search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Soumya Swaminathan"

    • தரமணி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கவுன்சில் சார்பில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.
    • இதில் உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் பங்கேற்றார்.

    சென்னை:

    சென்னை தரமணியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்.) சார்பில் தேசிய அறிவியல் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

    இதில், உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானியும், எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை தலைவருமான

    சவுமியா சுவாமிநாதன் பேசியதாவது:

    அறிவியல் வளர்ச்சி உலக அளவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்றை எதிர்கொள்ள ஒரு ஆண்டில் தடுப்பூசி கண்டுபிடிக்க முடிந்தது.

    கொரோனா தொற்று அடியோடு ஒழிந்து விட்டதாக கருதமுடியாது. மொத்தம், 27 வகை வைரஸ்கள் உள்ளதால் எந்த வகை வைரஸ் தாக்கும் என கணிக்க முடியாது. இனிமேல் மனிதர்கள் கூடவே வைரஸ் இருக்கும்.

    தடுப்பூசி போட்டதாலும், இயற்கை சூழல் காரணமாகவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்ததால், கொரோ தாக்கம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

    குழந்தைகளுக்கு எளிதாக கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது. தற்போது பரவும் காய்ச்சல் குறித்து தீவிர பரிசோதனை தேவை. காற்றில் பரவும் வைரஸ் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணிவது அவசியம்.

    எந்த வைரஸ் வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்தார்.

    ஈரான் நாட்டில் பெண்கள் தலையில் முக்காடு அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் அந்நாடில் நடக்கவுள்ள ஆசிய செஸ் போட்டியில் இருந்து இந்திய வீராங்கனை விலகியுள்ளார். #SoumyaSwaminathan #Chess
    புனே:

    ஆசிய அணிகள் பிரிவு செஸ் போட்டி ஈரான் நாட்டில் உள்ள ஹமதான் நகரில் ஜூலை 26-ந்தேதி முதல் ஆகஸ்டு 4-ந்தேதி வரை நடக்கிறது.

    இந்தப் போட்டியில் விளையாட இருந்த இந்தியாவின் 5-ம் நிலை வீராங்கனை சவுமியா சுவாமிநாதன் அதில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் தலையில் முக்காடு அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் முக்காடு அணிய மாட்டேன் என்று கூறி அவர் விலகியுள்ளார். இது தொடர்பாக 29 வயதான சவுமியா கூறியதாவது:-

    தலையில் முக்காடு அல்லது புர்கா அணிய வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை.கட்டாயம் அணிய வேண்டும் என்பது எனது அடிப்படை உரிமைக்கு எதிரானது. இதனால் ஈரானில் நடைபெறும் ஆசிய அணிகள் பிரிவு போட்டியில் பங்கேற்க மாட்டேன்.



    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    சவுமியா உலக ஜூனியர் பட்டத்தை வென்றவர். உலக தர வரிசையில் தற்போது 97-வது இடத்தில் இருக்கிறார்.#SoumyaSwaminathan #Chess
    ×