search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Breakfast Scheme"

    • தமிழ்நாட்டில் முதலமைச்சரின் 'காலை உணவுத் திட்டம்’ இந்தியா முழுவதும் வரவேற்பை பெற்றுள்ளது
    • தமிழ்நாட்டை பின்பற்றி தெலுங்கானா மாநிலத்தில் தற்போது 6500000 உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது

    கனடா நாட்டிலும் 'காலை உணவுத் திட்டம்' நடைமுறைக்கு வந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் முதலமைச்சரின் 'காலை உணவுத் திட்டம்' இந்தியா முழுவதும் வரவேற்பை பெரும் நிலையில், வெளிநாடுகளிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்குப் பார்வைக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என திமுக பெருமிதமாக தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக திமுக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,

    "மாண்புமிகு தமிழ்நாடு அவர்களின் கனவுத் திட்டமாக முதலமைச்சர் திரு.மு.கூ.ஸ்டாலின் தமிழ்நாடு அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் வெகு சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டப் பேரவையில் 7.5.2022 அன்று விதி 110 ன் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இனிமேல் காலை சிற்றுண்டி வழங்கப்படும் அறிவித்தார்.

    நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும், பள்ளிக்குச் செல்லக் கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுகிறார்கள். இதனால் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்குக் கிடைத்திருக்கிறது என்றும். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்றும் இதனை உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக வழங்குவோம். படிப்படியாக அனைத்து பகுதிகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவித்தார்கள்.

    இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான 15.92022 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இத்திட்டத்தினை மதுரையில் தொடங்கி வைத்தார்கள். மேலும், 258.2023 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்த திருக்குவளை கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கி உணவுத் திட்டத்தினை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தினார்கள். அதன் மூலம் 31000 அரசுப் பள்ளிகளில் 17 இலட்சம் குழந்தைகள் நாள்தோறும் காலை உணவு உண்டு வகுப்பறைகளில் சிறப்பாகக் கல்வி பயின்று வருகின்றனர்.

    இத்திட்டத்தின் சிறப்புகளை, தெலுங்கானா மாநில அரசு அறிந்து அதன் அலுவலர்கள் தமிழ்நாட்டிற்கு வருகைபுரிந்து காலை உணவு தயாரிக்கப்படும் இடம், பள்ளிகளுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பப்படுதல், பள்ளிகளில் குழந்தைகள் சாப்பிடுதல் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு தமிழ்நாடு இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. தெலுங்கானா மாநிலத்திலும் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று கூறிச் சென்றனர். அவ்வாறே தெலுங்கானா மாநிலத்தில் தற்போது உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்தக் காலை உணவுத் திட்டம் இந்தியா முழுவதும் புகழடைந்து வருகின்ற நிலையில், இந்தியாவைக் கடந்து வெளிநாடுகளிலும் நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிமுகப்படுத்திய காலை உணவுத் திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் இன்று கனடா நாட்டில் பள்ளிக் குழந்தைகளுக்கு தேசிய உணவுத் திட்டத்தினை அறிமுகம் செய்து வைக்கப்போகிறோம் எனப் பதிவிட்டுள்ளார்.

    தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள காலை உணவுத் திட்டம் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்படுவது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்குப் பார்வைக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாகும்" என திமுக தெரிவித்துள்ளது.

    • மலையின மக்களின் சுகாதார தேவைகள் குறித்து அறிந்து கொண்டேன்.
    • மலை கிராமங்களில் இளம்பிள்ளைகள் திருமணத்தை தடுக்க வேண்டும்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள குடகரை பகுதியில் இன்று காலை 7 மணியளிவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் பயன்கள் குறித்த ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளரிகளிடம் கூறியதாவது;-

    கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் தேன்கனிக்கோட்டையில் உள்ள மலை கிராமங்களில் நான் ஆய்வு மேற்கொண்ட போது மலையின மக்களின் சுகாதார தேவைகள் குறித்து அறிந்து கொண்டேன். அந்த அடிப்படையில் உருவானது தான் மக்களை தேடி மருத்துவ திட்டம். இதில் தற்போது 1.67 கோடி பேர் பயன் அடைந்து வருகின்றனர். தற்போது நான் ஆய்வு வகையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகளில் மலை கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த வீடுகள் மோசமான நிலையில் உள்ளன. அதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் மலை கிராம மக்கள் பயன்பெறும் வகையில் குடகரை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும். கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து சோதனை, மற்றும் கண் பரிசோதனை செய்யப்படும். முதலமைச்சர் கொண்டு வந்துள்ள காலை உணவு திட்டத்துக்கு பிறகு மலை கிராம மாணவர்கள் ஆர்வத்துடன் படிக்க வருகிறார்கள் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர். மலை கிராமங்களில் இளம்பிள்ளைகள் திருமணத்தை தடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உத்தேச மதிப்பீடு தயாரித்து அதற்கான ஒப்புதல் சென்னை மாநகராட்சியின் மன்றத்தில் பெறப்பட்டது.
    • இதற்கான ஒப்பந்தப் புள்ளி ஏதும் தற்போது கோரப்படவில்லை.

