search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "development works"

    • கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • குடிநீர் திட்டப்பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் பகுத்தம்பாளையம், உப்புப்பள்ளம் பகுதியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் செயல்படும் காங்கேயம் மாட்டின ஆராய்ச்சி நிலையத்தினை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    முன்னதாக கலெக்டர் சத்தியமங்கலம் வட்டம், பகுத்தம்பாளையம் பகுதியில் செயல்படும் அரசு தோட்டக்கலை பண்ணையை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் இந்த பண்ணை 10 ஹெக்டேர் மொத்த பரப்பளவு கொண்டது. ஐந்தரை ஹெக்டேர் பரப்பளவில் மா, கொய்யா, மாதுளை பழ மரதாய் செடிகள் மற்றும் அடர்நடவு செய்யப்பட்டுள்ளன.

    எலுமிச்சை, நாவல் மாதிரி தோட்டங்களும், பசுமை குடில் சாகுபடி மற்றும் நிழல் வளை கூடாரங்களில் மா ஒட்டு செடிகள், பாக்கு நாற்றுகள், கொய்யாப் பதியன்கள், மாதுளை பதியன்கள், சீதா, எலுமிச்சை, புளி, நாவல், பப்பாளி, முருங்கை மர க்கன்றுகளும் பயிரிட ப்பட்டுள்ளதை அவர் ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து பவானிசாகர் ஊராட்சி ஒன்றி யத்திற்கு ட்பட்ட தொப்பம்பாளையம் ஊராட்சி டோடாம்பாளை யம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், குழுந்தைகள் நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.90.15 லட்சம் மதிப்பீட்டில் 6 வகுப்பறைகள் கட்ட ப்பட்டுவருவதையும், பவானிசாகர் பேரூராட்சி க்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.12.16 கோடி மதிப்பீட்டில் அமைக்க ப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகளை யும், புன்செய் புளியம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.520.70 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் குடிநீர் திட்டப்பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    தலைமை நீரேற்று நிலையம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், மாதம்பாளையம் ஊராட்சி, மாதம்பாளையத்தில், மகளிர் திட்டத்தின் சார்பில் ரூ.10 லட்சம் வங்கி நேரடி கடன் பெற்று சோப்பு, சேம்பு மற்றும் நாப்கின் ஆகிய பொருட்களை தயார் செய்யும் வேம்பு மகளிர் சுய உதவிக்குழுவின் செயல்பாடுகள், மாதம்பாளையம் பகுதியில் வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் மானாவாரி வேளாண்மை மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.30,000 மானிய உதவியுடன் சுமார் 2.70 ஏக்கர் பரப்பள வில் ஒருங்கிணைந்த பண்ணை யம் அமைக்க ப்பட்டுள்ளதை ஆய்வு செய்தார்.

    நொச்சிக்கோட்டை ஊராட்சி, நொச்சி க்கோட்டையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9.10 லட்சம் மதிப்பீட்டில் கதிரடிக்கும் களம் அமைக்கப்பட்டுள்ளதையும்,

    நல்லூர் ஊராட்சி, நேரு நகர் பகுதியில், மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலைஉறுதிதி ட்டத்தின் கீழ் ரூ.23.35 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைக்கப்பட்டு வருவதையும் மற்றும் அதே பகுதியில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.18.45 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட ப்பட்டு வருவதையும் என பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகள் மற்றும் புன்செய் புளியம்பட்டி நகராட்சி மற்றும் பவானிசாகர் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ள ப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு மேற் கொண்டார்.

    • திருச்சுழி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • மாணவர்களிடம் கற்றல் திறன் பற்றி கேட்டறிந்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி, திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், சவ் வாசுபுரம் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.9.72 லட்சம் மதிப்பில் வகுப்பறைகள் புரணமைக் கப்பட்ட பணிகளை பார் வையிட்டு ஆய்வு செய்து பள்ளி மாணவர்களிடம் கற்றல் திறன் குறித்து கேட்ட றிந்தார்.

    மேலும் மதிய உணவு சமையல் கூடத்திற்கு சென்று பார்வையிட்டு, வழங்கப்பட்டு வரும் உண வின் தரம் குறித்தும், பதிவே டுகளையும் ஆய்வு செய்து, திட்டத்தின் மூலம் பயன்பெ றும் மாணவர்களின் எண் ணிக்கை குறித்தும் கேட்ட றிந்தார். பின்னர், சவ்வாசு புரத்தில் உள்ள பொது நூல கத்திற்கு சென்று பார்வை யிட்டு பதிவேடுகள், புத்தகங் களை ஆய்வு செய்து, வாசிப் பாளர்களிடம் நூலகத்தின் பயன்பாடு, தேவைப்படும் வசதிகள் குறித்து கேட்டறிந் தார்.

