search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nilgiirs"

    • இணையத்தில் வீடியோ வைரல்
    • கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை

    அரவேணு,

    கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிரித்து வருகிறது.

    குறிப்பாக காட்டெருமை, சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

    அவ்வாறு வரும் வனவிலங்குகள் வீடுகளை சேதப்படுத்தி, வீட்டில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்தி செல்கிறது.

    கோத்தகிரி அருகே அரவேனு பெரியார் நகர் பகுதி உள்ளது.

    இந்த பகுதியில் ஆயிரக்க ணக்கான மக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு இந்த குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை ஒன்று புகுந்தது.

    இந்த சிறுத்தை வெகுநேரமாக குடியிருப்பு பகுதியிலேயே சுற்றி திரிந்தது. பின்னர் அங்கிருந்து வன த்திற்குள் சென்று விட்டது.

    இந்த காட்சிகள் அனைத்தும், அங்குள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காமிராக்களில் பதிவாகி இருந் தது.

    இதனை பார்த்த குடியிருப்பு வாசிகள் தங்கள் பகுதிக்குள் சிறுத்தை நடமாடியதால் அச்சத்தில் உள்ள னர்.

    இதுகுறித்து மக்கள் கூறும்போது, இந்த பகுதியில் இரவு நேரத்தில் சிறுத்தை வந்து சென்று ள்ளது. இனி இது தொடர்ந்து வரலாம்.

    சிறுத்தை ஊருக்குள் வந்ததால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். அவர்கள் வீடுகளை விட்டு வெளியில் வரவும் தனியாக செல்லும் பயப்படுகின்றனர்

    எனவே சிறுத்தையை கண்காணித்து ஊருக்குள் வராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனத்திற்குள் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • கொணவக்கரை பகுதியில் அதிகாலை நேரத்தில் புகுந்தது
    • சமூகவலைதளங்களில் வீடியோ வைரல்

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்று வட்டாரப் பகுதியில் சமீப காலமாக வனவிலங்குகள் நகர் பகுதியில் உலா வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

    குறிப்பாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டியே அமைந்துள்ள நிலையில் சமீப காலமாக கரடி, காட்டு யானைகள், காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி நகர் மற்றும் கிராம பகுதிகளுக்குள் உலா வரத்தொடங்கி உள்ளது

    கொணவக்கரை பகுதியில் அதிகாலை நேரத்தில் சிறுத்தை ஒன்று உலா வந்துள்ளது. பின்னர் அங்குள்ள தனியார் விடு திக்குள் புகுந்த சிறுத்தை, அங்கு இருந்த வாத்து ஒன்றை கவ்வி சென்றது.

    இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தது.தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    வனவிலங்குகள் நட மாட்டம் அதிகரித்துள்ள நிலையில், வனத்துறையினர் இதுபோன்ற வனவிலங்குகள் கிராம பகுதிகளில் உலா வருவதை தடுக்க பகல் மற்றும் இரவு நேரங்களில் வாகன ரோந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உரிய அனுமதியின்றி நில அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் புகார்கள் வருகிறது.
    • நில அபிவிருத்தியாளர்கள் மீது நகர் ஊரமைப்பு சட்டம் 1971 பிரிவு 47ஏ, 56 மற்றும் 57-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்ட எல்லைக்குள் உரிய அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதாகவும், விவசாய நிலங்களை அழித்து விவசாயம் அல்லாத நோக்கத்திற்காக அனுமதியற்ற முறையில் மனைப்பிரிவுகள் அமைக்கப்பட்டு வருவதாகவும், உரிய அனுமதியின்றி நில அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் புகார்கள் வருகிறது.

