search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "betel"

    • வெற்றிலை சுமைகளை வாங்கிச் செல்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து வெற்றிலை சுமைகளை வாங்கி செல்கின்றனர்.
    • கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்து 500-க்கும், முதியம் பயிர் ரூ.2 ஆயிரத்திற்கும் விற்பனையானது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக் கணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி, கற்பூரி போன்ற வெற்றிலை வகைகளை பயிர் செய்துள்ளனர்.

    வெற்றிலை பறிக்கும் தருவாய்க்கு வரும்போது கூலி ஆட்கள் மூலம் வெற்றி லைகளை பறித்து 100 வெற்றி லைகள் கொண்ட ஒரு கவுளியாகவும், 104 கவுளிகள் கொண்ட ஒரு சுமையாகவும் கட்டுகின்றனர். பின்னர் இதனை பரமத்திவேலூர் - கரூர் பழைய தேசிய நெடுஞ்சாலையில் செயல் பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.

    வெற்றிலை சுமைகளை வாங்கிச் செல்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து வெற்றிலை சுமைகளை வாங்கி செல்கின்றனர். கடந்த வாரம் வெள்ளைக் கொடி வெற்றிலை இளம் பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.7 ஆயிரத்துக்கும், முதியம் பயிர் சுமை ஒன்று ரூ.3500-க்கும் விற்பனை யானது. கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்து 500-க்கும், முதியம் பயிர் ரூ.2 ஆயிரத்திற்கும் விற்பனையானது.

    நேற்று வெள்ளைக் கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.5 ஆயிரத்திற்கும், முதியம் பயிர் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்துக்கும், முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.ஆயிரத்து 500-க்கும் வாங்கிச் சென்றனர். வெற்றிலை வரத்து அதிக ரிப்பாலும், முக்கிய நிகழ்ச்சிகள் இல்லாததாலும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    • வெற்றிலை ஏல சந்தைக்கு வரத்து அதிகரித்ததால் வெற்றிலை விலை சரிவடைந்துள்ளது.
    • இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.7 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்து 500-க்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் வெற்றிலை ஏல சந்தைக்கு வரத்து அதிகரித்ததால் வெற்றிலை விலை சரிவடைந்துள்ளது. பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளான பாண்டமங்கலம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், குப்புச்சிப்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வெற்றிலைகள் கர்நாடகா, கேரளா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.7 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்து 500-க்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.ஆயிரத்து 200- க்கும் ஏலம் போனது. வெற்றிலை வரத்து அதிகரித்ததால் வெற்றிலை விலை விலை சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • வாழை இலை போட்டு சாப்பாடு போடும் பழக்கம் பல இடங்களில் மாறிப் போய்விட்டது.
    • இன்றைய இளம் தலைமுறை வெற்றிலை போடும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    வெற்றிலை போடும் பழக்கத்தை பாட்டி காலத்து பழக்கம் என்று இன்றைய இளம் தலைமுறை ஒதுக்கி தள்ளிவிட்டது. ஒரு காலத்தில் சாப்பிட்டவுடன் வெற்றிலை போடும் பழக்கம் என்பது நமது தாத்தா, பாட்டிகள் மத்தியில் தவிர்க்க முடியாததாகவே இருந்து வந்தது. வெற்றிலையுடன் சுண்ணாம்பு, பாக்கு சேர்த்து போடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். என்ன சாப்பிட்டாலும் செரிமானமாக்கி விடும் என்பதை அறியாமல் அடுத்த தலைமுறை அதனை முற்றிலுமாக கைவிட்டு விட்டது என்றே கூற வேண்டும். அந்த அளவுக்கு வெற்றிலை போடும் பழக்கத்தை நாகரீக போர்வைக்குள் இன்றைய இளம் தலைமுறை மறைத்துக்கொண்டு உள்ளது.

    சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்போது தாம்பூலம் வைக்கும் பழக்கம் தற்போதும் நடைமுறையில் உள்ளது. இந்த தாம்பூல பாத்திரத்தில் வெற்றிலை, பாக்கு இருந்தால் மட்டுமே அது முழுமை அடையும். தாம்பூலமாக அமையும். இதனால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கட்டுக்கட்டாக வெற்றிலைகளை வாங்கி அதனை தாம்பூல பைகளில் போட்டு விழாவுக்கு வந்தவர்களுக்கு கொடுப்பது வழக்கம்.

