என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தென்மாநில உணவுகள்தான் தேசிய உணவுகள் போல் எங்கு பார்த்தாலும் கிடைக்கின்றன - பகவந்த் மான்
- பஞ்சாப் மாநிலத்தின் அனைத்து இடங்களிலும் தென் மாநில உணவுகள் கிடைக்கின்றன.
- குறிப்பாக மசாலா தோசை, உப்புமா போன்ற உணவுகள் பஞ்சாப் மாநிலத்தில் அதிகம் கிடைக்கின்றன.
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழக அரசு சார்பில் அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு மாணவர்களுக்கு சூடாகவும், சுவையாகவும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி 2,430 நகர்ப்புற அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் முன்னிலையில் காலை உணவுத்திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து குழந்தைகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உணவருந்தினர்.
இதனை தொடர்ந்து காலை உணவுத் திட்ட விரிவாக்க விழாவில் பேசிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், "பஞ்சாப் மாநிலத்தின் அனைத்து இடங்களிலும் தென் மாநில உணவுகள் கிடைக்கின்றன. குறிப்பாக மசாலா தோசை, உப்புமா போன்ற உணவுகள் பஞ்சாப் மாநிலத்தில் அதிகம் கிடைக்கின்றன. அதேபோல் பஞ்சாப் மாநில உணவுகள் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் விற்கப்படுவது சிறப்பான விஷயம். தென்மாநில உணவுகள்தான் தேசிய உணவுகள்போல் எங்கு பார்த்தாலும் நிறைந்திருக்கின்றன.