    குள்ளம்பட்டி ஊராட்சி யில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத் தின் கீழ் ரூ.5.48 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட் டுள்ள பேவர் பிளாக் சாலையினையும், அனைத்து கிராம அண்ணா மறும லர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.23.28 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தி னையும், ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.13.65 லட்சம் மதிப்பில் கட்டப்பட் டுள்ள உயர்மட்ட நீர்த்தேக்க தொட்டியினையும் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    முத்துராமலிங்கபுரம் அரசு துணை சுகாதார நிலையத்தில், மருந்துகளின் இருப்பு, அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும், ம.ரெட்டியாபட்டி மேம்படுத் தப்பட்ட அரசு ஆரம்ப சுகா தார நிலையத்திற்கு சென்று பிரசவ அறை, பிரசவத்திற்குபின் கவனிப்பு அறை, வழங்கப்படும் உணவு, சித்த மருத்துவ பிரிவு, பல் மருத்துவப்பிரிவு, மருந்துக ளின் இருப்பு, அளிக்கப்படும் சிகிச்சை குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகளிடம் மருத்துவமனையில் உள்ள வசதிகள், மருந்துகள் மற்றும் சிகிச்சையின் தரம் குறித்து கேட்டறிந்தார்.

    • கோரையாற்றின் புதுப்பாலத்தின் அருகே சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
    • சமுதாய கூடம் கட்டப்பட்டு வருகிறது.

    திருவாரூர்:

    நீடாமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நீடாமங்கலம் பேரூராட்சியில் ரூ.70.79 லட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கூடுதலாக 4 வகுப்பறைகள் கட்டப்பட்டு வருவதையும், பூவனூர் ஊராட்சியில் ரூ.5.80 லட்சம் மதிப்பில் நபார்டு வங்கி நிதிஉதவி திட்டத்தின் கீழ் பூவனூர் ஊராட்சி முதல் பெரம்பூர் ஊராட்சி வரை கோரையாற்றின் குறுக்கே புதுப்பாலத்தின் அருகே சாலை அமைக்கப்பட்டுவருவதையும்,

    திருவாரூர் மாவட்ட கலெக்டா சாருஸ்ரீ ஆய்வு செய்தார்.பின்னர் பெரம்பூர் ஊராட்சியில் ரூ.68.30 லட்சத்தில் முல்லைவாசல் கிராமம் முதல் பெரம்பூர் வரை சாலை அமைக்கப்பட்டு வருவதையும், பிரதம மந்திரி குடியிருப்பு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், மேலாளவந்தசேரி ஊராட்சியில் ரூ.39 லட்சம் மதிப்பில் சமுதாய கூடம் கட்டப்பட்டுவருவதையும் கலெக்டர் சாருஸ்ரீ பார்வையிட்டார்.

    இதைப்போல அரிச்சபுரம் ஊராட்சியில் ரூ.42.50 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு வருவதையும், ரூ.3.88 லட்சம் மதிப்பில் அரிச்சபுரம் நடுநிலைப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுவரும் பழுதுநீக்க பணிகளையும் கலெக்டர் சாருஸ்ரீ பார்வையிட்டார்.

    பின்னர் ரிஷியூர் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக கழக திருவாரூர் மண்டல நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு செய்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    ஆய்வின் போது நீடாமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் சோ.செந்தமிழ்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்ரமணியன், நமச்சிவாயம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், ஊராட்சி தலைவர்கள் இருந்தனர்.

    • அமைச்சர் லட்சுமிநாராயணன் தொடங்கி வைத்தார்
    • எம்.எல்.ஏ.வும், பொதுப்பணித்துறை அமைச்சருமான லட்சுமி நாராயணன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    ராஜ்பவன் தொகுதி அக்காசாமி மடம் வீதியில் முதல்கட்டமாக ரூ 30 லட்சம் மதிப்பீட்டில் 175 மீட்டர் சாலை, தார் சாலையாக மாற்றப்படுகிறது.

    சின்னையாபுரம் குபேர் பாடசாலை அருகில் உள்ள மண் பாதையை சிமெண்ட் சாலையாக மாற்ற ரூ.5 லட்சத்தில் பணிகள் நடக்கிறது. குமரகுரு பள்ளம் பகுதியில் உள்ள நகராட்சி சமுதாய நலக்கூடத்திற்கு இரும்புத் தகடு கூரை கொண்ட முதல் மாடி கட்டிடம் ரூ.38 லட்சத்தில் அமைக்கப்பட உள்ளது.

