search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "breakfast program"

    • முதலமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகளை கேட்டறிந்தார்.
    • கலெக்டர் பிரபுசங்கர் மாணவர்களுக்கு காலை உணவை பரிமாறினார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட புதிய கலெக்டராக பிரபு சங்கர் நேற்று மாலை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அதிகாரிகள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் இன்று காலை கலெக்டர் பிரபு சங்கர் திருவள்ளூர், பஜார் அருகே உள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்தார். அப்போது முதல் அமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகளை கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். மேலும் கலெக்டர் பிரபுசங்கர் மாணவர்களுக்கு காலை உணவை பரிமாறினார். மேலும் உணவு தயாரிக்கும் முறை, அதனை பள்ளிக்கு கொண்டு செல்லும் முறை மற்றும் மாணவர்களுக்கு உணவு பரிமாறப்படும் விதம், பள்ளியின் கட்டமைப்பு, மாணவர்ளின் வருகை மற்றும் படிப்பு குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். ஆய்வின் போது, கூடுதல் கலெக்டரும் திட்ட இயக்குனருமான சுகபுத்திரா, நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா, சுகாதார அலுவலர் கோவிந்த ராஜு, தலைமை ஆசிரியர்கள் சிவரணி, பூங்கோதை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • விரைவில் பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என கனிமொழி எம்.பி. உறுதி கூறினார்.
    • தொடர்ந்து அனைத்து மாணவ-மாணவிகளும் காலை உணவு சாப்பிட வேண்டும் என கூறினார்.

    எட்டயபுரம்:

    தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. அங்கு பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண் காலை உணவு சமைத்து வழங்குகிறார்.

    அங்கு பயிலும் மாணவ-மாணவிகளில் பெரும்பாலான குழந்தைகளை காலை உணவு சாப்பிட வேண்டாம் என்று பெற்றோர்கள் தடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல்கள் கிடைத்ததும் வருவாய்துறை, ஊராட்சி துறை, காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் பெற்றோர்கள் ஏற்க மறுத்தனர்.

    இதனை அறிந்த சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று உசிலம்பட்டி பள்ளிக்கூடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். காலை உணவையும் சாப்பிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து தலைமை ஆசிரியர், காலை உணவு திட்ட சமையலர், மாணவ-மாணவிகள் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரித்தனர். பின்னர் அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், ''உசிலம்பட்டியில் உள்ள சிலருக்கும், காலை உணவு திட்ட சமையலருக்கும் இடையே தனிப்பட்ட பிரச்சினை காரணமாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை காலை உணவு சாப்பிட அனுமதிக்க மறுத்து வருகின்றனர். இதுகுறித்து குழந்தைகளுக்கு எதுவும் தெரியவில்லை. இந்த பிரச்சினை விரைவில் சரி செய்யப்படும்'' என்றார்.

    இந்நிலையில் சம்பந்தப்படட அந்த பள்ளியில் இன்று கனிமொழி எம்.பி., ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். தொடர்ந்து கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினர். தொடர்ந்து கிராம பொதுமக்களிடம் தங்களின் அடிப்படை பிரச்சனைகளை கேட்டறிந்தனர்.

    பொதுமக்கள் சாலை வசதி, வாறுகால்வசதி, தார்ச்சாலை வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். விரைவில் பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என கனிமொழி எம்.பி. உறுதி கூறினார். மேலும் காலை உணவு மாணவ-மாணவிகளுக்கு பயனுள்ள திட்டம். எனவே தொடர்ந்து அனைத்து மாணவ-மாணவிகளும் காலை உணவு சாப்பிட வேண்டும் என கூறினார்.

    அப்போது கிராமமக்கள் கூறுகையில் நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளோம். எந்த வேறுபாடும் இல்லை. எனவே தொடர்ந்து மாணவ-மாணவிகள் காலை உணவுதிட்டத்தில் சாப்பிடுவார்கள் என்றனர். அப்போது அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., மேயர் ஜெகன் பெரியசாமி, எட்டயபுரம் பேரூராட்சிமன்ற தலைவர் ராமலட்சுமி சங்கர் நாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • நேற்று வழங்கிய ரவை சாப்பிடும் போது கெட்டியாக இருந்ததாக கூறப்படுகிறது.
    • சமையல் அறையை பூட்டியது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி அரசு ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மதிய உணவு 40 குழந்தைகள் சாப்பிடுகின்றனர். காலை உணவு 35 குழந்தைகள் சாப்பிடுகின்றனர்.

