன், குடும்பத்துடன் ஒரு நாளைக் கழிக்க ஊட்டியில் பைகாரா ஏரி சரியான இடமாகும்.

    • இந்தியாவிலேயே முதல் முறையாக கோத்தகிரியில் அதிக சாகுபடி செய்து சாதனை
    • வெளி மாநிலங்களில் அதிக வரவேற்புடன் லாபமும் கொட்டுவதால் விவசாயிகள் உற்சாகம்

    அரவேணு,

    இந்தியாவிலேயே முதல் முறையாக கோத்தகிரி பகுதியில் கடந்த 2 ஆண்டுக ளுக்கு முன்பு ஐட்ரோ ஜென்யா கொய்மலர் சாகுபடி தொடங்கப்பட்டது. இது கென்யா மற்றும் ஆலந்து உள்ளிட்ட நாடுக ளில் மட்டுமே வளரும் மலர்ச்செடிகள் ஆகும். அதனை இங்கு உள்ள விவசாயிகள் சாகுபடி செய்து, கடந்த ஓராண்டாக அதிக சாகுபடியும் செய்து வெற்றி பெற்று உள்ளனர்.

    ஒரே செடியில் வெள்ளை, ஊதா, இளஞ்சி வப்பு என 3 நிறங்களில் பூக்கும் இந்த மலர்களுக்கு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் அதிக வரவேற்பு உள்ளது. லாபமும் கொட்டுவதால் விவசாயிகள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

    நீலகிரியில் கொரோனா பேரிடர் காலத்தில் சுப நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதால் கொய்மலர் விற்பனை கடும் வீழ்ச்சிய டைந்தது. எனவே பொருளாதார நெருக்கடியில் இருந்து வந்த விவசாயிகளில் ஒரு சிலர், பந்துபோல கொத்துக் கொத்தாக வளரும் ஐட்ரோ ஜென்யா மலர்களை சாகுபடி செய்து தற்போது நல்ல லாபம் ஈட்டி வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலைக்கு மாற்று பயிராக கொய்மலர் சாகுபடி செய்யபட்டு வருகி றது. அதிலும் குறிப்பாக ஊட்டி, குன்னூர், கோத்த கிரி பகுதிகளில் பசுமை குடில் அமைத்து, இங்கு கார்னீசியன், ஜர்பரா, லில்லியம் ஆகிய கொய்மலர்கள் பயிரிடபட்டு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    பெரிய பெரிய நட்சத்திர ஓட்டல்கள், திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் அலங்காரம் செய்ய ஐட்ரோஜெனியா மலர்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த மலர் செடிகள் வளர ஏற்ற காலநிலை நீலகிரி மாவட்டத்தில் உள்ளது. எனவே இங்கு தற்போது மலர் சாகுபடி வெகுவாக அதிகரித்து வருகிறது.

    இதுகுறித்து கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த கொய்மலர் விவசாயி மேகநாதன் கூறுகையில், விவசாய நிலத்தில் பசுமைக்குடில் அமைத்து அங்கு மண்ணுக்கு பதிலாக, தேங்காய் நார் மற்றும் உரங்கள் அடங்கிய கலவை போட்டு, இறக்குமதி செய்யப்பட்ட ஐட்ரோ ஜெனியா மலர் நாற்றுகளை நடவு செய்து, உரிய முறையில் பராமரித்து வருகிறோம். அப்படி செய்து வந்தால் ஓராண்டில் பூக்கள் மலர துவங்கும். ஒரு முறை பயிரிட்டால் 20 ஆண்டுகள் வரை மலர்கள் தொடர்ந்து வளர்ந்து பலன் அளிக்கும்.

    ஆவணி மாதத்தில் சுப முகூர்த்தங்கள் அதிகம் இருப்பதால் இந்த மலர்களின் தேவை அதிகரித்து உள்ளது. ஒரு மலருக்கு 100 முதல் 150 ரூபாய் வரை கொள்முதல் விலை கிடைத்து வருகிறது. ஒரே செடியில் வெள்ளை, இளஞ்சிவப்பு, ஊதா என 3 நிறங்களில் பூக்களை வளர வைத்து பறிக்க முடியும்.

    வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் இவ்வகை மலர், 400 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆனால் இங்கு சாகுபடி யாகும் மலர்கள் மிக குறைந்த விலையில் கிடைப்பதால் கோத்தகிரி கொய்மலருக்கு வெளிநாடு களில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. மேலும் இந்த மலரை சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு கணிசமான லாபமும் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

    • முதலைக்குளம் கண்மாயில் மீன்பிடி திருவிழா நடந்தது.
    • பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மீன்களை பிடித்தனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம், முதலைக்குளம் கிராமத்திற்கு பாத்தியப்பட்டதும், பதினெட்டாம்படி கருப்புசாமி கோவில் நிர்வாகத்தின் கீழ் 450 ஏக்கர் பரப்பளவு கொண்டதுமான கண்மாயில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் கடைசியில் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த வருடமும் முதலைக் குளம் கம்ப காமாட்சி, பதினெட்டாம்படி கருப்புசாமி கோவிலில் கிராம மக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறவும், நோயின்றி வாழவும், விவசாயம் செழிக்கவும், தொழில் வளம் பெருகவும், கண்மாயில் நேர்த்தி கடனாக பலவகையான மீன்குஞ்சுகள் வாங்கி விடுவது வழக்கம்.

    அப்படி விடப்படும் மீன்களை வளர்ந்த ஒராண்டு பின்னர் ஊர் மக்கள் ஒன்று திரண்டு பிடிப்பார்கள். கோவில் பூசாரி பொன்ராம், 2 தேவர் வகையறா பங்காளிகள், கிராமமக்கள் முன்னிலையில் விவசாய பாசன கமிட்டி தலைவர் எம்பி.ராமன், மேற்பார்வையில் அதிகாலை 5 மணிக்கு கண்மாயின் கரையில் நின்று கிராம கமிட்டியினர் பட்டாசு வெடித்து வெள்ளை கொடி அசைக்க உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் கண்மாயில் இறங்கி மீன் பிடித்தனர்.

    இதில் கட்லா, ரோகு உள்ளிட்ட பல வகையான மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். இதில் பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மீன்களை பிடித்தனர். விக்கிரமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.

    அரசின் திட்டங்களை பெற பெண்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜோதி நிர்மலா தெரிவித்தார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தின் சார்பில் கிராம சுயாட்சி இயக்க விழா, கலெக்டர் லதா தலைமையிலும், மத்திய அரசின் கிராம சுயாட்சி இயக்க பொறுப்பு அலுவலர்கள் பத்மா கணேசன், மனோஜ் பதக் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. விழாவையொட்டி 13 ஊராட்சிகளில் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்ட 156 குழுக்களுக்கு ரூ.32½ லட்சம் மதிப்பீட்டில் சுழல்நிதி கடனும், 7 பயனாளிகளுக்கு தலா ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்தில் சூரியச்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகளையும், 5 பயனாளிகளுக்கு தலா ரூ.12 ஆயிரம் மதிப்பீட்டில் மானிய திட்டத்தில் தனிநபர் கழிப்பறை கட்டுவதற்கான ஆணையினையும் வழங்கியதுடன், 13 ஊராட்சிகளில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 537 பேருக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு ஆணையினையும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜோதிநிர்மலா வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    மத்திய அரசின் திட்டங்கள் கிராமப்பகுதிகளுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும் என்ற நோக்குடன் கிராம சுயாட்சி இயக்கம் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் 13 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு அங்கு சிறப்பு முகாம் அமைத்து மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட 7 வகையான திட்டங்கள் அனைத்துத்தரப்பு மக்களுக்கும் கிடைத்திடும் வகையில் செயல்படுத்தப்பட்டது.

    இந்த சிறப்பு முகாமில் மத்திய அரசின் திட்டங்கள் 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கிராமப்பகுதியிலுள்ள பெண்கள் அதிக அளவு ஆர்வம் காட்டி அரசின் திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும் என்பதே இதுபோன்ற திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து மகளிர் சுயஉதவி குழுவினரைச் சேர்ந்த உறுப்பினர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், சிவகங்கை கோட்டாட்சியர் ராமபிரதீபன், உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) விஜயநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    ×