    அந்த புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு விதிமீறல்கள் தெரியவரும் போது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    எனவே முறையான அனுமதி ஏதும் பெறப்படாமல் அமைக்கப்படும் மனைப்பிரிவுகளில் பொதுமக்கள் யாரும் மனைகளை வாங்கி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது

    மேலும் பொதுமக்கள் யாரும் முறையான கட்டிட அனுமதி பெறப்படாமல் பணிகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் அனுமதியற்ற கட்டிடங்களை இடிக்கவோ அல்லது மூடி முத்திரையிடவோ தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் மலையிட கட்டிட விதிகள் 1993, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998(திருத்தப்பட்டது 2022)ன் படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நில அபிவிருத்தியாளர்கள் மீது நகர் ஊரமைப்பு சட்டம் 1971 பிரிவு 47ஏ, 56 மற்றும் 57-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    எனவே நீலகிரி மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி பொதுமக்கள் யாரும் கட்டிடம் கட்ட வேண்டாம் எனவும், மனைப்பிரிவு, நில அபிவிருத்தி பணிகள் மற்றும் அணுகுசாலை அமைக்கும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கரோலினா பகுதியில் 150 அடி உயரத்தில் இருந்து திடீரென மண்சரிவு ஏற்பட்டது.
    • அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை.

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது.இதனால் அங்குள்ள ஒரு சில இடங்களில் லேசான மண்சரிவு, மரங்கள் முறிந்து விழும் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது.

    இந்த நிலையில் குன்னூர் உபதலை ஊராட்சிக்கு உட்பட்ட கரோலினா பகுதியில் 150 அடி உயரத்தில் இருந்து திடீரென மண்சரிவு ஏற்பட்டது.இதனால் அந்த வழியாக செல்லும் சாலை சேதமடைந்து உள்ளது. அங்கு கனரக வாகனங்கள் செல்லும்போது விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

    எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • நீலகிரி மாவட்டத்தின் 35 ஊராட்சிகளிலும், கிராமசபா கூட்டம் நடைபெற்றது.
    • ஜல் ஜீவன் இயக்கம், பிரதமரின் ஊரக குடியிருப்பு திட்டம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தின் 35 ஊராட்சிகளிலும், கிராமசபா கூட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உல்லத்தி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் கல்லட்டி சமுதாய கூடத்தில் நடந்தது.

    ஊராட்சி தலைவர் டி.டி. சந்தோஷ்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் சதிஷ் முன்னிலை வகித்தார். இதில் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.கிராமசபை கூட்டத்தில் சிறப்பாக பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

    தொடர்ந்து வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, ஆன்லைனில் வரி செலுத்துவது, துாய்மை பாரத இயக்கம், தேசிய வேலை உறுதி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், பிரதமரின் ஊரக குடியிருப்பு திட்டம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

    ஊட்டியில் நடைபெறும் மெகா வேலைவாயப்பு முகாமில் உல்லத்தி ஊராட்சியில் இருந்து பெருமளவில் இளைஞர்கள் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டது.மேலும் கல்லட்டி சதுக்கம்- சோலடா இடையே ஆத்திக்கல் சாலை வரை நெடுஞ்சாலை பாராமரிப்பு பணிக்க ஒப்படைப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • வனப்பகுதியில் ஆண்டாண்டு காலமாக வசிக்கும் ஆதிவாசிகள்-பொதுமக்கள் இடையே பிரித்தாளும் வேலையை வனத்துறையினர் செய்து வருகின்றனர்.
    • இனிமேல் வனத்துறை உயரதிகாரிகள் வராமல் கிராமசபை நடத்தினால் கருப்பு கொடி போராட்டம் நடத்துவோம்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் மசினகுடி ஊராட்சிக்கு உட்பட்ட மாவநல்லா பகுதியில் கிராம சபை கூட்டம், ஊராட்சி தலைவர் மாதேவி தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் கிரண் வரவேற்றார்.

    துணைத்தலைவர் ராஜேஷ், மசினகுடி ரேஞ்சர் பாலாஜி, சீகூர் ரேஞ்சர் தயானந்தன், வனவர்கள் பரமசிவம், ஸ்ரீராம் மற்றும் போலீசார் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் தனியார் வன பாதுகாப்பு சட்டத்தில் மாற்றம் செய்ய அரசுக்கு வலியுறுத்துவது, வாழைதோட்டம் பகுதி மக்களின் ஜீவதார பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    தொடர்ந்து கிராம சபை கூட்டத்தில் பொது மக்கள் பேசும்போது வனத்துறைக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். இதுகுறித்து அவர்கள் பேசியதாவது:-

    100 நாள் வேலை திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு 10 நாட்கள் மட்டுமே வேலைகிடைக்கிறது. மேலும் வருவாய்துறைக்கு சொந்தமான இடங்களை வனத்துறைக்கு வழங்க கூடாது.

