search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panchayat Union Schools"

    • தட்டு மற்றும் டம்ளர்கள் மொத்தம் 251 தன்னார்வலர் மூலம் பெறப்பட்டது.
    • மொத்தம் 251 உணவு உண்ணும் மாணவ- மாணவிகளுக்கு வழங்க தட்டு மற்றும் டம்ளர்கள் தயார் நிலையில் உள்ளது

    திருப்பூர் :

    பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாதப்பூர் கிராம ஊராட்சியில்அமைந்துள்ள கீழ்க்குறிப்பிட்டுள்ள பள்ளிகளில் 1 முதல் 5 முடிய கல்வி பயிலும்குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் உணவு வழங்கிடும் பொருட்டு தேவையான தட்டு மற்றும் டம்ளர்கள் மொத்தம் 251 தன்னார்வலர் மூலம் பெறப்பட்டது.

    கள்ளக்கிணர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 40 உணவு உண்ணும் மாணவ- மாணவிகளும், கிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 25உணவு உண்ணும் மாணவ- மாணவிகளும், சிங்கனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 11 உணவு உண்ணும் மாணவ- மாணவிகளும், தொட்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 44 உணவு உண்ணும் மாணவ-மாணவிகளும், நல்லாக்கவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 22 உணவு உண்ணும் மாணவ-மாணவிகளும், மாதப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 109 உணவு உண்ணும் மாணவ-மாணவிகளும் என மொத்தம் 251 உணவு உண்ணும் மாணவ- மாணவிகளுக்கு வழங்க தட்டு மற்றும் டம்ளர்கள் தயார் நிலையில் உள்ளது என பொங்கலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்துள்ளார்.

    ×