என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தால் பாதிக்கப்பட்டேன் - நடிகர் விஜயகுமார்
    X

    ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தால் பாதிக்கப்பட்டேன் - நடிகர் விஜயகுமார்

    • நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் ராஜாஜி குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்தார்.
    • நான் 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்தேன். என்னால் அதற்கு மேல் படிப்பை தொடர முடியவில்லை.

    ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது அவர் கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தால் நான் பாதிக்கப்பட்டேன் என்று நடிகர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

    சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய நடிகர் விஜயகுமார், "நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் முதலமைச்சராக இருந்த ராஜாஜி குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்தார். அதனால் நான் 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்தேன். என்னால் அதற்கு மேல் படிப்பை தொடர முடியவில்லை.

    என்னால் தான் படிக்க முடியவில்லை. ஆனால் இன்று அப்படி இல்லை. மதிய உணவு திட்டம் மட்டுமில்ல., காலை உணவு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் கல்விக்காக இரவு, பகல் பாராமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உழைத்து வருகிறார்" என்று தெரிவித்தார்.


    Next Story
    ×