search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chief Secretary"

    • கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள், அதிகாரிகள், கவர்னர் ஆகியோர் இடையே இணக்கமான சூழல் இருந்தது.
    • கடந்த 5 ஆண்டில் பெரும்பாலும் மோதலில்தான் காலம் கடந்தது.

    புதுச்சேரி:

    யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு என்பது கவர்னரையே குறிக்கும்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி அமைச்சரவை கவர்னருக்கு ஆலோசனை கூறும் அவையாகத்தான் கருதப்படுகிறது.

    இதனால் எந்த புதிய திட்டங்களுக்கும், நலத்திட்டங்களுக்கும் அதிகாரிகள் வழியாக கவர்னர் ஒப்புதல் பெற்றால்தான் நிறைவேற்ற முடியும். கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள், அதிகாரிகள், கவர்னர் ஆகியோர் இடையே இணக்கமான சூழல் இருந்தது.

    திட்டங்களில் சில சந்தேகங்களை கேட்டாலும், அதற்கு விளக்கம் அளிக்கும் பட்சத்தில் கவர்னர் ஒப்புதல் அளிப்பார்.

    2016-ம் ஆண்டு நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு அமைந்த பிறகு ஆட்சியாளர்கள், கவர்னர் இடையே பெரும் மோதல் உருவெடுத்தது.

    ஆட்சியாளர்கள் ஒரு தரப்பாகவும், கவர்னர் தலைமையில் அதிகாரிகள் ஒரு தரப்பாகவும் இரண்டாக பிரிந்தனர். இதனால் கடந்த 5 ஆண்டில் பெரும்பாலும் மோதலில்தான் காலம் கடந்தது.

    இதன்பிறகு மத்திய அரசின் கூட்டணி அரசே புதுச்சேரியில் அமைந்தது. இதனால் இந்த மோதல் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதிகாரிகளுடனான மோதல் நீடித்தது.

    தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா, அரசுக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும், தன்னிச்சையாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இது சட்டசபையிலும் எதிரொலித்தது. எம்.எல்.ஏ.க்கள், தலைமை செயலருக்கு எதிராக போர்க்கொடியும் தூக்கினர்.

    எந்த திட்டத்துக்கான கோப்பை அனுப்பினாலும், அத்திட்டத்துக்கு பல்வேறு கேள்விகளை கேட்டு கோப்பை திருப்பி அனுப்பு வதாக ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்கள் குற்றம்சாட்டினர்.

    இதனிடையே அதிகாரிகள் மாற்றத்தில் முதல்-அமைச்சரோடு கலந்து பேசாமல் தன்னிச்சையாக தலைமை செயலாளர் செயல்பட்டதாக புகார் எழுந்தது.

    இதையடுத்து தலைமை செயலர் முதல்-அமைச்சரிடம் நேரில் விளக்கமளித்தார். இதனால் தலைமை செயலாளரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்தது.

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தலைமை செயலாளரை மாற்றித்தர வேண்டும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்ததாகவும் கூறப்படு கிறது. இந்த நிலையில் புதுச்சேரி தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா சண்டிகர் மாநில அரசுக்கு ஆலோசகராக மாற்றப்பட்டுள்ளார்.

    அவருக்கு பதிலாக அருணாச்சல பிரதேசத்தில் பணியில் உள்ள சரத் சவுகான் புதுவை தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதேபோல புதுச்சேரி ஐ.ஏ.எஸ். அதிகாரி சவுத்ரிஅபிஜித் விஜய் சண்டிகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    அந்தமான் தீவில் பணியாற்றும் ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் புதுச்சேரிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    புதுச்சேரி கலெக்டர் வல்லவன் கோவாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    அருணாச்சல பிரதேச அதிகாரி தால்வ்டே புதுச்சேரிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை யாரை கலெக்டராக நியமிப்பது என்பது அரசின் முடிவாகும். எனவே புதுச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள தால்வ்டே கலெக்டராக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

    இந்த அதிகாரிகள் மாற்றம் புதுச்சேரியில் ஆட்சியாளர்கள்-அதிகாரிகளிடையே நிலவிய மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    • வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 49,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
    • கன்னியாகுமரி, தென்காசியில் அனைத்து நியாய விலைக்கடைகளும் செயல்படத் தொடங்கியுள்ளன.

