search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Science Day"

    • வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
    • பட்ஜெட்-2023 என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது.

    நெல்லை:

    நெல்லை சாரதா மகளிர் கல்லூரியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் கமலா சிறப்பு விருந்தினர் குறித்து அறிமுக உரையாற்றினார். கல்லூரி செயலாளர் யத்தீஸ்வரி சரவணபவபிரியா அம்பா ஆசியுரை வழங்கினார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பிச்சுமணி தொடக்க உரையாற்றினார். பல்கலைக்கழக பேராசிரியரும், புவியியல் துறை தலைவருமான சீனிவாஸ், ஸ்ரீவில்லிபுத்தூர் விவசாயி பயிற்சி மைய தொடக்க கலாசார ஆய்வாளர் மாரிபுஷ்பம், கல்லூரி இயக்குனர் சந்திரசேகரன், மதுரை தியாகராஜர் கல்லூரி வேதியியல் துறை பேராசிரியர் சேயீ கண்ணன் ஆகியோர் பேசினர். அறிவியல் மாதிரிகள் மற்றும் வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கணிதத்துறை தலைவர் ரேவதி நன்றி கூறினார்.

    இதேபோல் கல்லூரியின் பொருளியல் துறை மற்றும் கல்லூரி இணைந்து பட்ஜெட்-2023 என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடத்தின. கல்லூரி செயலாளர் யதீஸ்வரி சரவணபவபிரியா அம்பா ஆசியுடனும், கல்லூரி இயக்குனர் சந்திரசேகரன் வழிகாட்டுதலுடனும் இந்த நிகழ்ச்சி நடந்தது. பொருளியல் துறை தலைவரும், துணை முதல்வருமான கலாவதி வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் கமலா அறிமுக உரையாற்றினார். கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர் அருணாசலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்ஜெட் பற்றிய முக்கிய சிறப்பம்சங்கள் குறித்து எடுத்துரைத்தார். பேராசிரியர் சண்முகபிரியா நன்றி கூறினார்.

    • தரமணி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கவுன்சில் சார்பில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.
    • இதில் உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் பங்கேற்றார்.

    சென்னை:

    சென்னை தரமணியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்.) சார்பில் தேசிய அறிவியல் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

    இதில், உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானியும், எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை தலைவருமான

    சவுமியா சுவாமிநாதன் பேசியதாவது:

    அறிவியல் வளர்ச்சி உலக அளவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்றை எதிர்கொள்ள ஒரு ஆண்டில் தடுப்பூசி கண்டுபிடிக்க முடிந்தது.

    கொரோனா தொற்று அடியோடு ஒழிந்து விட்டதாக கருதமுடியாது. மொத்தம், 27 வகை வைரஸ்கள் உள்ளதால் எந்த வகை வைரஸ் தாக்கும் என கணிக்க முடியாது. இனிமேல் மனிதர்கள் கூடவே வைரஸ் இருக்கும்.

    தடுப்பூசி போட்டதாலும், இயற்கை சூழல் காரணமாகவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்ததால், கொரோ தாக்கம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

    குழந்தைகளுக்கு எளிதாக கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது. தற்போது பரவும் காய்ச்சல் குறித்து தீவிர பரிசோதனை தேவை. காற்றில் பரவும் வைரஸ் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணிவது அவசியம்.

    எந்த வைரஸ் வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • சூரிய கிரகணம், சந்திர கிரகணம் உள்ளிட்ட இயற்கை வான் நிகழ்வுகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட உள்ளது.
    • நிலா திருவிழாவில் பங்கேற்கும் தன்னார்வலர்களுக்கு 6 கட்டங்களாக பயிற்சி நடத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    தேசிய அறிவியல் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் 200 இடங்களில் 'நிலா திருவிழா' நடத்தப்படுகிறது.

    இது தொடர்பாக தமிழ்நாடு அஸ்ட்ரானமி மற்றும் சயின்ஸ் சொசைட்டி மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெ.மனோகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தேசிய அறிவியல் தினத்தையொட்டி 'நிலா திருவிழா 200' என்ற நிகழ்ச்சி கோவையில் 40 இடங்கள், சென்னையில் 30 இடங்கள், திருச்சியில் 25 இடங்கள் உள்பட மாநிலம் முழுவதும் 200 இடங்களில் நடத்தப்பட உள்ளன.

    வானவியலில் ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் தொலை நோக்குடன் பல்வேறு இடங்களுக்கு சென்று இன்று முதல் 28-ந்தேதி வரை தினமும் மாலை 6 மணி முதல் நிலா, வியாழன், செவ்வாய், வெள்ளி ஆகிய கோள்களையும் அன்றைய நாளில் தெரியக்கூடிய நட்சத்திர கூட்டங்களையும் காண்பிக்க உள்ளனர். இதில் பங்கேற்கும் தன்னார்வலர்களுக்கு 6 கட்டங்களாக பயிற்சி நடத்தப்பட்டுள்ளது.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கியை கொண்ட வைணுபாப்பு அப்சர்வேட்டரி சார்பிலும் இந்த 4 நாட்களும் நிலா திருவிழா நடத்தப்படுகிறது.

    இந்த நிகழ்வின் போது சூரிய கிரகணம், சந்திர கிரகணம் உள்ளிட்ட இயற்கை வான் நிகழ்வுகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    சென்னையில் 30 இடங்களில் நிலா திருவிழா நடப்பது குறித்து உதயன் கூறியதாவது:-

    நிலா திருவிழா இன்று பெசன்ட் நகர் கடற்கரை வடக்கு பகுதியிலும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) மெரினா கடற்கரை பாரதியார் சிலை அருகிலும் திங்கட்கிழமை கிண்டி தேவதாஸ் அப்சர்வேட்டரியிலும், செவ்வாய்க்கிழமை கிண்டி அண்ணா நூற்றாண்டு நூலகம் உள்பட 30 இடங்களில் நடைபெறுகிறது என்றார்.

    ×