    வெற்றிலை போடும் பழக்கம் எப்படி மறைந்து போனதோ அதே போன்று தாம்பூலப் பைகளில் வெற்றிலை போட்டுக்கொடுக்கும் பழக்கமும் மாறத் தொடங்கி இருக்கிறது. நாகரீகம் என்ற பெயரில் பெருகி வரும் கலாச்சார மோகத்தால் வாய் மணக்கும் பயிரான வெற்றிலையை கொஞ்சம் கொஞ்சமாக நாம் மறந்து வருகிறோம் என்றால் அது மிகையல்ல. அந்த வகையில் தற்போது தாம்பூல பைகளில் மணக்கும் வெற்றிலைக்கு பதில் பிளாஸ்டிக் வெற்றிலைகள் போடும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

    வாழை இலை போட்டு சாப்பாடு போடும் பழக்கம் பல இடங்களில் மாறிப் போய்விட்டது. இதன் காரணமாக வீடுகளில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளில் வாழை இலைக்கு பதில் பேப்பர் இலைகளை பயன்படுத்தி வருகிறோம். அந்த வகையில் வரும் காலத்தில் வாய் மணக்கும் வெற்றிலைக்கு பதில் பிளாஸ்டிக் வெற்றிலைகள் சுப நிகழ்ச்சிகளை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்கிறார்கள் வெற்றிலை வியாபாரிகள்.

    இதற்கு முடிவு கட்டும் வகையில் பிளாஸ்டிக் வெற்றிலைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள். இன்றைய இளம் தலைமுறை வெற்றிலையை மறந்து வரும் நிலையில் எத்தனை புது மாப்பிள்ளைகளுக்கு தெரியும் அந்த வெற்றிலையின் ரகசியம் என்பதும் மிகப்பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது. மாறிவரும் உணவு பழக்க வழக்கங்களால் இன்றைய இளம் தலைமுறை வாலிபர்கள் திருமணத்துக்கு பிறகு இல்லற வாழ்வில் சறுக்கி வருகிறார்கள்.

    இளம் வயதிலேயே ஏற்படும் தவறான பழக்க வழக்கங்கள் மற்றும் சவர்மா உள்ளிட்ட சிக்கன் உணவு வகைகள் போன்றவற்றால் ஆண்மை குறைவு ஏற்படுவதாக டாக்டர்களும் எச்சரித்து வருகிறார்கள். ஆனால் இந்த ஆண்மை குறைவுக்கு வெற்றிலை அருமருந்து என்பது இன்றைய இளம் தலைமுறைக்கு தெரியாத ஒரு உண்மையாகும். வெற்றிலையை அடிக்கடி மென்று சாப்பிட்டு வருவதன் மூலம் வயாகராவுக்கு இணையான சக்தியை பெற முடியும் என்று முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள்.

    எனவே இன்றைய இளம் தலைமுறை வெற்றிலை போடும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது எதை சாப்பிட்டாலும் செரிக்கும் தன்மையை வளர்க்க உதவும். அதே நேரத்தில் சுப நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் வெற்றிலைக்கு விடை கொடுத்து மணக்கும் வெற்றிகளை பயன்படுத்த வேண்டும் என்பதே வெற்றிலை விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இப்படி இல்லற இன்பத்துக்கு வழி வகுக்கும் வெற்றிலையின் வேறு மகத்துவங்கள் என்ன என்பதையும் பார்க்கலாம்.

    வெற்றிலை போட்டால் வாய் மணக்கும். நல்ல மதிய உணவு விருந்துக்குப் பின் வெற்றிலை பரிமாறுவதைப் பாரம்பரியமாகக் கொண்டுள்ளோம். வெற்றிலையில் பல நம்ப முடியாத நல்ல விஷயங்கள் உள்ளது. முன்பெல்லாம் கோவில் பூஜைகள் முதல் மருந்துகள் வரை வெற்றிலையை பல விதமாக உபயோகித்து வந்துள்ளோம். இறைவனுக்கு எத்தனை பதார்த்தங்களை நிவேதனம் செய்தாலும் வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால் அந்நிவேதனம் முற்றுப்பெறுவதில்லை என்பர்.