    இந்நிலையில் நேற்று காலை ரவை சமைத்து குழந்தைகளுக்கு வழங்கி உள்ளனர். நேற்று வழங்கிய ரவை சாப்பிடும் போது கெட்டியாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் குழந்தைகள் இது பற்றி பெற்றோரிடம் தெரிவித்தனர்.

    இந்நிலையில் இன்று காலையில் அப்பகுதியை சேர்ந்த கோமதி என்ற பெண் இது தொடர்பாக கூறி சமையல் ஊழியர்கள் காமாட்சி, சுமதி ஆகியோரிடம் வாக்குவாதம் செய்து திடீரென சமையல் அறையை பூட்டினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் காலை உணவு சாப்பிட வந்த குழந்தைகள் தவித்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்த தாசில்தார் தமிழரசி, வட்டார வளர்ச்சி அலுவலர் உமா சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சமாதானம் செய்து குழந்தைகளுக்கு உணவு வழங்கி அதிகாரிகளும் சாப்பிட்டனர்.

    இது பற்றி தாசில்தார் தமிழரசி கூறுகையில், கோமதி என்பவர் பெற்றோர் கழக ஆசிரியர் உறுப்பினராக உள்ளார். மேலும் அதே பள்ளியில் தூய்மை பணியாளராகவும் உள்ளார். சமையல் அறையை பூட்டியது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார். 

    • திருப்புவனம் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
    • 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய மேற்கு ஆரம்பப் பள்ளி மற்றும் தெற்கு ஆரம்பப் பள்ளியில் தமிழக முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை பேரூராட்சி மன்ற தலைவர் சேங்கைமாறன் தொடங்கி வைத்தார். 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராஜ், வட்டார கல்வி அலுவலர்கள் லதா, பால் பாண்டி, நகர் தி.மு.க. செயலாளர் நாகூர்கனி, பேரூராட்சி மன்ற துணை சேர்மன் ரகமத்துல்லாகான், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மாரிதாசன், கண்ணன், வேல்பாண்டி, பாலகிருஷ்ணன், ராம லட்சுமி பாலகிருஷ்ணன், பத்மாவதி முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அரசு ஆரம்பப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் ஜக்கனாரை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரவேணு மூன்றோடு கேசலடா பகுதியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    அவர்களுக்கு தமிழக அரசின் காலை உணவு திட்டம் வழங்கப்பட்டது. ஊராட்சி ஒன்றிய தலைவர் சுமதி மற்றும் வார்டு உறுப்பினர் மனோகரன் மற்றும் பள்ளி நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுகளை வழங்கினர்.

    • கலெக்டர் கிராந்திகுமார் தொடங்கி வைத்தார்.
    • நகராட்சி பகுதிகளில் ஒரு இடத்தில் சமைத்து அந்த பகுதிகளில் உள்ள 15 பள்ளிகளுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் 121 மாநகராட்சி பள்ளிகள், மதுக்கரை நகராட்சியில் 4 பள்ளிகள், மேட்டுப்பாளையம் நகராட்சியில் 11 பள்ளிகள் என மொத்தம் 136 பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டம் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி கோவை மாவட்டத்தில் கூடலூர், காரமடை, கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 5 நகராட்சிகள் மற்றும் 15 வட்டாரங்களில் உள்ள 859 பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் 44,358 மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.

    விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். கோவை மாவட்டத்தில் கிணத்து க்கடவு பேரூராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 136 பள்ளிகளில் 17,621 குழந்தைகள் உணவு அருந்தி வருகிறார்கள். தற்போது 2-வது கட்டமாக மேலும் கூடுதலாக 859 பள்ளிகளில் 44,538 குழந்தைகள் பயன்பெறுவார்கள். இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகப்பட்டி ணத்தில் இன்று தொடங்கி வைத்தார். அதன் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் படி அனைத்து குழந்தைகளுக்கு காலை உணவு பள்ளிகளிலேயே கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    நகராட்சி பகுதிகளில் ஒரு இடத்தில் சமைத்து அந்த பகுதிகளில் உள்ள 15 பள்ளிகளுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மலை பகுதிகளில் உள்ள பள்ளிகளில் அந்த பள்ளிகளிலேயே உணவு சமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இதனை கண்காணிக்க 15 பள்ளிகளுக்கு ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் ஒரு செயலி மூலமாக எப்போது சமையல் தொடங்கியது, சாப்பாடு வழங்கும் நேரம், எத்தனை பேருக்கு சாப்பாடு வழங்கப்பட்டது என்ற எல்லா விபரங்களும் சேகரிக்கப்படும். பள்ளிக் கல்வித்து துறை மற்றும் மகளிர் திட்டம், ஊரக வளர்ச்சித்துறை அலுவ லர்கள் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அவ்வபோது ஆய்வு செய்து உணவின் தரம் எப்படி உள்ளது? என்பதை கண்காணிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் பொள்ளாச்சி தொகுதி எம்.பி. சண்முகசுந்தரம், கிணத்துக்கடவு பேரூராட்சி கதிர்வேல், உதவி கலெக்டர் (பயிற்சி) ஆஷிக் அலி ஆகியோர் பங்கேற்றனர்.

    • முதல்-அமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
    • 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 4,450 மாணவ, மாணவிகள் பயன்பெறுவார்கள்.

    மதுரை

    தமிழகம் முழுவதும் அரசு தொடக்கப்பள்ளி களில் காலை சிற்றுண்டி வழங்கும் விரிவாக்க திட்டம் இன்று தொடங்கப் பட்டது.

    மதுரை மாவட்டத்தில் கிழக்கு சட்டமன்றத் தொகுதி மேற்கு ஊராட்சி ஒன்றியம் சின்னப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கி முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் அவர் மாணவ -மாணவிகளுக்கு உணவு பரிமாறியதுடன் அவர்களு டன் அமர்ந்து உணவு அருந்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சங்கீதா கூடுதல் கலெக்டர் சரவணன், மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா, மேற்கு ஊராட்சி ஒன்றிய சேர்மன் வீரரா கவன், துணை சேர்மன் கார்த்திக் ராஜா மற்றும் சோமசுந்தர பாண்டியன், பாலசுப்பிரமணியன், ஆசைக்கண்ணன், சிறைச்செல்வன், ஊராட்சித்தலைவர்கள் நியாயவதி மலை வீரன் சுரேந்திரன் சக்தி மயில் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    இந்த காலை உணவு திட்டம் மதுரை மாவட்டத் தில் 420 கிராம ஊராட்சிகள், 9 பேரூராட்சிகளில் உள்ள 949 அரசு தொடக்கப்பள்ளி நடுநிலைப்பள்ளி, உயர் நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளி, கள்ளர் சீர் அமைப்பு பள்ளி, ஆதி திராவிடர் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையி லான என மொத்தம் 52298 மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படு கிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனைத்தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி மதுரை யாதவா கல்லூரி எதிர்ப் புறம் உள்ள சிறுதூர் கோபாலகிருஷ்ணன் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலை யில்லா மிதிவண்டியை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் மேரி திருமலா, பகுதி செயலாளர் சசிகுமார், திருப்பாலை ராமமூர்த்தி, லட்சுமணன், பால்செல்வி பால கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாநகராட்சி பள்ளி

    இதேபோல் மதுரை முத்தப்பட்டியில் உள்ள மாநகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்து மாணவ-மாணவி களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி பொன் வசந்த் முன்னிலை வகித்தார். பூமிநாதன் எம்.எல்.ஏ., துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர்கள் சுவிதா, பாண்டிச்செல்வி, கல்விக்குழு தலைவர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை மாநகராட்சியில் காலை உணவு திட்டம் 73 பள்ளிகளில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 4,450 மாணவ, மாணவிகள் பயன்பெறுவார்கள்.

    இந்த திட்டத்தின் கீழ் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை உப்புமா வகைகள், கிச்சடி வகைகள், பொங்கல் வகைகள், காய்கறி கிச்சடி, சாம்பார் உள்ளிட்டவை வழங்கப்படும்.

