search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளர்ச்சி பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
    X

    வளர்ச்சி பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

    • ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு சிறப்பு செயலருமான எம்.கருணாகரன் ஆய்வு மேற்கொண்டாா்.
    • விரும்பம்பள்ளத்தில் ரூ.2.67 லட்சம் மதிப்பீட்டில் தாா் சலை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தாா்.

    காங்கயம் :

    காங்கயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.9.88 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு சிறப்பு செயலருமான எம்.கருணாகரன் ஆய்வு மேற்கொண்டாா்.

    இதில் படியூா் ஊராட்சி சத்யா நகரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் சாா்பில் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையம், காங்கயம் நகராட்சியில் நகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் ரூ.9.62 கோடி மதிப்பீட்டில் வாரச் சந்தையில் புதிய கடைகள் கட்டுமானப் பணிகள், விரும்பம்பள்ளத்தில் ரூ.2.67 லட்சம் மதிப்பீட்டில் தாா் சலை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தாா்.

    இதைத் தொடா்ந்து, திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டாா்.பின்னா் மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் நடைபெற்ற கல்விக் கடன் முகாமில் 73 பேருக்கு ரூ.3 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகளுக்கான ஆணைகளை வழங்கினாா்.

    இந்த ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத், சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் லட்சுமணன், சமூக நல அலுவலா் அம்பிகா உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

    Next Story
    ×