    இதில் குறைந்த கொழுப்பு மற்றும் மிதமான புரத உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது. இது அயோடின், பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2 மற்றும் நிகோடினிக் அமிலம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளன.

    வெற்றிலை உடன் பாக்கு குறைவாகவும், சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும் சேர்த்து சாப்பிட்டால் பசி எடுக்காதவர்களுக்கு பசி எடுக்கும்.

    வயிற்றுப்புண், வாய்ப்புண், வாயில் துர்வாடை பிரச்சினை உள்ளவர்கள், மாலையில் வெற்றிலை அதிகமாகவும், பாக்கு சுண்ணாம்பு குறைவாகவும் மென்றால் இந்த பிரச்சினைகள் குணமாகி வரும். ஒரு வெற்றிலையினுள் ஐந்தாறு துளசி இலைகளை வைத்து சிறிது கசக்கிப் பிழிய வருகின்ற சாற்றினை குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி, இருமல் குணமாகும்.

    கொழுந்து வெற்றிலை மற்றும் மிளகு சாப்பிடுவதால், இரைப்பை குடல் வலி, அசிடிட்டி, செரிமானம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் குணமாகுவதோடு, மெட்டபாலிசம் அதிகரித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடல் முழுவதையும் சுத்தமாக்க உதவுகிறது. நமது உடலில் சுரக்கும் 24 விதமான "அமினோ அமிலங்கள்" வெற்றிலையில் உள்ளன. இந்த "அமினோ அமிலங்களை" வெற்றிலை மூலம் நாம் அடையும்போது ஜீரணம் எளிதாகின்றது. அதனால்தான் நம்முன்னோர்கள் உணவுக்குப் பின் "தாம்பூலம்" தரிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

    காலையில் வெற்றிலை, பாக்கு போடும்போது பாக்கின் அளவை சற்று அதிகரித்துக் கொள்ளலாம். துவர்ப்புச் சுவை கொண்ட பாக்கு, மலமிளக்கியாகச் செயல்படும். வயிற்றைச் சுத்தப்படுத்தக் கூடியது. மதியம் வெற்றிலை, பாக்கு போடும்போது சுண்ணாம்பின் அளவை சற்று அதிகரித்து எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் செரிமான சக்தி சீராவதுடன், உடலுக்குத் தேவையான இயற்கையான கால்சியம் சத்தும் சேர உதவும்.

    இரவில் வெற்றிலை கூடுதலாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். வெற்றிலை என்பது மவுத்வாஷ் போன்றும் செயல்படும். வாய் துர்நாற்றம் நீங்கவும், பற்களில் கிருமிகள் சேராமல் காக்கவும் இது உதவும். கபம் சேர்வதைத் தடுக்கும்.

    வெற்றிலைக்கு அரச இலை, மாவிலை போன்று தெய்வீக சக்தி உண்டு. கண்களுக்கு தெரியாத பொருளை மைபோட்டு பார்ப்பது, வசியம் செய்வது போன்றவற்றிற்கும் வெற்றிலையை அதிகம் பயன்படுத்துவார்கள்.

    வெற்றிலைக்கு செல்வத்தின் தலைமகளாக உள்ள மகாலட்சுமியை ஈர்க்கும் ஆற்றல் உண்டு. மேலும் தீய கர்ம வினைகளையும் இந்த வெற்றிலை அழிக்கும். செல்வமின்மையும் நமது மோசமான கர்மா தான் இவை எல்லாவற்றையும் நிவர்த்தி செய்ய வெற்றிலையை பயன்படுத்தலாம்.

    அந்தக் காலத்தில் மூன்று வேளைகளுமே வெற்றிலை, பாக்கு போடும் வழக்கம் இருந்தது. ஆனால் இன்று வெற்றிலை, பாக்கு போடுவதென்பது இமேஜை பாதிக்கிற விஷயமாக மாறிவிட்டது. படிக்காதவர்கள் செய்யும் செயல் போல பார்க்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் காவிரி நதிக்கரையில் அமைந்துள்ள பகுதிகளில் அதிகமாக வெற்றிலை தோட்டம் உள்ளது. குறிப்பாக நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் போன்ற பகுதிகளிலும் தேனி, சேலம் போன்ற பகுதிகளில் ஆங்காங்கு இப்பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன.