    • ஊராட்சி பகுதிகளில் பிரதிநிதிகள் தொடங்கி வைத்தனர்.
    • பள்ளி தலைமை ஆசிரியர் சின்னசாமி மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தின் ஊராட்சி பகுதிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தை உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் தொடங்கி வைத்து பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கினர்.

    அதன்படி செல்லம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட நாட்டாபட்டி அரசு பள்ளியில் குழந்தைகளுக்கு காலை உணவினை மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் முத்துராமன் வழங்கினார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் சின்னசாமி மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    அதேபோல் கோவி லாங்குளம் ஊராட்சிக் குட்பட்ட கருகப்பிள்ளை அரசு பள்ளியில் தலைவர் ஜெயந்தி முத்துராமன் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து குழந்தை களுக்கு உணவு வழங்கினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பேராட்சி பிரேமா, ராமர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ஏற்குடி அச்சம்பத்து ஊராட்சியில் தலைவர் முத்துலட்சுமி இருளப்பன் தொடங்கி வைத்தார்.இதில் துணைத் தலைவர் வனிதா சுரேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் உஷாதேவி, ஊராட்சி செயலாளர் விஜயபாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.மேலும் பள்ளி குழந்தைகளுக்கு சமையல் செய்வதற்காக தன்னார்வலர்களாக வந்த மூன்று பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.

    ஆ.கொக்குளம் ஊராட்சியில் தலைவர் நர்மதா கபி.காசிமாயன், கருமாத்தூர் ஊராட்சியில் தலைவர் பாண்டீஸ்வரி இளங்கோவன், கிண்ணிமங்கலம் ஊராட்சியில் தலைவர் மயில்முருகன், கொ.புளியங்குளம் ஊராட்சியில் தலைவர் சிவகாமி தர்மர், நாகமலை புதுக்கோட்டை ஊராட்சியில் தலைவர் பாப்பாத்தி, மேலக்குயில்குடி ஊராட்சி தொடக்கப் பள்ளியில் தலைவர் ஜெயபிரபு, கொடிமங்கலம் ஊராட்சியில் தலைவர் உமாதேவி திருக்குமரன் ஆகியோர் முதல்வரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து பள்ளி குழந்தைகளுக்கு வழங்கினர்.

    இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை வெங்கடேசன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.
    • தலைமை ஆசிரியர் பூங்கொடி வரவேற்றார்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் காலை உணவு திட்ட தொடக்க விழா நடந்தது. வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டார். ஊராட்சி ஒன்றிய ஆணையர் கதிரவன் முன்னிலை வகித்தார்

    ஊராட்சி மன்ற தலைவர் பவுன் முருகன், ஒன்றிய கவுன்சிலர் ரேகா வீரபாண்டி, துணத்தலைவர் பாக்கியம் செல்வம், முன்னாள் தலைவர் ஆறுமுகம் கணேசன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர். தலைமை ஆசிரியர் பூங்கொடி வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர்கள் பசும்பொன், மாறன், கார்த்திகா, ஞான சேகரன், வக்கீல் முருகன், மணிவேல், கேபிள் ராஜா, மனோகரன் ஆகியோர் பேசினர்.

    இதில் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன், கவுன்சிலர் சத்திய பிரகாஷ், வெற்றிச்செல்வன், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன், ஊராட்சி செயலாளர் திருசெந்தில், ஊத்துக்குளி ராஜாராமன், செல்வமணி, தமிழ்மணி, முருகேசன் உள்பட ஆசிரியர் ஆசிரியைகள் பெற்றோர்கள் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    • வாடிப்பட்டி பேரூராட்சியில் 9 ஆரம்ப பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
    • தலைமை ஆசிரியர் லதா வரவேற்றார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 9 ஊராட்சி ஒன்றிய தொடக்க, ஆரம்ப பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்கவிழா வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். செயல் அலுவலர் ஜெயலட்சுமி, துணைத்தலைவர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் லதா வரவேற்றார். இதில் கவுன்சிலர் ஜெயகாந்தன், இளநிலை உதவியாளர்கள் முத்துப்பாண்டி, சுந்தர்ராஜன், வார்டு செயலா ளர்கள் ராம் மோகன், திரவியம், பன்னீர்செல்வம், மருதுபாண்டி, வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் சுகாதார பணி மேற்பார்வையாளர் முத்தழகு நன்றி கூறினார். அதேபோல் தாதம்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு கவுன்சிலர் பூமிநாதன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் தலைமை ஆசிரியர் கிறிஸ்டி, ஆசிரியர்கள் மகேஸ்வரி, கலைச்பொன் கவிதா, சுய உதவிக்குழுவினர் விஜயலட்சுமி, லட்சுமி, கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காலை உணவு திட்டம் விரிவாக்கத்தத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