    இந்த பணிகளை தொகுதி எம்.எல்.ஏ.வும், பொதுப்பணித்துறை அமைச்சருமான லட்சுமி நாராயணன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமார், செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் பழனிராஜா, இளநிலை பொறியாளர் சுரேந்திரகுமார் மற்றும் ஊர் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் சுமார் ரூ.31.28 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் நடை பெற்று வருகிறது.
    • இந்த பணிகளை மண்டல செயற்பொறியாளர் ஆய்வு செய்தார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் முக்கிய சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது. இங்கு நகராட்சி சார்பில் பல்வேறு மேம்பாட்டு பணிகளும் நடைபெற்று வருகிறது.

    கொடைக்கானல் அண்ணா சாலை பகுதியில் அமைந்துள்ள தினசரி சந்தை, கொடைக்கானல் பஸ் நிலைய புதிய கழிவறை கட்டிடம் மற்றும் பஸ் நிலைய கட்டிட பராமரிப்புபணிகள், படகு குழாம், செண்பகனூர் அய்யர் கிணறு பகுதி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ரூ.31.28 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் நடை பெற்று வருகிறது.

    இந்த பணிகளை மண்டல செயற்பொறியாளர் மனோகரன் ஆய்வு செய்தார். ஆய்வின்போது கொடைக்கானல் நகர் மன்றத்தலைவர் செல்லத்துரை, துணைத் தலைவர் மாயக்கண்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மண்டல செயற்பொறியாளர் மனோகரன் நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.

    • பொதுமக்கள் அளித்த புகாரையடுத்து புதிதாக போடப்பட்டுள்ள வழித்தடத்தில் குடிநீர் வழங்கப்பட்டுள்ளதால் அப்பகுதியினை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • மாநகராட்சி அலுவலகத்தில் மாநகரின் பிரதான சாலைகளை கண்காணிக்கும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகளை மேயர் பார்வையிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி பகுதி வளர்ச்சி பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். கருப்பட்டி சொசைட்டி அருகில் உள்ள தெருக்களில் குடிநீர் சரியாக வரவில்லை என்று பொதுமக்கள் அளித்த புகாரையடுத்து புதிதாக போடப்பட்டுள்ள வழித்தடத்தில் குடிநீர் வழங்கப்பட்டுள்ளதால் அப்பகுதியினை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் 3-வது மைல் மேம்பாலத்தில் இருந்து பக்கிள் ஓடையை நோக்கி செல்லும் பாதையை அகலப்படுத்துவதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்து அதன் அருகே உள்ள காவல் சோதனை சாவடியை எதிர்புறம் அமைக்க அதிகாரிகளிடம் பேசினார். வரும் நாட்களில் பணிகள் ஆரம்பமாகும் என்று அப்போது மேயர் தெரிவித்தார்.

    மாநகராட்சி அலுவ லகத்தில் மாநகரின் பிரதான சாலைகளை கண்கா ணிக்கும் ஒருங்கி ணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடு களை பார்வை யிட்டார்.தொடர்ந்து மேட்டுபட்டி யில் இருந்த மின் மயானத்தின் தகன மேடை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் பழுதடைந்து காணப்படு வதாக ஏற்கனவே ஆய்வு செய்த பொழுது பொதுமக்கள் கூறினர்.தற்போது அந்த பராமரிப்பு பணிகள் அனைத்தும் முடிவுற்று ள்ளதை தொடர்ந்து அதனை மேயர் ஜெகன் பெரியசாமி அலுவலர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.

    மேலும் பிரையன்ட் நகர் 12-வது தெருவில் நடைபெற்று வரும் புதிய தார் சாலை பணிகளையும், மில்லர்புரம் மற்றும் ராஜீவ் நகர் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் புதிய வடிகால் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்

    ஆய்வுகளின் போது மேயரு டன் முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், மாநகர துணை செயலாளரும், கவுன்சிலருமான கீதாமுரு கேசன், கவுன்சிலர்கள் ஜான் சீனிவாசன், பொன்னப்பன் கண்ணன், முத்துவேல் மற்றும் மேயரின் நேர்முக உதவியாளராக ரமேஷ் பிரபாகரன், ஜாஸ்பர், மாநகராட்சி அதிகாரிகள், நிர்வாகிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • குப்பை கிடங்கில் கட்டப்பட்டு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆய்வு செய்யப்பட்டது.
    • குப்பை கிடங்கு சேமிப்பு வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    வேதாரண்யம் நகராட்சி சார்பில் நாகை சாலையில் 4 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணியினையும், காலை உணவு திட்ட சமையல் கூடத்தை நகராட்சி இயக்குனர் சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து ரூ.2 கோடியே 85 லட்சம் மதிப்பில் கடற்கரை சாலையில் கசடு கழிவு மேலாண்மை குப்பை கிடங்கில் கட்டப்பட்டு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தையும், நகராட்சி குப்பை கிடங்கையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சரஸ்வதி, மண்டல செயற்பொறியாளர் பார்த்திபன், நகர்மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் வெங்கட லட்சுமணன், பொறியாளர் கோவிந்தராஜ், ஓவர்சியர் குமரன் உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் குப்பை கிடங்கு சேமிப்பு வளாகத்தில் நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு மரக்கன்றுகளை நட்டார். நிகழ்ச்சியில் குப்பை கிடங்கில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் புதிய திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்தாா்.
    • ரூ. 73 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்.