    • பயிர்களில் பணப்பயிர் என்று அழைக்கப்ப டும் வெற்றிலை இன்று மக்களின் அன்றாட வாழ்வில் ஒரு முக்கிய பொருளாக இருந்து வருகிறது.
    • இறை வழி பாட்டிலும் சரி, சித்த மருத்துவத்திலும் சரி முக்கிய பொருளாக விளங்கி வருகிறது.

    கங்கை நதிப்புரத்து கோதுமை பண்டம் காவிரி வெற்றி லைக்கு மாறு கொள்வோம் என்றார் பாரதியார். காவிரிக்கரையில் விளையும் வெற்றிலைக்கு என்றுமே மவுசு உண்டு.

    பயிர்களில் பணப்பயிர் என்று அழைக்கப்ப டும் வெற்றிலை இன்று மக்களின் அன்றாட வாழ்வில் ஒரு முக்கிய பொருளாக இருந்து வருகிறது. எந்த ஒரு நிகழ்ச்சியானாலும் அங்கு வெற்றிலை முதலிடம் பிடித்து வருகிறது. அதேபோல இறை வழி பாட்டிலும் சரி, சித்த மருத்துவத்திலும் சரி முக்கிய பொருளாக விளங்கி வருகிறது.

    வெற்றிலை என்பது மிளகு வகையை சேர்ந்தது, அது கொடி போல படர்வதால் வெற்றிலை கொடிக்கால் என்று சொல்வார்கள். வெற்றிலை என்ற பெயருக்கு முக்கிய காரணம் உள்ளது. வெற்றிலைக் கொடி பூக்காது, காய்க்காது, உட்கொள்ளக் கூடிய வெறும் இலை மட்டும்தான் விடும்.

    இதனால் வெற்று இலை என்பது சுருங்கி வெற்றிலை ஆகிவிட்டது. இது வளர்வதற்கு தண்ணீர் அதிகம் தேவை, வெற்றிலையைப் பயிர் செய்ய விதை என்று எதுவும் இல்லை. காம்புகளை வெட்டிப் பதியன் போட்டுத்தான் பயிர் செய்கிறார்கள்.

    வெற்றிலையில் கரும்பச்சை நிறத்தில் இருப்பது ஆண் வெற்றிலை என்றும், இளம்பச்சை நிறத்திலிருப்பது பெண் வெற்றிலை என்றும் 2 வகையாகப் பிரிக்கிறார்கள். சிலர் அதில் பின்புறம் இருக்கும் நரம்புகளைப் பார்த்தும் ரகம் பிரிப்பதுண்டு. ஒரு வருடத்தில் நன்கு வளரும், பின்னர் 3 வருடங்களுக்கு வெற்றிலையை பறிக்கலாம்.

    வெற்றிலை கொடிக்கு பராமரிப்பு மிகவும் தேவை. அது கொடி போல வளர ஆரம்பித்தவுடன் ஒவ்வொரு கொடியையும் கட்டிக்கொண்டே வர வேண்டும். அது நன்கு வளர்ந்தவுடன் நீங்கள் வெற்றிலையை கிள்ள ஆரம்பிக்கலாம். சிலர் வெற்றிலையை ஒரு மரத்துடன் கட்டி வளர்த்து வருவார்கள்.

    இதனால் மரம் வளர வளர வெற்றிலைக்கு ஒரு ஊன்றுகோலாய் இருக்கும். ஒரு சிலர் வெற்றிலையை பாத்தி கட்டி வளர்ப்பார்கள், சிலர் திராட்சை கொடி போல படர விடுவார்கள். வெற்றிலை வளர்ப்பது என்பது எளிது, ஆனால் பறிப்பது என்பது மிகவும் கடினம். அது வளர ஆரம்பிக்கும்போது கீழே எளிதாக பறிக்கலாம்.