    மண்டபம்

    தமிழகத்தில் காலை உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களின் வருகை பதிவு அதிகரித்ததாக புள்ளி விவரங்கள் தெரி வித்தன. இதையடுத்து இந்த திட்டத்தை விரி வாக்கம் செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார். அதன்படி மாநிலம் முழுவதும் காலை உணவு விரிவாக்க திட்டம் இன்று தொடங்கி வைக்கப் படுகிறது.

    அதன்படி ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே உள்ள இருமேனி ஊராட்சி, குப்பானிவலசை கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் இன்று காலை காலை உணவு விரிவாக்க திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜகண்ணப் பன் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனிப், உதவி கலெக்டர் (பயிற்சி) சிவானந்தம், எம்.எல்.ஏ-க்கள் கருமாணிக்கம், முருகேசன், ராமநாதபுரம் தாசில்தார் ஸ்ரீதர், மண்டபம் ஒன்றிய சேர்மன் சுப்பு லட்சுமி ஜீவானந்தம், தி.மு.க மண்டபம் மத்திய ஒன்றிய செயலாளர் தேர்போகி முத்துக்குமார், மண்டபம் கிழக்கு ஒன்றிய தி.மு.க கவுன்சிலர் தவுபீக் அலி, ஊராட்சி மன்றத் தலை வர்கள் சிவக்குமார், காமில் உசேன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) விஜயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்த நாளில் அறிமுகம் செய்தார்.
    • இத்திட்டம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

    கோவை,

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்த நாளில் அறிமுகம் செய்தார்.

    கடந்த மே 7, 2022 அன்று தமிழ்நாடு சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

    அதன்படி, முதல்கட்டமாக, மாநகராட்சி, நகராட்சி, ஊரக (கிராம ஊராட்சி) மற்றும் மலைப்பகுதிகளில் செயல்படும், 1545 அரசு பள்ளிகளில் பயிலும் 114095 தொடக்கப் பள்ளி (1முதல் 5-ம் வகுப்பு வரை) குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை 2022-2023ஆம் ஆண்டில் முதற் கட்டமாக செயல்படுத்த ரூ.33.56 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து தமிழக அரசு ஆணை வெளியிட்டது.

    முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி, இத்திட்டம், கோவை மாவட்டத்தில் கோவை மாநகராட்சியில் 121 பள்ளிகள், மதுக்கரை நகராட்சியில் 4 பள்ளிகள், மேட்டுப்பாளையம் நகராட்சியில் 11 பள்ளிகள் என மொத்தம் 136 பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்கீழ், 17671 மாணவ-மாணவிகள் பயன்பெற்று வந்தனர்.

    இத்திட்டம் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என கடந்த சுதந்திர தின விழாவின் போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    அதன்படி, இத்திட்டம், கோவை மாவட்டத்தில், கூடலூர் நகராட்சி, காரமடை நகராட்சி, கருமத்தம்பட்டி நகராட்சி, பொள்ளாச்சி நகராட்சி, வால்பாறை நகராட்சி மற்றும் ஊரக பகுதிகளான காரமடை, பெரியநாயக்கன் பாளையம், சர்க்கார் சாமக்குளம், அன்னூர், சூலூர், தொண்டாமுத்தூர், மதுக்கரை, சுல்தான் பேட்டை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி (வடக்கு), பொள்ளாச்சி (தெற்கு), ஆனைமலை ஆகிய பகுதிகளில் உள்ள 848 பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது. இதன்மூலம் 43797 மாணவ-மாணவிகள் பயன்பெறுகின்றனர். இத்திட்டம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

    ×