    வனத்துறை அதிகாரிகள் புதிய வீடுகள் கட்டவும், உள்ளூர் மக்களின் வாகன போக்குவரத்துக்கும் தடை விதித்து வருகின்றனர். வளர்ச்சி பணிகளுக்கு கூட முட்டுக்கட்டை போடப்படுகிறது.

    வனப்பகுதியில் ஆண்டாண்டு காலமாக வசிக்கும் ஆதிவாசிகள்-பொதுமக்கள் இடையே பிரித்தாளும் வேலையை வனத்துறையினர் செய்து வருகின்றனர்.

    மேலும் வனத்துறை உயரதிகாரிகள் மற்றும் மாவட்ட உயர் அதிகாரிகள் யாருமே கிராம சபை கூட்டங்களுக்கு வருவ தில்லை. அவர்கள் வந்தால்தானே எங்கள் வாழ்க்கை பிரச்சனைக்கு வழி சொல்லமுடியம். இனிமேல் வனத்துறை உயரதிகாரிகள் வராமல் கிராமசபை நடத்தினால் கருப்பு கொடி போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அண்ணா, பெரியார் பிறந்த நாளையொட்டி தமிழ் வளர்ச்சித்துறை ஏற்பாடு
    • போட்டிகளில் கலந்துகொள்ள விரும்புவோர் வருகிற 27-ந் தேதிக்குள் மின்னஞ்சல் அனுப்ப அறிவுறுத்தல்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பேரறிஞர் அண்ணா, பெரியார் பிறந்தநாளை யொட்டி வருகிற 30 மற்றும் 31-ந் தேதிகளில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகள் தனித்தனியே நடத்தப்பட உள்ளது.

    ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் காலை 10 மணிக்கு இந்த போட்டிகள் நடக்கிறது. இதில் பங்கேற்று வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.3000, மூன்றாம் பரிசாக ரூ.2000 மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

    அத்துடன் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் பேச்சு போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களில் சிறப்புடன் திறமையை வெளிப்ப டுத்தும் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரை தேர்வு செய்து, 2 பேருக்கும் சிறப்பு பரிசுத்தொகையாக ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

    போட்டிகளுக்கான தலைப்புகளில் ஏதேனும் ஒன்றை போட்டி நடை பெறும் நேரத்தில் மாண வர்கள் குலுக்கல் சீட்டு முறையில் தெரிவு செய்து அந்தத் தலைப்பில் மட்டுமே பேசுவதற்கு அனுமதிக்கப் பெறுவர்.

    எனவே தரப்பட்டுள்ள அனைத்துத் தலைப்புகளிலும் பேசுவதற்கு உரிய தயாரிப்புடன் மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்க வேண்டும்.

    மாவட்ட அளவிலான இப்போட்டிகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் உரிய பங்கேற்புப் படிவத்தைப் பூர்த்தி செய்து பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் கல்லூரி முதல்வர் பரிந்து ரையுடன் ஒப்பமும் பெற்று வருகிற 27-ந் தேதிக்கு ootytamilvalarchi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.

    இந்த போட்டிகளில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறுங்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஜே.சி.பி. மற்றும் நவீன எந்திரங்களின் உதவியுடன் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
    • இந்த வழித்தடத்தில் இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அருவங்காடு,

    குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பாதை மற்றும் மலையறையில் பாதையில் அவ்வப்போது மண் சரிவு மற்றும் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    இதனிடையே குன்னூர் அருகே உள்ள பழைய அருவங்காடு பகுதியில் ராட்சத மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதித்தது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு, நெடுஞ்சாலை துறை மற்றும் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை, தீயணைப்பு துறையினரும் இணைந்து ஜே.சி.பி. மற்றும் நவீன எந்திரங்களின் உதவியுடன் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    இதனால் இந்த வழித்தடத்தில் இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    • அடிப்படை தேவைகளுக்கு நிதி ஒதுக்க கோரிக்கை
    • அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நடவடிக்கை எடுப்பதாக உறுதி

    ஊட்டி,

    கூடலூர் ஒன்றிய தலைவர் கீர்த்தனா, தேவர்சோலை பேருராட்சி தலைவர் வள்ளி ஆகியோர் சென்னையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜை நேரில் சந்தித்து பேசினர்.