    ஆனால் மேலே செல்ல செல்ல பறிப்பது என்பது கடினமாக இருக்கும். இந்த வெற்றிலையில் இரண்டு வகை உண்டு. கறுப்பு நிறத்தில் அதிகக் காரமாக இருப்பது கம்மாறு வெற்றிலை. கற்பூர வாசனையுடன் சிறிது காரமாக இருப்பது கற்பூர வெற்றிலை. மிகுந்த மணத்துடன் காரம் அவ்வளவாக இல்லாமல் ஓரளவு வெளிர் நிறத்தில் இருப்பது சாதாரண வெற்றிலை.

    வெற்றிலை சாகுபடிக்கு தண்ணீர் தேவை, காவிரி ஆற்றின் கரையிலே இருக்கும் ஊர்களில் எல்லாம் தண்ணீருக்கு பஞ்சம் இல்லை, இதனால் வெற்றிலை பாக்கு எல்லாம் அங்கு நிறைய விளைகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வெற்றிலைக்கு தனி மவுசு உண்டு. பரமத்திவேலூர், நன்செய் இடை யாறு, குப்புச்சிபாளையம், ஓலப்பாளை யம், பாலப்பட்டி, செங்கப்பள்ளி, மணப்பள்ளி, மோகனூர், பொத்தனூர், பாண்டமங்கலம், அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நூற்றுக்கணக் கான ஏக்கரில் வெள்ளைக்கொடி, கற்பூரி போன்ற வெற்றிலை ரகங்களை பயிர் செய்துள்ளனர். காவிரி ஆற்றின் நேரடி பாசனத்தால் வளர்வதால் ஒரு வாரம் ஆனாலும் வாடாமல் வதங்காமல் அப்படியே இருக்கும். இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த வெற்றிலைக்கு தனி சிறப்புகள் உண்டு.

    வெற்றிலை வேர் குச்சியை நட்டு வைத்தால் அது முளைத்து, அருகில் உள்ள மரம், சுவற்றில் பற்றி வளரும். மண் வளத்தைப் பொறுத்து ஒரு மாதம் முதல் 3 மாதங்களில் வெற்றிலையைப் பறிக்கலாம். வீட்டில் நடக்கும் விசே ஷங்கள், திருமணம், காது குத்து, சீமந்தம்என அனைத்து சுப நிகழ்ச்சி யானாலும் வெற்றிலை பாக்கு இல்லாமல் இருக்காது. வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகள், சுவாச பிரச்சனை, இருமல், சளி என பல வற்றிற்கும் வெற்றிலை ஒரு அருமருந்து. வெற்றிலை போட்டால் தொண்டை கரகரப்பு சரியாகி விடும். குரல் வளமும் பெருகுமாம். கணவன், மனைவி இருவரில் யார் வெற்றிலை போட்டு நாக்கு செக்கச் செவேல்னு சிவந்தால் அவர்கள் மற்றவர் மீது அதிக பாசம் வைத்திருக்கிறார்கள் என்று சொல்லும் வழக்கம் இன்றளவும் கிராமங்களில் உண்டு.

    வெறும் வாயில் வெற்றிலை மென்றால் போதும் வாய் துர்நாற்றம் நீங்கும். தொடர்ந்து தினமும் ஒரு வெற்றிலை சாப்பிட்டால் குடல் புண்வாய், புண்கள் ஆறிவிடும். தலையில் பொடுகு பிரச்சனை இருந்தால் வெற்றி லையை அரைத்து குளித்தால் பொடுகு பிரச்சனை நீங்கிவிடும். முகத்தில் ஏற்படும் முகப்பருக்களுக்கு வெற்றி லையை வைத்து தேய்த்தால் போதும் முகப்பரு போய்விடும். உடலில் வியர்வை துர்நாற்றம் அதிகம் அடித்தால் தண்ணீரில் வெற்றிலையை போட்டு காயவைத்து சுடு தண்ணீராக குளித்து வந்தால் வியர்வை துர்நாற்றம் நீங்கிவிடும்.

    குழந்தை பெற்ற தாய்மார்கள் வெற்றிலை தின்றால் பால் அதிகமாக சுரக்கும். வெற்றிலையில் இவ்வளவு மருத்துவ குணம் அடங்கியுள்ளது. ஆயுர்வேத மருந்துகளில் வெற்றிலையே அதிகம் பயன்படுத்தப்படு கிறது. சங்க கால நூல்களான பத்துப்பாட்டு, மணிமேகலை, சீவக சிந்தாமணி, கம்பராமா யணம் உட்பட பல்வேறு நூல்களில் வெற்றி லையின் சிறப்புகள் பற்றி கூறப்பட்டுள்ளது. மருத்துவ குணங்கள் கொண்ட காவிரிக் கரை வெற்றிலை நம் வாழ்வின் அங்கமாக உள்ளது.