    ஊத்துக்குளி:

    ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் மற்றும் குன்னத்தூா் பேரூராட்சிப் பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ. 2.73 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அ.லட்சுமணன் தலைமை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் புதிய திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்தாா்.

    ஊத்துக்குளி ஒன்றியத்துக்கு உட்பட்ட நடுப்பட்டி ஊராட்சி, பல்லகவுண்டன்பாளையத்தில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 29.50 லட்சம் மதிப்பீட்டில் குன்னத்தூா் - நடுப்பட்டி சாலை முதல் அரசு உயா்நிலைப் பள்ளி வழியாக தேசிய நெடுஞ்சாலை இணைப்பு சாலை வரை தாா் சாலை மேம்படுத்துதல், தெற்கு சாணாா்பாளையத்தில் ரூ. 26.67 லட்சம் மதிப்பீட்டில் தாா் சாலை மேம்பாட்டுப் பணிகளை அமைச்சா் தொடங்கிவைத்தாா்.

    தொடா்ந்து, சுண்டக்காம்பாளையம் ஊராட்சியில் ரூ. 23.84 லட்சம் மதிப்பீட்டில் கோபி - தாராபுரம் சாலை முதல் குடிசை வலவு வரை உள்ள தாா் சாலை மேம்படுத்துதல், காவுத்தாம்பாளையம் ஊராட்சியில் ரூ. 91.95 லட்சம் மதிப்பீட்டில் மேற்கு தச்சம்பாளையம் முதல் கிழக்கு தச்சம்பாளையம் செல்லும் சாலை வரை தாா் சாலை மேம்படுத்துதல் உள்ளிட்ட மொத்தம் ரூ. 2.73 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளை அமைச்சா் தொடங்கிவைத்தாா்.

    இதையடுத்து மொரட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மொரட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, சரவணபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, குன்னத்தூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட மொத்தம் 11 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 1,515 மாணவ, மாணவியருக்கு ரூ. 73 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்.

    நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் என்.கீதா, ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் பிரேமா ஈஸ்வரமூா்த்தி, ஊத்துக்குளி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மீனாட்சி, சரவணன், குன்னத்தூா் பேரூராட்சித் தலைவா் ந.பெ.குமாரசாமி, மொரட்டுப்பாளையம் ஊராட்சித் தலைவா் பிரபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • பல்வேறு திட்டப் பணிகள் குறித்து தொடா்ந்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
    • பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பாக சம்பந்தப்பட்ட அரசுத் துறை அலுவலா்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

    திருப்பூர்,ஆக.13-

    திருப்பூா் மாவட்டம் பல்லடம், பொங்கலூா் ஊராட்சி ஒன்றியங்கள், சாமளாபுரம் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    இக்கூட்டத்துக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்து பேசியதாவது:-

    திருப்பூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து தொடா்ந்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக சாமளாபுரம் பேரூராட்சி, பல்லடம் மற்றும் பொங்கலூா் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்றும் வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பாக சம்பந்தப்பட்ட அரசுத் துறை அலுவலா்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதில், குடிநீா் விநியோகம், சாலை வசதி, தெருவிளக்கு, பொதுக் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றாா்.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் லட்சுமணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) வாணி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

    • அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
    • அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி ராணிப்பேட்டை நகராட்சி வாரச் சந்தை வளாகத்தில் தூய்மை இந்தியா திட்டம் நகரம் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.26 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள வளமீட்பு மையம், திடக்கழிவு மேலாண்மை குப்பைகள் தரம் பிரிக்கும் மையத்தில் தனியார் வங்கியின் சமுதாய பங்களிப்பு திட்ட நிதி மூலம் ரூ.24 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் அரவை எந்திரம் ஒப்படைப்பு, 15-வது நிதிக் குழு மான்யம் திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை நகராட்சியில் குப்பைகளை எடுத்துச் செல்ல ரூ.6 லட்சம் மதிப்பிலான 3 பேட்டரி வாகனங்கள், ரூ.21லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான 3 இலகு ரக வாகனங்கள் என மொத்தம் ரூ.77லட்சத்து 90ஆயிரம் மதிப்பில் ெசய்யப்பட்டுள்ளது. இந்த திட்ட பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