    தமிழகத்தில் தென் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட வெள்ள மீட்பு நடவடிக்கைகள் குறித்து இன்று சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா விளக்கம் அளித்தார்.

    அப்போத அவர் பேசியதாவது:-

    தென் தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப்பணிகள் நிறைவடைந்துள்ளது. மீட்புப்பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர், மாநில பேரிடர் மீட்புப்படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். தென் மாவட்டங்களில் 3,400 பேர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர்.

    வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 49,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அனைத்து பகுதிகளிலும் சமுதாய சமையல் கூடங்கள் மூலம் உணவு தயாரித்து வழங்குகிறோம். இதுவரை 5 லட்சம் உணவு பொட்டலங்கள் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளன.

    மழை, வெள்ளத்தால் தென் மாவட்டங்களில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். 3,500 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன.

    தென் மாவட்டங்களில் பால் விநியோகம் சீராகி உள்ளது. தென் மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமான தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி, தென்காசியில் அனைத்து நியாய விலைக்கடைகளும் செயல்படத் தொடங்கியுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 17, 18ம் தேதி நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை
    • நெல்லை மாவட்டத்தில் பால் விநியோகம் ஓரிரு நாளில் சீரடையும்.

    நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது.

    இதனால், சாலை எங்கும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இதுகுறித்து கூறியதாவது:-

    கடந்த 17, 18ம் தேதி நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது.

    18ம் தேதி காலை முதல் மதியம் வரை தூத்துக்குடி மாவட்டத்தில் சராசரியாக 11 செ.மீ மழை பெய்துள்ளது. இதேபோல், நெல்லை மாவட்டத்தில் 9 செ.மீ., மழை பெய்துள்ளது.

    காயல்பட்டினத்தில் 36 மணி நேரத்தில் 116 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. 

    திருச்செந்தூரில் 92 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. பல பகுதிகளில் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

    தென்மாவட்டங்களில் பெய்த மழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட கணிப்பு தவறானது. அவர்கள் கூறியிருந்த கணிப்பின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் இருந்தது. ஆனால், கணிப்பை விட கூடுதல் மழை பெய்தததால் பாதிப்பு அதிகமாகி உள்ளது.

    மீட்பு பணிகளில் 1,350 பேரில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் 250 பேர் ஈடுபட்டுள்ளனர்.

    160 நிவாரண முகாம்கள் அமைப்பு, சுமார் 17 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இன்று மட்டும் முகாம்கள் தவிர 34 ஆயிரம் உணவு பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

    9 ஹெலிகாப்டர்கள் மூலம் கிராமங்களில் உணவு வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் 13,500 கிலோ உணவு வழங்கப்பட்டுள்ளது.

    தண்ணீர் வடிந்த பகுதிகளில் இதர சேவைகள் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் பால் விநியோகம் ஓரிரு நாளில் சீரடையும்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் 30 ஆயிரம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படும்.

    தென்காசி, குமரி மாவட்டங்களில் 100 சதவீதம் மின் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. 

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 18 சதவீத மின் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 60 சதவீத இடங்களில் மின் விநியோகம் வழங்கப்படவில்லை. வெள்ளம் வடிய வடிய மின் விநியோகம் வழங்கப்படும்.

    திருச்செந்தூரில் இன்று காலை அதிகனமழை பதிவானது.

    ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் ஹெலிகாப்டர் மூலம் 2 முறை உணவு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. வெள்ளம் வடிந்ததும் சேதம் கணக்கிடப்பட்டு நிவாரணம் வழங்கப்படும்

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் 43 தீயணைப்பு நிலையங்களில் உள்ள வீரர்கள் மீட்பு பணிகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.
    • அதிகம் காற்று வீசும்போது மட்டும் உயர்மின் அழுத்தம் கொண்ட இடங்களில் கட்டாயம் மின் சப்ளை நிறுத்தப்படும்.