    வெற்றிலையில் உள்ள சத்துக்கள்

    நீர்ச்சத்து – 90 சதவீதம், புரதச்சத்து – சதவீதம், கொழுப்புச்சத்து – சதவீதம், தாது உப்பு – சதவீதம், நார்ச்சத்து – சதவீதம், பச்சையம் – 0.25சதவீதம், மாவுச்சத்து – 6.10 சதவீதம், நிகோடினிக் அமிலம் – 0.89 மி.கி, வைட்டமின் சி – 0.01, வைட்டமின் ஏ – 2.9 மி.கி., தயாமின் – 10 கி, ரிபோப்ளேவின் –, நைட்ரஜன் – 7.0சதவீதம், பாஸ்பரஸ் – 0.6சதவீதம், பொட்டாசியம் – 4.6 சதவீதம், கால்சியம் – 0.2 சதவீதம், சத்தூட்டம் –

    44 கலோரி, இரும்புச்சத்து – 0.007சதவீதம்.

    • தற்போது உடன்குடிக்கு தேவையான வெற்றிலை, வெளியூரில் இருந்து வருகிறது.
    • சுப நிகழ்ச்சிகள் தொடர்ந்து வருவதால் ஒரு கிலோ வெற்றிலை ரூ. 242-க்கு விற்பனையாகிறது.

    உடன்குடி:

    உடன்குடி கருப்பட்டிக்கு எவ்வளவு பெயர் இருக்கிறதோ அதை போல உடன்குடி வெற்றிலைக்கும் பெயர் இருந்தது.

    சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு உடன்குடியில் இருந்து தினசரி 500 கிலோ வெற்றிலை வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டு உடன்குடி வெற்றிலை என்ற ஊர் பெயரோடு சென்றது.

    அது நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து தற்போது உடன்குடிக்கு தேவையான வெற்றிலை, வெளியூரில் இருந்து விற்பனைக்கு வருகிறது.

    உடன்குடி சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் கடல் நீர் புகுந்து, விவசாய நிலம் எல்லாம் உவர்ப்பு நிலமாக மாறியது. இதனால் வெற்றிலை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.

    தற்போது உடன்குடியில் ஒரு சில இடங்களில் மட்டுமே வெற்றிலை உற்பத்தியாகிறது. ஒரு கிலோ வெற்றிலை ரூ. 180 ஆக நீண்ட நாட்களாக இருந்தது.

    தற்போது கோவில் கொடை விழா, திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தொடர்ந்து, நடந்து வருவதால் கிடுகிடு என ஏறி தற்போது ஒரு கிலோ வெற்றிலை ரூ. 242-க்கும், ½ கிலோ ரூ. 121-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    அதைப்போல கொட்ட பாக்கு ஒன்று ரூ. 5-க்கும் விற்கப்படுகிறது. கொட்டபாக்கு, வெற்றிலை, சுண்ணாம்பு ஆகிய மூன்றும் கலந்து சாப்பிட்டால் உணவு ஜீரணமாகும் என்று சொல்லப்படுகிறது.

    உடன்குடி வெற்றிலை சங்கத்தில் இந்த மூன்றும் விற்பனை மும்முரமாக நடக்கிறது.

    பரமத்தி வேலூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் உள்ள தமிழ்நாடு வெற்றிலை விவசாயிகள் சங்க 45-ம் ஆண்டு பேரவை கூட்டம் தமிழ்நாடு வெற்றிலை விவசாயிகள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.  கூட்டத்தில் நிறைவேற்ற ப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

     பரமத்தி வேலூரில் 4 ரோடுக்கு அருகில் வெற்றிலை ஏல மார்க்கெட் உள்ளது. அதில் வெற்றிலை விவசாயிகளுடைய வெற்றிலைக்கு நல்ல விலை கிடைக்கவில்லை. மேலும் வியாபாரிகள் மிக அதிகமாக கமிஷன் எடுத்து கொள்கிறார்கள். ஆகவே தமிழ்நாடு அரசு பரமத்திவேலூரில் வெற்றிலை விவசாயிகளுக்கு அரசு சார்பில் ஒரு ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஏற்படுத்தி நல்ல முறையில் செயல்படுத்த வேண்டும்.

