search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு துறை அதிகாரிகளுடன் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு கூட்டம்
    X

    கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில் ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர், ஆணையர்  பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற போது எடுத்த படம்.

    அரசு துறை அதிகாரிகளுடன் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு கூட்டம்

    • வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டுறவுத்துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர்க்கடன் குறித்தும் ஆய்வு செய்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில் ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர், ஆணையர் (ஆவணகாப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி த்துறை) பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர், ஆணையர் (ஆவணகாப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறை) பிரகாஷ் வேளாண்மை- உழவர் நலத்துறை சார்பில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி த்துறை சார்பில் அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டம் சமத்துவபுர குடியிருப்புகள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ஜல்ஜீவன் மிஷன், அம்ருத் 2.0, தூய்மை பாரத இயக்கம் 2.0 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நிலுவையில் உள்ள பட்டாக்கள், வட கிழக்கு பருவ மழை முன்னே ற்பாடு பணிகள், பள்ளி க்கல்வி த்துறை சார்பில் இல்லம் தேடிகல்வி, எண்ணும் எழுத்தும் இலக்கியம்.

    பள்ளிக் கட்டிடங்களின் உட்கட்டமைப்பு வசதிகள், மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மக்களைத் தேடி மருத்துவம், சிறப்பு திட்ட செயலாக்கம், நான் முதல்வன், உங்கள் தொகுதியில் முதல்-அமை ச்சர், முதல்- அமைச்சரின் காலை உணவு திட்டம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச்சத்து உறுதி செய் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்ட ப்பணிகள் குறித்து தொடர்புடைய துறை அலுவலர்களு டன் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் கூட்டுறவுத்துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர்க்கடன் குறித்தும் ஆய்வு செய்தார்.

    மேலும் தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் ஈரோடு மாவட்டத்தில் உள்ளஅனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையிலும் மற்றும் முதல்-அமைச்சரின் செயல்பாட்டிற்க்கு உறுதுணையாக இருக்கும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து தங்களது பணியினை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். மற்றும் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிரா மஊராட்சிகள் ஆகிய பகுதிகளில் பொது மக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைத்திடவேண்டும் என அலுவலர்களுக்கு ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) நார ணவ்ரே மனிஷ் சங்கர்ராவ் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) செல்வராஜன், இணை இயக்குநர் (வேளாண்மை -உழவர் நலத்துறை) வெங்கடேசன் (பொ), ஈரோடு அரசு மருத்துவ க்கல்லூரி மருத்துவ மனை முதல்வர் டாக்டர் வள்ளி, துணை இயக்குநர் (சுகாதாரபணிகள்) டாக்டர் சோமசுந்தரம், மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணை ப்பதிவாளர் ராஜ்குமார், மாநகர நல அலுவலர் பிரகாஷ் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×