    இந்த திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு வளமீட்பு மையத்தை திறந்து வைத்து, திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஜி.கே. உலகப்பள்ளி இயக்குநர் வினோத் காந்தி, நகரமன்றத் தலைவர் சுஜாதா, துணைத்தலைவர் ரமேஷ் கர்ணா, வாலாஜா ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன், நகராட்சி ஆணையர் விநாயகம், நகரமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விருதுநகர் ஊராட்சி பகுதிகளில் மேம்பாட்டு பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
    • இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் தண்ட பாணி உள்பட பலர் இருந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் ஊராட்சி ஒன்றித்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.

    விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் கூரைக்குண்டு ஊராட்சியில், மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ரூ.16.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வரும் ஆண்களுக்கான கழிவறை கட்டிடங்களையும், ரூ.16.60 லட்சம் மதிப்பில் பெண்க ளுக்கான கழிவறை கட்டி டங்களையும், முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டம் மூலம் ரூ.48.75 லட்சம் மதிப்பில் தேசிய நெடுஞ்சாலை எண்-7 முதல் பனைநகர் வரை சாலை அமைக்கப்படும் பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து சத்திரெட்டி யாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் ரூ.4.65 லட்சம் மதிப்பில் மிதிவண்டி நிறுத்தம் அமைக்கப் பட்டுள்ளதையும், ரூ.5.86 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமையல் அறையையும் கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.

    பின்னர், சத்திரெட்டி யாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவி களுடன் இலக்கை நிர்ணயிப்பது, அதை நோக்கிய பயணத்தை மேற்கொள்வது குறித்தும், உயர்கல்விக்கு தேசிய அளவில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடினார்.

    இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் தண்டபாணி உள்பட பலர் இருந்தனர்.

    • தலைமை தபால் அலுவலகம் முதல் நுழைவு வாயில் வரையிலான,50 மீட்டர் தூரத்துக்கு முதல் கட்டமாக பணி நடக்கிறது.
    • 2வது பிளாட்பார்ம் அருகே பயன்பாடு இல்லாமல் காலியாக உள்ள குடியிருப்பு விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் திருப்பூர் ெரயில்வே நிலையத்தில் மறுகட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு 22 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 6ந் தேதி, பிரதமர் மோடி பணிக்கு அடிக்கல் நாட்டினார். முதல் கட்ட பணிகள் தொடங்கி உள்ளது.

    ெரயில் டிக்கெட் முன்பதிவு மையம், ஏ.டி.எம்., அருகே துவங்கி ரெயில் நிலையம் முகப்பு பகுதி முழுவதும் அளவீடு செய்யப்பட்டு, குழி தோண்டப்பட்டது. பணி நடக்கும் இடத்துக்கு பயணிகள் வருவதை தவிர்க்க, பாதுகாப்பு கருதி முதல் பிளாட்பார்ம் நுழைவு வாயில் தகரம் வைத்து அடைக்கப்பட்டது.

    இதற்கு மாற்றாக அருகே வலதுபுறம் சுவர் இடிக்கப்பட்டு தற்காலிகமாக பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் வழியாக பயணிகள் உள்ளே, சென்று வர ெரயில்வே போலீசார் அறிவுறுத்தினர். தலைமை தபால் அலுவலகம் முதல் நுழைவு வாயில் வரையிலான,50 மீட்டர் தூரத்துக்கு முதல் கட்டமாக பணி நடக்கிறது.அதன்பின் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஒவ்வொரு பகுதியாக தேர்வு செய்து பழைய கட்டடங்கள் அகற்றப்பட்டு கட்டுமான பணி துவங்க உள்ளது.

    ஒரே நேரத்தில் இரண்டு பிளாட்பார்ம்களிலும் பணிகள் நடந்தால் இடையூறு ஏற்படும் என்பதால் முதல் பிளாட்பார்மில் மட்டும் பணி துவங்கியுள்ளது.இரண்டாவது பிளாட்பார்மில் எந்த பணியும் தற்போதைக்கு துவங்கவில்லை. 2வது பிளாட்பார்ம் அருகே பயன்பாடு இல்லாமல் காலியாக உள்ள குடியிருப்பு விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமான பணி துவங்க உள்ளதால் பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட உள்ளன.

    ×