search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை பகுதியில் வளர்ச்சி பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
    X

    மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கருணாகரன் பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி. 

    உடுமலை பகுதியில் வளர்ச்சி பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

    • உடுமலை நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    • ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    உடுமலை:

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு சிறப்பு செயலர்-மாவட்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர்.எம்.கருணாகரன் தலைமையில், மாவட்ட கலெக்டர் வினீத் முன்னிலையில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    அந்த வகையில் உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் சின்னவீரம்பட்டி ஊராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.81.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பள்ளி கட்டடத்தினையும், உடுமலைப்பேட்டை நகராட்சியில் ரூ.14லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய நூலகம் கட்டடத்தினையும், பொதுநிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் தூர்வாரும் பணியினையும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.191 லட்சம் மதிப்பீட்டில் வார்டு எண்:13 யூ.கே.சி. நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் பொது அறிவு மையத்தினையும், தூய்மை பாரத் இயக்கத்தின் கீழ் ரூ.36.28 லட்சம் மதிப்பீட்டில் பொது கழிப்பறை கட்டடம் கட்டும் பணியினையும்,

    உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பாலப்பம்பட்டி ஊராட்சி கண்ணமநாயக்கனூரில் ரூ.108.27 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சமத்துவபுரம் புனரமைக்கும் பணியினையும், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் சமத்துவபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தினையும், பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் நடைபெற்ற மக்களைத் தேடி மருத்துவ முகாமினையும் ஆய்வு செய்தார்.

    மேலும் மருள்பட்டி ஊராட்சியில் பட்டுவளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.1.7 லட்சம் பட்டுப்புழு வளர்ப்பு கொட்டகை மற்றும் மல்பரி சாகுபடியையும், மொடக்குப்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.57 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் கழிப்பறை கட்டடம் கட்டும் பணியினையும் மற்றும் ரூ.5.5 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணியினையும் என மொத்தம் ரூ.444.82 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டு, புதிய வளர்ச்சி திட்ட பணிகளை விரைவாகவும், தரமாகவும் பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது, உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், உடுமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கந்தசாமி (கிராம ஊராட்சிகள்), உடுமலை நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×