     இச்சங்கம் 1977 -ம் ஆண்டு தொடங்கப்பட்ட பொழுது பொத்தனூரில் வெற்றிலை கொடிக்கால் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வந்தது . பின்னர் அது சிறுமணி கரும்பு ஆராய்ச்சி நிலையத்திற்கு மாற்றப்பட்டது .அதன் பின்னர் கோவை வேளாண் கல்லூரிக்கு மாற்றப்பட்டது.அதனால் விவசாயிகளுக்கு எந்தவித பலனுமில்லை. 

    முந்தைய அரசு இருக்கூர் கிராமத்தில் உள்ள ஏழு ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் வெற்றிலை கொடிக்கால் ஆராய்ச்சி மையத்தை நிறுவுவதற்கு அடிக்கல் நாட்டினார்கள். அதனை செயல்படுத்தாமல் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு அரசு அந்த இடத்தில் வெற்றிலை ஆராய்ச்சி மையத்தை நிறுவி செயல்படுத்த வேண்டும். 

    தமிழ்நாடு அரசு வெற்றிலை கொடிக்கால் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு ஒரு தனி நல வாரியம் அமைத்திட வேண்டும். வெற்றிலை கொடிக்கால் விவசாயிகள் பெரும்பாலும் குத்தகை விவசாயிகள் .அவர்களுக்கு உகந்த வகையில் பயிர் கடன் கிடைக்க வழிவகை செய்யுமாறு மாநில அரசை இப்பேரவை கேட்டுக்கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

     கூட்டத்தில் 50 பேர் கொண்ட புதிய பொதுக்குழு உறுப்பினர்களும், அதில் 15 பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்களும்  தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதேபோல் புதிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
    கணியூர் அமராவதி ஆற்றுப்படுகையின் அடையாளமாக வெற்றிலை இருந்தது.

    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் தாலுகா கணியூர் பகுதியில் அமராவதி ஆறு மற்றும் வாய்க்கால் பாசனத்தை அடிப்படையாகக்கொண்டு 30 ஆண்டுகளுக்கு முன்பு வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டது. இங்கு அறுவடை செய்யப்படும் வெற்றிலைகள் திருச்சி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. தினசரி லாரிகளில் ஏற்றி செல்லும் அளவிற்கு வெற்றிலை உற்பத்தி நடந்தது. ஆனால் இதற்குபின் சாகுபடி மெதுவாக குறையத்தொடங்கி தற்போது முற்றிலும் அழிந்து போனது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    வெற்றிலை சாகுபடி செய்ய 5 சென்ட் அளவிலான இடம் இருந்தால் போதும். இது கொடிவகை தாவரமாகும். இந்த தாவரத்தில் பூக்களும், பழங்களும் உற்பத்தி ஆகாது. வெறும் இலைகள் மட்டுமே உற்பத்தி ஆனதால் இது "வெற்றிலை" என அழைக்கப்பட்டது.

    சிறிய நாற்றுகளை குறிப்பிட்ட இடைவெளியில் நடவு செய்து அந்த நாற்றுகள் படர்ந்து வளர அகத்திக்கீரை குச்சிகளை நட்டு வைப்போம். அதன்மீது கொடிபடர்ந்து வெற்றிலை உற்பத்தி ஆகும். 6 மாதத்திலிருந்து வெற்றிலை பறிக்கத் தொடங்கலாம். 5 ஆண்டுகள் வரை இந்தக்கொடியில் வெற்றிலை உற்பத்தி ஆகும்.

    நிலத்தில் நட்டு வைக்கப்பட்ட கால்களில் கொடிகள் படர்வதால் வெற்றிலை உற்பத்தி செய்யும் இடம் "கொடிக்கால்" எனப்பட்டது. இதில் சர்க்கரைகொடி வெற்றிலை, வட்டகொடி வெற்றிலை, கற்பூரவெற்றிலை என பல வகை உள்ளது. கணியூர் பகுதியில் உற்பத்தியான வெற்றிலைகள் டன் கணக்கில் எடுத்து செல்லப்பட்டன.