    சென்னை மாநகராட்சியில் நவம்பர் மாதத்துக்கான மாதாந்திர மன்றக் கூட்டம் கடந்த 29-ந்தேதி ரிப்பன் மாளிகையில் நடந்தது. இதில், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தில் சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள 358 அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்குவதை வெளி நிறுவனம் மூலம் ஓராண்டுக்கு ஒப்பந்தம் வழங்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது, காலை உணவு திட்டத்தை தனியாருக்கு ஒப்பந்தம் கொடுக்கும் முறைக்கு இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கவுன்சிலர்களின் எதிர்ப்பையும் மீறி காலை உணவு திட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல, பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரித்தன. இந்த நிலையில், காலை உணவு திட்டத்தை தனியாருக்கு கொடுக்கும் டெண்டர் அறிவிப்பு தற்போது கோரப்படவில்லை எனவும், மாநகராட்சி சார்பிலேயே தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மாநகராட்சியில் 358 பள்ளிகளில் 1 முதல் 5 - ம் வகுப்பு வரை பயிலும் 65 ஆயிரத்து 30 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், நிர்மாணிக்கப்பட்ட 35 சமையல் கூடங்களில் இருந்து, தினசரி உணவு வழங்கப்பட வேண்டிய அட்டவணையின்படி உயர் அலுவலர்களின் கண்காணிப்பில் காலை உணவு தரமாக தயாரித்து வழங்கும் பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த பணியில் உயர் அலுவலர்கள் கொண்ட குழுவின் கண்காணிப்புடன் ஒப்பந்த அடிப்படையில் காலை உணவு தரமாகத் தயாரித்து வழங்குவதற்கான நிலை ஏற்படுமாயின் அதற்கான உத்தேச மதிப்பீடு தயாரித்து அதற்கான ஒப்புதல் சென்னை மாநகராட்சியின் மன்றத்தில் பெறப்பட்டது.

    இதற்கான ஒப்பந்தப் புள்ளி ஏதும் தற்போது கோரப்படவில்லை. முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் சென்னை மாநகராட்சியில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டமானது தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திட்டத்திற்கு அரசு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
    • உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் வரை காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

    தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டம் தொடங்கப்பட்ட உடனே தெலுங்கானா மாநிலத்தில் இருந்து அதிகாரிகள் தமிழகம் வந்தனர். அவர்கள் சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் செயல்ப டுத்தப்படும் காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்தனர்.

    இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வருகிற அக்டோபர் 24-ந் தேதி முதல் தெலுங்கானா மாநில அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்படுகிறது.

    இந்த திட்டத்திற்கு அரசு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் வரை காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

    • விளாத்திக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கலெக்டர் செந்தில்ராஜ் மற்றும் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்து குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்தினர்.
    • பள்ளியில் சமையலராக வேலை செய்யும் ஒருவரிடம், பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தனர்.

    விளாத்திகுளம்:

    தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் விளாத்திக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்1-ம் முதல் 5-ம் வகுப்பு பயிலும் மாணவ -மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படுவதை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் மற்றும் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்து குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்தினர்.

    மேலும் பள்ளியில் சமையலராக வேலை செய்யும் ஒருவரிடம் குழந்தைகளுக்கு உணவு சமைக்கும்போது வாரத்துக்கு ஒரு முறை நகம் வெட்ட வேண்டும் தலையில் தொப்பி அணிய வேண்டும் என பல்வேறு வழிமுறை ஆலோசனைகளை வழங்கி உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தனர்.

    நிகழ்ச்சியில் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீனிவாசன், தாசில்தார் ராமகிருஷ்ணன், பள்ளி தலைமை ஆசிரியை இந்திராணி, விளாத்திகுளம் பேரூராட்சி தலைவர் சூர்யா அய்யன்ராஜ், துணைத் தலைவர் வேலுச்சாமி, மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன், முன்னாள் வார்டு கவுன்சிலர் ராமமூர்த்தி, சட்டமன்ற தொகுதி தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், உட்பட துறை சார்ந்த அதிகாரி கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கமுதி பகுதியில் காலை உணவு திட்டம் தொடக்கப்பட்டது.
    • இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் கலந்து கொண்டனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட115 மையங்களில் முதல்வரின் காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. கமுதி அருகே என்.கரிசல் குளம் ஊராட்சிக்கு உட்பட்ட என்.வாலசுப்பிரமணியபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்செல்வி போஸ் திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுடன் உணவருந்தினார்.

    இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் மணிமேகலை, சங்கரபாண்டியன், மேலாளர் ராமசந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி நாகராஜன், ஒன்றிய கவுன்சிலர் மகாலட்சுமி ஜெயராஜ், தலைமையாசிரியை சிவஜோதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காலை உணவு குழந்தைகளின் உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கிறது.
    • இதுவரை 40 தொடக்கப்பள்ளிகளை சேர்ந்த 2,775 பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.

    நெல்லை:

    தமிழகத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 7-ந் தேதி சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

    திட்டம் தொடக்கம்

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதி அன்று அண்ணா பிறந்த நாளில் மதுரையில் இத்திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.

    இத்திட்டம் தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 1.14 லட்சம் தொடக்கப்பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டது.

    முதல்-அமைச்சர்

    அதனைத் தொடர்ந்து ரூ.404 கோடியில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊரகப் பகுதி மற்றும் பேரூராட்சி, நகர்புற பகுதிகளில் உள்ள 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 31,008 அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 15.75 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தினை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் தொடங்கி வைத்துள்ளார்.

    சபாநாயகர் தொடங்கி வைத்தார்

    இதனை ஒட்டி நெல்லை மாவட்டத்தில் ராதாபுரத்தில் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் இன்று கலெக்டர் கார்த்திகேயன் முன்னிலையில் சபாநாயகர் அப்பாவு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் சபாநாய கர் அப்பாவு பேசியதாவது:-

    காலை உணவு குழந்தை களின் உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிப்பதோடு, இரவு உணவுக்குப் பின் ஏற்படும் நீண்ட இடைவெளியுடன் கூடிய பசியை தணிப்பதாக அமைகிறது. மேலும், காலை உணவினை தவிர்க்கும் நிலையில் உள்ள குழந்தைகள் மிகுந்த சோர்வுடனும், கவனிப்புத் திறன் குறைந்தும் காணப்படுவர் என ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

    காலை உணவு சாப்பிடா மல் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த இயலாமல் சோர்வடைந்து விடுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

    40 தொடக்கப் பள்ளிகள்

    நெல்லை மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 16-ந்தேதி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முதற்கட்டமாக 22 தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 2,246 மாணவ - மாணவிகள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்டது. மேலும் மாநகராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் என 18 தொடக்கப்பள்ளிகள் இத்திட்டத்தில் சேர்க்க ப்பட்டு, இதுவரை 40 தொடக்கப்பள்ளிகளை சேர்ந்த 2,775 பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். தொடர்ந்து இன்று மாவட்டத்தி ற்குட்பட்ட ஊரகப் பகுதிகளில் செயல்ப டும் 286 தொடக்க ப்பள்ளிகளில் பயிலும் 13,388 மாணவர்களும், பேரூராட்சி பகுதிகளில் செயல்படும் 43 அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் 2,894 மாண வர்களும், நகர்புற பகுதி களில் செயல்படும் 19 பள்ளி களில் பயிலும் 1,162 மாண வர்கள் என மொத்தம் 348 தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 17,444 மாணவ, மாணவிகள் பயனடை வார்கள்.

    வரலாற்று சிறப்பு மிக்க திட்டம்

    வரலாற்று சிறப்புமிக்க திட்டத்தால் மாணவர்கள் தடையின்றி கல்வி பயிலுவதற்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு மாணவர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட அரசாக இந்த அரசு திகழ்ந்து வருகிறது. அரசுப்பள்ளி மாணவர்கள் எதிர்காலங்களில் பெரிய உயர் பதவிக்கு வரவேண்டும் என்பதற்காகவே இது போன்று அற்புதமான திட்டங்களை முதல்-அமைச்சர் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மாணவ, மாணவிகளுக்கு உணவு பரிமாறிய கனிமொழி எம்.பி. தொடர்ந்து அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
    • மாவட்டம் முழுவதும் 18 ஆயிரத்து 819 மாணவ,மாணவிகள் இத்திட்டத்தால் பயனடைகின்றனர்.

    தூத்துக்குடி:

    முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் மாநிலம் முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி இத்திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திருக்குவளையில் தொடங்கி வைத்தார்.

    கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்

    இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி சோரீஸ்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். இப்பள்ளியில் காலை உணவாக கிச்சடி, கேசரி வழங்கப்பட்டது. அப்போது மாணவ, மாணவிகளுக்கு உணவு பரிமாறிய கனிமொழி எம்.பி. தொடர்ந்து அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

    இப்பள்ளியில் மொத்தம் 125 மாணவ- மாணவிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்தனர். மாவட்டம் முழுவதும் 524 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் மொத்தம் 18 ஆயிரத்து 819 மாணவ - மாணவிகள் இத்திட்டத்தால் பயனடைகின்றனர்.

    கலந்து கொண்டவர்கள்

    முன்னதாக நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சண்முகையா எம்.எல்.ஏ., சப்-கலெக்டர் கவுரவ்குமார், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) வீரபுத்திரன், தாசில்தார் பிரபாகரன், தூத்துக்குடி யூனியன் சேர்மன் வசுமதி அம்பாசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹெலன் பொன்மணி, வசந்தா, அய்யனடைப்பு ஊராட்சி தலைவர் அதிஷ்ட கணபதி ராஜேந்திரன், துணைத் தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி செயலர் சங்கர ராமசுப்பிரமணியன், தூத்துக்குடி மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜெயக்கொடி, துணை செயலாளர் ஹரி பாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி வெயில்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவ -மாணவிகள் அனைவருக்கும் சேமியாகிச்சடி மற்றும் காய்கறி சாம்பார் மற்றும் இனிப்பு உணவாக வழங்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் ஆத்தூர் பேரூராட்சி சேர்மன் கமால்தீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தென்திருப்பேரை:

    முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் தமிழகம் முழுவதும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் இன்று தொடங்கப்பட்டது.

    அதனை முன்னிட்டு ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றியம், ஆவாரங்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தினை மாணவ- மாணவிகளோடு சேர்ந்து உணவு அருந்தி ஒன்றிய சேர்மன் ஜனகர் தொடங்கி வைத்தார்.

    மாணவ -மாணவிகள் அனைவருக்கும் சேமியாகிச்சடி மற்றும் காய்கறிசாம்பார் மற்றும் இனிப்பு உணவாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆத்தூர் பேரூராட்சி சேர்மன் கமால்தீன் மற்றும் துணைத் தலைவர் மகேஸ்வரி, மாவட்ட திட்ட அலுவலர் லீமாரோஸ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாக்கியம்லீலா, நாகராஜன், ஆத்தூர் நகரசெயலாளர் முருகானந்தம், விவசாய அணி துணைச் செயலாளர்கள் மாணிக்கவாசகம், கோபி, மாவட்ட பிரதிநிதி கணேசன், வார்டு செயலாளர் கொடிவேல், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் முத்து, கமலசெல்வி, கோமதி, அசோக்குமார், பாலசிங், வசந்தி மற்றும் நகரத் துணைச் செயலாளர் செல்வராஜ், ஜேம்ஸ், பிரபாகரன், ஆறுமுகநயினார், பேச்சிராஜா, முருகன், பெரியசாமி உட்பட ஊர் பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக தலைமை ஆசிரியர் லாரன்ஸ் வரவேற்றார். முடிவில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் செந்தூர் மணி நன்றி கூறினார்.

    • ஒரு மாணவ, மாணவிக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் காலை உணவுக்கான மூலப் பொருட்களின் அளவு 50 கிராம் அரிசி ரவை, கோதுமை ரவை , சேமியா.
    • ஒரு வாரத்தில் குறைந்தது 2 நாட்களாவது உள்ளூரில் கிடைக்கக்கூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவு வழங்கப்படுகிறது.

    திங்கட்கிழமை-காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா உப்புமா, சேமியா உப்புமா, அரிசி உப்புமா, கோதுமை ரவை உப்புமா;

    செவ்வாய்க்கிழமை -காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா காய்கறி கிச்சடி, சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவை கிச்சடி,

    புதன்கிழமை -காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா பொங்கல், வெண் பொங்கல்.

    வியாழக்கிழமை -காய்கறி சாம்பாருடன் கூடிய சேமியா உப்புமா, அரிசி உப்புமா, ரவா உப்புமா, கோதுமை ரவை உப்புமா.

    வெள்ளிக்கிழமை- காய்கறி சாம்பாருடன் கூடிய சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, ரவா காய்கறி கிச்சடி, கோதுமை ரவை கிச்சடி ஆகியவை மாணவர்களுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

    ஒரு மாணவ, மாணவிக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் காலை உணவுக்கான மூலப் பொருட்களின் அளவு 50 கிராம் அரிசி ரவை, கோதுமை ரவை , சேமியா.

