search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cauvery"

    • கே.ஆர்.எஸ். அணைக்கு நீர் வரத்து 41,000 கன அடியாக உள்ளது.
    • கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு 38,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமம் அருகே அமைந்துள்ளது கிருஷ்ணராஜசாகர் அணை( கே.ஆர்.எஸ்.). இந்த அணை காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்திருக்கிறது. இதனால் இந்த அணை முக்கிய அணையாக கருதப்படுகிறது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 124.80 அடி ஆகும். இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக குடகு மாவட்டமும், கேரள மாநிலம் வயநாடு பகுதியும் அமைந்துள்ளது.

    அந்த பகுதிகளில் தற்போது தொடர் கனமழை பெய்து வருவதால் கே.ஆர்.எஸ். அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து இருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் அணை எப்போது வேண்டுமானாலும் நிரம்பிவிடும் என்று கருதப்பட்டது.

    அதன்படி நேற்று மாலையில் கே.ஆர்.எஸ். தனது முழு கொள்ளளவான 124.80 அடியை எட்டி முழுமையாக நிரம்பியது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு கே.ஆர்.எஸ். அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

    கே.ஆர்.எஸ். அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணைக்கு நீர் வரத்து 41,000 கன அடியாக உள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி வழியே தமிழ்நாட்டுக்கு 38,500 கன அடி தண்ணீரும், கர்நாடக விவசாய நிலங்களுக்கு கால்வாய் மூலம் 2,500 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
    • போலீசார், ஊர்க்காவல் படையினர் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் கண்காணித்து வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து நேற்று வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது.

    இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று காலை 6 மணி நிலவரப்படி 65 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் என காவிரி ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. கர்நாடகா அணைகளில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே ஒகேனக்களுக்கு நாளை காலை நேரத்திற்குள் நீர்வரத்து மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருப்பதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் பரிசல் பயணம் செய்யவும் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து இன்று 5-வது நாளாக நீடிக்கிறது.

    காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது நாடார் கொட்டாய், ஊட்டமலை, சத்திரம், மற்றும் நெருப்பூர் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் போலீசார், ஊர்க்காவல் படையினர் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் கண்காணித்து வருகின்றனர்.

    காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை காவிரி நுழைவிடமான கர்நாடகா தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    • தமிழகத்திற்கான பங்கை தராமல், பாசனத்திற்கான தண்ணீரை பயன்படுத்திக்கொள்ள கர்நாடம் முயல்வது கண்டிக்கத்தக்கது.
    • கடந்த 10 நாட்களில் மட்டும் காவிரி அணைகளுக்கு 22 டி.எம்.சி தண்ணீர் வந்திருக்கிறது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கபினி அணை அடுத்த இரு நாட்களில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழகத்திற்கான பங்கை தராமல், பாசனத்திற்கான தண்ணீரை பயன்படுத்திக்கொள்ள கர்நாடம் முயல்வது கண்டிக்கத்தக்கது ஆகும்.

    கர்நாடகத்தின் குடகு மலை மற்றும் கேரள மாநிலத்தின் வயநாடு பகுதிகளில் உள்ள காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதன் காரணமாக கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது.

    கடந்த 10 நாட்களில் மட்டும் காவிரி அணைகளுக்கு 22 டி.எம்.சி தண்ணீர் வந்திருக்கிறது. அதுமட்டுமின்றி, கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. மொத்தம் 19.52 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட கபினி அணை நிரம்புவதற்கு இன்னும் ஒரு டி.எம்.சி தண்ணீர் மட்டுமே தேவை.

    இதே அளவில் நீர்வரத்து தொடர்ந்தால், அடுத்த இரு நாட்களில் கபினி அணை நிரம்பி விடும் வாய்ப்பு உள்ளது. இம்மாத இறுதிக்குள் நான்கு அணைகளும் நிரம்பும் வாய்ப்பு இருப்பதாக கர்நாடக நீர்வளத்துறை பொறியாளர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.

    கர்நாடகத்தில் காவிரி அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தான் நியாயம் ஆகும். ஆனால், தமிழகத்திற்கு தண்ணீர் விடுவது எந்த அறிவிப்பையும் வெளியிடாத கர்நாடக அரசு, வரும் 8-ந் தேதி முதல் கர்நாடக பாசனத்திற்காக பாசனக் கால்வாய்கள் மூலம் தண்ணீர் திறக்க விருப்பதாக அறிவித்திருக்கிறது. இது உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். இதன் மூலம் காவிரி சிக்கலில் கர்நாடகம் வழக்கம் போல், அதன் உண்மை முகத்தைக் காட்டியுள்ளது.

