search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெற்றிலை"

    பரமத்தி வேலூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் உள்ள தமிழ்நாடு வெற்றிலை விவசாயிகள் சங்க 45-ம் ஆண்டு பேரவை கூட்டம் தமிழ்நாடு வெற்றிலை விவசாயிகள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.  கூட்டத்தில் நிறைவேற்ற ப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

     பரமத்தி வேலூரில் 4 ரோடுக்கு அருகில் வெற்றிலை ஏல மார்க்கெட் உள்ளது. அதில் வெற்றிலை விவசாயிகளுடைய வெற்றிலைக்கு நல்ல விலை கிடைக்கவில்லை. மேலும் வியாபாரிகள் மிக அதிகமாக கமிஷன் எடுத்து கொள்கிறார்கள். ஆகவே தமிழ்நாடு அரசு பரமத்திவேலூரில் வெற்றிலை விவசாயிகளுக்கு அரசு சார்பில் ஒரு ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஏற்படுத்தி நல்ல முறையில் செயல்படுத்த வேண்டும்.

     இச்சங்கம் 1977 -ம் ஆண்டு தொடங்கப்பட்ட பொழுது பொத்தனூரில் வெற்றிலை கொடிக்கால் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வந்தது . பின்னர் அது சிறுமணி கரும்பு ஆராய்ச்சி நிலையத்திற்கு மாற்றப்பட்டது .அதன் பின்னர் கோவை வேளாண் கல்லூரிக்கு மாற்றப்பட்டது.அதனால் விவசாயிகளுக்கு எந்தவித பலனுமில்லை. 

    முந்தைய அரசு இருக்கூர் கிராமத்தில் உள்ள ஏழு ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் வெற்றிலை கொடிக்கால் ஆராய்ச்சி மையத்தை நிறுவுவதற்கு அடிக்கல் நாட்டினார்கள். அதனை செயல்படுத்தாமல் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு அரசு அந்த இடத்தில் வெற்றிலை ஆராய்ச்சி மையத்தை நிறுவி செயல்படுத்த வேண்டும். 

    தமிழ்நாடு அரசு வெற்றிலை கொடிக்கால் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு ஒரு தனி நல வாரியம் அமைத்திட வேண்டும். வெற்றிலை கொடிக்கால் விவசாயிகள் பெரும்பாலும் குத்தகை விவசாயிகள் .அவர்களுக்கு உகந்த வகையில் பயிர் கடன் கிடைக்க வழிவகை செய்யுமாறு மாநில அரசை இப்பேரவை கேட்டுக்கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

     கூட்டத்தில் 50 பேர் கொண்ட புதிய பொதுக்குழு உறுப்பினர்களும், அதில் 15 பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்களும்  தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதேபோல் புதிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
    கணியூர் அமராவதி ஆற்றுப்படுகையின் அடையாளமாக வெற்றிலை இருந்தது.

    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் தாலுகா கணியூர் பகுதியில் அமராவதி ஆறு மற்றும் வாய்க்கால் பாசனத்தை அடிப்படையாகக்கொண்டு 30 ஆண்டுகளுக்கு முன்பு வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டது. இங்கு அறுவடை செய்யப்படும் வெற்றிலைகள் திருச்சி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. தினசரி லாரிகளில் ஏற்றி செல்லும் அளவிற்கு வெற்றிலை உற்பத்தி நடந்தது. ஆனால் இதற்குபின் சாகுபடி மெதுவாக குறையத்தொடங்கி தற்போது முற்றிலும் அழிந்து போனது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    வெற்றிலை சாகுபடி செய்ய 5 சென்ட் அளவிலான இடம் இருந்தால் போதும். இது கொடிவகை தாவரமாகும். இந்த தாவரத்தில் பூக்களும், பழங்களும் உற்பத்தி ஆகாது. வெறும் இலைகள் மட்டுமே உற்பத்தி ஆனதால் இது "வெற்றிலை" என அழைக்கப்பட்டது.

    சிறிய நாற்றுகளை குறிப்பிட்ட இடைவெளியில் நடவு செய்து அந்த நாற்றுகள் படர்ந்து வளர அகத்திக்கீரை குச்சிகளை நட்டு வைப்போம். அதன்மீது கொடிபடர்ந்து வெற்றிலை உற்பத்தி ஆகும். 6 மாதத்திலிருந்து வெற்றிலை பறிக்கத் தொடங்கலாம். 5 ஆண்டுகள் வரை இந்தக்கொடியில் வெற்றிலை உற்பத்தி ஆகும்.

    நிலத்தில் நட்டு வைக்கப்பட்ட கால்களில் கொடிகள் படர்வதால் வெற்றிலை உற்பத்தி செய்யும் இடம் "கொடிக்கால்" எனப்பட்டது. இதில் சர்க்கரைகொடி வெற்றிலை, வட்டகொடி வெற்றிலை, கற்பூரவெற்றிலை என பல வகை உள்ளது. கணியூர் பகுதியில் உற்பத்தியான வெற்றிலைகள் டன் கணக்கில் எடுத்து செல்லப்பட்டன.

    கணியூர் அமராவதி ஆற்றுப்படுகையின் அடையாளமாக வெற்றிலை இருந்தது. பலநூறு விவசாயிகள் இதில் ஈடுபட்டிருந்தனர். அப்போதைய காலகட்டத்தில் (30 ஆண்டுகளுக்கு முன்பு) இந்த கொடிகளில் பரவிய நோய்களை தடுக்க அரசு பெரிதாக உதவிக்கரம் நீட்ட வில்லை.

    இதனால் சிறுகச்சிறுக இந்த விவசாய பரப்பு குறைய தொடங்கி, தற்போது வெற்றிலை கொடிக்கால்கள் அழிந்துவிட்டன. இதற்கு அரசு புத்துயிர் கொடுத்து மீண்டும் வெற்றிலை உற்பத்தியை அதிகரிக்க அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×