    சென்னை:

    தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மயிலாப்பூரில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் இன்று ஆய்வு செய்தார். பேரிடர் மீட்பு பணிக்காக தயார் நிலையில் உள்ள தளவாடங்களை அவர் பார்வையிட்டார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 2 ஆண்டுகளில் மழை நீர் வடிகால் பணிகள் பல பகுதிகளில் சரி செய்யப்பட்ட காரணத்தால் மழைநீர் தேங்கினாலும் சில மணி நேரங்களில் வடிந்து விடுகிறது. ஒருசில பகுதிகளை தவிர மற்ற இடங்களில் பெரிய பாதிப்பு இல்லை.

    கடந்த 3 நாட்களாக பெய்த மழையின்போது சென்னையில் தண்ணீர் தேங்கிய 150 இடங்களை அடையாளம் கண்டுள்ளோம். அந்த பகுதியில் தேங்கிய தண்ணீரை மோட்டார் மூலம் அகற்றினோம்.

    சென்னையில் 43 தீயணைப்பு நிலையங்களில் உள்ள வீரர்கள் மீட்பு பணிகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களையும் சேர்த்து 1,700 பேர் தயார் நிலையில் உள்ளனர்.

    இது தவிர மீனவர் துறை சார்பாக மீனவ நண்பர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். மீனவர்கள் கடலுக்குள் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தி உள்ளோம்.

    அதே மாதிரி பொதுமக்களுக்கு விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், புயல் நெருங்கி வரும்போது காற்று வேகமாக வீசும் என்பதால் வீட்டில் இருந்து வெளியே வராமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

    சென்னையில் பல வீடுகளுக்கு கேபிள் மூலம் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இங்கு மின்சார ஜங்ஷன் பாக்ஸ் பல இடங்களில் 3 அடிக்கு உயர்த்தி வைத்திருப்பதால் தண்ணீர் தேங்கினாலும் அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படாமல் தடையின்றி மின்சாரம் கிடைக்கும்.

    அதிகம் காற்று வீசும்போது மட்டும் உயர்மின் அழுத்தம் கொண்ட இடங்களில் கட்டாயம் மின் சப்ளை நிறுத்தப்படும். ஆனால் கேபிள் மூலம் மின்சாரம் வழங்கும் இடங்களில் தடை ஏற்படாத அளவுக்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அருங்காட்சியக கமிஷனர் சுகந்தி உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சிறப்பு செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
    • ஒழுங்கு நடவடிக்கை கமிஷனர் உமாசங்கர், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புதிய முயற்சிகள் நிறுவன இயக்குனராக மாற்றப்பட்டார்.

    சென்னை:

    தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கமிஷனராக இருந்த தாரேஸ் அகமது சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவர் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கமிஷனராக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார். சமூக பாதுகாப்பு திட்ட கமிஷனர் வெங்கடாச்சலம் நில சீர்திருத்த கமிஷனராக மாற்றப்படுகிறார். அவர் நில சீர்திருத்த இயக்குனர் மற்றும் நகர்ப்புற நில உச்சவரம்பு மற்றும் நகர்ப்புற நிலவரி அலுவல் சாரா இயக்குனராகவும் முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

    தமிழ்நாடு பண்டகசாலை கழக மேலாண் இயக்குனர் சிவஞானம் பொது மற்றும் மறுவாழ்வு துறையின் கூடுதல் செயலாளராக மாற்றப்படுகிறார். பொது மற்றும் மறுவாழ்வு துறை சிறப்பு செயலாளர் கலையரசி வருவாய் நிர்வாக கூடுதல் கமிஷனராக நியமிக்கப்படுகிறார். அறிவியல் நகர தலைவர் மலர்விழி நீர்வளத்துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்படுகிறார். அருங்காட்சியக கமிஷனர் சுகந்தி உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சிறப்பு செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

    தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புதிய முயற்சிகள் நிறுவன இயக்குனர் சந்திரகலா ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்ட இயக்குனராக நியமிக்கப்படுகிறார். ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்ட இயக்குனரும், சமூக நல கமிஷனராக முழு கூடுதல் பொறுப்பு வகித்த அமுதவள்ளி சமூக நல கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரம் அளித்தல் துறையின் கமிஷனராக ஜெயகாந்தன் மாற்றப்பட்டதாக பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து செய்யப்படுகிறது.