    காவிரி நீர்ப்பகிர்வு வழக்கில் 2018-ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின்படி நடப்பாண்டின் ஜூன் மாதத்தில் 10 டி.எம்.சி, ஜூலை மாதத்தில் 34 டி.எம்.சி என இம்மாத இறுதிக்குள்ளாக 44 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும். ஆனால், இதுவரை ஒரு டி.எம்.சி தண்ணீரைக் கூட தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் வழங்கவில்லை. இதை எந்த வகையிலும் நியாயப்படுத்தவே முடியாது.

    தமிழ்நாட்டில் குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், நடப்பாண்டில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடாததை காரணம் காட்டி, மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட வில்லை. அதனால், காவிரி பாசன மாவட்டங்களில் மொத்தம் 5 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலாக குறுவை சாகுபடி செய்வ தற்கு பதிலாக ஒரு லட்சம் ஏக்கருக்கும் குறைவான பரப்பில் தான் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது.

    குறுவை சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், சம்பா சாகுபடிக்கான ஆயத்த பணிகளை தொடங்கவும் மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

    ஆனால், காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கான தமது கடமையை கர்நாடக அரசு உணர மறுப்பதும், காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்காமல் இருக்கும் தண்ணீர் முழுவதையும் தாங்களே பயன்படுத்திக் கொள்ளத் துடிப்பதும் நியாயமற்றதாகும். கர்நாடகத்தின் இந்த செயல்களை கண்டு கொள்ளாமல் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும், கர்நாடகத்திடமிருந்து காவிரியில் தண்ணீர் பெற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அமைதி காப்பதும் காவிரி பாசன மாவட்ட உழவர்களூக்கு இழைக்கப்படும் துரோகம். இதை அனுமதிக்க முடியாது.

    காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை தாரை வார்த்து விட்டு, உறங்கும் போக்கை கைவிட்டு, நமது உரிமைகளை காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தை அணுகி, தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடும்படி வலியுறுத்த வேண்டும். அதன் மூலம் காவிரி டெல்டா உழவர்களை அரசு காப்பாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஜூன் மாதம் நிலுவையில் உள்ள 5.367 டிஎம்சி தண்ணீரையும் திறந்து விட தமிழக அரசு வலியுறுத்தியது.
    • இருதரப்பு வாதங்களை கேட்ட காவிரி மேலாண்மை ஆணையம், கலந்தாலோசித்து முடிவை தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் 31-வது கூட்டம் இன்று டெல்லியில் சுமார் ஒன்றை மணி நேரம் நடைபெற்றது.

    இதில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கர்நாடகா, தமிழகம் மற்றும் கேரளா, புதுச்சேரி ஆகியே மாநிலங்களின் அதிகாரிகள் நேரில் பங்கேற்றனர்.

    அதேபோல் ஒவ்வொருவரும் தங்களின் மாநிலங்களின் அணைகளில் உள்ள நீர் நிலவரம் குறித்து எடுத்துரைத்தனர்.

    ஜூன் மாதத்திற்கு 9.19 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்து விட வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழுவிடம் தமிழக அரசு ஏற்கனவே கோரிக்கையை முன் வைத்திருந்தது.

    அப்போது கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில் காவிரி ஒழுங்காற்று குழுவில் இருந்து எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் ஜூன் மாதம் நிலுவையில் உள்ள 5.367 டிஎம்சி தண்ணீரையும் திறந்து விட தமிழக அரசு வலியுறுத்தியது.


    அதேபோல் தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கு வழங்க வேண்டிய 31.24 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு பிலிகுண்டுலு அணையில் இருந்து திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    பருவக் காலம் என்பதல் கர்நாடாகவில் போதிய நீர் இருக்கும் என்ற காரணத்தால் திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. ஆனால், கர்நாடக அரசு வழக்கம் போல் அணையில் போதிய நீர் இருப்பு இல்லை என்றும், குடிநீர்த் தேவைக்கே தண்ணீர் உள்ளதாகவும் கூறிவிட்டது. அதேபோல் தமிழகம் கேட்கும் அளவிற்கு நீர் திறந்து விட முடியாது. அணைகளில் நீர் இருப்பு எவ்வளவு என்பதை பொறுத்து தண்ணீர் திறந்து விட முடியும் என்று கர்நாடகா தெரிவித்தது.

    இருதரப்பு வாதங்களை கேட்ட காவிரி மேலாண்மை ஆணையம், கலந்தாலோசித்து முடிவை தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.

    • காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 96வது கூட்டம் நடைபெற்றது.
    • கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையில் உள்ள காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சனைக்கு தீர்வு காண காவிரி மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    தொடர்ச்சியாக ஆணையத்தின் சார்பில் அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தப்பட்டு தொடர்புடைய மாநிலங்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 96-வது கூட்டம் குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுவை ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    காவிரியில் இருந்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி 95 டி.எம்.சி நிலுவை நீரை வழங்கவேண்டும் என தமிழ்நாடு அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

    இந்நிலையில், தமிழகத்திற்கு காவிரியில் இருந்து 2.5 டிஎம்சி தண்ணீரை திறந்து விடவேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது.

    • காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 96வது கூட்டம் நடைபெற்றது.
    • கர்நாடக அரசுக்கு, காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது.

    தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையில் உள்ள காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சனைக்கு தீர்வு காண காவிரி மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    தொடர்ச்சியாக ஆணையத்தின் சார்பில் அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தப்பட்டு தொடர்புடைய மாநிலங்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி இன்று காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 96வது கூட்டம் குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நடைபெற்றது.

    இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுவை ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    காவிரியில் இருந்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி 95 டி.எம்.சி நிலுவை நீரை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

    இதையடுத்து மே மாதத்திற்கு தர வேண்டிய 25 டி.எம்.சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டும் என்று கர்நாடகா அரசுக்கு, ஒழுங்காற்று குழு உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில், இன்று காவிரியில் 2.5 டிஎம்சி தண்ணீரை திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு, காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது.

    அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவு பிறக்கக் கூடாது என்று கர்நாடக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
    • பிப்ரவரி, மார்ச்சில் நிலுவை வைத்துள்ள 3.5 டி.எம்.சி. நீரை தடையின்றி திறக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் தொடங்கி நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம் மற்றும் கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலங்களின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இதில் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நிலுவை வைத்துள்ள 3.5 டி.எம்.சி. நீரையும், ஏப்ரல், மே மாதங்களுக்கான நீரையும் தடையின்றி திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டுமென தமிழ்நாடு அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இந்நிலையில், கர்நாடகாவில் குடிநீர் பிரச்சனை மற்றும் வறட்சி நீடித்து வருவதால் தமிழ்நாட்டிற்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட முடியாது. நீர் இருப்பு மற்றும் சூழலைக் கருத்தில் கொண்டு மட்டுமே தண்ணீர் திறக்க முடியும் என கர்நாடகா தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

    • 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார்.
    • கிராம நிர்வாக அலுவலர் பாத்திமா கோட்டை போலீஸ் புகார் கொடுத்தார்

    திருச்சி ஒயமரி சுடுகாடு தில்லைநாயகம் படித்துறை அருகில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார்.

    அவர் யார்?எந்த ஊரை சேர்ந்தவர் என்ற முழு விவரம் தெரியவில்லை. இது குறித்து தகவல் அறிந்து கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அந்த ஆண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து தேவதானம் கிராம நிர்வாக அலுவலர் பாத்திமா கோட்டை போலீஸ் புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்வது இறந்துபோன ஆண் நபர் யார் என்பது குறித்து இவர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கர்நாடகா வினாடிக்கு 3000 கன அடி நீர் திறக்க பரிந்துரைக்கப்பட்டது
    • 10 நாட்களாக 3 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது

    தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே காவிரி நதி நீர் பங்கீடு குறித்து நீண்டகாலமாக சிக்கல் நீடித்து வருகிறது.

    கடந்த மாதம் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு கர்நாடகா, வினாடிக்கு 3000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக 3 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நாளை காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது.

    இக்கூட்டத்திற்கு ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

    • காவிரி நீர் பெற்று குறுவை பயிர்களை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் காய்ந்து வரும் குறுவை பயிர்களை காப்பாற்ற தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் காவிரி நீரை வழங்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் பல்வேறு அரசியல் கட்சி சார்பிலும் போராட்டம் நடந்து வருகிறது.அந்த வகையில் இன்று தே.மு.தி.க. சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். அப்போது அவர் கருகிய குறுவை பயிர்களை கண்டு மாரடைப்பால் மரணம் அடைந்த விவசாயி ராஜ்குமார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து போராட்டம் தொடங்கி நடைபெற்றது.

    இந்த போராட்டத்தில் தஞ்சை மாநகர மாவட்ட செயலாளர் டாக்டர் ராமநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், வடக்கு மாவட்ட துணை செயலாளர் சூரியமூர்த்தி, தஞ்சை மாநகர மாவட்ட பொருளாளர் கரம்பை சிவா உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தின் போது உடனடியாக காவிரி நீர் பெற்று குறுவைப் பயிர்களை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.