    தொடர்ந்து அவர்கள் அளித்த கோரிக்கை மனுவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் 5 பெரிய ஊராட்சிகளை கொண்ட கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் அடிப்படை தேவைகளை சிறப்பாக செய்து தர கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

    மேலும் அடிப்படை தேவைகளுக்கான கருத்துருக்கள் தயாரிக்கப்பட்டு மாவட்ட. நிர்வாகத்திடம் வழங்கபட்டு உள்ளது. அதற்கு தேவையான நிதியையும் ஒதுக்கீடு செய்து உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.

    கோரிக்கை மனுவை படித்து பார்த்த ஆதிதிராவிடர் பழங்குடியின நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இதுகுறித்து உரியநடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    • மாலை அணிவித்து சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.
    • தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    அருவங்காடு,

    தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் குன்னூரில் 61 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

    இதில் அவர்களுக்கு மாலை அணிவித்து சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மகப்பேறு உதவி திட்டங்கள், கர்ப்பகால பராமரிப்பு, தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மேலும் குன்னூரை சேர்ந்த கர்ப்பிணி பெண்களுக்கு தமிழக அரசின் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டம் மூலம் ரூ.18 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரம் ரூபாய மதிப்பிலான ஊட்டசத்து பெட்டகம் ஆகியவையும் வழங்கப்பட உள்ளது.

    குன்னூர் லயன்ஸ் கிளப் தலைவர் அஸ்வினி தன்வானி, பொருளாளர் நளினி லட்சுமணன், செயலாளர் ஸ்ரதா, உறுப்பினர்கள கோபால், முருகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக பொருளுதவி செய்த தி.மு.க நகரமன்ற துணை தலைவர் வாஸிம் ராஜாவிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட அலுவலர பூங்கொடி, மேற்பார்வையாளர் கண்ணம்மா, கணகாணிப்பாளர் தேவரம்மா, வட்டார ஒருங்கிணைப்பாளர் காளீஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.

    • முன்னாள் ராணுவ வீரா்கள், விதவைகள் உள்பட 869 பேர் கலந்து கொண்டனா்.
    • நந்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனை சாா்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

    ஊட்டி,

    வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் மையம், தக்ஷின்பாரத் ஆகியவை சாா்பில் நஞ்சன்புரம் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் ராணுவ வீரா்களுக்கான குறைதீா்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் முன்னாள் ராணுவ வீரா்கள், விதவைகள் உள்பட 869 பேர் கலந்து கொண்டனா்.

    மேலும் முன்னாள் ராணுவத்தினரின் பங்களிப்பு நலத்திட்டம், ஜில்லா சைனிக் வாரியம் மற்றும் மீள்குடியேற்ற இயக்குநரகம் தொடர்பாக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

    தொடர்ந்து நந்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனை சாா்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

    பின்னர் கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவா்களின் கலாசார நிகழ்ச்சிகள், மெட்ராஸ் ரெஜிமென்டல் மையத்தின் பேண்ட் சிம்பொனியும் நடைபெற்றன.

    நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா, மெட்ராஸ் ரெஜிமென்ட் மையத்தின் கமாண்டன்ட் பிரிகேடியா் சுனில்குமாா் யாதவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆதிவாசிகள் நலச்சங்கம், ஊட்டி லவ்டேல் பள்ளி நிா்வாகம் இணைந்து கட்டிக் கொடுத்தது
    • எம்.எல்.ஏ பொன்.ஜெயசீலன் கட்டிடத்தை திறந்து வைத்தாா்

    ஊட்டி

    கூடலூா் நகராட்சியில் உள்ள கோடமூலா பழங்குடி கிராமத்துக்கு ஆதிவாசிகள் நலச்சங்கம், ஊட்டி லவ்டேல் லாரன்ஸ் பள்ளி நிா்வாகம் ஆகியவை இணைந்து அங்கன்வாடி மையம் கட்டிக் கொடுத்து உள்ளன. இந்த கட்டடத்தின் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

    கூடலூா் எம்.எல்.ஏ பொன்.ஜெயசீலன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் கூடலூா் கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா, டி.எஸ்.பி செல்வராஜ், லாரன்ஸ் பள்ளி நிா்வாகி டேவிட் மற்றும் பழங்குடி மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனா். 

    ×