    ஒழுங்கு நடவடிக்கை கமிஷனர் உமாசங்கர், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புதிய முயற்சிகள் நிறுவன இயக்குனராக மாற்றப்பட்டார். நீர்வளத்துறை கூடுதல் செயலாளராக இருந்த மகேஸ்வரி ரவிக்குமார் விடுமுறை நிறைவடைந்ததைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

    சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் செயல் இயக்குனர் சிம்ரஞ்சித் சிங் கஹ்லோன் நகராட்சி நிர்வாக துணை இயக்குனராக மாற்றப்பட்டு இருக்கிறார். புவியியல் மற்றும் சுரங்கத்துறை கமிஷனர் ஜெயகாந்தன் ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சித்துறை சிறப்பு செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். வாழ்ந்து காட்டுவோம் திட்ட தலைமை செயல் அதிகாரி பத்மஜா பொதுத்துறை துணை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதல் செயலாளர் கஜலட்சுமி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழகத்தின் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்படுகிறார். உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளர் பழனிச்சாமி தமிழ்நாடு பண்டகசாலை கழகத்தின் மேலாண்மை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனர் லலிதா சென்னை மாநகராட்சியின் கூடுதல் கமிஷனராக (வருவாய் மற்றும் நிதி) மாற்றப்பட்டு உள்ளார்.

    சென்னை மாநகராட்சியின் துணை கமிஷனராக (வருவாய் மற்றும் நிதி) ஆனந்த் மோகனை நியமித்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது. அவர் நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனராக தொடர்ந்து செயல்படுவார். திருவள்ளூர் கூடுதல் கலெக்டர் ரிஷப் திருவண்ணாமலை கூடுதல் கலெக்டராக மாற்றப்பட்டார். தஞ்சை மாவட்ட கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா திருவள்ளூர் மாவட்ட கூடுதல் கலெக்டராக மாற்றப்பட்டார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்த சிவ்தாஸ் மீனா 1989-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியானார்.
    • கடந்த சில நாட்களாக புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி வந்தது.

    சென்னை:

    தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு நாளையுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

    இந்நிலையில் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை பணியில் நீடிப்பார்.

    நகராட்சி நிர்வாகம்-நீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா தற்போது தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்த சிவ்தாஸ் மீனா 1989-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியானார்.

    கடந்த சில நாட்களாக புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

    • தலைமைச் செயலாளர் இறையன்பு ஓய்வு பெற்றவுடன், தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
    • சைலேந்திரபாபு டி.என்.பி.எஸ்.சி. தலைவராகலாம் என தெரிகிறது.

    சென்னை:

    தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு வருகிற 30-ந்தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதே நாளில் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவும் ஓய்வு பெறுகிறார்.

    இந்நிலையில் தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலர் யார்? புதிய டி.ஜி.பி. யார்? என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    சென்னை போலீஸ் கமிஷனராக உள்ள சங்கர் ஜிவால் புதிய டி.ஜி.பி.யாக நியமிக்கப்படுவார் என தெரிகிறது.

    ஆனாலும் இந்த பட்டியலில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பெயர்கள் உள்ளதால் அதில் ஒருவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்து அறிவிப்பார்.

    அதே போல் புதிய தலைமைச் செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.

    அதாவது தற்போதைய தமிழக அரசின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பட்டியலில் முதலிடத்தில் 1986-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஹன்ஸ்ராஜ் வர்மா. இவர் தற்போது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழக தலைவராக உள்ளார்.

