கோத்தகிரி அருகே விடுதியில் இருந்த வாத்தை கவ்வி செல்லும் சிறுத்தை

கொணவக்கரை பகுதியில் அதிகாலை நேரத்தில் புகுந்தது சமூகவலைதளங்களில் வீடியோ வைரல்
கோத்தகிரி அருகே விடுதியில் இருந்த வாத்தை கவ்வி செல்லும் சிறுத்தை
Published on

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்று வட்டாரப் பகுதியில் சமீப காலமாக வனவிலங்குகள் நகர் பகுதியில் உலா வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

குறிப்பாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டியே அமைந்துள்ள நிலையில் சமீப காலமாக கரடி, காட்டு யானைகள், காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி நகர் மற்றும் கிராம பகுதிகளுக்குள் உலா வரத்தொடங்கி உள்ளது

கொணவக்கரை பகுதியில் அதிகாலை நேரத்தில் சிறுத்தை ஒன்று உலா வந்துள்ளது. பின்னர் அங்குள்ள தனியார் விடு திக்குள் புகுந்த சிறுத்தை, அங்கு இருந்த வாத்து ஒன்றை கவ்வி சென்றது.

இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தது.தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வனவிலங்குகள் நட மாட்டம் அதிகரித்துள்ள நிலையில், வனத்துறையினர் இதுபோன்ற வனவிலங்குகள் கிராம பகுதிகளில் உலா வருவதை தடுக்க பகல் மற்றும் இரவு நேரங்களில் வாகன ரோந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com