    • அவர்களுக்குரிய தண்ணீரை கேட்பதாக அங்குள்ள விவசாயிகள் தவறாக நினைக்கிறார்கள்
    • காவிரி ஆற்று நீர் கர்நாடகத்திற்கு மட்டுமல்ல

    தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று கோட்டூர்புரத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உச்சநீதிமன்றம் தீர்ப்பால் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த நீரை வைத்துக் கொண்டு குறுவை பாசனத்தை பழுது இல்லாமல் காப்பற்றலாம் என கருதுகிறோம்.

    தண்ணீர் திறந்து விட்டதும் தமிழகம் வந்துவிடாது. பிலிகுண்டுலு வருவதற்கு மூன்று நாட்கள் ஆகும். இது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. கர்நாடக அரசு செயல்படுத்தவில்லை என்றால், நீதிமன்ற அவமதிப்பிற்கு ஆளாகும். அந்த நிலைக்கு போகமாட்டார்கள்.

    அவர்களுக்குரிய தண்ணீரை கேட்பதாக அங்குள்ள விவசாயிகள் தவறாக நினைக்கிறார்கள். காவிரி ஆற்று நீர் கர்நாடகத்திற்கு மட்டுமல்ல. கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகி, அந்த மாநிலத்தைவிட தமிழகத்தில்தான் அதிக இடங்களில் ஓடுகிறது. ஆற்றின் கடைமடை பகுதிக்குத்தான் அதிக உரிமை உண்டு. ஆகவே, கர்நாடகத்தில் உள்ள விவசாயிகளுக்கும் தண்ணீர் வேண்டும் என்பதை நான் மறுக்கவில்லை. தண்ணீர் மிகையாக இருக்கும் காலத்தில் இந்த பிரச்சினை இல்லை. கண்ணை மூடி திறந்து விடுவார்கள்.

    தற்போதைய நிலையில் எவ்வளவு தண்ணீர் இருந்தாலும், தமிழகத்திற்கு பங்கிட்டு கொடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அருமையாக தெரிவித்து இருக்கிறது.

    மொத்த நீரையும் திறந்து விட கேட்கவில்லை. எங்களுக்குரிய தண்ணீரை திறந்து விட கேட்கிறோம். பேச்சுவார்த்தை என்பது இனிமேல் இல்லை. பேச்சுவார்தைக்கு போனால் நமது கோரிக்கைகளை மழுங்கடித்து விடுவார்கள். இனிமேல் அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லை.

    • தண்ணீர் பற்றாக்குறை காலத்தில் விகிதாச்சார அடிப்படையில் புதுவைக்குரிய காவிரி தண்ணீரை தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
    • நீரை முழுமையாக பெற வேண்டும் என்றால் தற்பொழுது அளவிடும் இடம் தமிழகப் பகுதியான மாந்தை என்ற பகுதியில் உள்ளது.

    புதுச்சேரி:

    85-வது காவிரி நதி நீர் கூட்டம் கடந்த 28-ந் தேதி நடந்தது. கூட்டத்தில், புதுவைக்குரிய 7 டி.எம்.சி. நீர் முழுமையாக கிடைக்க வேண்டும் என்றால் அதை அளவிடும் இடத்தை மாற்ற வேண்டும் என அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    புதுவைக்கு உட்பட்ட காரைக்கால் பிராந்தி யத்திற்கு வர வேண்டிய 0.250 டி.எம்.சி. தண்ணீரில், கடந்த ஜீன், ஜூலை மாதத்தில் 0.1810 தண்ணீர் மட்டும் பெறப்பட்டது.

    இதனால், காரைக்காலுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரிலிருந்து 0.0690 டி.எம்.சி. தண்ணீர் வரத்து குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்கள், மற்றும் புதுவையை சார்ந்த காரைக்கால் பிரா ந்தியத்திற்கு கிடைக்க வேண்டிய உரிய தண்ணீரை கொடுக்க வேண்டும்.

    எனவே தண்ணீர் பற்றாக்குறை காலத்தில் விகிதாச்சார அடிப் படையில் புதுவைக்குரிய காவிரி தண்ணீரை தர வேண்டும் என வலியுறு த்தப்பட்டது.

    மேலும் புதுவைக்குரிய 7 டி.எம்.சி. நீரை முழுமையாக பெற வேண்டும் என்றால் தற்பொழுது அளவிடும் இடம் தமிழகப் பகுதியான மாந்தை என்ற பகுதியில் உள்ளது.

    அதனை காரைக்காலின் மேல போலகம்- கண்ணாபூர் என்ற பகுதியில் அளவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதையேற்று காவிரி நதிநீர் குழுவினர் காரைக்காலுக்கு இன்று வந்து ஆய்வு செய்தனர். புதுவையின் தலைமை பொறியாளர் பழனியப்பன், தமிழக பொது பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அன்பழகன் ஆகியோர் உடனிருந்து விளக்கம் அளித்தனர்.

    ×