    அடுத்தது, 1989ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான எஸ்.கே.பிரபாகர். இவர் தற்போது வருவாய்த் துறையின் கீழ் வரும் வருவாய் நிர்வாக ஆணையராக உள்ளார்.

    மூன்றாவது, இதே 1989-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான சிவ்தாஸ் மீனா. இவர் தற்போது நகராட்சி நிர்வாகத்துறை செயலராக உள்ளார்.

    இவர்களில் பெரும்பாலும் சிவ்தாஸ் மீனாவே தமிழக அரசின் அடுத்த தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தலைமைச் செயலாளர் இறையன்பு ஓய்வு பெற்றவுடன், தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதே போல் சைலேந்திரபாபு டி.என்.பி.எஸ்.சி. தலைவராகலாம் என தெரிகிறது.

    • தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
    • ஹன்ஸ்ராஜ் வர்மா அடுத்தாண்டு மே மாதமும் சிவ்தாஸ் மீனா அடுத்தாண்டு அக்டோபரிலும் ஓய்வு பெறுகின்றனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் இறையன்பு 1988-ம் ஆண்டு தமிழக பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரி. இவருக்கு வயது 60 ஆவதால் வரும் ஜூன் 30-ந்தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.

    இந்த நிலையில் தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதில் மூன்று பேர் பெயர்கள் பட்டியலில் உள்ளது.

    அதாவது தற்போதைய தமிழக அரசின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள 1986-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஹன்ஸ்ராஜ் வர்மா. இவர் தற்போது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழக தலைவராக உள்ளார்.

    அடுத்தது, 1989-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான எஸ்.கே.பிரபாகர். இவர் தற்போது வருவாய்த் துறையின் கீழ் வரும் வருவாய் நிர்வாக ஆணையராக உள்ளார்.

    மூன்றாவது, இதே 1989-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான சிவ்தாஸ் மீனா. இவர் தற்போது நகராட்சி நிர்வாகத்துறை செயலராக உள்ளார்.

    இதில், ஹன்ஸ்ராஜ் வர்மா அடுத்தாண்டு மே மாதமும் சிவ்தாஸ் மீனா அடுத்தாண்டு அக்டோபரிலும் ஓய்வு பெறுகின்றனர். எஸ்.கே.பிரபாகர் வரும் 2026-ம் ஆண்டு ஜனவரியில் ஓய்வு பெறுகிறார்.

    இவர்களில் பெரும்பாலும் சிவ்தாஸ் மீனா தமிழக அரசின் அடுத்த தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

    தலைமைச் செயலாளராக உள்ள இறையன்பு ஓய்வு பெற்றவுடன் மாநில தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷகில் அக்தர் மாநில தலைமை தகவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இதன் காரணமாக தலைமைச் செயலாளர் இறையன்பு ஓய்வு பெற்றவுடன், அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

    இன்று தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். விரைவில் புதிய தலைமைச் செயலாளர் யார் என்பது முடிவு செய்து கவர்னருக்கு கோப்பு அனுப்பி வைக்கப்படும்.

    இதைத்தொடர்ந்து, தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்பதற்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு ஏற்கனவே கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர்.
    • தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு புதிய கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழ் நாட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகளை கண்காணிக்க, 12 மாவட்டங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் சென்னையை தவிர 25 மாவட்டங்களுக்கு ஏற்கனவே கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவதாக தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவித்து இருக்கிறார்.

    தமிழகத்தில் புதிய அணைகள் கட்டும் பணி, குடிமராமத்து, நீர்நிலைகளை மீட்டெடுத்தல், நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், சிறப்பு திட்டங்களை செயல்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை கண்காணிக்க தனியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    பிளாஸ்டிக் ஒழிப்பு, மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, வெள்ளநீர் தடுப்பு நடவடிக்கை, திடக்கழிவு மேலாண்மை, ஊரக பகுதி மக்களுக்கான அடிப்படை வசதி தேவைகள் உள்ளிட்ட பணிகளையும் இவர்கள் கண்காணிப்பார்கள்.

