search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirukkural"

    • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் நாள்தோறும் ஒரு பொருளுடன் கூடிய திருக்குறளை கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும்.
    • திருக்குறள் மற்றும் தமிழ் கலைச்சொற்கள் எழுதும் பணியை கண்காணித்து அறிக்கை அனுப்ப வேண்டும்.

    சென்னை:

    தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் நாள்தோறும் ஒரு பொருளுடன் கூடிய திருக்குறளை கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும்.

    ஆட்சி சொல்லகராதியில் இருக்கும் ஆங்கிலச் சொல் ஒன்றையும், அதற்குரிய தமிழ் சொல்லையும் கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும்.

    தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலக துறைகள், தன்னாட்சி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் இதை பின்பற்ற வேண்டும்.

    திருக்குறள் மற்றும் தமிழ் கலைச்சொற்கள் எழுதும் பணியை கண்காணித்து அறிக்கை அனுப்ப வேண்டும் என்று அனைத்து துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், துறைத்தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

    • எல்லா விஷயங்களையும் ஆவணப்படுத்துவதை விட ஒவ்வொரு நிகழ்வுகளை அனுபவிக்க வேண்டும்.
    • தமிழர்களுக்கு திருக்குறள் தான் வேதம். அந்த போதி மரத்தின் கீழ் உட்கார்ந்து பாருங்கள்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வேலன் ஓட்டல் வளாகத்தில் புத்தக கண்காட்சி நடக்கிறது.இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் 'புத்தகம் எனும் போதிமரம்' என்ற தலைப்பில் பர்வீன் சுல்தானா பேசியதாவது:-  இந்த வினாடியை அனுபவிக்க யாருக்கும் தெரிவதில்லை. அனைத்தையும் ஆவணப்படுத்தி வைக்க நினைக்கிறோம்.

    நினைவு அலைகளை விட, ஆவண அலைகள் பெரிது கிடையாது. எல்லா விஷயங்களையும் ஆவணப்படுத்துவதை விட ஒவ்வொரு நிகழ்வுகளை அனுபவிக்க வேண்டும்.

    புத்தகம் வாசிப்பு என்பது ஒரு அற்புதமான கலை. அது ஒரு பொழுதுபோக்கு கிடையாது. புத்தகம் ஒரு மோதிமரம். புத்தகங்களை இளைஞர்கள் மத்தியில் கடத்தும் காலகட்டத்தில் உள்ளோம். மரங்களில் உள்ள ஒவ்வொரு வித்தியாசங்களை போன்று ஒரு புத்தகத்தை வாசிக்க, வாசிக்கத்தான் அதன் அருமையை உணர முடியும்.ஒரு புத்தகத்தை எடுத்தால் முழுமையாக வாசித்து முடிக்க வேண்டும். வெறும் சொல், கருத்து ஏற்றினால் அது மந்திரம். தமிழர்களின் வரலாறு தமிழ் தான். மொழி தான் வரலாறு. தமிழர்களுக்கு திருக்குறள் தான் வேதம். அந்த போதி மரத்தின் கீழ் உட்கார்ந்து பாருங்கள். இவ்வாறு அவர் பேசினார் 

    ×