    கணியூர் அமராவதி ஆற்றுப்படுகையின் அடையாளமாக வெற்றிலை இருந்தது. பலநூறு விவசாயிகள் இதில் ஈடுபட்டிருந்தனர். அப்போதைய காலகட்டத்தில் (30 ஆண்டுகளுக்கு முன்பு) இந்த கொடிகளில் பரவிய நோய்களை தடுக்க அரசு பெரிதாக உதவிக்கரம் நீட்ட வில்லை.

    இதனால் சிறுகச்சிறுக இந்த விவசாய பரப்பு குறைய தொடங்கி, தற்போது வெற்றிலை கொடிக்கால்கள் அழிந்துவிட்டன. இதற்கு அரசு புத்துயிர் கொடுத்து மீண்டும் வெற்றிலை உற்பத்தியை அதிகரிக்க அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் கலப்பதன் காரணமாக, நோய் தாக்குதல் ஏற்பட்டு வெற்றிலை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
    நொய்யல்:

    கரூர் மாவட்டத்தில் வெற்றிலை விவசாயத்திற்கு புகழ் பெற்றது புகளூர் மற்றும் நொய்யல் வட்டாரம். இங்கு காவிரி ஆறு மற்றும் அதில் இருந்து பிரியும் புகளூர் வாய்க்கால், பள்ள வாய்க்கால், பாப்புலர் முதலியார் வாய்க்கால், வாங்கல் வாய்க்கால், நெரூர் வாய்க்கால் ஆகிய 5 வாய்க்கால்கள் மூலம் நீர்பாசனம் நடக்கிறது.

    இங்கு விளையும் வெற்றிலைகள் உள்ளூர் வெற்றிலை மண்டிகளுக்கும், நாமக்கல் மாவட்டம், வேலூர் தினசரி மார்க்கெட்டுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு ஏல முறையில் வாங்கப்படும் வெற்றிலைகள் தமிழகம் மற்றும் வட இந்தியாவிற்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. நொய்யல் ஆறு மற்றும் காவிரி நீரில் சாயக்கழிவுநீர் மற்றும் தொழிற்சாலையின் கழிவுகள் கலந்து வருகின்றன. இந்த நீரை பாய்ச்சியதால், தற்போது புகளூர் மற்றும் நொய்யல் வட்டாரத்தில் மண்வளம் குறைந்ததுடன் நீரும் மாசடைந்துள்ளது. இதன் காரணமாக புகளூர் மற்றும் நொய்யல் வட்டாரத்தில் வெற்றிலை கொடிகளில் கணு அழுகல், இலைப்புள்ளி, வாடல்நோய் போன்ற நோய்களால் தாக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக புகளூர் மற்றும் நொய்யல் வட்டாரத்தில் உள்ள வெற்றிலை கொடிக்கால்களில் வெற்றிலை உற்பத்தி குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் புகளூர் வேளாண்துறை அதிகாரி டாக்டர் திரவியம், கரூர் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ராஜவேலு, துணை இயக்குனர் மோகன்ராம், திருச்சி மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி பேராசிரியர் சங்கீதா, நபார்டு வங்கி பரமேஸ்வரன் ஆகியோர் கொண்ட குழுவினர் புகளூர் மற்றும் நொய்யல் பகுதிகளுக்கு வந்தனர். 

    அங்கு புகளூர் வட்டார வெற்றிலை விவசாயிகள் சங்க செயலாளர் ராமசாமி மற்றும் நிர்வாகிகள், விவசாயிகள் ஆகியோரை சந்தித்து பூச்சி மற்றும் நோய் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் அவர்கள் வெற்றிலைகளை தாக்கும் நோய் குறித்து தகவல் தெரிவித்தால், அதை போக்குவதற்கு உண்டான அனைத்து உதவிகளையும் செய்வதாக கூறினர். பின்னர் பாதிக்கப்பட்ட வெற்றிலை கொடிக்கால்களை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், வெற்றிலைகள், மண்வகைகள், நீர் ஆகியவற்றின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக எடுத்து சென்றனர். 
    ×