    மாவட்ட நிர்வாகத்துடன் கண்காணிப்பு அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்புவார்கள். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் பெயர் விவரம் வருமாறு:-

    அரியலூா் மாவட்டம்-சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை செயலா் அருண்ராய், கோவை மாவட்டம்-டிட்கோ நிா்வாக இயக்குநா் ஜெயஸ்ரீ முரளிதரன். கள்ளக்குறிச்சி மாவட்டம்-நெடுஞ்சாலைகள் துறை கூடுதல் தலைமைச் செயலா் பிரதீப் யாதவ், காஞ்சீபுரம் மாவட்டம்-ஊரக வளா்ச்சித்துறை முதன்மைச் செயலா் பி.செந்தில்குமாா்.

    செங்கல்பட்டு மாவட்டம்- விவசாயத்துறை செயலாளர் சமயமூர்த்தி, திருவள்ளூர் மாவட்டம்-சிவில் சப்ளை கமிஷனர் வி.ராஜாராமன். நாகப்பட்டினம் மாவட்டம்-எரிசக்தித் துறைச் செயலா் ரமேஷ் சந்த் மீனா, நாமக்கல் மாவட்டம்-தகவல் தொழில்நுட்பவியல் துறைச் செயலா் குமர குருபரன், புதுக்கோட்டை மாவட்டம்-நில நிா்வாக ஆணையா் எஸ்.நாகராஜன்.

    ராமநாதபுரம் மாவட்டம்-மனிதவள மேலாண்மைத் துறைச் செயலா் நந்தகுமாா், ராணிப்பேட்டை மாவட்டம்-தேசிய சுகாதார இயக்க திட்ட இயக்குநா் ஷில்பா பிரபாகா் சதீஷ், சேலம் மாவட்டம்-நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நிா்வாக இயக்குநா் சங்கர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    கன்னியாகுமரி மாவட் டம்-வணிகவரித்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி, கரூர்-மீன்வளத்துறை கமிஷனர் கே.எஸ். பழனிசாமி, மதுரை மாவட்டம்-முதன்மை செயலாளர் பி.சந்திரமோகன்.

    புதுக்கோட்டை மாவட்டம்-எஸ்.நாகராஜன், தஞ்சாவூர் மாவட்டம்-ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனர்-ஆனந்த், தேனி-கார்த்திக், தூத்துக்குடி மாவட்டம்-சிஜி தாமஸ் வைத்யன், திருப்பூர்-டான்சி, முதன்மை செயலாளர்-விஜயகுமார், வேலூர் மாவட்டம்-ஆதி திராவிட பழங்குடி நலத்துறை செயலாளர் லஷ்மி பிரியா, விழுப்புரம் மாவட்டம்-பஞ்சாயத்து ராஜ் கமிஷனர்-ஹர் சஷாய் மீனா, விருதுநகர் மாவட்டம்-ஆனந்தகுமார்.

    • நாகப்பட்டினம் கலெக்டர் அருண் தம்புராஜ், கடலூர் கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.
    • செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்களை நியமித்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேற்று இரவு உத்தரவிட்டுள்ளார்.

    அதன் விவரம் வருமாறு:-

    * நாகப்பட்டினம் கலெக்டர் அருண் தம்புராஜ், கடலூர் கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

    * வீட்டு வசதி மற்றும் ஊரக மேம்பாட்டு துறை இணை செயலாளர் ஆனி மேரி சொர்ணா, அரியலூர் கலெக்டராக நியமிக்கப்படுகிறார்.

    * கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், தஞ்சாவூர் கலெக்டராக பதவியேற்பார்.

    * வணிக வரித்துறை (உளவுப்பிரிவு) இணை கமிஷனர் மெர்சி ரம்யா, புதுக்கோட்டை கலெக்டராக மாற்றப்படுகிறார்.

    * தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் டாக்டர் எஸ்.உமா, நாமக்கல் கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * நில அளவை மற்றும் நில ஆவணத்துறை கூடுதல் இயக்குனர் கலைச்செல்வி மோகன் காஞ்சிபுரம் கலெக்டராக பொறுப்பேற்பார்.

    * தமிழ்நாடு பைபர்நெட் கார்ப்பரேசன் மேலாண்மை இயக்குனர் கமல் கிஷோர், செங்கல்பட்டு கலெக்டராக மாற்றப்படுகிறார்.

    * வணிக வரித்துறை இணை கமிஷனர் (நிர்வாகம்) எம்.எஸ்.சங்கீதா, மதுரை கலெக்டராக மாற்றப்படுகிறார்.

    * தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆஷா அஜித், சிவகங்கை கலெக்டராக பதவியேற்பார்.

    * தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை இணை கமிஷனர் விஷ்ணு சந்திரன், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்பார்.

    * செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

    * சேலம் மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜ், திருப்பூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    * சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்தின் நிர்வாக இயக்குனர் ராஜகோபால் சுங்கரா, ஈரோடு கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

    * சேலம் ஜவ்வரிசி கழகத்தின் மேலாண்மை இயக்குனர் எம்.என்.பூங்கொடி, திண்டுக்கல் கலெக்டராக பொறுப்பேற்பார்.

    * ராமநாதபுரம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், நாகப்பட்டினம் கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

    * தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனத்தின் இணை மேலாண்மை இயக்குனர் கே.எம்.சரயு, கிருஷ்ணகிரி கலெக்டராக நியமிக்கப்படுகிறார்.

    தமிழகத்தில் 32 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் அவர்கள் புதிதாக பொறுப்பேற்க உள்ள துறைகள் பற்றிய விவரம் வருமாறு:-

    * சர்வே மற்றும் செட்டில்மென்ட் இயக்குனர் டி.ஜி. வினய், தொழில்நுட்ப இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி சர்வே மற்றும் செட்டில்மென்ட் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

    * தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் கோவிந்தராவ், தமிழ்நாடு சுகாதார முறைகள் திட்ட இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

    * திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினித், மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

    * தமிழ்நாடு மாநில மார்க்கெட்டிங் கழக மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணியன், வேளாண்மை ஆணையராக பொறுப்பேற்கிறார்.

    * தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக நியமிக்கப்படுகிறார்.

    * தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பதிவுத்துறை ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் விவேகானந்தன், கைத்தறி ஆணையராக பொறுப்பேற்கிறார்.

    * ஆசியர்கள் தேர்வு வாரிய தலைவராக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டார்.

    * நிதித்துறை சிறப்பு செயலாளர் ரீட்டா ஹரீஸ் தாக்கர், சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை சிறப்பு செயலாளராக மாற்றப்பட்டார்.

    * எழுதுபொருள் அச்சுத்துறை முன்னாள் கமிஷனராக இருந்த சுகந்தி அருங்காட்சிய ஆணையராக மாற்றப்பட்டார்.

    * ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணன் உன்னி, நிதித்துறை இணை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். அரியலூர் கலெக்டர் ரமண சரஸ்வதி, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இணை தலைமை செயல் அதிகாரியாக மாற்றப்பட்டார்.

    * நில நிர்வாக கூடுதல் ஆணையர் சுப்புலட்சுமி, வணிக வரிகள் கூடுதல் ஆணையராக (நிர்வாகம்) இடமாற்றம் செய்யப்பட்டார். கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

    * கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனராக மாற்றப்பட்டார்.

    * காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, சர்வசிக்ஷ் அபியான் திட்ட இயக்குனர் ஆனார்.

    * தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழக மேலாண்மை இயக்குனர் கஜலட்சுமி, உள், மதுவிலக்கும் மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதல் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

    * நாமக்கல் மாவட்ட கலெக்டர் சிரேயாசிங், வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குனராக பொறுப்பேற்கிறார்.

    * தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனர் லலிதா, நகராட்சி நிர்வாக கூடுதல் கமிஷனராக மாற்றப்பட்டார்.