    மேலும், அந்தந்த இடங்களில் விளையும் சிறுதானியங்கள், சாம்பாருக்கான பருப்பு 15 கிராம் மற்றும் உள்ளூரில் கிடைக்கக்கூடிய காய்கறிகள், ஒரு வாரத்தில் குறைந்தது 2 நாட்களாவது உள்ளூரில் கிடைக்கக்கூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவு வழங்கப்படுகிறது.

    • சென்னையில் 358 மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் 65 ஆயிரம் குழந்தைகள் இதன் மூலம் பயனடைகிறார்கள்.
    • 30 முதல் 40 சதவீதம் மாணவர்களின் வருகை உயர்ந்துள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் காலை சிற்றுண்டி விரிவாக்கம் திட்டத்தை சென்னையில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    சென்னையில் 358 மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் 65 ஆயிரம் குழந்தைகள் இதன் மூலம் பயனடைகிறார்கள். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவல்லிக்கேணி பிரதான சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாலை சிற்றுண்டியை குழந்தைகளுக்கு வழங்கி தொடங்கி வைத்து அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காலை உணவு திட்டத்தில் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. 30 முதல் 40 சதவீதம் மாணவர்களின் வருகை உயர்ந்துள்ளது. காலை உணவு நன்றாக இருக்கிறதா? என்று குழந்தைகளிடம் கேட்டேன். அவர்கள் நன்றாக இருப்பதாக சொன்னார்கள்.

    மாணவர்களும் பெற்றோர்களும் இத்திட்டத்தை வரவேற்று நன்றி தெரிவித்து வருகின்றனர். இந்தியாவிலேயே பல முன்னோடி திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

    அந்த வகையில் இந்த திட்டமும் சிறந்ததாகும். மாணவர்களோடு நானும் ஒரு பயனாளியாக அமர்ந்து சாப்பிட்டேன்.

    இத்திட்டம் செயல்பாடு குறித்து ஆய்வு செய்யப்படும். உள்ளாட்சி பிரதிநிதிகள் மட்டுமின்றி உணவு பாது காப்பு அதிகாரிகளும் ஆய்வு செய்வார்கள்.

    இதற்கான பிரத்யேக ஆப் மூலம் கண்காணிக்கப்படுகிறது. உணவு தயாரிக்கும் இடம் முதல் மாணவர்களுக்கு கொண்டு சென்று வழங்கும் வரை கண்காணிக்கப்படுகிறது. எங்காவது குறை இருந்தாலும் சரி செய்யப்படும்.

    உலக செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா வெற்றி வாய்ப்பை இழந்தாலும் இது மிகப்பெரிய சாதனையாகும். சென்னை வரும்போது அவருக்கு வரவேற்பு கொடுக்கப்படும். 19 வயதில் இந்த சாதனையை அவர் நிகழ்த்தி இருக்கிறார். மேலும் பல சாதனைகளை செய்வார்.

    சந்திரயான்-3 வெற்றி எல்லோருக்கும் கிடைத்த வெற்றி. 3 தமிழர்கள் இருக்கிறார்கள். ஒட்டு மொத்த அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கும் பாராட்டுக்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாந்தோப்பு பள்ளியிலும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெரம்பூர் மடுமாநகரில் உள்ள பள்ளியிலும் இத்திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ராதாகிருஷ்ணன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., மண்டலத் தலைவர்கள் மதன் மோகன், சரிதா மகேஷ்குமார், கிருஷ்ண மூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • 1 முதல் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
    • இந்த ஆண்டு ரூ.404 கோடியே 41 லட்சத்து 31 ஆயிரத்து 980 வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    1 முதல் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தினால் ஏற்பட்டுள்ள நற்பயனை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளி மாணவ-மாணவியர்களும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

    அதற்கேற்ப இந்த திட்டத்தை விரிவுபடுத்தும் பொருட்டு இந்த ஆண்டு ரூ.404 கோடியே 41 லட்சத்து 31 ஆயிரத்து 980 வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு வெளியிட்டுள்ளார்.

    இதன் மூலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊரக பகுதிகளில் செயல்படும் 31,008 அரசு பள்ளிகளில் படிக்கும் 15 லட்சத்து 75 ஆயிரத்து 900 தொடக்கப்பள்ளி மாணவ-மாணவியர் பயனடைய உள்ளனர்.

    ×