search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் ரூ.31.28 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள்
    X

    பஸ்நிலைய பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    கொடைக்கானலில் ரூ.31.28 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள்

    • கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் சுமார் ரூ.31.28 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் நடை பெற்று வருகிறது.
    • இந்த பணிகளை மண்டல செயற்பொறியாளர் ஆய்வு செய்தார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் முக்கிய சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது. இங்கு நகராட்சி சார்பில் பல்வேறு மேம்பாட்டு பணிகளும் நடைபெற்று வருகிறது.

    கொடைக்கானல் அண்ணா சாலை பகுதியில் அமைந்துள்ள தினசரி சந்தை, கொடைக்கானல் பஸ் நிலைய புதிய கழிவறை கட்டிடம் மற்றும் பஸ் நிலைய கட்டிட பராமரிப்புபணிகள், படகு குழாம், செண்பகனூர் அய்யர் கிணறு பகுதி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ரூ.31.28 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் நடை பெற்று வருகிறது.

    இந்த பணிகளை மண்டல செயற்பொறியாளர் மனோகரன் ஆய்வு செய்தார். ஆய்வின்போது கொடைக்கானல் நகர் மன்றத்தலைவர் செல்லத்துரை, துணைத் தலைவர் மாயக்கண்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மண்டல செயற்பொறியாளர் மனோகரன் நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.

    Next Story
    ×