    * ராஷ்மி சித்தார்த் ஜகாடே, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் செயலாளராக மாற்றப்பட்டார்.

    * பதிவுத்துறை ஐ.ஜி. சிவன் அருள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் கணினி மயமாக்கலின் சிறப்பு பணி அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

    * பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் நந்தகோபால், வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை சிறப்பு செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

    * நிதித்துறை துணை செயலாளர் லட்சுமி பாவ்யா தன்னீரு, வணிக வரிகள் மற்றும் இணை ஆணையராக (ஈரோடு) இடமாற்றம் செய்யப்பட்டார்.

    * கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் சங்கர், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக மாற்றப்பட்டார்.

    * மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையராக நியமிக்கப்படுகிறார்.

    * திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன், தமிழ்நாடு மாநில மார்க்கெட்டிங் கழகத்தின் மேலாண்மை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

    * மதுரை கலெக்டர் அனீஷ் சேகர், தமிழ்நாடு எல்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார். தமிழ்நாடு கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி சங்கர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார்.

    * இல்லம் தேடி கல்வி சிறப்பு பணி அதிகாரி இளம்பகவத், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் ஆனார்.

    * புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, பெருநகர சென்னை வளர்ச்சி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்கிறார்.

    * வேளாண்மை இயக்குனர் அண்ணாத்துறை தமிழ்நாடு சாலைகள் பிரிவு திட்ட அதிகாரியாக மாற்றப்பட்டார். அவர், சென்னை கன்னியாகுமரி தொழில் வழிச்சாலை திட்ட அதிகாரியாக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார். மேலும், தமிழ்நாடு சாலைகள் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராகவும் செயல்படுவார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் நாள்தோறும் ஒரு பொருளுடன் கூடிய திருக்குறளை கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும்.
    • திருக்குறள் மற்றும் தமிழ் கலைச்சொற்கள் எழுதும் பணியை கண்காணித்து அறிக்கை அனுப்ப வேண்டும்.

    சென்னை:

    தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் நாள்தோறும் ஒரு பொருளுடன் கூடிய திருக்குறளை கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும்.

    ஆட்சி சொல்லகராதியில் இருக்கும் ஆங்கிலச் சொல் ஒன்றையும், அதற்குரிய தமிழ் சொல்லையும் கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும்.

    தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலக துறைகள், தன்னாட்சி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் இதை பின்பற்ற வேண்டும்.

    திருக்குறள் மற்றும் தமிழ் கலைச்சொற்கள் எழுதும் பணியை கண்காணித்து அறிக்கை அனுப்ப வேண்டும் என்று அனைத்து துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், துறைத்தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

    • காவிரியில் நடப்பு ஆண்டு 2022-23ல் நீர் வழங்கும் காலத்தில், இதுவரை 658 டி.எம்.சி., நீர், தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.
    • காவிரி ஆற்றில் ஆங்காங்கே பச்சை நிறத்துடன், சாக்கடை நீர் ஓடுகிறது.

    சென்னை:

    காவிரியில் கழிவு நீர் அதிகளவில் கலப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி கர்நாடக அரசுக்கு, தமிழக தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    காவிரியில் நடப்பு ஆண்டு 2022-23ல் நீர் வழங்கும் காலத்தில், இதுவரை 658 டி.எம்.சி., நீர், தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.

    காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயித்த நீரளவை காட்டிலும், இது 484 டி.எம்.சி கூடுதல். நீர் வழங்கும் தவணை காலம் முடிவதற்கு மே வரை அவகாசம் உள்ளது. இந்நிலையில் பெங்களூரு நகரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், நேரடியாக காவிரி ஆற்றில் விடப்படுகிறது.

    சுற்றுச்சூழல் பாதிப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் ஆங்காங்கே பச்சை நிறத்துடன், சாக்கடை நீர் ஓடுகிறது. முறைப்படி கிடைக்கும் நீரில் பெரும் பகுதி கழிவு நீராகவே உள்ளது.

    காவிரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க, தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×